<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762</id><updated>2011-12-07T00:08:49.018-05:00</updated><category term='போட்டி'/><category term='சிறுகதை'/><category term='விளையாட்டு'/><category term='சங்கிலித் தொடர்'/><category term='பயனேடு'/><category term='புனைவு'/><category term='முதல் பதிவு'/><category term='விமர்சனம்'/><category term='ஈழ‌ம்'/><category term='வரலாறு'/><category term='கல்லூரிச் சாலை'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='நகைச்சுவை'/><category term='கொண்டாட்டம்'/><category term='நிகழ்வுகள்'/><category term='Peter பார்வை'/><category term='யாருல இங்க சண்டியன்'/><category term='இருள் தடங்கள்'/><category term='குறும்புகள் பலவிதம்'/><category term='சும்மா'/><category term='தேவதை சிறகுகள்'/><category term='தொடர்கதை'/><category term='சுற்றுலா'/><category term='சினிம'/><title type='text'>வெயிலில் மழை</title><subtitle type='html'>நீ என்பது மழையாக... நான் என்பது வெயிலாக... மழையோடு வெயில் சேரும்... அந்த வானிலை சுகமாகும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>126</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-5257473554603333309</id><published>2010-03-24T01:00:00.001-04:00</published><updated>2010-03-24T01:00:00.801-04:00</updated><title type='text'>ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/S6j50J-1_PI/AAAAAAAAEi4/-V-irRHNTIM/s1600-h/200343688-001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/S6j50J-1_PI/AAAAAAAAEi4/-V-irRHNTIM/s320/200343688-001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451882023360003314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/S6j5sIYzetI/AAAAAAAAEiw/F3rGEjlidgc/s1600-h/200343688-002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/S6j5sIYzetI/AAAAAAAAEiw/F3rGEjlidgc/s320/200343688-002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451881885493066450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;V.M.S Mahal, MaharjaNagar, Palayamkottai&lt;br&gt;28/03/2010&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-5257473554603333309?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/5257473554603333309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=5257473554603333309' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5257473554603333309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5257473554603333309'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2010/03/blog-post.html' title='ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/S6j50J-1_PI/AAAAAAAAEi4/-V-irRHNTIM/s72-c/200343688-001.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-8173258132938118758</id><published>2009-06-20T12:32:00.002-04:00</published><updated>2009-06-20T13:04:05.427-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>அமெரிக்கா ரிட்டர்ன்...</title><content type='html'>நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை நண்பன் ஒருவன் வந்து எழுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான்.... எழுந்திரிடா... கருமம் புடிச்ச மாதிரி சாங்காலம் அஞ்சு மணிக்கும் தூங்கிக்கிட்டு இருக்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் டூட்", இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மவனே.. டூட் கீடுன்னா, பூட்டால அடிப்பேன். அது என்னடா வாய்க்கு படிக்கட்டு வச்சிருக்க"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. அது ஃப்ரெஞ்ச் பியர்டுடா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்... நல்லா வருது வாய்ல... இங்கன ஷேவிங் பண்ண கூட காசு இல்லாம டி.ஆர். மாதிரி கிங் காங் வேசத்துல சுத்துனவந்தானடா நீ"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. அது பருத்திவீரன் கார்த்தி ஸ்டைல்டா... சரி... ரொம்ப நாளா உடம்பு சரியில்லைனு கேள்விபட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் மச்சி. ஒரு வாரமா ஜலதோஷம். லைட்டா காய்ச்சலும்.”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ எம் ஸாரி டா”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்டா ஸாரியெல்லாம் கேக்குற? என்னத் தப்பு பண்ணின?”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய். யாருக்காவது உடம்பு சரியில்லைனு கேள்விபட்டா எங்கூருல ஸாரி சொல்வாங்கடா”&lt;br /&gt;&lt;br /&gt;“எதுடா உங்கூரு? பய பாவம்னு ஒரு விசா எடுத்துக் கொடுத்து உன்னையெல்லாம் அமெரிக்கா அனுப்புனான் பாரு, அவன சொல்லணும்”&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க ஸ்டார் பக்ஸ் இருக்குதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நைட் ஆனா, ஸ்டார் வரும். பக்ஸ் என்னோட டெஸ்டிங் டீம் கிட்ட கேட்டு சொல்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கண்ட்ரி ஃப்ரூட்... நான் கேட்டது காஃபி கடை ஸ்டார் பக்ஸ்.. அமெரிக்கால தெருவுக்கு ஒன்னு அது இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க தெருவுக்கு ஒரு போஸ்ட் கம்பி இருக்கும். அதுலையும் தெரு நாயெல்லாம் உச்சா போய் அசிங்கம் பண்ணி வச்சிருக்கும். உனக்கு ஸ்டார் பக்ஸ் கேக்குதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. அட்லீஸ்ட் கஃபெ காஃபி டேயாவது போலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;“டேய் என்னடா உங்கூருல வெயில்லாம் அடிக்குது”&lt;br /&gt;&lt;br /&gt;“அடங்கொய்யால... இருவது வருஷமா இங்குனதானே சுத்திக்கிட்டு திரிஞ்ச. ஒரு ஒன்றரை வருசம் அமெரிக்கா போனவுடனே உனக்கு இவ்வளவு திமிரா? பெங்களூருக்கே இந்த ஸீன் போடுறியே... நாலு வருஷம் சென்னைல படிச்சது மறந்து போயிடிச்சா மவனே...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. ஃப்ரீயா விடு... ஃப்ரீயா விடு... இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்”&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஹெல்மட்டை மாட்டி ரெடியானான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய். என்னடா என்ன பைக்குல வர சொல்ற? உங்கிட்ட கார் இல்லையா? எங்க அமெரிக்கால கார் இல்லைனா ஒரு பய மதிக்க மாட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மூடிட்டு வா... இல்லனா ஸ்பீட் ப்ரேக்கர்ல ப்ரேக் அடிக்காம உன் டிக்கிய ஒடச்சிடுவேன்”&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவனது பைக்கில் ஏறிச் சென்றேன். அப்பொழுது ஒருவன் குறுக்கே புகுந்து சென்றதோடு மட்டுமல்லாமல் எங்களைத் திரும்பிப் பார்த்து வழக்கமான அந்த மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தையைக் கூறிச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் த... என்னடா ரூல்ஸ மீறுனது மட்டுமில்லாம கெட்ட வார்த்த வேற பேசிட்டுப் போறான்? ஃபிங்கர் காட்டுடா மாப்ள.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் டா.. அவன் பேசுனது கெட்ட வார்த்தைன்ன நீ பேசுனது மட்டும் நல்ல வார்த்தையா? இங்க்ளிபிஷ்ல பேசுனா என்னமோ கெட்ட வார்த்தையே இல்லாத மாதிரி ஸீன் போடுவீங்களே.."&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா.. உங்கூரு ரோடு இவ்வளவு கேவலமா இருக்குது”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா ஒரு பய ட்ராஃபிக் ரூல்ஸ மதிக்க மாட்டேங்றான்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் திஸ் இஸ் டூ மச்.. என்னடா எல்லாரும் ஹார்ன, மசாஜ் பால் மாதிரி கண்டினியஸ்ஸா அடிச்சிட்டே இருக்கீங்க. எங்கூருலெல்லாம் மாமா வந்து டிக்கட் கொடுத்திடுவான் தெரியும்ல”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொடர்ந்து நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவே இல்லை. எப்படியோ காஃபி டேயும் வந்து சேர்ந்தோம். அங்கே வந்து கொண்டிருந்த ஒரு ஃபிகரிடம் “குட் ஈவினிங்” சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எக்ஸ் கியூஸ் மீ, டூ யூ நோ மீ?”&lt;br /&gt;&lt;br /&gt;“நோப்...”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம் எதுக்குடா குட் ஈவினிங் சொன்ன? இது மாதிரி இன்னொரு தடவ வம்பிழுத்த ஈவ் டீஸிங்னு போலிஸ்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன்”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மிரட்டலில் பயந்து வேகமாக என் நண்பனருகில் ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா ஐஸ்வர்யா ராய்க்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இந்த அலப்பற விடுறா. ஒரு குட் ஈவினிங் சொன்னதுக்கே பத்ரகாளியாட்டம் ஆடிட்டு போறா... எங்க அமெரிக்கால, பிட்ஷா ஃபிகர், பர்கர் ஃபிகர் னு எல்லாரும் அவுங்களாவே குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வாங்கடா. அதுக்கு பதில் சொன்ன சந்தோஷத்துலையே இதுவரைக்கும் பொண்ணுங்கக்கிட்ட பேசப் பயப்படுற என்னோட நண்பன், ‘நான் கடலை போட்டுட்டேன்’னு துள்ளி குதிச்சிட்டு இருக்கான்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்.. இது இந்தியா. உன்னோட அமெரிக்கா சேட்டையெல்லாம் அங்க வச்சிக்கோ. இங்கெல்லாம் டங்குவார கழட்டிடுவாளுங்க.”&lt;br /&gt;&lt;br /&gt;காப்பிக் கடைக்குச் சென்று, அவனுக்குத் தெரிஞ்ச கப்பச்சினோவும், எனக்கு தெரிஞ்ச கஃபே லாத்தேவும் வாங்கி அருந்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி மச்சான்... காச கொடுத்திடு”, நான் என் நண்பனிடம் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய், என்ன விட்டுருந்தா அந்த முக்கு கடைல மூனு ருபாய்க்கு காப்பி வாங்கி ஓசில தினத்தந்தில சினிமா அட்வர்டைஸ்மண்டாவது பாத்திட்டு வந்திருப்பேன். இங்க கூட்டிட்டு வந்துட்டு என்னைய காசு கொடுக்கச் சொல்றியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி. ஓவரா அழாதே. நானே கொடுக்குறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;காசை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். எங்களுக்கு பின்னாலேயே ஒரு காதல் ஜோடியும் வந்தார்கள். அவர்களுக்காக நான் கதவை திறந்து பிடித்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்தவர்கள் ஒரு ஐந்து ருபாய் நாணயத்தை என் கையில் திணித்தார்கள். நான் வேகமாக என் நண்பன் அருகில் சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;“மச்சான். அந்தப் பையனுக்கு திமிரப் பாத்தியா? பக்கத்துல ஃபிகர் வந்தவுடனே வெட்டி பந்தாடா.. நான் ஒரு கர்டஸிக்காக கதவ தெறந்து விட்டா, அவன் வாட்ச்மேனுன்னு நெனச்சு அஞ்சு ருபாய கொடுத்துட்டுப் போறான்டா”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம். நீ கொஞ்சம் சல்யூட்டும் சேத்து அடிச்சிருந்தீன்னா, பத்து ருபாயா கொடுத்திருப்பான். இது மாதிரி கதவு தெறந்து விடுறதெல்லாம் இன்னும் நம்ம மக்கள் பழகிக்கலடா. நீ கொஞ்சம் உணர்ச்சிகள கட்டுபடுத்து. ஒன்றரை வருச அலப்பறயெல்லாம் இங்க வந்தவுடனே ஃப்ரீயா விட்டுடணும்”&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் திருப்பி வீட்டிற்கு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் பீட்டர் பாண்டி, பெருசா அமெரிக்கா, அமெரிக்கான்னு பீத்திக்கிட்டு திரியிறியே... அங்க ஏதாவது ஒரு ஃபிகர புடிச்சியா? எனக்கு தெரிஞ்ச ஒரு கொல்டிகாரு வாரவாரம் வெள்ளைக்காரி, கறுப்பின்னு டேட்டிங்கா போய்கிட்டு இருக்கான்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியாடா மச்சி!!! நாமெல்லாம் என்னைக்குடா திருந்திருக்கோம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்டா உன் லிஸ்டுல என்னையும் சேக்குற? நாங்கெல்லாம் அல்ரெடி ஸெட்டில்ட்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் எப்படிடா? என் கூடத்தானே சுத்திக்கிட்டு திரிஞ்ச. அப்புறம் எப்படிடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“என் கூட சுத்திக்கிட்டு இருந்த நீயெல்லாம் அமெரிக்கா போகும்போது எங்களுக்கு ஸெட் ஆகக் கூடாதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... நல்லா இருடா. நானும் அமெரிக்கா மாப்பிள்ளைங்ற டைட்டில வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ண பாக்க வேண்டியதுதான்”&lt;br /&gt;&lt;br /&gt;“எலேய். அதெல்லாம் அந்த காலம். இப்பெல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைனாலே பதறுறானுங்க மாமனார்கள். படம்லாம் பாக்குறதில்லையா ராசா. கடைசில பல்பு வாங்குறதுக்கு மட்டும்தான்டி அமெரிக்கா மாப்பிள்ளை”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ நமக்கு ஹிந்திக்கார பொண்ணுதானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்டா டேய் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமாடா உனக்கு? நமக்கு ஹிந்தி ஏக் தோ தீன தவிர ஏதாவது தெரியுமா? அட்லீஸ்ட் ஆங்கிலத்துலயாவது அஞ்சு நிமிசம் கடல போடத்தான் தெரியுமா? எதுக்குடா இந்த விபரீத ஆசையெல்லாம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ ஆப்புத்தானா?”, நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே யாரோ தட்டுவதுபோல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எழுந்திரில. சாங்காலம் ஆறு மணியாகுது இன்னும் தூங்கிக்கிட்டு”, எங்க அம்மா வந்து என்னை எழுப்பி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கனவுதான். அதானே பாத்தேன். நாந்தான் தாயகத்தை (கேப்டன் படம் இல்லீங்க. நம்ம பாரத மாதா) விட்டுக்கொடுக்காத தன்மானத் தமிழன் ஆச்சே. நாமெல்லாம் இப்படி அமெரிக்காவ தாங்கி புடிப்போமா??&lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லாம் சரி. ஏம்ல பகல்கனவு காணுத’ன்னு கேக்குதியலா??&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கால இன்னும் ராத்திரிதான் அப்பு. :))))&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;மூத்தப் பதிவராயிட்டதுனால, புதுசா பதிவு எதுவும் போட முடியல. அதான் இந்த மீள்பதிவு :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-8173258132938118758?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/8173258132938118758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=8173258132938118758' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8173258132938118758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8173258132938118758'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/06/blog-post.html' title='அமெரிக்கா ரிட்டர்ன்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-1605539428771683447</id><published>2009-05-03T10:14:00.005-04:00</published><updated>2009-05-03T13:36:46.378-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உள்வாங்கிய வாழ்க்கை...</title><content type='html'>மேகங்கள் இருமும்&lt;br /&gt;தூரல்மழை பொழுதுகளில்,&lt;br /&gt;நனைந்தபடியே பின்னாலிருந்து&lt;br /&gt;எனைக் கட்டியணைப்பதைவிட,&lt;br /&gt;தேனீர் கடைகளின் ஓரங்களில்&lt;br /&gt;மழைக்கு ஒதுங்குபவர்தான் &lt;span style="font-weight:bold;"&gt;அவர்&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;மின்னல்கள் படம்பிடிக்க&lt;br /&gt;வீராப்பாய் எதிர்நோக்குவது போன்றதொரு&lt;br /&gt;சிறுபிள்ளைத் தனங்கள்&lt;br /&gt;அவருக்கு கொஞ்சமும் கிடையாது...&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் முளைக்கும்&lt;br /&gt;அதிகாலை வேளையில்&lt;br /&gt;என் முத்தங்களைக் காட்டிலும்&lt;br /&gt;ப்ரூவும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ஸுமே&lt;br /&gt;அவருக்குப் போதுமானதாய் இருக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம்&lt;br /&gt;தொலைக்காட்சி தொடர்கள்தான்&lt;br /&gt;என் பொழுதுபோக்கு...&lt;br /&gt;கவிதைகள் ஏற்பதற்கும், ரசிப்பதற்கும்&lt;br /&gt;அவரது நேரமின்மைதான் காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ எதிர்பார்ப்புகள்&lt;br /&gt;ஏமாற்றப்பட்டிருந்தாலும்,&lt;br /&gt;வாழ்க்கை ரசிக்கும்படியாகத்தான்&lt;br /&gt;இருக்கின்றது,&lt;br /&gt;நெரிசல் விளக்குச் சந்திப்புகளில்&lt;br /&gt;எதிர்படும்&lt;br /&gt;தலைசொறியும் சில பைத்தியங்களைப்&lt;br /&gt;பார்க்கும்வரை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-1605539428771683447?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/1605539428771683447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=1605539428771683447' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/1605539428771683447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/1605539428771683447'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/05/blog-post.html' title='உள்வாங்கிய வாழ்க்கை...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-2886346152457983102</id><published>2009-03-29T22:14:00.001-04:00</published><updated>2009-03-29T22:18:34.448-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கவிதையே கவிதை எழுதுகிறதே!</title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoM8j9VuI/AAAAAAAAEFU/HlLs5iHlPSk/s1600-h/1707700025.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoM8j9VuI/AAAAAAAAEFU/HlLs5iHlPSk/s320/1707700025.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318795362805044962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உனக்கான கவிதையை&lt;br /&gt;இயற்ற முற்படும்&lt;br /&gt;ஒவ்வொரு அமர்வுகளின் முடிவிலும்&lt;br /&gt;வெற்றுப்பக்கங்களே கவிதைகளாய்&lt;br /&gt;மிஞ்சுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoaHUhUuI/AAAAAAAAEFc/sIcV8kTRv-I/s1600-h/1707600096.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoaHUhUuI/AAAAAAAAEFc/sIcV8kTRv-I/s320/1707600096.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318795589031383778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாட்குறிப்பும், எழுதுகோலும் இல்லாத &lt;br /&gt;ரயில்பயண தனிமை &lt;br /&gt;பொழுதுகளை போன்றது,&lt;br /&gt;நீயில்லா தருணங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoxeLOzmI/AAAAAAAAEFk/6bYC9lbcuhU/s1600-h/1703900005.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoxeLOzmI/AAAAAAAAEFk/6bYC9lbcuhU/s320/1703900005.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318795990303428194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'எனக்கு கவிதை எழுதவே வரலடா'&lt;br /&gt;செல்லமாய் சிணுங்குகிறாய்...&lt;br /&gt;அன்று என் இதழ்களில்&lt;br /&gt;நீ இழைத்தக் கவிதையை விடவா&lt;br /&gt;எழுதிவிடப் போகிறார்கள்&lt;br /&gt;கல்லறையிலும், கர்வத்திலும் கிடக்கும் &lt;br /&gt;பெருங்கவிஞர்கள்??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdApIxWCPPI/AAAAAAAAEFs/q3e-ME1LzLM/s1600-h/42-16138167.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdApIxWCPPI/AAAAAAAAEFs/q3e-ME1LzLM/s320/42-16138167.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318796390586006770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;களைந்து கிடக்கும் &lt;br /&gt;சொற்களையெல்லாம் தேடி&lt;br /&gt;களைத்து கிடக்கின்றன&lt;br /&gt;அகராதிகளும் அகரமுதலிகளும்...&lt;br /&gt;உன் உதட்டுச்சாயம் படிந்த&lt;br /&gt;கைதுடைக்கும் தாள்முன்னே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdApY_xLWSI/AAAAAAAAEF0/JuX4iFRjIS0/s1600-h/1761500044.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdApY_xLWSI/AAAAAAAAEF0/JuX4iFRjIS0/s320/1761500044.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318796669335853346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எழுத முரண்டு பிடிக்கும்போது,&lt;br /&gt;கையுதறி மை தெளித்து&lt;br /&gt;கிறுக்குவது போலாவது கிறுக்கேன்...&lt;br /&gt;'கவிதையே கவிதை வரையும்'&lt;br /&gt;ஆச்சர்யகுறி வாக்கியம் கேட்டு&lt;br /&gt;வெகுநாட்களாகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdArI4e4yEI/AAAAAAAAEGE/Svlx8xurLlc/s1600-h/1675100010.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdArI4e4yEI/AAAAAAAAEGE/Svlx8xurLlc/s320/1675100010.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318798591525439554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முத்தமிட்டு கையசைத்து &lt;br /&gt;நீ தெருமுனையில் மறைந்துபோகையில்,&lt;br /&gt;உன்னை எதிர்முனையில்&lt;br /&gt;புன்னகையோடு தோன்றவைப்பது&lt;br /&gt;கவிதைகளுக்குமட்டும்&lt;br /&gt;எப்படி சாத்தியப்படுகிறது?&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Image Courtesy: &lt;a href="http://www.iloveimages.com"&gt;iloveimages&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-2886346152457983102?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/2886346152457983102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=2886346152457983102' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2886346152457983102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2886346152457983102'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/03/blog-post_29.html' title='கவிதையே கவிதை எழுதுகிறதே!'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SdAoM8j9VuI/AAAAAAAAEFU/HlLs5iHlPSk/s72-c/1707700025.JPG' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-3212967433543727134</id><published>2009-03-25T00:45:00.003-04:00</published><updated>2009-03-25T01:02:46.936-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிம'/><title type='text'>Benny Lava - கல்லூரி வானில்...</title><content type='html'>பெண்ணின் மனதை தொட்டு படத்துல "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ"னு ஒரு பாட்டு வரும். வெளிநாட்டு பயபுள்ளைங்க, அந்தப் பாட்டுல அப்படி என்னத்த பாத்தாங்களோ தெரியல, Crazy Indian songனு Youtubeல தேடுனா, மொதல்ல அந்தப் பாட்டுத்தான் வந்து நிக்கும். அத வேற மொழிபெயர்க்குறேன் பேர்வழின்னு அசிங்க அசிங்கமா லாங்க்வேஜ உபயோகிச்சு அதுவும் பயங்கர ஃபேமஸாயிடிச்சு. "காய்ந்த நிலாவோ"வுக்கு ரைமிங்கா Benny Lavaனு போட்டு, புரபுதேவாக்கு அவிங்க வச்ச பேரே Benny Lavaனு ஆயிடிச்சு. அப்புறம் பென்னி லாவா பாட்டெல்லாம் தேடிபுடிச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சிருக்கானுங்க. விக்கிபிடீயால கூட Benny Lava ரெஃபரென்ஸ் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீடியோவ வச்சி மக்கள் உருவாக்குன பல விடியோக்கள் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ல அந்தப் பாட்ட ஆடி பாடி வெள்ளக்காரங்க எடுத்த விடியோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/NK19JBzmN9I&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/NK19JBzmN9I&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சப்பமூக்கனுங்க உருவாக்குன அதே பாட்டோட ரீமிக்ஸ்... சவுண்ட் மிக்ஸிங்லாம் கலக்கிருக்கானுங்க... பாட்டு வரிகள் மட்டும் ரொம்ப கேவலமா இருக்கும்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/laxTK7lHkww&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/laxTK7lHkww&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதான் அல்டிமேட்.... கொஞ்ச நாளைக்கு முன்னால முடிஞ்ச அமெரிக்க தேர்தல்ல போட்டியிட்ட மெக்கெயின், சாரா பாலின் ஜோடிங்கள கிண்டல் பண்ணி அதே பாட்ட ரீமிஸ் பண்ணிருக்காங்க... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/CBZej5qSIwU&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/CBZej5qSIwU&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-3212967433543727134?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/3212967433543727134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=3212967433543727134' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3212967433543727134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3212967433543727134'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/03/benny-lava.html' title='Benny Lava - கல்லூரி வானில்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-5367292924279333183</id><published>2009-03-18T01:34:00.003-04:00</published><updated>2009-04-16T19:21:19.501-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>மயிலிறகு பக்கங்கள்...</title><content type='html'>கதிரவன் தொலைந்து வெகுநேரம் ஆகியிருந்தது.மலரின் இதழ்களைபோல் விரிந்திருந்த ஓர் குவளையின் நடுவே, கண்ணாடி குமிழினுள் எடிசன் மட்டுமே லேசாய் விழித்திருந்த தனிமை சூழ்ந்த அறை. ஒருபக்கச் சுவரின் கணிசமான சுற்றளவை கவர்ந்திருந்த ஜன்னல், மெலிதான காற்றோடு, நிலவின் சிறு ஒளியினையும் கடத்தி வந்திருந்தது. வெளிச்சமென்றோ, இருளென்றோ பிரித்தறிந்துவிடாத ஒளியளவே மிதமாக காணப்பட்ட மங்கலான பொழுதில் காற்றின் அலாவலில் மேசைமேல் சிறகடித்துக் கொண்டிருந்தது ஓர் நாட்குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;செவிப் புலங்கடந்த ஒலிகள் மட்டுமே நிறைந்திருந்த அவ்வறையில், சிதறிய பக்கங்கள் எழுப்பிய மெல்லிய ஒலியில் சிந்தனை களைந்தவனாய், வேகமாய் அந்நாட்குறிப்பை எடுத்து கட்டிலில் அமர்ந்தபடி புரட்ட ஆரம்பித்தான். கோடிமுறை அதனை படித்திருந்தாலும், முதல் பக்கத்திலேயே, முதன்முறை படிப்பதுபோன்றதொரு பரவசம் அவன் விழிகளில் விரிந்து, மெல்ல கண்ணீர் துளிகளாய் உருமாற ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முதல் பக்கம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகையையும், கண்ணீரையும் விதைக்கும் நிகழ்வுகளை நினைவுகளாய் சிறைப்படுத்தும் முயற்சியே டைரி குறிப்புகள். இவ்விரு உணர்வுகளும் ஒன்றர கலந்தவைகளுள் மேலானது காதல். காதல், சிலருக்கு சிறகுகளாகவும், சிலருக்கு சிலுவைகளாகவும் வாய்க்கப்படலாம். இரண்டின் முடிவிலும், என்றும் ஈரமாக எஞ்சியிருக்கும் அழகான நினைவுகள். சாபங்கள் தூவிய வரங்கள் நிறைந்த என் காதலைப் பற்றிய குறிப்பின் தொகுப்பே இந்த மயிலிறகு பக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜூலை &lt;STRIKE&gt;18 &lt;/STRIKE&gt; ஏதோவொரு நாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை எப்பொழுது முதன்முதலாக சந்தித்தேனென்பது எனக்கு நினைவில் இல்லை. ஒவ்வொரு விடியலிலும் கண்ணெதிரே தொங்கும் நாட்காட்டியை பார்த்தவுடன் நினைவுபடுத்த முயன்றும் தோற்றுத்தான் போகிறேன். உன்னை காதலிக்கப் போகிறேனென்பதை முன்பே அறிந்திருந்தால் அந்நாள் என் வாழ்நாளின் இன்னுமொரு பிறந்தநாளாயிருந்திருக்கும். அதனாலேயே உன் பிறந்தநாளை உன்னைச் சந்தித்த நாளென்றும் கூடுதலாக கொண்டாடுகிறேன். அன்று யாரோ ஒருவனுடன் நம் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாய். ஏனைய பெண்களிடமிருந்து தனித்துவிளங்கும் சிறப்பம்சம் எதுவுமில்லாத மற்றுமொரு ஃபிகராகத்தான் இருந்தாய். &lt;br /&gt;&lt;br /&gt;”அங்க பாருடா ஜான் ஆப்ரஹாமும், பிபாசா பாஸுவும்” என்று உன்னையும் அவனையும், நண்பனொருவன் ஆரம்பிக்க, “டேய்.. பிச்சுப்போட்ட பப்ஸ் மாதிரி இருக்கா.. அவள போய் பிப்ஸ் கூட கம்பேர் பண்ற?” என்று கலாய்த்த என்னை முறைத்தபடியே சென்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்தில் உன்னை மறுபடியும் நம் கல்லூரி உணவகத்தில் பார்த்தேன். நண்பர்களிடம் உன்னை மாலை அதே இடத்தில் சந்திக்க வைக்கிறேனென்ற பந்தயத்திற்காக உன்னிடம் வந்து பேசினேன். &lt;br /&gt;&lt;br /&gt;"ஸாரிங்க... அன்னைக்கு பசங்க உசுப்பிவிட்டதாலத்தான் ஓட்டிட்டேன்... தப்பா நெனச்சிக்காதீங்க" என்று நண்பர்களை ஊறுகாயாக்கி உன்னிடம் கடலையின் முதல் அத்தியாத்தை ஆரம்பித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"காலேஜ் வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் பழகிப் போச்சுங்க... ஃப்ரீயா விடுங்க.." என்று மன்னிப்பு வழங்கும் தேவதையாய் நீயும் பதில் பேச, அப்போதைய உரையாடலின் முடிவில் நாம் மாலை சந்திப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். அன்றைய இரவு பந்தையத்தில் தோற்றதனால், அந்த மாதச் செலவுக்காக கொடுக்கப்பட்டிருந்த என் பணமனைத்தும் உதயம் மெஸ்ஸில் மொத்தமாக கரைந்தது. ஏமாற்றிய உன்னை வசைபாடியபடியே விடுதிக்கு வந்து சேர்ந்தேன். அன்று எங்கள் விடுதி தொலைப்பேசி அதிசயமாய் வேலை செய்தததை மன்னிப்புகள் தாங்கி வந்த எனக்கான உன் அழைப்பின் மூலமே அனைவரும் அறிந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆகஸ்ட் 21.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுதான் முதன்முதலாக 'உனக்கு வரப்போற பொண்டாட்டிய பத்தி சொல்றேன் பாரு' என்று என் கையைப் பற்றி ரேகைகள் பார்த்தாய். இது ஐந்தாவது முதன்முறை. முதன்முறை காஃபி, முதன்முறை சினிமா, முதன்முறை கடற்கரை, முதன்முறை 'டா' போட்டழைத்தது போக முதன்முறை உன்னுடைய ஸ்பரிஷம். உன்னை முதன்முறையாக நான் கலாய்த்த இடத்திலிருந்து வேறொருவன் நம்மை கலாய்க்கும் நிலைவரை வளர்ந்திருந்தது நம் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அக்டோபர் 17.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புது மாணவர்களுக்காக நடைபெறும் நம் கல்லூரியின் கலைவிழா. 'அக்னி'. உன்னுடன் பழகிய நாளிலிருந்து நண்பர்களை மறந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாற்றினால் உன்னை விட்டு பிரிந்து நண்பர்களுடன் மட்டுமே நான் களிப்பதாக நமக்குள் ஓர் ஒப்பந்தம். புதிய மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் தபால்காரனாக்கி தன் காதலிகளுக்கு கடிதமெழுதி அனுப்பிக் கொண்டிருந்தனர் முதிய மாணவர்கள். தொலைவில் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் அமர்ந்திருந்த உன்னை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன் நான். &lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள... உன் லவ்வ பார்சல் பண்ணி உன் ஆளுக்கு அனுப்பிட்டோம்ல", என்று என் நண்பன் கூறியபிறகுதான் பார்த்தேன், புதிய மாணவன் ஒருவன் உன்னிடம் என்னை கைகாட்டி கொடுத்தச் சீட்டை. அதை வாசித்தபிறகு என்னை முறைத்துவிட்டு வெளியேறிய உன்னை சமாதானபடுத்த அரங்கிலிருந்து வெளிவந்தபோது நீ அங்கு இல்லை. நீ என்னை புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கையில் மறுபடியும் உள்ளே சென்றுவிட்டேன். அடுத்து வந்த அழகிப் போட்டிக்காகத்தான் உன்னை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றேனென்று பிரிதொரு நாள் நீ கிண்டல் செய்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகிப் போட்டியும் இனிதே ஆரம்பமானது. வரிசையில் வளம் வந்த அழகு நங்கைகளுக்கு மத்தியில், மெல்லிய கறுப்பு வண்ண சேலையில் தேவதைகளின் தேவதையாக, அழகிகளின் அழகியாக நீயும் வந்தாய். நொடியில் ஏற்பட்ட பரவசம், கோபமாகவும் வெறுப்பாகவுமே மாறியது. காரணம் நீ அணிந்திருந்த கவர்ச்சியான கண்ணாடி சேலையும், கைகள் இல்லாத ஜாக்கெட்டும், இன்னும்... "மாப்ள... செம ****டா..." என்று என் முன்னாள் இருந்த ஒருவன் உன்னை பார்த்து சொன்னதும் எழுந்த பெருங்கோபத்தில் அவ்விடத்தை விட்டு வேகமாக விடுதியறைக்குச் சென்றேன். அன்று நீதான் 'மிஸ் அக்னி' என்பதை என் நண்பன் மூலம் அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் உனக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. கல்லூரி மாணவத் தலைவன் தேர்தலினால் ஏற்கனவே எங்களுக்கு எதிரியாகிவிட்ட மாணவத் தலைவன், நான் இருக்கும்போதே உன்னிடம் வாழ்த்துக்கூறி, அடுத்த நாள் மதியம் விருந்தளிப்பதாக கூறி உன்னையும் பெசண்ட் நகரிலிருக்கும் பொன்னுசாமி் உணவகத்திற்கு அழைக்க, நீயும் சரியென்றாய். &lt;br /&gt;&lt;br /&gt;"இது மாதிரி ஊதாரியா திரியறதா இருந்தா தயவு செஞ்சு என் கூட பேசாத...", ஏற்கனவே கோபத்தின் உச்சத்திலிருந்த நான், உன்னிடமிருந்து அதனை சற்றும் எதிர்பார்க்காதபடியால் என்னையும் மீறி பேசி தொலைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதே தான் நானும் சொல்றேன்... நீ இப்படி இரு.. அப்படி இருன்னு கண்டிஷன் போடுறதா இருந்தா நீயும் தயவு செஞ்சு என்கிட்ட பேசாத", நீயும் வரம்பு மீறியிருந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து நாம் இருவரும் சந்திப்பதையே நிறுத்தியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜனவரி 3.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பார்த்து பேசி இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. ப்ராஜக்ட், தேர்வு, விடுமுறை என்று வரிசையாக இறைவன் அமைத்து வைத்த ஏற்பாடுகள் வர உன்னை முழுவதுமாக மறக்க முயன்றிருந்தேன். உன்னை மறந்தேனோ? இல்லையோ? தனிமை தோய்ந்த சில இரவுகள் தவிர ஏனைய நேரங்களில் உன்னை நினைப்பதை தவிர்த்திருந்தேன். உன்னை, அதே மாணவத் தலைவனோடு சில முறை பார்த்ததாக நண்பன் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவளுங்க எல்லாம் சரியான **** டா.. மொதல்ல ஒருத்தனோட சுத்துனா... அப்புறம் உன்னோட.. இப்ப துட்டு பார்ட்டி ஒருத்தன் கெடச்ச உடனே உன்ன கை கழுவிட்டு போயிட்டா பாரு.." என்று வாய்கூசாமல் பேசிய நண்பனுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு வாரகாலம் மௌனவிரதம் மேற்கொள்ளும் முனிவராயிருந்தேன். அதன்பிறகு நடந்த சில செண்டிமெண்டல் சமரசங்களினாலும், உணர்வுபூர்வமான உரையாடல்களினாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜனவரி 12.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடையார் மலர் மருத்துவமனையில் மயக்கம் சற்று தெளிந்த நிலையில் நான். அருகில் என்னையே பார்த்தபடி நீ. நீ மட்டும். ஜூனியர் மாணவர்களுக்காக இறங்கிய அடுத்த ஆண்டுக்கான தேர்தல் களத்தில் பிரச்சனை. இரண்டு நாட்களுக்கு முன் கோட்டூர்புர சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த என்னை, சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து நீண்ட கைகள் பற்றியிழுத்து கீழே தள்ளியதால் இடது கை முறிந்திருந்தது. உன் அருகாமை கிடைக்குமென்றால் முன்பே அடிப்பட்டு படுத்திருக்கலாம் போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்.. நீயா? எப்படி இருக்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா இருக்கேன்... நீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நமக்கென்ன... ராஜா மாதிரி நச்சுன்னு இருக்கேன்... என்ன... இந்த மூஞ்சில லேசா மார்க் விழுந்ததால சிவில் ஷ்வேதா இனி என்னையப் பாக்க மாட்டா. அத நெனச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு", இறுக்கமான சூழலை சமன்படுத்த எனக்கு தோன்றிய ஒரே ஆயுதம் நகைச்சுவை அல்லது மொக்கை. நீயோ தரையில் முழங்காலிட்டு என் தோள்பட்டை பகுதியில் முகம்புதைத்து, 'இனி நான் ஸ்லீவ்லெஸ் போட மாட்டேன்... நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்' என்று அழுது கொண்டிருந்தாய். &lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் லூசு... உன்னைய யாரு இப்ப அதையெல்லாம் கேட்டா? நீ எப்படி இருக்கனும்னு நெனக்கிறியோ, அப்படித்தானே இருக்கனும்... அன்னைக்கு நாந்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசித் தொலச்சிட்டேன்..", அடிப்பட்டிருந்த கையில்தான் நீ சாய்ந்திருந்தாய் எனினும் வலியைக் காட்டிகொள்ளாமல் உன்னை சமாதானபடுத்திக் கொண்டிருந்தேன். அன்று முதல் ஆரம்பமானது, என் வாழ்வின் இரண்டாவது அத்தியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மார்ச் 29.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னூற்று அறுவத்தைந்து முறை உலகம் உருண்டாலும், மறத்தல் சாத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டுவது என்றாவது ஒருநாளை மட்டுமே. அப்படியொரு நாள்தான் இன்று. சென்னையின் புறநகரைச் சேர்ந்த கசுவா கிராமத்திலிருக்கும் சேவாலயாவிற்கு நாம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். சென்னை நகர பேருந்துகளின் சதி சில சமயங்களில் நமக்கு நல்விதியாகவும் வரக்கூடும். அன்றும் சரியான நேரத்தில் பேருந்து வராததால் கல்லூரி விடுதிக்கு போய் சேர இரவு பத்தாகிவிட்டது. ஒன்பது மணிக்குள் பெண்கள் விடுதிக்கு திரும்பிவிட வேண்டுமென்பது நம் கல்லூரியின் சட்டமென்பதாலும், அதற்கு முன்பே இதுபோல் இரண்டுமுறை நீ மாட்டிக் கொண்டதாலும் இம்முறை கட்டாயமாக விடுதிக்கு செல்ல மாட்டேனென்று நீ அடம்பிடித்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதியிலன்றி வெளியில் தங்கியிருந்த நண்பனொருவனை எனதறையில் தங்க வைத்துவிட்டு உன்னை அங்கு அழைத்துச் சென்றேன். அன்றுதான் அடையாரிலிருக்கும் அந்த கையேந்தி பவனுக்கு கூட்டிச் சென்றேன். முதலில் அங்கே நீ சாப்பிட மறுத்தாலும், கடைசியில் எனது தட்டிலிருந்த தோசையையும் காலி செய்தது உனக்கு ஞாபகமிருக்குமென  நினைக்கிறேன். ஆண்கள் தங்கியிருந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வதற்குள், யாராவது பார்த்து விடுவார்களோவென்ற அச்சத்தில் நடுங்கி எனதுடல் முழுவதும் வியர்த்திருந்தது. நீயோ, "லைஃப்ல த்ரில் வேணும் மச்சி..." என்று அசால்ட்டாக வந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வீட்டிலிருந்த அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒற்றை மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், தோளோடு தோளுரசி அமர்ந்திருந்தோம். உன் எல்கேஜி தோழி முதல், என் எட்டாம்வகுப்பு தோற்றக் காதல் வரைக்கும் அனைத்தையும் பகிர்ந்துவிட்டிருந்த நமக்குள் அப்பொழுது பேசுவதற்கு எதுவுமே மிச்சமில்லை. ஜன்னல்கள் இருந்திருந்தால் காற்றின் சத்தமாவது கேட்டிருக்கும். இருள், மெழுகுவர்த்தி, தனிமை, ஈர்ப்பு என்று அனைத்தும் ஏதுவாய் இருந்தும் நமக்குள் எதுவுமே நடைபெறவில்லை. ஏன்? அந்த எண்ணம் கூட வரவில்லை. அப்படியே என் வாழ்நாள் முடிந்துவிட வேண்டுமென்றுகூட தோன்றியது. இளம் இரவு மூப்படைந்து உயிர்விட்டதுவரை நம்மிருவருக்கிடையே வளம்வந்தது வெறும் மௌன உரையாடல்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது எனதருகில் வந்தாய். மிக அருகில். உன்னுடன் இருக்கும் பொழுதுகளில் ஏற்பட்டிராத ஓர் உன்னத உணர்வு அப்பொழுது என்னுள் பரவ ஆரம்பித்தது. கைவிரல்களோடு விரல்கோர்த்து, உன் கால்விரல்களால் தரையூன்றி, பாதங்களை மேல்தூக்கி எம்பி, உன் இதழ்களை என் இதழ்களின் அருகில் கொண்டுவந்து நிறுத்தினாய். அப்பொழுது என் மீசைக்குள் ஊடுருவிய உன் சுவாசக்காற்றின் உஷ்ணம் இன்னமும் என் முகத்தில் மிச்சமிருக்கிறது. உன் முகம் பார்க்க முடியாமல் விழிமூடி காத்திருந்தேன் நான். சில நிமிடங்களில் எதுவுமே நடைபெறாமலிருக்க இமைதிறந்தபோது, புன்னகைத்தவாறே என் கன்னத்தில் முத்தமிட்டாய். நீண்ட நாட்களுக்கு பிறகு என் முதன்முறை பட்டியலில் மற்றுமோர் பதிவு. என் விரல்களை விடுவித்துவிட்டு, தலைகுனிந்து வெட்கப்பட்டவாறே அங்கிருந்து ஓடினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏப்ரல் 19.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு கடைசியாக செய்த ரயில்பயணம். உனக்கு விடுமுறை, எனக்கு வாழ்க்கை என்று ஆளுக்கொன்றை தந்துவிட்டுச் சென்றது கல்லூரி வாழ்க்கை. கல்லூரியின் கடைசி நாட்கள், நண்பர்கள், அறட்டை, விடுதி, விளையாட்டு, சண்டை, தேர்தல், பார்வையிடல், கலாய்ப்பு என எத்தனையையோ இழக்க போகிறேனென்பது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை, உன் ஒருத்தியின் பிரிவின் முன்பு. உன் ஊர் வரும்வரை என் தோள்மீது சாய்ந்தபடியே வந்தாய் நீ. நம்மை தம்பதியினரெனவோ, அல்லது காதலர்கள் எனவோ எதிர் இருக்கையில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மே 23.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'You have a Good News and a Worst News' என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல்தான் நடந்தது அன்றும். நீண்ட தேடல்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் நீ என் அருகில் இல்லையே என்பதுதான் என் தலையாய எண்ணமாய் இருந்தது. நீயும் நானும் காதலிக்கிறோம் என்ற உணர்வு நம் இருவருள்ளே இருந்தும் நாம் அதனை வெளிப்படுத்தவோ, அதனோடு உடன்பட்டிருக்கவோ இல்லை. உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தும் பல ஒத்திகைகளை பல நேரங்களில் பல இடங்களில் செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னிடம் பேசுவதற்காக உன் அலைப்பேசிக்கு அழைத்தேன். வழமைபோல் யாரோ ஒரு பெண்ணொருத்தி நீ இல்லையென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தாள்.உன்னுடன் பேசி அன்றுடன் 23 நாட்கள் ஆகியிருந்தது. ஊருக்கு சென்றதிலிருந்து முக்கால்வாசி நேரங்கள் உன்னுடன் தொலைப்பேசியிலேயே இருந்ததனால், எனக்கு வேலை கிடைக்கும் வரையில் நாம் பேச வேண்டாமென்று அன்பு கட்டளை விதித்தாய். காதல் போதை சட்டங்களையும், கட்டளைகளையும் உடைத்தெறிந்துவிடும் என்பதனை உலகறியும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 'இதுதான் கடைசி தடவ' என்று உன்னை மறுபடியும், மறுபடியும் அழைத்ததனால், உன் செல்ப்பேசி இணைப்பையே துண்டித்திருந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ ஒரு நாள் உன் உறவினர் ஒருவருடைய தொலைப்பேசி எண்ணை பின்னால் நினைவுபடுத்துவதற்காக குறிக்கச் சொன்னாய். அந்த துண்டுச்சீட்டு இன்னமும் என் பர்ஸில்தான் இருக்கின்றது என்பது அப்பொழுது நினைவில் வர, அவர்களை அழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரந்தரும் தேவதையொன்று நம் கண்முண்ணே தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால், அப்போதைய மணித்துளிகளை என் வாழ்நாளிலிருந்தே அழித்துவிடும்படி கேட்டிருப்பேன். அடுத்த ஒன்பது மணி நேரத்தில் நான் உனதறையில் இருந்தேன். நான் யாரென்பதுகூட உனக்கு முழுமையாக நினைவிலில்லாத மயக்கநிலையில் இருந்தாய். இதயங்களை விளையாட்டாய் திருடிக் கொண்டிருந்த உன் இதயத்தில் ஏதோ கோளாறென்றார்கள். 'இன்னும் கொஞ்ச நாள்தான்' என்று உன்னுயிருக்கு கெடு வைத்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"பாரும்மா.. யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா...", உன் தாய் என்னை உனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை கண்டுபிடித்து, மெலிதாய் புன்னகைத்து, என்னை உனதருகில் வரச் சொன்னாய். &lt;br /&gt;&lt;br /&gt;"நான்... உன்ட்ட... ரொம்ப நாளா... சொல்லனும்னு நெனச்சேன்... சொல்லாமலேயே போயிடுவேன்னு பயந்துட்டு இருந்தேன்... நல்ல வேளை... நீ வந்துட்ட..." என்று இடைவெளி விட்டுவிட்டு பேசினாய். விழிகளில் நீர்ததும்ப, உன் விரல்களைப் பற்றி உன்னையே வெறித்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ லவ் யூ", என்று வேகமாக கூறிவிட்டு, அந்த நிலையிலும் வெட்கப்பட்டுக் கொண்டே முகம் திருப்பினாய். உன் பெற்றோர்களும், உறவினர்களும் நம்மிருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் சப்தமிட்டு அழுதேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;அறை கதவினருகே யாரோ வருவதுபோல் இருந்ததும் அவசரமாக நாட்குறிப்பை தலையணைக்கடியில் வைத்துவிட்டு வருபவர்களை வரவேற்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனைவிதான் உள்ளே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க!! நாளைக்கு மறக்காம இந்த கேஸ் பில்ல...", ஏதோ உடையை மடித்தபடியே பேசிக் கொண்டிருந்த அவள் கைகளை பிடித்து கட்டிலுக்குள் இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க இப்படி அவச..", அவள் பேசி முடிப்பதற்குள் அவள் இதழ்களில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான். அவன் செய்த அவசர சேட்டைகளில், தலையணைக்கடியிலிருந்த நாட்குறிப்பு தவறி கீழே விழுந்து தாள்கள் புரண்டன.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜூன் 1.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ மரணத்தோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள். அரை மாதமோ, ஆறு வருடமோ என்று உத்தரவாதமில்லாத உனதுயிரை எனக்கு திருப்பி கொடுத்த நாள். அவசரமாய் கடைக்குச் சென்று ஒரு நாட்குறிப்பு வாங்கி உன்னோடு இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையை பதிவு செய்கிறேன். நாளை உன் விழிகளில் விடியுமோ? இல்லையோ?. அதுப்பற்றி கவலையில்லை. இனி உனக்காகவே, உனக்காக மட்டுமே வாழ்வதாக தீர்மானித்து விட்டேன்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;தாள்கள் மொத்தமாய் புரண்டு மூடிய நாட்குறிப்பின் முன்அட்டை காட்டிக் கொண்டிருந்தது, 2003.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-5367292924279333183?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/5367292924279333183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=5367292924279333183' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5367292924279333183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5367292924279333183'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/03/blog-post_18.html' title='மயிலிறகு பக்கங்கள்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-8587609090280560135</id><published>2009-03-05T21:53:00.003-05:00</published><updated>2009-03-06T00:16:18.730-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தாய்மை!!</title><content type='html'>"நானும் வர்றேங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா... இப்பத்தான் வந்து எறங்கிருக்கோம். பாப்பா வேற ரொம்ப டயர்டா இருக்கா. நீ ரெஃப்ரெஸ் பண்ணிட்டு ரெடியா இரு. நான் ஈவினிங் வந்து கூட்டிட்டுப் போறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியை சமாதானபடுத்திவிட்டு, வேகமாக ஆட்டோவில் கிளம்பினேன். என் ஆரம்பக்கட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் என் கண்முன்னே வந்தவண்ணமே இருந்தன. காரணம்... எல்லா நிகழ்வுகளிலும் பிரித்தெறிந்துவிடாதபடி இருந்த என் அம்மா. எதிர்பார்ப்பு இல்லாமலேயே அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் தாயாக மட்டுமே இருக்க முடியும் என்பதனை பலமுறை உணர்த்தியவள். சாதாரண தாய்-மகன்களை போலலல்லாமல், எங்கள் இருவருக்குள்ளும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தன. தலைமுறை இடைவெளியைக் காரணங்காட்டி ஒவ்வொரு முறையும் சமாதானபடுத்தியதுண்டு. நான் இளைஞனாக இருந்தபோதும் இரவு உணடு ஊட்டிவிடும் அவளது ஒற்றை சோற்று உருளையில் தாய்மை உணர்வைத் தவிர அனைத்துமே மறைந்துபோகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிசம் ஆட்டோவ கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க..."... "சாச்சா... சாச்சா...", சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த சித்தப்பாவை அழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட செய்யதா? அஸ்ஸலாமு அலைக்கும்... எப்ப வந்தெறங்குனப்பா? சயிலா, கொழந்த எல்லாரும் சொவ்மா இருக்காவளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வஅலைக்கும் சலாம்... எல்லாரும் நல்லா இருக்காங்க... எங்க ஆஸ்பத்திரிக்குத்தானே? வாங்க ஆட்டோலையே போலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள நாங்கள் கிளம்பினோம். பேசுவதற்கு எவ்வளவோ இருந்தும் நீண்ட நேரமாக எங்கள் இருவருக்குள்ளும் சிறிய உரையாடல் கூட நடைபெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சம்பளம் என்ன... ஒரு... ஒரு லட்சம் வருமா?", இந்நேரத்தில் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத நான், அவரை 'எதற்கு?' என்பதுபோல் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... பெத்தவள அப்படியே விட்டுட்டு, வெளிநாட்டுல போய் கெடக்குறியே... அதான் கேட்டேன்...", யாரோ ஆளுயர ஈட்டியால் குத்துவதுபோல் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"முன்னால டெல்லில வேல போட்டப்ப, ஒரு மாசத்துல அம்மாவ தேடுதுன்னு ஓடி வந்த.. இப்ப என்னாச்சு? பொண்டாட்டின்னு இன்னொருத்தி கெடச்ச உடனே அம்மாவெல்லாம் மறந்து போச்சா?", அவர் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு வார்த்தைகளும், ஓர் குற்றவுணர்வை என் உடல் முழுவதும் பரப்பி என்னை தலைகுனிய செய்தது. ஆட்டோக்காரன் கண்ணாடியில் என்னைப் பார்ப்பதுபோன்ற ப்ரம்மை ஏற்பட்டது. எதுவும் பதில் பேசாமலேயே இருந்தேன். அதன் பிறகு மீண்டும் மௌனம். மருத்துவமனையும் வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாயை சேர்த்திருந்த அறையை நோக்கி ஓடிக்கொண்டே நடந்தேன். அறைக்கு வெளியே, ஊரை சேர்ந்த பலர் வந்திருந்தனர். அனைவரும் என்னை குற்றவாளியாய் பார்ப்பதுபோல் இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல், அறைக்குள் செல்ல எத்தனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ!! இப்ப உள்ள போகக் கூடாது. விஸிட்டர் டைம் சாய்ங்காலம்தான்", மருத்துவமனை ஊழியர் ஒருத்தி என்னைத் தடுத்து நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம்... மேடம்... இவரு அந்தம்மாவோட புள்ளதாங்க.. இப்பத்தான் வந்திருக்காரு... ஒரே ஒரு தடவ மட்டும் அவர பாக்க விட்டுறுங்க", பின்னாலேயே வந்த சித்தப்பாதான் அவளிடம் பேசி என்னை உள்ளே செல்ல அனுமதிக்க வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"போயிட்டு உடனே வந்திருங்க.... உங்கள டாக்டர் வேற பாக்கனும்னு சொன்னாரு... அம்மாவ பாத்துட்டு கீழ முத்தையா டாக்டர் ரூம்ல போய் அவர பாருங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. இதற்கு முன் கல்லூரியில் படிக்கும்போது உறவினர் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தபோது இதைப்போல் ப்ரத்யோக அறைக்குள் சென்றது நினைவுக்கு வந்தது. தொலைவில் எங்கோ நடைபெறும் துயர நிகழ்வுகள், செய்திகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சிதைந்து போகும். அருகாமையில் நடைபெறும்போதுதான் அதன் வலி உக்கிரமமாக இருக்கின்றது. மூன்றாவது கட்டிலில் என் தாயை அந்தக் கோலத்தில் பார்த்தவுடன் செத்துவிடலாம் போல் தோன்றியது. பீறிட்டு வந்த அழுகையை எந்தவொரு தடங்கலுமின்றி சிறுகுழந்தையென ஓவென்று கதறி அழுது வெளிப்படுத்தினேன். சிறிது நேரத்தில் என் சுயநினைவை இழந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; *---------* &lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவ பாத்தீங்கள்ல? ரொம்ப மோசமா இருக்காங்க...."&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்... எதாவது செஞ்சு எங்க அம்மாவ காப்பாத்துங்க சார்..", மரணத்தின் விளிம்பிலிருக்கும் என் தாயை எப்படியாவது காப்பாற்றி விடலாமென்ற நம்பிக்கையில் மருத்துவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... நான் சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க... மனச தெடப் படுத்திக்கோங்க... நாங்க அதையும் இதையும் சொறுவி இன்னும் நாலு நாளைக்கு அப்படியே வச்சிருக்க முடியும். ஆனா அஞ்சாவது நாள்? நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுங்க... கடைசி நேரத்துலயாவது அவுங்க நிம்மதியா வீட்ல இருக்கட்டும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி.. அழாதீங்க சார்... எல்லாருமே பொறக்கும்போதே சாவையும் சேத்துதான் கொண்டு வர்றோம். நீங்க சீக்கிரம் வீட்டுக்கு கெளம்ப வேண்டிய ஏற்பாடுகள பாருங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிக்குக் கூட இந்த நிலைமை வந்துவிடக் கூடாது. என் மொத்த துயரத்தையும் தீர்த்துக் கொள்ள அவசரமாக தேவைப்பட்டது ஓர் தோள். என் அனைத்து இன்னல்களையும் சுமந்துக் கொண்டிருந்த என் தாயின் தோளே சாய்ந்து கிடக்கும் இப்பொழுதில் என் மனதில் உடனே தோன்றியது இன்னொரு தாயான என் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; *---------* &lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி மூச்சினை விட்டபடியே நடுவீட்டில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் என் தாய். அழுது தீர்த்துவிட்ட களைப்பில் வீங்கியிருந்த முகத்துடன் என் மனைவி கட்டிலின் அருகே அமர்ந்திருந்தாள். என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடியாத வயதில், தன் தாய் அழுததைக் கண்டு தானும் அழுது களைத்து என் மனைவியின் மடியில் படுத்துக் கிடந்தாள் என் மகள். கடைசி காலங்களில் எனது அருகாமையை என் தாயிடமிருந்து பறித்துவிட்ட குற்றவுணர்வும், அவளின் அன்போடு அவளையும் இழக்க போகும் துயரமும், அவள் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் என் இருப்பின் உறுதியை சாய்த்தபடியே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்.. அந்த தஸ்மணி கீழ விழுது பாரு... அத எடுத்து கைல வைய்யி..."&lt;br /&gt;&lt;br /&gt;"லாயிலா சொல்லச் சொல்லு..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் செய்யது... ரெண்டு ரகாயத்து நஃபில் தொழுது துவா கேளு"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த குரான தலமாட்டு பக்கத்துல வைங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"யாஸின ஓது..."&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் சற்று மந்தமாகவேதான் என் காதில் விழுந்தன. அப்பொழுதுதான் வந்திறங்கினாள் சப்தமிட்டு அழுதவாறே என் தாயின் நெருங்கிய தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ... இப்படி கெடக்குறாளே..." என்ற அழுதவாறே என்னை முறைத்துப் பார்த்தாள். "இப்ப உனக்கு சந்தோஷமாடா? இந்த அனாத புள்ளைக்காக அம்மாவ தூக்கி எறிஞ்சிட்டு போனையே... இப்ப சாவ கெடக்குறா... இப்ப உனக்கு சந்தோஷந்தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க... உங்களாலத்தான் நானும் எங்க அம்மாவ விட்டு இவ்வளவு நாளா பிரிஞ்சு இருந்தேன். உங்கள மாதிரி ஆட்கள் பேச்சக் கேட்டுத்தான் எங்க அம்மா என்னைய இன்னொரு கல்யாணம் பண்ண சொன்னாங்க... உங்கள மாதிரி ஆட்கள் சொல்ல கேட்டுத்தான், எங்க அம்மாவும் நான் என் மகள தத்தெடுத்துட்டு வந்தபோது இதே வார்த்தைய சொன்னாங்க. இந்த வார்த்தைய என் பொண்ணு கேக்கக் கூடாதுன்னுதான் எங்க அம்மாவ கூட விட்டுட்டு நானும் வெளிநாட்டுல போய் இத்தன நாளா கெடந்தேன். ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்.... தயவு செஞ்சு இது மாதிரி பேசாம இருங்க.... இல்லன்னா வெளில போயிடுங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் மீறிய கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியாமலேயே பேசிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா... அனாதன்ன என்னம்மா?", அறியாமையில் கேட்ட என் மகளை கட்டித் தழுவியபடியே அழத் துவங்கினாள் என் மனைவி. அதுவரையிலும் எந்தவொரு சலனமுமின்றி இருந்த என் தாயின் விழிகளின் ஓரத்திலிருந்து பிரிந்தது ஒரு துளி கண்ணீர், உயிரும் சேர்ந்தபடியே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-8587609090280560135?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/8587609090280560135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=8587609090280560135' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8587609090280560135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8587609090280560135'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/03/blog-post.html' title='தாய்மை!!'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-5911597775846152174</id><published>2009-02-14T16:40:00.007-05:00</published><updated>2009-03-28T13:39:33.000-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொண்டாட்டம்'/><title type='text'>என் சோக கதைய கேளு ஃபிகர்குலமே!!</title><content type='html'>காதல் தோட்டத்துப் பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களை உதிர்த்து சேலைகளில் பூசித் திரியும் சிங்காரிகளே... வீதியோரமெங்கிலும் வீழ்ந்து கிடக்கும் இதயங்களை கவனியாது நடைபயிலும் தாவணி தேவதைகளே... நச்சுப் பார்வையில் அமுத மாயையைப் பரப்பிச் செல்லும் சுடிதார் சுந்தரிகளே... இலக்கணமே பாராமல் ஹார்மோன்களை கொன்று குவிக்கும் ஜீன்ஸணிந்த சின்னக் குயில்களே... &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள், உங்கள் சாருக்கான்களுடனும், சூர்யாக்களுடனும் குளிரூட்டப்பட்ட உயர்ரக உணவகத்தில் மகிழ்ச்சியான தருணமொன்றை பரிமாறிக் கொண்டிருக்கலாம். கலாச்சாரக் காவலர்கள் வேட்டையாட வருவோமென்று வியாக்கியானமிட்ட பூங்காக்களிலோ, கடற்கரையிலோ உங்களின் மீதியானவர்களோடு கைகோர்த்து நடைபயின்று கொண்டிருக்கலாம். திரையறங்கொன்றில், மாதவன்-சாலினியின் வேதியியல் பொருத்தங்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது, அரசியல்வாதி ஒருவனுக்கு வெளிர்-சிகப்பு நிற உள்ளாடைகளை பரிசளிக்க, விரைவஞ்சல் நிலைய வாசல்களில் வரிசையில் காத்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காதல் சின்னம் வரையப்பட்ட எங்கள் வீட்டு நாட்காட்டிகளில் கூட பதினான்காம் தேதி காணாமல் போகும் மாயம் உங்களுக்கு தெரியுமா? சூனியம் நிறைந்த பதிமூன்று விழிங்கிருக்கக் கூடுமென்று நையாண்டி செய்கிறான் காதல் முளைத்த திமிரில் நயவஞ்சகனொருவன். உங்களில் யாரோ ஒருத்தியை ஏற்று நிற்கும் கவிதைகள் தாங்க வேண்டிய, தொண்ணூறுகளில் வாங்கிய நாளேடுகள் இன்னும் எங்களைப் போலவே வெறுமையில் இருக்கும் அபாயத்தை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆணுக்குப் பெண் நூற்றுக்கு தொண்ணூற்று எட்டென்றிருந்தும், விடுபட்ட இரண்டிலேயே எங்களின் விதிகள் நிர்ணயிக்கப் பட்டிருப்பது யார் செய்த சதியோ? &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் சேரும் முன்பே காதலில் தேறும் துரித சமுதாயத்தில், கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டதனால், ‘காதலிகள் தேவை’ என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளோம்.  இந்த ஆண்டே ஜூன் பதினெட்டோ, அக்டோபர் முப்பத்தொன்றோ, காதலர் தினமென்று புதிய பரிமாணம் எடுக்கக் கூடும். இல்லையேல், அடுத்த ஆண்டு பிப்ரவரி பதினான்கு எங்கள் வாழ்க்கையிலும் வரக்கூடும். அதுவும் இல்லையேல், அதுக்கடுத்த ஆண்டு... அது வரையில் ஸ்பென்ஸர் ப்ளாஸாவிலும், மெரினாவிலும், கல்லூரி வாயில்களிலும் தரிசனங்கள் மட்டுமே கண்டு எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வோம். அது வரை, உங்கள் அலப்பறைகளை அள்ளித் தெளித்து வளமோடு வாழுங்கள். இப்படிக்கு... உதிக்குமென்ற நம்பிக்கையில், மேற்கு நோக்கிக் காத்திருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; *---------------------------------------* &lt;/center&gt;&lt;br /&gt;செத்து மடியும் உங்கள் மணித்துளிகளில், மைக்ரோ நொடிகளைக் கூட அணுஅணுவாய் ரசித்ததுண்டா? அவள் விண்முத்தம் அனுப்பிவைத்து கையசைத்துச் சென்ற திசைநோக்கி விழிகளை அப்படியே விட்டுவிட்டு குருடனாய் அலைந்ததுண்டா? இருள்ந்த வெளியையும், அறையெங்கிலுமாய் தோய்ந்திருக்கும் தனிமையையும் சிலாகிப்பதுண்டா? பிறிதொருநாள் அசைப்போட, மிகச்சாதாரண நிகழ்வுகளை கூட சிறைப்படுத்தும் பழக்கம்தான் உங்களுக்குண்டா? முதல் சந்திப்பு, முதல் தொடல், முதல் முத்தமென்று முழுமுதற்களை நினைவுகளில் சேகரிப்பதுண்டா? நடுவீதியில் நகைத்தபடியே தனிமையில் நடைபயின்ற கிறுக்குத்தனங்கள் உங்கள் அன்றாடங்களில் முன்னணியில் இருப்பதுண்டா? நீங்கள் அறிந்திராத பல உணர்வுகளை உங்களிடமிருந்து மீட்டெடுக்கும் ஓர் உன்னதத்தை நீங்கள் உணர்ந்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கேள்விகளுக்கும் உங்கள் பதில் இல்லையென்றால், வாழ்வில் மிக அற்புதமான ஒன்றை நீங்கள் இழந்திருக்கிறீர்கள். காதல்... சுற்றத்தின் நிகழ்வுகளை மறக்கடிக்கச் செய்யும் காதல், பாதங்களில் பட்டு நசுங்கிய சாலையோர மலரினை கவனிக்கச் செய்யும். நிராகரித்து அலட்சியப்படுத்தப்பட்ட குப்பைகளை கூட அழகென்று கொண்டாடச் செய்யும். பயணச்சீட்டுத் துரும்பில்கூட காதலி பெயரெழுதி கவிதையென்று கண்ணதாசனின் அடைமொழியை தனதாக்கிக் கொள்ளச் செய்யும். தினசரிச் செய்திகளை கூட மெலிதான குரலிலேயே வாசிக்க வைக்கும். இப்படி பல பைத்தியக்காரத்தனங்களின் கோர்வைதான் காதல். தடை செய்யப்படாத ஒரே போதை. பிரித்தெரிந்துவிடாதபடி காற்றோடு எங்கும் பரவிக் கிடக்கிறது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; *---------------------------------------* &lt;/center&gt;&lt;br /&gt;“மச்சான்... அனுபவப்பட்டவன் சொல்றத கேளுடா? சத்தியமா காதலிச்சிடாத மச்சான்...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரிடா மாப்ள...”&lt;br /&gt;&lt;br /&gt;“வலிடா... காதல்னா, காயாமான சாதல்டா...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஃப்ரீயா விடுடா மாப்ள... இவ இல்லன்னா இன்னொருத்திடா...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு தடவ பட்டது போதாதாடா? ***** இன்னொருத்தியாம், இன்னொருத்தி... நான் ஒழுங்காதானடா இருந்தேன். காலேஜ், அறட்டை, ஃப்ரெண்ட்ஸ், ஸைட்டுனு சந்தோஷமா இருந்தேனடா... ஏன்டா நான் காதலிச்சேன்... எனக்கு மட்டும் ஏன்டா இப்படியெல்லாம் நடக்குது?”&lt;br /&gt;&lt;br /&gt;“சரிடா... அதுக்கு இப்படி தண்ணி அடிச்சிட்டு இருந்தா எல்லாம் சரியாயிடுமாடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அது யாருடா?? சின்னி சாரா... சின்னி சார்.. சின்னி சார்... நீங்க காதலிச்சிருக்கீங்களா சார்? மொதல்ல நல்லா இருக்குற மாதிரிதான் சார் இருக்கும். என்னமோ உலகத்துல நாமதான் ஒசரத்துல இருக்குற மாதிரி இருக்கும்... கூச்சமே இல்லாம கன்னா பின்னான்னு பொய்யா கவித எழுதச் சொல்லும்... கருமம்புடிச்ச இந்த காதல்... அப்புறம்தான் சார் தெரியும்... ஏன்டா மச்சான்? சின்னி சார் இப்படி ஓடுறாரு? நான் என்ன அவ்வளவு எளக்காரமா போயிட்டேனடா? என்னையப் பாத்து ஏன்டா அந்தாளு ஓடுறான்... டேய் சின்னி ****... போடா போ... நாளைக்கு நீயும் காதலிப்படா.... அப்ப தெரியும்டா என்னோட வலி என்னன்னு..”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் வாடா... வீட்டுக்குப் போலாம்... சத்தம் போடாதடா...”&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு மாப்ள... நீங்கெல்லாம் காதலிக்காம எப்படிடா இருக்கீங்க?ன்னு உங்கள எல்லாம் நக்கல் பண்ணிட்டு திரிஞ்சேனடா... அப்பவே ஏன்டா நீ சொல்லல... இந்த கருமத்த விட்டுத் தொலடான்னு... நீயெல்லாம் ஒரு நண்பனாடா? எங்க அப்பன் செத்ததுக்கு கூட நான் ஒரு நாள்தான்டா அழுதேன்... இவளுக்காக... இந்தப் பாழா போன காதலுக்காக நான் காலம் பூரா அழுவேன் போலிருக்குதடா... பயமா இருக்குடா மச்சான்... பயமா இருக்கு... செத்துடலாம் போல இருக்குடா...”&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் ஒன்னுமில்லடா... நாங்கெல்லாம் இருக்கோம்டா உனக்கு... அழாதடா மாப்ள... ப்ளீஸ்டா”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எதுக்குடா அழப் போறேன்... இங்க பாரு சிரிக்கிறேன் பாரு.. சிரிக்கிறேன்... “ ... “மாப்ள... அங்க தெரியுது பாரு மச்சான் அந்த ப்ரிட்ஜ்.. அங்கதான்டா போன வாரம் வரைக்கும் அவ கூட கையப் புடிச்சுட்டே நடந்து போனேன்... ஏன்டா மாப்ள? ஏன்? போனவ போனாளடா... கூடவே இந்த.... அவளோட ஞாபகத்தையும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதானடா? கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்குற வெஷம்டா அது.. வெஷம்... மகா ஜனங்களே... படத்துல காட்டுறத எல்லாம் நம்பி சத்தியமா காதலிச்சிடாதீங்க... எல்லாம் காசு சம்பாதிக்கறுதுக்காக ஏமாத்துறானுங்க கேணப் பசங்க... தலைவர் சொன்ன மாதிரி ‘மாயா.. மாயா... எல்லாம் சாயா’தான்... ஏன்டா மாப்ள? தலைவரு கருத்துச் சொல்லும்போது ஏன்டா சாயா குடிக்கலாம்னு சொல்றாரு? ஒரு வேள சாயா சிங்’க சொல்றாரோ?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; *---------------------------------------* &lt;/center&gt;&lt;br /&gt;இந்த மூனுல நீங்க எந்த நிலைல இருந்தாலும், உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்... இதெல்லாம் முடிஞ்சு கல்யாணமும் ஆனவங்களுக்காக ஒரு பார்ட் எழுதுனேன்... எழுதி முடிச்சதுக்கப்புறம் எனக்கே வெக்கம் வெக்கமா போச்சு... அதான், சபை நாகரிகம் கருதி அத கத்தரிச்சாச்சு :)) அதனால சகல விதமான காதலர்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா, இன்றுபோல் என்றும் காதலுடன் வாழ வாழ்த்துக்கள்... குறிப்பா, எங்களோட ஒன்னுக்கு ஒன்னா பழகிட்டு திடீர்னு எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போற என்னுடைய நண்பனுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘மாப்ள... இம்புட்டு நாளா பண்ண அலம்பல்லாம் இனி வேகாது மச்சி... அதனால, எல்லாத்தையும் மறந்துட்டு நல்ல புள்ளையா தங்காச்சிக்கு அடங்குன கணவனா இருக்கப் பாரு... வாழ்த்துக்கள் மாப்பி...”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-5911597775846152174?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/5911597775846152174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=5911597775846152174' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5911597775846152174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5911597775846152174'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/02/blog-post_13.html' title='என் சோக கதைய கேளு ஃபிகர்குலமே!!'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-128958469788390353</id><published>2009-02-10T20:00:00.000-05:00</published><updated>2009-02-10T20:05:49.067-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலித் தொடர்'/><title type='text'>மேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...</title><content type='html'>சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜங்ஷன், மார்க்கெட், டவுண், பாளை பஸ் ஸ்டாண்ட், ஹை கிரவுண்ட் என்று நெல்லை நகர சுற்றுவட்டார ஊர்களனைத்தும் ஆங்கிலமொழியிலேயே அறியப்பட்டு வந்தன. அரசியல் ஆதிக்கமோ, மொழியார்வமோ, திடிரென ஓர் நாள் நெல்லை சந்திப்பு, தினசரி சந்தை, நெல்லை நகரம், பேருந்து நிலையம், மேட்டுத்திடலென்று பெயர் மாற்றப்பெற்று விட்டன. அவ்வதிரடி மாற்றத்தினால், பேருந்து பலகைகளில் புதிய ஊர்களின் பெயர்களை மட்டுமே கண்டு குழம்பி போயிருந்த மக்களுக்கு, தமிழ் பெயர்களைப் பழகிக் கொள்ள சில ஆண்டுகள் பிடித்தன. ஆங்கிலத்தை ஆங்கிலமென்றுச் சொன்னால் வித்தியாசமாகப் பார்க்கும் நம் தமிழ் சமுதாயத்தில் இப்படியொரு மாற்றம் அத்தியாவசியமான ஒன்று என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி வழக்கிலிருந்து ஒழிந்த சொற்கள் தமிழ் அகராதியில் ஏராளம். வாழ்வியல் ஆதாரத்திற்கு ஆங்கிலம் போன்ற பிற மொழிகளின் அவசியம், ஊடகங்களின் பிம்பத்தால் ஏற்படும் தவறான புரிதல்கள், உலகமயம், நாட்டுமயம் போன்ற மயமாதல்களினால் ஏற்படும் மாறுதல்கள் வழக்கொழிப்பு விவகாரத்தில் பெரும்பங்கு வகித்தாலும், புழக்கத்திலுள்ள் சில வேற்றுமொழி வார்த்தைகளுக்கு பொறுத்தமான தமிழ் சொல்லை தக்க சமயங்களில் அடையாளம் காணமுடியாத அறியாமையில் நாமும் உள்ளோம் என்பதை மறுக்கவியலாது. அதேபோல், இதுவரை பழகிவந்த உரைநடை மொழியை விட்டுக் கொடுக்காததும் ஓர் காரணம். உதாரணத்திற்கு, இடைகால ஊடுருவல் மொழியான வடமொழியிலிருந்து வந்த கஷ்டம், சந்தோஷம் போன்ற வழமையாய் உபயோகிக்கும் சொற்களுக்கு இணையான கடினம், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகளை அறிந்திருந்தும் உபயோகிக்க முடியாதவாறு பழகிக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மொழிக்கு எளிமையும் ஈர்ப்பும் மிக அவசியமான ஒன்று. சமீபத்தில் படித்த ஒரு பதிவில், ரயிலை புகைவண்டி என்றழைப்பதைவிட ’ரயில்’ என்று எளிமைபடுத்துவதாலையே அதிக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றிருந்தது. கவிதைச் சொற்களை உபயோகிப்பதில் நாம் காட்டும் ஆர்வம் சாதரண சொற்களில் இருப்பதில்லை. காரணம் அதனிடம் இருக்கும் ஓர் ஈர்ப்பு. ’பேருந்தில் நீயெனக்கு ஜ(ச)ன்னலோரம்’ என்ற பாடலுக்குப் பிறகே பேருந்து என்னும் தமிழ் சொல் அழகாகத் தெரிகிறது. அதே போல் புதிய வார்த்தைகளும் எளிமையாகவும் அழகாகவும் இருத்தல் தமிழின் நெடுந்தூர பயணத்திற்கு மிக முக்கியமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப... பதிவுக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கொழிந்த சொற்கள் பத்தி &lt;a href="http://siragughal.blogspot.com/"&gt;திவ்யப்ரியா &lt;/a&gt;ஒரு பதிவு போட சொல்லிருந்தாங்க. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கொழிந்த சொற்கள் என்று சொன்ன உடனேயே, சின்ன வயசுல படிச்ச ’அங்காடி’ என்னும் சொல் வழக்கொழிந்து ‘கடை’ என்ற வார்த்தை மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று படித்தது ஞாபகத்தில் வருகிறது. தமிழிலிருந்து உருவானதாக நம்பப்படுகின்ற கன்னடத்தில் அங்கடி என்பது இன்னமும் கடையைத்தான் குறிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர் பக்கம் உபயோகப் படுத்துற சில வார்த்தைகள் (பல சொற்கள் இன்னும் வழக்கத்துலத்தான் இருக்குது) மட்டும் இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;பைய்ய போ - மெதுவாக போ&lt;br /&gt;வெரசலா போ - விரைவாக போ&lt;br /&gt;டக்கு மோட்டார் - புல்லட்/பைக்/உந்துவண்டி :))&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்படுத்திப் பேசுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்கட் - பிஸ்கோத்து&lt;br /&gt;ஃபார்ம் - பாரம் - ’படிவம்’னு தமிழ் வார்த்தை இருந்தாலும், பாரம்தான் கிராமபுறங்கள்ல வழக்கத்துல இருக்குற ஒரு சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், எங்க ஊர் பக்கம் பேசுற சில வார்த்தைகள் வேற ஊர்ல வேற மாதிரி அர்த்தங்கள்ல வருது.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சி - மாடியைக் குறிப்பது. சென்னைப் போன்ற நகரங்களில் நண்பர்களை உரிமையோட அழைக்க உபயோகப்படுத்துற வார்த்தை. சில இடங்கள்ல ‘ஒசக்க - உயரத்தில்’னும் சொல்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதாவது பரவாயில்ல். சில வார்த்தைகள் கொஞ்சம் வெவகாரமா போயிடும். எங்க ஊர் பக்கம்லாம் ‘மொண்டு’னு ஒரு வார்த்தைய கேள்விப்பட்டதே இல்ல. அதுக்கு பதிலா ‘கோரி’னுதான் உபயோகப் படுத்துவோம். ’தண்ணிய கோரு’. திடீர்னு ஒரு நாள் தமிழ் வாத்தியார் ஒரு செய்யுள்ல ‘மொண்டாள்’னு சொன்ன உடனே ‘என்னடா வாத்தியார் அசிங்கமா பேசுறாரு’னு சிரிச்சித் தொலச்சிட்டோம். அதே மாதிரி எங்க ஊர்ல, ‘சொத்தப் பல்’ அப்டீங்குறத வேற மாதிரிதான் சொல்வோம். சென்னைல வந்து ஊர் ஞாபகத்துல அதப் பேசி, கும்பலா வந்து கும்மி அடிச்சிட்டானுங்க. ’எத்து’, ‘ஏசு’, இதெல்லாம் எங்க ஊர்ல வழக்குல இருக்கு. ஆனா இங்கத்தான் இல்ல :((&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப, ஒரு வருசத்துல ஒன்னா கல்லூரி முடிச்ச பசங்கள எப்படி சொல்வோம்? ’நம்ம செட்டுடா அவன்’ அப்டீனுதானே? ’அவன் கைல சொன்னேன், காலுல சொன்னேன்’னு வேலூர் வழக்குல பேசுட்டு திரிஞ்ச ஒருத்தங்க ‘அவன் நம்ம ஈடா?’னு கேட்டாங்க பாருங்க. அரண்டே போயிட்டேன். இவ்வளவு நாள் இது நமக்கு தோனாம போயிடிச்சேன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;கதையெழுதும்போது பிறமொழி வார்த்தைகளை அவ்வளவாக உபயோகிக்கக் கூடாதென்று நினைத்தாலும், தமிழிலேயே முழுவதுமாக எழுதுவது கதைக்கு இயல்பாக இருப்பது போன்று தோன்றுவதில்லை. குறிப்பாக வசனங்களில். அதனாலேயே கதைசொல்லியாக வரும் கதாபாத்திரத்தை கவிதையில் ஆர்வமுடையவனாகவே எப்போதும் சித்தரிக்கிறேன். சிறு வயதில், ‘மம்மி’ என்றழைக்கும் யாரையோ பார்த்து பொறாமை பட்டதுண்டு. இயல்பாகவே அமைந்துவிட்ட ஆங்கிலத்தின் மோகம் :) ஐ.நா.வின் ஆய்வுப் புள்ளிகளின்படி அழிந்து வரும் மொழிகளுள் தமிழும் ஒன்றென்று எங்கோ படித்ததாக நினைவு. அதனால் இயன்ற வரையில் இயல் தமிழில் பேசலாம் என்றுச் சொல்லி, இத்தொடர் பதிவினை எழுத, பின்னவீனத்துவத்தின் புதிய பிரதிநிதி, கவிதாயினி, இருண்ட வார்த்தைகளின் ஒளியூட்டி, அன்பு தங்கை &lt;a href="http://karaiyoorakanavugal.blogspot.com/"&gt;ஸ்ரீமதி&lt;/a&gt; அவர்களை இழுத்துவிட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-128958469788390353?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/128958469788390353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=128958469788390353' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/128958469788390353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/128958469788390353'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/02/blog-post_09.html' title='மேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-4098510098655521084</id><published>2009-02-08T21:50:00.005-05:00</published><updated>2009-03-28T13:39:33.000-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>மென்பொருளாளன்...</title><content type='html'>&lt;blockquote&gt;இன்றைய நெரிசல் பொழுதின்&lt;br /&gt;அவசர தேவை...&lt;br /&gt;&lt;br /&gt;தலைகோதும் நதிக்கரை&lt;br /&gt;தென்றலையோ,&lt;br /&gt;அந்தமாகிய அந்திமழையொன்றின்&lt;br /&gt;தேனீர் வேளையைச் &lt;br /&gt;சுமந்து நிற்கும் மேல்மாட முற்றத்தையோ&lt;br /&gt;சற்றெனத் தந்திடும்&lt;br /&gt;ஜீம்பூம்பா தேவதை...&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதைல சொல்லிருக்குற மாதிரி உங்களுக்கு எப்பவாவது தோனிருக்கா? மென்பொருளாளன்னு அழகா தமிழ்ல சொல்லத் தெரியாத என்ன மாதிரி சாஃப்ட்வேர்காரனுக்கு இது மாதிரி அடிக்கடி தோனும். அதுவும் ப்ராஜக்ட் டெட்லைன் சமயத்துல. எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு எங்கையாவது ஓடி போயிடலாமான்னு தோனும். உயிரை திருடும்  உறவுன்னு ஒரு பாட்டுல வருமே? அதுமாதிரிதான் இந்த மென்பொருளும். கற்றது தமிழ் எடுத்தவனுக்கும், சிம்புதேவனுக்கும் இதெல்லாம் எங்க தெரிய போகுது? எவனோ அமெரிக்கால பிட்சா சாப்டுறதுக்கு நான் இங்க ஞாயித்துக் கிழம அதுவுமா வேலை செய்ய வேண்டி இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சாஃப்ட்வேர், வேன் ஹுஸைன், அமெரிக்கான்னு ஜிமிக்கி வார்த்தைகள்ல திமிரோட திரிஞ்சுக்கிட்டு இருந்தாலும், எனக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பி.ஏ பட்டம் வாங்கி , இன்னும் ரெண்டாயிரத்துக்கும், மூவாயிரத்துக்கும் அள்ளாடிக்கிட்டு இருக்குற மாமா பையன பாக்கும்போது மட்டும் மனசுல ஒரு குற்றவுணர்ச்சி வர்றத தடுக்கவே முடியல. பெரியப்பா பொண்ணு கல்யாணத்துக்கு உதவி பண்ணனும்ங்குறத விட பங்குச் சந்த நெலம சரியாயில்லையேங்குற கவலதான் அதிகமா இருந்தது. இப்படி சுயநலவாதியா, வெறும் பொருட்வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருந்த சமயத்துலதான் அவ என் வாழ்க்கைல வந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் காஸ்லிங்க ஆதர்சன நாயகனா மனசுல நெனச்சிக்கிட்டு, ஜாவாவ பத்தி மட்டுமே வாய் கிழிய பேசுட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த என்ன கவித எழுத வச்சவ. எல்லாருக்கும் ஒரு கனவுண்டு. எனக்கும் வேலைக்கு சேந்த புதுசுல ஒரு கனவிருந்துச்சு. கலாம் லெவலுக்கு கற்பனை பண்ணிடாதீங்க. சேருற ப்ராஜக்ட்ல குறைஞ்சது நாலு ஃபிகராவது நச்சுன்னு இருக்கனும்ங்றதுதான் அந்த கனவு. நமக்குத்தான், 'கனவு காணும் வாழ்கையாவும்' பாட்டு தேசிய கீதமாச்சே. அஞ்சு வருசமா, விளைச்சலே இல்லாம வரண்டிருந்த எங்க பூமியில ஒரு பேய் மழையா எட்டு மாசத்துக்கு முன்னாடி வந்து விழுந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனிகா. 'மோனிகா'னு சாதரணமா தப்பா கூப்டுற மக்கள்கிட்ட உடனே, 'என் பேர் மோனிகா இல்ல. மௌனிகா. மௌனம். Silence' என்று லெக்சர் கொடுக்க ஆரம்பிக்குற ஒரு தமிழ் பொண்ணு. குருட்டுக் கண்ணாயிரம் மாதிரிதான் அவளும். வாயாடி மௌனிகா. வாயாடில ரெண்டு வகை உண்டு. அவுங்க இல்லாத நேரத்துல, 'அப்பாடா!', அப்டீனு சொல்ல வைக்குறவங்க ஒரு ரகம். 'ச்சே! என்ன வாழ்கைடா இது?'ன்னு வசனம் பேச வைக்குற வகை ரெண்டாவது. இவ கண்டிப்பா ரெண்டாவது வகைதான். மேனேஜர்னு ஒரு பொறுப்பான பதவியக்  கொடுத்து, என்னோட வாலிப வயசுக்கு ஒரு முட்டுக்கட்டை போட்டாலும், உள்ளுக்குள்ள இருக்குற அந்த கலைரசிகசிகாமணி, அவள ஒரு ஃபிகராத்தான் கண்ணோட்டம் விட்டுட்டு இருந்தான், பயங்கரமா மண்ட காஞ்சிக்கிட்டு இருந்த அன்றைய ஒரு மரணக்கோடு வேளை வரைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஜியா? பயங்கற பிஸியா இருக்கீங்க போல?”, இந்த பொண்ணுங்களுக்கு 'அபியும் நானும்' படத்து மனோபாலா மாதிரி மொக்கயா கேள்வி கேக்குறது ரொம்ப புடிக்கும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா... என்ன பண்றது? இந்த QA பசங்க கடைசி நேரத்துல வந்து பக் லாக் பண்ணிட்டு, ஃபிக்ஸ் பண்ணலைன்னா ஸைன் ஆஃப் பண்ண மாட்டோம்னு மெரட்டுறானுங்க. போன மாச இன்ஸ்டால்ல வேற ரெண்டு ப்ரொடக்சன் பக். சீனியர் மேனேஜ்மெண்ட் வேற தல மேல ஏறி நிக்கிறானுங்க. அதான்...”, கணினிப் பொட்டிக்குள்ள தலைய விட்டுக்கிட்டேதான்  பதில் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி... வாங்க! காஃபி போலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன விளையாடுறியா? நானே இன்னைக்குத்தான் கடைசி நாள் கோட் செக்-இன் பண்ணன்னு கடில இருக்கேன். நல்ல நேரத்துல காஃபிக்கு கூப்டுற"&lt;br /&gt;&lt;br /&gt;“நான் என்ன ஆட்டோ புடிச்சு, கோரமங்களா போயா காஃபி குடிக்கலாம்னு சொன்னேன்? இங்க வெளில இருக்குது காஃபி மெஷின். மேக்ஸிமம் அஞ்சு நிமிசம் ஆகுமா? அதுவும், நீங்க இப்படி டென்ஷன்லையே வேலை செஞ்சா, எதாவது மிஸ் ஆறதுக்குக் கூட சான்ஸஸ் இருக்குது. காஃபி குடிக்கப் போனா, ஒரு ப்ரேக் கிடைக்கும். மனசும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். அதுக்கப்புறம் வேலையும் ஒழுங்க நடக்கும்", கண்ணை சிமிட்டிக்கிட்டே சொன்னா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் என்னைய கொஞ்சம் கொஞ்சமா சாஃப்ட்வேர் மாயையல இருந்து வெளிய கொண்டுவந்து, ரசிக்கிற மாதிரி இன்னொரு வாழ்கையும் இருக்குதுன்னு புரிய வச்சா. எனக்கு காஃபி பிடிச்சதுன்னா, அவளுக்கு டீ, எனக்கு ரகுமான்னா, அவளுக்கு ராஜா. இப்படி எதுவுமே எங்களுக்குள்ள ஒத்து வரல. அதனாலத்தான் என்னவோ, எங்களுக்குள்ள நட்பு மட்டும் நல்லா ஒத்து வந்தது. என்னுடைய ப்ராஜக்ட் டீம்ல, அவளும் நானும் மட்டும்தான் தமிழ்ங்ற இன்னொரு விசயமும் எங்களுடைய இந்த நட்புக்கு ஒரு காரணமா இருக்கலாம். ஒரு பொண்ணும் பையனும் கொஞ்சம் சிரிச்சு பேசுனா, முடிச்சுப் போடுற சுவர்கிறுக்கிப் பசங்க தமிழ்நாட்டுல மட்டுமில்ல. மொழி, மாநிலம் கடந்த ஒரு கெட்ட (நல்ல??) பழக்கமது. ப்ராஜக்ட் பார்டில 'ப்ரோபோஸ் பண்ற விளையாட்டு'ல இருந்து, சாப்பாட்டு நேரத்து அரட்டைக்கு அறைக்குறதுக்கு மேட்டர் வரைக்கும் எங்கள குறிவச்சித் தாக்க ஆரம்பிச்சது ஒரு கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ண வச்சி ஓட்டப் படுறதும் ஒரு விதமா சுகமாதான் இருந்தது. அதுவும் அந்தப் பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துட்டா,  என்னமோ நிலாவுல கால வச்ச மாதிரி ஒரு பெரும நம்ம மனசுல படரத்தான் செய்யுது. ஆனா, அதுவே எல்லை தாண்டும்போது... 'மேனேஜரா இருக்குற என்ன வச்சி அவ எல்லாத்தையும் சாதிச்சிடுறா'னு அவளப் பத்தி தப்பா பேச ஆரம்பிச்சாங்க. காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு லோநெக்ல சுடிதார் போட்டுப் போய் வேலை வாங்குன சங்கவியையும், வாத்திக்கிட்ட  எப்பவுமே கடலையப் போட்டுக்கிட்டு இருந்த தீப்தி, டேட்டா ஸ்டரக்சர்ல எஸ் க்ரேட் வாங்குனதுக்காக அவளையும், 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்டா'னு கெனா வானா போட்டு நண்பன்கிட்ட திட்டுனது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பிரச்சனைகளுக்காகவே அவளோட அப்ரைஸல கூட இன்னொருத்தன பண்ண வச்சேன். அவன் நல்லா கொடுத்ததுக்கும் நாந்தான் காரணம்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இது எதையுமே அவ சட்டையே பண்ணாம, முன்ன இருந்த மாதிரியே என்னோட பழகிட்டு இருந்தா. அவளோடு அந்த குணம், அவளை என் மனசுல மகுடம் சூட்டி, கம்பீரமா காலுக்கு மேல காலப் போட்டு அரியணைல உட்கார வச்சது. காஃபி டே, பொன்னுசாமி, டோட்டல் மால், பிறந்த நாள், ஏர்டெல்னு எல்லாரும் எல்லாமும், நாங்க சேர்ந்து சுத்துற நிமிடங்கள சேகரிக்க ஆரம்பிச்சதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு நாளா, பாத்ரூம் கண்ணாடில இருந்து, கம்ப்யூட்டர் திரைக்கண்ணாடி வரைக்கும் அவளோட முகம் மட்டுமே வந்து அவளோட நெனப்ப கிளறிக்கிட்டே இருக்குது. ஒரு விசயத்த தெரிஞ்சு, அதோட பாதிப்ப உணர்ந்ததுக்கப்புறம், அத மறைக்குறது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன். தூக்கம் சுத்தமா வர்றதே இல்ல. வேலைல முன்ன மாதிரி ஈடுபட முடியல. பாட்டு, படம், நண்பன் செல்வாவோட ஃபோன்ல அரட்டைன்னு மனச வேற பக்கமா திரும்ப முயற்சி பண்ணாலும், கடைசில திரும்ப அவ பக்கம்தான் வந்து நிக்குது. மனசுல பட்டத இன்னைக்கு எப்படியாவது சொல்லிடனும்னுதான் அவள கோரமங்களா வர சொல்ல காலைல ஃபோன் பண்ணேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஜியா ஸே ஜியா', ரகுமானோட சமீபத்திய தனி ஆல்ப பாட்டத்தான் காலர் டியூனா வச்சிருக்கா. என் பேர் இருக்குற ஒரே காரணத்துக்காகத்தான் அந்தப் பாட்டையே வச்சிருக்குறதா சொல்வா. 'உனக்காகத்தான் இத பண்ணேன். அத பண்றேன்'னு அடிக்கடி சொல்றதுல அவளுக்கு ஒரு அலாதி இன்பம். &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ மௌனிகா... எங்க இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையே... ஏன்?”, அவ அப்படி கேட்டவுடனே, அதுக்குள்ள அவளுக்குத் தெரிஞ்சிடிச்சோன்னு கொஞ்சம் பதட்டமா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. வாயாடின்னு சொல்லாம புதுசா பேரெல்லாம் சொல்லி கூப்டுறீங்களே... அதான் கேட்டேன்...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி வாயாடி.... இப்ப ஓகேவா?? சரி... எங்க இருக்கன்னு சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் கல்யாண மண்டபத்துலதான் இருக்கேன். நைட் ஆகும் போல. ஷீலா, அவ மாப்ள வீட்டுக்கு போற வரைக்கும் அவ கூடவே இருக்க சொல்லிருக்கா..”, சலிச்சிக்கிட்டே சொன்னா.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல... ஈவினிங் காஃபி டே ல மீட் பண்ணலாமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னைக்கா? நாளைக்கு ஆஃபிஸ்ல வச்சிப் பேசலாமா? இல்லனா நைட் கால் பண்றேனே...ஓகே?"&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... இல்ல... இன்னைக்கு உன்னோட கண்டிப்பா பேசியாகனும். அதுவும் நேர்லத்தான் பேசனும். ப்ளீஸ்மா... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வர பாரேன்.. ப்ளீஸ்...”&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் அவளும் வர்றதாத்தான் சொன்னா. மணி ஏழாகியும் வந்து சேரல. திரும்ப ஃபோன் பண்ணேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ! எங்க இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் ரெண்டு செகண்ட்ல அங்க இருப்பேன்", திரும்பிப் பார்த்தால் அவள் வந்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம் எதுக்கு ஃபோன எடுத்த? சடச்சி...”, என்று திட்டிவிட்டு வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததிலிருந்து காலைல நடந்து முடிஞ்ச அவ தோழி கல்யாணத்தப் பத்தியே பேசிட்டு இருந்தா. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாமலேயே நானும் ரொம்ப நேரமா மௌனமாவே இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“சரி... ஏதோ தல போற விசயத்தப் பத்தி பேசனும்னு சோன்னீங்களே... அதப் பத்தி வாயயே தெறக்க மாட்டேங்றீங்க?”, அவளே ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்னுமில்ல... நான் சொன்னதுக்கப்புறம் என்னைய தப்பா நெனக்க மாட்டியே?”&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எதைப் பத்தியும் கவலைப்படாதமாதிரி இருந்தவ இப்பதான்  என்னைய சீரியஸா பாக்க ஆரம்பிச்சா. அந்தப் பார்வைய என்னால சத்தியமா எதிர்கொள்ளவே முடியல. &lt;br /&gt;&lt;br /&gt;“நெனக்க மாட்டேன்... சொல்லுங்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல... எப்படி ஆரம்பிக்கிறதுன்னும் தெரியல...”&lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா ஓவர் ஸீன் போடாதீங்க... சும்மா சொல்லுங்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னைய வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க. உனக்கு ஏற்கனவே தெரியும். ரிஸஸன். நெறைய ப்ராஜக்ட்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதனால நம்ம கம்பெனில இருந்து நூறு பேர தூக்கப் போறாங்க. அதுல நீயும் ஒன்னு... என்கிட்ட வெள்ளிக் கிழமையே சொல்லிட்டாங்க. இன்னைக்கு உன்னோட ஃப்ரெண்ட் கல்யாணம்னுதான் உன்கிட்ட இதுவரைக்கும் சொல்லல. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல... ஸாரி...”, வேகவேகமா சொல்லி முடிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவ கண்ணுல கண்ணீர் திரண்டு நிக்க ஆரம்பிச்சிடிச்சு. என்னைய நேர்ல பாக்க முடியாம கீழ குனிஞ்சு சத்தமில்லாம அழ ஆரம்பிச்சிட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய்... அழாத... ப்ளீஸ்... நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்... எக்ஸ்பீரியன்ஸ் அடிப்படைலதான் தூக்குறோம், உங்க பெர்சனல் இண்ட்ரஸ்ட்காக கம்பெனி ஒர்க் ஆகாதுன்னு ஹச்.ஆர் சொல்லிட்டாரு... இன்னைக்கு நீ... நாளைக்கு நான்... இதுதான் சாஃப்ட்வேர் வாழ்க்கை. வேலை செய்ற நம்மள மாதிரி ஆட்கள் சம்பளம் அதிகமா கெடச்சா, இதுவரை வேலை கொடுத்த கம்பெனிய அப்படியே விட்டுட்டு  போறதில்லையா.... அதுமாதிரிதான், அவுங்களுக்குத் தேவை இல்லன்னா... சரி... நீ அழாத... நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவுங்க கம்பெனிஸ்ல எதாவது வேக்கன்ஸி இருந்தா சொல்ல சொல்லிருக்கேன்... சீக்கிரம் வேலை கெடச்சிடும்... ப்ளீஸ்... ஃப்ரீயா விடு"&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே கலகலப்பா இருக்குற அவள முதல்முறையா அமைதியா பாக்குறேன். அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போற அவளோட வருங்கால கணவன் சூரஜ்கிட்ட எப்படி இத சொல்லுவானு நெனச்சா கொஞ்சம் கவலையாத்தான் இருக்குது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-4098510098655521084?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/4098510098655521084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=4098510098655521084' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4098510098655521084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4098510098655521084'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/02/blog-post_08.html' title='மென்பொருளாளன்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-4699170387543896683</id><published>2009-02-02T22:33:00.002-05:00</published><updated>2009-02-04T00:12:36.466-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>துயில் கொண்ட விடியல்...</title><content type='html'>தனிமை தோய்ந்த அறையெங்கிலும்&lt;br /&gt;பரவிக்கிடக்கும் கும்மிருளினை&lt;br /&gt;அள்ளியெடுத்து முகம்பூசி,&lt;br /&gt;வழிதப்புதல் சாத்தியப்படாத‌&lt;br /&gt;வெற்றிட வெளியொன்றில்&lt;br /&gt;தொலைந்து போகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பகல் பொழுதும், பௌர்ணமி இரவுகளும்&lt;br /&gt;அறிந்திராத தேசமது...&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பொதிகளை முதுகில்&lt;br /&gt;சுமந்தபடி, விட்டில் பூச்சிக் கூட்டமென‌&lt;br /&gt;எனைச் சூழ்ந்து நிற்கின்றன‌&lt;br /&gt;யுகங்கள் கடந்த &lt;br /&gt;உன் சேகரிப்புப் பேழையிலிருந்துத்&lt;br /&gt;திருட்டுத்தனமாய் தப்பிவந்த சொற்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈர்ப்புவிசை குளறுபடியால்&lt;br /&gt;தடம்மாறி உதித்துவிட்ட‌&lt;br /&gt;வேற்றுக்கிரகத்துக் கோளொன்று&lt;br /&gt;சிந்திய ஒளித்துளிகளாய் இருக்கக்கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;விழிசுழிக்க வைக்கும்&lt;br /&gt;கோரமான அனல்கீற்றாயல்லாது&lt;br /&gt;வசீகரிக்கும் இருளை உமிழ்ந்தபடியே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-4699170387543896683?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/4699170387543896683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=4699170387543896683' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4699170387543896683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4699170387543896683'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/02/blog-post.html' title='துயில் கொண்ட விடியல்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-896462735072576676</id><published>2009-01-18T21:18:00.000-05:00</published><updated>2009-01-19T02:15:17.571-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>விடுபட்டவைகள்...</title><content type='html'>இறுக மூடிய கண்ணாடி ஜன்னல்களின் இடுக்கின் வழியே புகுந்து சில்லென்று முகத்தில் சிணுங்கும் மெல்லிய காற்றினையும் சட்டைச் செய்யாமல், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் பைங்கிளியிடம் எப்படி பட்டாசு கிளப்புவது என்று பெங்களூரில் ஆரம்பித்தாலும், நெல்லை வந்து சேரும் வரையிலும் கூட 'ஹலோ' என்ற வார்த்தை கழுத்து வரைதான் வந்திருக்கும். அப்படியொரு துவக்கத் தொல்லை எனக்கு. Starting Troubleலதான் இவ்வளவு தெளிவா சொன்னேன். அதே மாதிரிதான் பதிவெழுதுவதும். கதையிலிருந்து மொக்கை வரைக்கும், எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்திலேயே ஒரு பதிவுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆயிடும். அப்புறம் முதல் பத்திய எழுதுன உடனேயே, இந்த மொக்கையயெல்லாம் எழுதனுமானு மனசுல லைட்டா லைஃப்பாய் போட்ட மாதிரி பளிச்சுன்னு தோனும். இந்த மொக்கை எங்களுக்கு தேவையாடா?னு கேக்குறீங்களா? I'm back னு அஜித் மாதிரி கேப்பு விட்டு கெடா வெட்டனும்னா இது மாதிரி மொக்கையப் போடனும்ங்றது தமிழ் பதிவுலகத்து தலைப்புச் சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு மாத காலத்தில் எத்தனையோ பதிவுகளை எழுத வேண்டுமென்று நினைத்து, சோம்பேறித்தனம் முதல் ஆணிகளின் ஆதிக்கம் வரையிலான பல காரணங்களால் விடுபட்டவைகளை மொத்தமாக இப்பதிவிலேயே போட்டுடலாம்னு நெனக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜேம்ஸ் பாண்டோட கடைசிப் படமான "குவார்ட்டரும் சூலேஸும்" படத்தப் பாத்துட்டு வீட்டுக்கு வந்த உடனேயே சூட்டோட சூடா எழுதியது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ரெண்டு வருசத்துக்கு முன்ன, எனக்குள்ள உறங்கிட்டு இருந்த பீட்டர் பாண்டிய மினரல் வாட்டர் தெளிச்சு எழுப்பிவிட்டு, இலவசமா கெடைக்குதேன்னு ஒரு ஆங்கில வலைப்பதிவ ஆரம்பிச்சு பதிவெழுதலாம்னு களத்துல எறங்குனேன். மொத போஸ்ட் போட்ட உடனேயே நண்பர்களெல்லாம் பாத்துட்டு ‘இதுல பிழை இருக்குது’ன்னு ஒட்டக்கூத்தரா மாறிட்டானுங்க. ‘சொற்பிழையா? பொருட்பிழையா?’னு எதிர் கேள்வி கேட்டா, ‘ங்கொய்யால.. நீ எழுதுற எல்லாமே பிழதான்டா வெண்ண’ன்னு என்னுடைய கலைப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பாத்தாங்க. அதுலையும் ஆங்கிலத்த அங்குலம் அங்குலமா எழுத்துக்கூட்டி படிக்குற நண்பன் ஒருவன் ‘டேய்... எனக்கே நீ பண்ற க்ராம்மர் மிஸ்டேக்லாம் தெரியுதுடா... அப்போ நீ எவ்வளவு கேவலமா எழுதுற’ன்னு பாத்துக்கோ’ன்னு ரொம்ப அசிங்கப் படுத்துனான். இவ்வளவு இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் மத்தில என்னுடைய ஆங்கிலப் புலமையை பகிரங்கமா பதிவு செஞ்சிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் ஜேம்ஸ் பாண்டோட Casino Royale ரிலீஸ் ஆச்சு. பொது வாழ்க்கைல எறங்கிட்டா, இது மாதிரி நாலுப் படங்களப் பாத்துட்டு இந்தப் படத்துல இந்தக் காட்சில கேமராவோட அந்த ஆங்கில கொஞ்சம் முப்பது டிகிரி கொறச்சி வச்சா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்னு என்னமோ டெக்னிக்கல் தில்லாலங்கடி மாதிரி பதிவு போடனும்ல. அதனால நானும் பேப்பரும் பேனாவுமா தியேட்டருக்குப் போனா, பக்கத்துல இருந்தவன் என்னமோ நக்கிப் போட்ட குச்சி மிட்டாய பாக்குற மாதிரி கேவலமா ஒரு லுக்க விட்டுட்டுப் போனான். படத்த வெற்றிகரமா பாத்துட்டு வந்து வேக வேகமா பதிவ எழுத ஆரம்பிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;'படத்தோட ஹீரோயினி ஈவா ரொம்ப அழகா இருக்காங்க. படத்தோட முக்கிய பாத்திரமான ஈவா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காங்க. ஈவாவோட ட்ரெஸ் சூப்பரா இருந்தது’ன்னு படத்தின் முக்கியத்துவத்துக்கு மத்தியில, அப்படியே நாமளும் படத்தப் பாத்திருக்கோம்னு காட்ட, ’ஜேம்ஸ் பாண்ட் இந்த தடவ வித்தியாசமா இங்கிலாந்து ஒற்றனா வர்றாரு’ன்னு எழுதி தொலச்சிட்டேன். நட்பு ஒருத்தன் ஃபோனப் போட்டு, ‘டேய் டாபர் டாக்.. ஜேம்ஸ் பாண்ட்  ஆரம்பத்துல இருந்தே ப்ரிட்டிஷ் ஏஜண்ட்தான்டா’ன்னு அசிங்க அசிங்கமா திட்டிப் போட்டான். என்னங்க பண்றது? அதிரடி சண்டைக்கும் அல்ட்ரா அம்மணிகளுக்காகவும்தான் நாமெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே பாக்குறது. இதுல கருத்து சொல்லச் சொன்னா எங்க போறது? அன்னைக்கு விட்டதுதாங்க... தாய்மொழி தமிழிருக்க, அந்நியமொழி ஆங்கிலமெதற்கு?னு இந்தப் பதிவ ஆரம்பிச்சு இப்படி மொக்கையப் போட்டுட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. புது வருடம் ஆரம்பித்து முதன்முதலாக பார்த்த படம் Slumdog Millionaire (குப்பத்து குபேரன்?). ரகுமானின் இசையென்ற ஒரே ஒரு காரணத்திற்காக சென்று பார்த்தப் படம். அமெரிக்கா வந்து க்ரெடிட் கார்ட கண்டமேனிக்கு தேச்சதுல கெடச்ச புள்ளிகள்ல இலவசமா கெடச்ச Bose காதணி ஒலிபெருக்கில (ஹி.. ஹி.. Earphone தான்) முதல் முதலாக கேட்க இப்படத்தின் பாடலை தேடியது முதல், என் அடுத்த கதையின் கதாநாயகியின் பெயர் 'லத்திகா'வென்று முடிவெடுத்தது வரைக்கும் ஆக்கிரமித்து விட்டது. தற்போதைய குண்டு வெடிப்புகளைத் தவிர்த்து, சில வருடங்களுக்கு முன்பு வரை, மும்பை என்றதுமே நினைவுகளில் வருவது கான்களும் கண்கவர் குட்டைப் பாவாடை பெண்மணிகளும்தான். அந்த கண்ணோட்டத்தையே முழுமையாக மாற்றியமைத்து, சென்னையின் கூவவோர மக்களைப் போலவே மும்பை நகரத்தின் குப்பத்தைச் சேர்ந்த மூவரின் கதையைச் சொல்லும் படம். கதாநாயகன் வழிபாடல், இந்து-முஸ்லிம் கலவரம், குழந்தைகள் கடத்தல், ஏமாற்றுதல், சிகப்பு விளக்கு என்று மும்பையின் நிகழ்வுகளின் கோர்வையாய் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவப் பத்தி சொல்றதுக்கு நல்லது எதுவுமே உங்களுக்குக் கிடைக்கலையாடா?ன்னு சில நேரத்துல கோபமும் சலிப்பும் வந்தாலும், உண்மையத்தானே சொல்றாங்கன்னு ஒத்துக் கொள்ளவும் வேண்டியிருக்குது. ரகுமானின் இசை வழக்கம்போல அட்டகாசம். கோல்டன் க்ளோப் விருதை வாங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரகுமானுக்குப் பெற்றுத் தந்தப் படம். நவீன தொழில்நுட்ப காமிராக்களின் உதவியோடு நேரடிக் காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார்கள். இந்த மாதிரியெல்லாம் இடங்கள் இருக்கானு வியக்குறவண்ணம், அழகாக காட்சியமைத்திருக்கிறார்கள். படம் கண்டிப்பா பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. முந்தையக் கதை, கொஞ்சம் சோகமா முடிஞ்சதுனால, அடுத்து ஒரு ஃபீல் குட் காதல் கதை எழுதலாம்னு யோசிச்சா, தோனுறது எல்லாமே பாலா டைப் கதையா, கடைசில கொலவெறில முடிக்கிற மாதிரிதான் தோனுது. ரெண்டு கதை எழுத ஆரம்பிச்சு அப்படியே கெடக்குது.. சீக்கிரம் தூசி தட்டி எழுத ஆரம்பிக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இன்னும் ஒரு மாசம்தான், ஒரு மாசம்தான்னு இங்க வந்து பெஞ்சு தேச்சு கிட்டத்தட்ட ஒன்றரை வருசம் ஆகப் போகுது. எனக்கும், என்னோட அம்மாக்கும், படத்துல காட்டுற மாதிரியோ, இல்ல என்னுடைய &lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_14.html"&gt;கவிதை&lt;/a&gt;, கதைகள்ல சொல்ற மாதிரியான அன்பின் வெளிப்பாடு இருந்ததே கிடையாது. அதிகபட்சமா, 'எப்படிம்மா இருக்க?'னு நானும், நான் இந்தியால இருந்து கிளம்பும்போது, என்னுடைய நெத்தியில ஒரு முத்தம் வச்சது வரை அவுங்களோட அன்பின் வெளிப்பாடும் இருந்திருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, துபாய்ல இருக்குற தம்பியும், இங்க இருந்து நானும், அம்மாவோட ஸ்கைப்ல கான்ஃபரன்ஸ் போட்டோம். ரொம்ப நாளைக்கு அப்புறம், முதன் முறையா இது மாதிரி எல்லாரும் சேந்து கால்ல இருந்தோம். நானும் என் தம்பியும் பொருளாதார சீரழிவுல இருந்து என்னலாமோ பேசிட்டு இருந்தோம். ரொம்ப நேரமா எங்க அம்மா பக்கத்துல இருந்து எந்த சத்தமும் வரவே இல்ல. என்னம்மா, ஃபோன்ல இருக்கியா?னு கேட்ட உடனே... "நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குறத கேட்டுக்கிட்டே இருக்கேன்'னு ஒரு சந்தோஷமான, அதே சமயம் சோகமான தொனில சொன்னாங்க. அப்படியே, இது வரையிலும் அனுபவித்திராத ஒரு உணர்வு, உடல் முழுவதும் பரவியது. சீக்கிரம் இந்தியா கெளம்பனும். :)&lt;br /&gt;&lt;br /&gt;5. இதே மாதிரி எக்கச்சக்கமா எழுதனும்னு நெனச்சாலும், இதையெல்லாம் எழுதனுமானு ஒரு எண்ணம் அடிக்கடி வந்து அலர்ட் பண்றதால, இத்தோட நிறுத்திக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-896462735072576676?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/896462735072576676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=896462735072576676' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/896462735072576676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/896462735072576676'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2009/01/blog-post.html' title='விடுபட்டவைகள்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-4937102409268094980</id><published>2008-11-08T23:53:00.005-05:00</published><updated>2009-03-28T13:39:33.000-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருள் தடங்கள்'/><title type='text'>இருள் தடங்கள்... - கடைசி பகுதி</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;மு.கு:&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; தாமதமான பதிவிற்கு மன்னிக்க!! ஆணிகளின் அராஜகம் அதிகமாகிவிட்டபடியால் சரியான நேரத்துல பதிவிட முடியல. :((&lt;br /&gt;&lt;br /&gt;---------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/1.html"&gt;தடம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/2.html"&gt;தடம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/3.html"&gt;தடம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/4.html"&gt;தடம் - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் இன்றும் அவளில்லாத வெறுமையோடுதான் வீடு வந்து சேர்ந்தேன். நினைவுகளின் சாரம், மனநிலையின் ஒத்திசைக்கேற்ப ஒவ்வொரு மணித்துளிகளிலும் வேறுபடும். இன்று, அவள் என் காதல் அரங்கில் நாயகியாக இருந்திராமலிருந்தால், அவள் இட்டுச் சென்ற நினைவுக் களஞ்சியங்கள், ஏதுமற்ற வெறும் களைக் குவியல்களாய் மட்டுமே இருந்திருக்கும். இவ்வளவு ஏற்றமிகு வர்ணனைகளோடு உங்களோடு பகிர்ந்திருக்கவும் சாத்தியமில்லாமல் போயிருக்கும். சில நேரங்களில், நிஜங்களை விட நிஜங்களைத் தாங்கி நிற்கும் நிழல்களே அழகானவையாக இருக்கும். அத்தகைய அழகான, அவளைச் சுமந்து அங்கிங்கெனாதபடி எங்கும் நாய்க்குட்டியாய் என்னைச் சுற்றியே வரும் அவளுடனான நினைவுகளோடுதான் தினமும் கைக்கோர்த்து நடைபயில்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பூத்த அந்நாளிலேயே, பயணக் களைப்பு அடங்குமுன்னரே அவளுக்குத் தொலைப்பேசி என்னுள் உணர்ந்த அக்காதலை அவளுடன் பகிர்ந்துக் கொள்ள எண்ணிய என்னை ஏதோவொன்றுத் தடுத்து நிறுத்தியது. கல்லூரி இறுதியாண்டுயென்பதால், வேலை கிடைத்தவுடந்தான் அவளிடம் தெரிவிக்க வேண்டுமென்று தன்மானம், கண்ணாடியும் கறுப்புடையுமணிந்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தது. காதலில் எப்பொழுதுமே இதயமே மூளையை வெல்லுமென்றும், முடிவெடுக்கும் முனைப்பில், மூளைக்கே முக்கியத்துவம் தர வேண்டுமென்றும் அனுபவப்பட்ட நண்பனொருவன் கூறியது நினைவுக்கு வர, நானும் பலவந்தமாய் மூளைக்கே வாக்களித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் அவளிடம் அவ்வளவாக பேசியதில்லை. நான் தொலைப்பேசும் பெரும்பான்மையான நேரங்களில் அவள் வீட்டில் இல்லாமல் போனதை எதேச்சையென்று இன்னமும் நம்ப மறுக்கிறது மனம். பயிலும் துறை சார்ந்த தொழிலிலேயே பணியிலமர வேண்டுமென்பது என் நீண்ட கால லட்சியம். மென்பொருள் நிறுவனங்களே முந்திக் கொண்டு வருவதால் இது வரையில் வேலை கிடைக்கவில்லை. நாளை பெரிய நிறுவனமொன்றில் வளாக நேர்காணல் இருக்கின்றது. அதில் எப்படியும் வேலை கிடைத்துவிடும். நாளையே அவளிடம் நேரிலேயே என் காதலைத் தெரியப்படுத்தி விடலாமென்ற கூடுதல் குதூகலமும் என்னுள் சேர்ந்துவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடா வந்துட்டியா?... காஃபி?”, சமையலறையிலிருந்த அம்மாவின் குரல், அறைக்குச் சென்றுக் கொண்டிருந்த என்னைத் தடுத்து நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;“சரிம்மா..”, நானும் சமையலறைக்குள் சென்று, சமையலுக்கு ஏதுவாகக் கட்டப்பட்டிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா இந்தப் பொண்ணு இப்படி பண்ணிட்டா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அட நீ வேறம்மா... அவ என்ன பண்ணுவா? நீ அவள்ட்ட முன்னாலையே எங்கு வந்து எறங்குறான்னு ஒழுங்கா கேட்டு வச்சிருக்கனும்... பாரு... உன்னால என்னோட தூக்கமும் போச்சு...”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னைக்கு ஒரு நாளாவது உருப்படியா காலங்காத்தால் எழுந்திருச்சிருக்கன்னு சந்தோஷப் படு”&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே போட்டு வைத்திருந்த காப்பியை சுடவைத்து என் கையில் கொடுத்துவிட்டு, தானும் ஒரு கோப்பையில் எடுத்துக் குடிக்க ஆரம்பித்திருந்தார்கள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;”சரி... பேசாம புஷ்பாவ உனக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு நெனக்கிறேன். என்ன சொல்ற?”, எதிர்வினையறிய என் முகத்தைக் கூர்மையாய் கவனித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த தோஷத்த கழிக்க கழுதைய கல்யாணம் பண்ணுவானே செந்தில்... அது மாதிரியா?”, அம்மாவிடம் செல்லமாய் அடி வாங்குவது ஒருவித அலாதி இன்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடி... எப்பவுமே வெளாட்டுத்தானா?”, எதிர்பாத்தது போலவே ஓர் செல்ல அடி விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்ம குடும்பத்துக்கும் அவுங்க குடும்பத்துக்குந்தான் ஆகாதேம்மா... “&lt;br /&gt;&lt;br /&gt;“அதான்.. ஹஸினா கல்யாணத்துல ஒன்னு சேந்தாச்சே...”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னம்மா இப்படி சொல்லிட்ட? நானும், அவள லவ் பண்ணி, நீங்கெல்லாம் அத எதுத்து சண்டப் போட்டு, கடைசி ஸீன்ல ஒரு பெரிய டைலயாக் அடிச்சு ரெண்டு குடும்பத்தையும் சேத்து வைக்கலாம்னு பாத்தேன். இப்படி சொல்லிட்டியேமா?”&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக் காணாத சோகம், அம்மாவின் சில மணித்துளி உரையாடலில் கரைந்து போனது. அவள் மாலையில்தான் வருவதாக அம்மாவிடம் கூறியிருந்தாள்.அது வரையில், என் புலம்பல்களையும் கற்பனை ஒத்திகைகளையும் கண்டு நகைத்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கும் என் படுக்கையறை சுவர்களுக்குள் தானே விலங்கிட்டு அடைந்து கிடக்கும் என் இதயம். நண்பனின் சகோதரியின் திருமணத்திற்கு ஆயத்தமானது என் உடல் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;கிண்டி குதிரையோட்டப் பந்தையத் திடலின் பின்னால் அமைந்திருக்கும் ஓர் பெரிய திருமண மண்டபத்தில் சம்பரதாயக் கலந்தாடலை முடித்துவிட்டு, நண்பனுக்கு உதவியாய் சில செயல்களையும் செய்துவிட்டு வீடு திரும்ப மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் அவள் இருக்கிறாளென்றச் செய்தியை அம்மாவிடமிருந்து அறிந்து அவசரமாய், பரவசமாய் மாடிக்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் கொட்டிவிட்டுச் சென்ற வெளிச்சங்களை மெல்ல தின்றுக் கொண்டிருந்தது மாலை. அண்டை வீட்டு அறைக்குள் அடைந்துக் கிடக்கும் ஒருவனுக்கோ, அடுத்தத் தெருவிலிருக்கும் சந்தொன்றில் சென்றுக் கொண்டிருக்கும் ஒருத்திக்கோ, எங்கோ இடைப்பட்ட மணித்துளிகளில் ஏதோவொன்றை ரசித்துக் கொண்டிருக்கும் எவனுக்கோ, மறைந்து போன சிநேகத்தையோ, தொலைந்து போன காதலையோ, ஏனைய எவ்வவற்றையோ சப்தமிட்டு நினைவூட்டியபடியே நகர்ந்துக் கொண்டிருந்தது, மாடியிலிருந்து விரிந்தக் காட்சியில் தென்பட்டத் தடங்களில் ஓர் தொடர்வண்டி. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் வயதை உணர்த்தும்வண்ணம் கருத்திருந்த மொட்டை மாடி மதில் சுவரில் கைவைத்தப்படி ரயிலை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் முன்னிலையில் மடிந்துக் கொண்டிருந்தது மாலை பொழுது மஞ்சள் சூரியன். மங்கலான வெளிச்சத்தில், உயிர்பெற்று எழுந்த தரைவிழும் நிழலாகவே மாறியிருந்தாள். அதற்குள், அவள் பனிமலைத் தோற்றத்தில் உருக ஆரம்பித்திருந்தன, என் அனைத்து அனல்துளி ஹார்மோன்களும். ”முதல் மழை காணும் பருவ அறுவடைக்காரன் நான்” என்று உணர்ச்சிவசப்படும் வேளைகளிலெல்லாம் உதித்துத் தொலைக்கும் கவிதையும் தோன்ற ஆரம்பித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வித ஒலியுமின்றி அவளின் மிக அருகில் சென்று நின்று அவளுடன் ரயிலை ரசிப்பதுபோல் நடிக்க ஆரம்பித்தேன். என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் ரயில் சென்ற திசையைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு ரயில்னா ரொம்ப புடிக்கும்....”, இன்னமும் அதே திசையில்தான் அவள் விழிகள் திழைத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ.. இன்னைக்கு காலைல இன்னும் கொஞ்ச நேரம் எக்மோர் வரைக்கும் ரயிலுல வந்திருக்கலாம்ல. உனக்காக ஒருத்தன் ரொம்ப நேரம் காத்துட்டு இருந்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாரி மச்சான்... நீங்க வெயிட் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது... ஃப்ரெண்டோட வந்திருந்தேன். தாம்பரம்ல ஒரு எடத்துக்கு போயிட்டு வரனும்னுதான் ப்ளானே. கெளம்புன அவசரத்துல அத சொல்ல மறந்துட்டேன் அத்தக்கிட்ட... ஸாரிப்பா... ஸாரி... ஸாரி”, கொஞ்சல் தொனியில் பேசி கோபங்களைத் தணிப்பது பெண்களுக்கே உரித்தான‌ கைவந்தக் கலை.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ பொறந்ததுக்கு அப்புறம் பேசாம உங்க அப்பா புண்ணியகோடிக்கு பதிலா பாவகோடின்னு பேர மாத்தி வச்சிருக்கலாம்... எப்படித்தான் சமாளிக்கிறாரோ??”&lt;br /&gt;&lt;br /&gt;“கைல என்ன மச்சான் கட்டு?”, இரண்டு நாட்களுக்கு முன்னால் பைக்கில் இருந்து விழுந்து புதையலெடுத்ததால் ஏற்பட்டக் காயத்திற்காக கையிலிட்ட கட்டைப் பார்த்து மனமுருகிக் கேட்டாள். அவளது சோகம் தோய்ந்த நலம் விசாரிப்புகளுக்காகவே ஆயிரம் முறை விபத்துக்குள்ளாகலாம் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... என் மாமன் பொண்ணு எனக்கு ப்ரப்போஸ் பண்றதுக்காக திருநெல்வேலில இருந்து சென்னைக்கு வர்றான்னு இங்க இருக்குற கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்ட்ட சொன்னேன். அதான் எல்லாரும் சேந்து இப்படி ஆக்கிட்டாங்க”, புவியின் மத்தியில் புதைத்து வைத்தாலும் காதலியின் கண்பார்வை பட்டதும் ஏந்தான் பொங்கி எழுகிறதோ இந்தக் காதல். அவளது அருகாமையில் சற்று சலனப்பட்டுவிட்டது என் லட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எத்தன பேரு?”, புன்னகையேந்தியவாறே கேட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;“அது ஒரு பன்னெண்டு பதிமூனு பேரு இருப்பாங்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“அத்தன அண்ணன்களா அந்தப் பொண்ணுக்கு? அதுக்குத்தான் சின்னத்தம்பில இருந்து காதலுக்கு மரியாதை வரைக்கும் அண்ணன்களா திரியற ராதாரவிக்கள் இல்லாத எடமா போய் உங்க லவ்ஸ காட்டிருக்கனும்... இப்ப பாருங்க.. டின்னு கட்டிட்டானுங்க..”&lt;br /&gt;&lt;br /&gt;“கண்டுபுடிச்சிட்டாங்கப்பா கொலம்பஸ்...”&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகள் எதுவுமே பேசாமல் கடந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம்.. அந்த ஃபோன் ரோமியோ மறுபடியும் கால் பண்ணானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்ம்... அத சொல்ல மறந்துட்டனே.... அப்புறம் ஒரு நாள் அவன் நேர்லையே வந்துட்டான்...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓஹோ!! உன்னப் பாத்தவுடனே இந்த மூஞ்சிக்குப் போய் ஒன்னாருவாய்க்கு காலெல்லாம் போட்டு வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு பின்னங்கால் பெடறில அடிக்க ஓடிருப்பானே??”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ!! எங்க தெருவுல என்னையப் பாக்கவே எந்நேரமும் பசங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. தெரியும்ல??... சரி... அத விடுங்க... அப்புறம் வந்து ஸாரிலாம் கேட்டான்.. சும்மா வெளையாட்டுக்குத்தான் பண்ணேன். நான் அவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு அவன் எதிர்பாக்கவே இல்லையாம்...அப்படி இப்படினு செம பிட்டு”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... அதான் அன்னைக்கே சொன்னனே... இதெல்லாம் சாதாரண மேட்டரு... அதுக்கே மூக்க சிந்திட்டு நின்னுட்டு இருந்த...”&lt;br /&gt;&lt;br /&gt;”ப்ச்... ஆமாம்... அதான் நானும் அவன மன்னிச்சிட்டேன் அப்போ... ஆனா இன்னொரு நாள் திடீர்னு வந்து ஒரு ரோஸ் கொடுத்து என்னைய காதலிக்கிறேன்னு காமெடி பண்ணான்”, எவ்வித பயமோ, சோகமோ, வெறுப்போ இல்லாமல் கூறினாள். அன்றைக்கும் இன்றைக்குமிருந்த அவளது பாவனைகளில் உலகளவு வித்தியாசமிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஓ!! அப்புறம்? டாக்டர் விஜய் மாதிரி லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சிட்டியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ச்சே... ச்சே... அப்டிலாம் இல்ல... யோசிச்சுப் பாத்தேன்... புடிச்சிருந்தது... ஒத்துக்கிட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராத நேரத்தில் உடையுரசிக் கடந்துச் செல்லும் வாகனம் ஏற்படுத்தும் அச்சத்தை என்னுள் படர விட்டது அவளது வார்த்தைகள். அவள் என்னை சீண்டிப்பார்க்க விளையாட்டாக அப்படிச் சொன்னாளா? இல்லை உண்மையை சொல்கிறாளா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவள் பேசும்பொழுது அவள் உதட்டோரத்தில் மெலிதாய் மலர்ந்த புன்னகையில் படிந்திருந்த வெட்கம் உண்மையென்றே நம்ப வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”ஃபர்ஸ்ட் டைம் அவனப் பாக்கும்போது வெறுப்பாத்தான் இருந்தது. ரொம்ப கோவம் கூட வந்தது... ஆனா அதுக்கப்புறம் அடிக்கடி சந்திக்கிற மாதிரி ஆச்சு. திரும்ப திரும்ப ஸாரி கேட்டு நானும் அது எல்லாத்தையும் மறந்து அப்படியே விட்டுட்டேன்.. நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.. அவன பாக்குறதுக்கு முன்னாடியே அவன் மேல கோவத்தோடையே இருந்ததால என்னவோ, அவன் பண்ற பேசுற எல்லாமே எனக்கு புடிச்சிருந்தது. திடீர்னு ஒரு நாள் அவன் அப்படி கேட்டவுடனே கொஞ்ச நாள் யோசிச்சேன்... அப்புறம் சரின்னு சொல்லிட்டேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் உதடுபிரிந்து தெரித்த ஒவ்வொரு வார்த்தைகளும் கூர்முனையணிந்து என் இதயம்கிழித்து எவ்வித குற்றவுணர்வுமின்றி களைந்துச் செல்கின்றன‌. &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மச்சான்.. எதுவுமே பேச மாட்டேங்றீங்க? யாரு அந்த பாவப்பட்ட ஜென்மம்னு கேப்பீங்கன்னு நெனச்சேன்..”, அவள் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுவதுமாக மீளாதிருந்த‌ என்னிடம் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹ்ம்... பாழுங்கிணறுன்னு தெரிஞ்சே அதுல அவன் குதிச்சா நாம என்ன பண்ண முடியும்? சொல்லு.. அதான் எதுவுமே கேக்கல...”, வெற்றிபெருமென்ற நம்பிக்கை பொழுதுகளில் காதலை மறைத்தது எவ்வித சுகத்தைத் தந்ததோ அதைவிட பன்மடங்கு வலியைத் தந்துக் கொண்டிருக்கிறது முகங்காட்ட முடியாமல் தோல்வியுற்ற என் காதல். &lt;br /&gt;&lt;br /&gt;“அவர் பேரு அர்ஜுன்.... உங்க கூடத்தான் ஸ்கூல்ல படிச்சாராம்... ஞாபகமிருக்கா? இன்னைக்கு ஊர்ல இருந்த நாங்க ரெண்டு பேரும்தான் வந்தோம். அவரோடத்தான் இன்னைக்கு சுத்திட்டு இருந்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;பானை... காலையில் அவன் கைப்பேசியில் அழைத்ததற்கான காரணம் இப்பொழுதுதான் எனக்கு புரிந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக தோல்வி என்னைத் தன் காலடியில் கிடத்தியிருக்கிறது. அதுவும் என்னை விட அனைத்திலும் இடம் குறைவாக மதிப்பிட்ட ஒருவனிடம். &lt;br /&gt;&lt;br /&gt;“உங்கக்கிட்டத்தான் ஃபர்ஸ்ட் சொல்றேன்... வீட்டுக்குத் தெரிஞ்சா என்னா ஆகுமோன்னு நெனச்சாத்தான் பயமா இருக்கு... ............” என்று அதற்குப்பின் அவள் பேசியது எதுவுமே என் காதுகளில் விழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி மச்சான். தாம்பரத்துல இருக்குற என்னோட ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து நாளைக்கு எக்ஸாம்க்கு போகனும். ரயில்வே ஸ்டேஷன்ல என்னைய ட்ராப் பண்ணிடுறீங்களா?” &lt;br /&gt;&lt;br /&gt;“ஓ! ஸாரி மின்மினி... ஃப்ரெண்டோட அக்கா ரிஸப்ஷன் இருக்குது... அதுக்கு ரெடி ஆகனும்... ஒரு ஆட்டோ புடிச்சு போயிடிறியா?”, அவளுடன் இன்னும் சிறிது நேரம் இருந்தால்கூட அனைத்தையும் உளறி ஓவென்று அழத் துவங்கி விடுவேனென்ற பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது எனக்கு அவசரமாய் தேவைப்பட்டத் தனிமையுடன் எனதறையில் வந்து நின்றேன். எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாமல் கீழிமை விளிம்பில் திரண்டு நிற்கிறது கண்ணீர். சோகங்கள் படியும்பொழுதும், மகிழ்ச்சிகள் விரியும்பொழுதும் என் உள்ள வெளிப்பாடுகளை சல்லடையின்றி உள்வாங்கிக் கொள்ளும் என் நாட்குறிப்பை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;என் இமைகளைப் பிய்த்தெறிந்து&lt;br /&gt;அரக்கச் சிரிப்பில்&lt;br /&gt;தூக்கம் பயிலச் சொல்கிறது,&lt;br /&gt;களைந்துவிடுமோவென்ற அச்சத்தினால்&lt;br /&gt;அலாரம் முதல் அனைத்தையும்&lt;br /&gt;ஊமையாக்கிய முந்தைய இரவுக் கனவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;கசங்கிக் கிடக்கும் படுக்கை...&lt;br /&gt;மின்விளக்கின் ஒளிப்புகை&lt;br /&gt;உட்புகாத கதவிடுக்கு ஓரத்தில்&lt;br /&gt;ஒளிந்திருக்கும் இருள்...&lt;br /&gt;ஒழுங்கற்றுக் கிடக்கும்&lt;br /&gt;மேசைமேல் பொருட்கள்...&lt;br /&gt;எல்லாம் அப்படியேயிருக்க&lt;br /&gt;காணாமல் போனது&lt;br /&gt;நான் சேகரித்து வைத்தக் &lt;br /&gt;காதல் குவியல் மட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமும், அமைதியும்&lt;br /&gt;இருளும் நிறைந்த குகைவழி&lt;br /&gt;இருள் தடங்களில்&lt;br /&gt;சப்தமில்லாமல் பெருவலியோடு&lt;br /&gt;பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என் ரயில்...&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சப் பெருவழி&lt;br /&gt;வினாடியில் வரக்கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய நிறுத்தத்தின் &lt;br /&gt;மீதங்களென்றும்&lt;br /&gt;முடியும்வரை மிஞ்சியிருக்கும்...&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறுக்கிய நாட்குறிப்பை அப்படியே விட்டுவிட்டு அவளை தாம்பரம் கூட்டிச் செல்ல வண்டியோடு வாசலில் காத்திருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-4937102409268094980?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/4937102409268094980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=4937102409268094980' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4937102409268094980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4937102409268094980'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/11/blog-post.html' title='இருள் தடங்கள்... - கடைசி பகுதி'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-6486365730428456141</id><published>2008-10-31T18:00:00.001-04:00</published><updated>2008-11-02T23:05:00.105-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ‌ம்'/><title type='text'>தீக்குச்சி இரவுகள்...</title><content type='html'>&lt;blockquote&gt;பௌர்ணமி இரவில்&lt;br /&gt;நிலவைத் தொலைத்திருந்தது வானம்...&lt;br /&gt;&lt;br /&gt;உலக வெப்பமயமாதலின்&lt;br /&gt;விளைவென்கிறார்கள்,&lt;br /&gt;எங்கள் உயிர் குடித்தத்&lt;br /&gt;துப்பாக்கிகளின் முனையிலிருந்து&lt;br /&gt;எழுந்த‌ப் புகைமூட்டத்தில்&lt;br /&gt;கருகிவிட்டதென்பதை அறியாமல்...&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மாந்தோப்பில்&lt;br /&gt;சந்திக்கலாமென்று கையசைத்துச் &lt;br /&gt;சிறகுமுத்தம் கொடுத்தனுப்பிச் சென்ற காதலி,&lt;br /&gt;சீர்கெட்டச் சீருடைக்காரர்களின்&lt;br /&gt;குதம்துளைத்து கசங்கிய நிலையில்&lt;br /&gt;மயானக்கூடத்தில் மௌனமாய்&lt;br /&gt;உறங்கிக் கொண்டிருக்கிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;நித்திரைக் கலையும்&lt;br /&gt;ஒவ்வொரு காலையிலும்&lt;br /&gt;குருதிப்படிந்த நிலைக்கண்ணாடியின்&lt;br /&gt;மங்கிய உருவத்தில்&lt;br /&gt;அரும்பு மீசையைத் தேடிக் கொண்டிருக்கிறான்&lt;br /&gt;களமிறங்கக் காத்திருக்கும்&lt;br /&gt;தந்தையை இழந்த அண்ணன் மகன்...&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புக் கரையான்களின்&lt;br /&gt;அசுரச் சத்தத்தில்,&lt;br /&gt;கோலி குண்டில் குழிவுருட்டி &lt;br /&gt;விளையாட அஞ்சி&lt;br /&gt;தங்கையின் முந்தானையின் பின்னே&lt;br /&gt;ஒளிந்துக் கொள்கிறாள்&lt;br /&gt;மூன்று வயதே நிரம்பிய&lt;br /&gt;அவளது இளைய மகள்...&lt;br /&gt;&lt;br /&gt;எட்டும் தூரத்திலிருந்தும்&lt;br /&gt;கிட்டாத ஆயுதத்தைக் கையிலெடுக்கச்&lt;br /&gt;செயலிழந்தக் கால்களை&lt;br /&gt;பலம்கொண்ட மட்டும் &lt;br /&gt;தட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்&lt;br /&gt;காலம் போன கடைசியில்&lt;br /&gt;கட்டிலில் தந்தை...&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவு தேசமெங்கோ&lt;br /&gt;புலம்பெயர்ந்த தம்பி,&lt;br /&gt;கணினியின் முன்னே கண்ணீர் விட்டபடி&lt;br /&gt;கவிதையெழுதிக் கொண்டிருக்கக் கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;நளினமென்றே நம்பப்பட்ட‌&lt;br /&gt;எம்குலப் பெண்களெல்லாம்&lt;br /&gt;மறவர் பட்டியலில் ஒவ்வொருநாளும்&lt;br /&gt;மறவாமல் மகுடம் சூட்டுகின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;எம்மொழி உதித்த நாட்டில்&lt;br /&gt;ஊற்றும் அளவுக்கஞ்சிகளுக்கு,&lt;br /&gt;அகதியென்ற அடைமொழியோடு&lt;br /&gt;செல்லரித்தக் கால்களில்&lt;br /&gt;சூடுபரப்பும் வெம்மணலில்&lt;br /&gt;வரிசையில் நிற்கிறது&lt;br /&gt;ஏனைய உறவுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தீக்குச்சி வீடுகளின்&lt;br /&gt;உச்சியில் எறிந்த நெருப்புக் குவியலின்&lt;br /&gt;வெம்மையில்தான்&lt;br /&gt;தினமும் குளிர்காய்ந்துக் கொண்டிருந்தது&lt;br /&gt;மறையுமுன்னே வெண்ணிலவு...&lt;br /&gt;&lt;br /&gt;சிதறியச் சொந்தங்களனைத்தும்&lt;br /&gt;என்றோ ஓர்நாள்&lt;br /&gt;ஒன்றாய் உணவருந்திய‌&lt;br /&gt;நினைவுகளைக் கூட‌&lt;br /&gt;அசைப்போட நொடிகளில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ட தேசத்து எம்மின மக்களே&lt;br /&gt;அன்பு தோய்த்து அனுப்பிவைத்த‌&lt;br /&gt;அணுகுண்டுகள்&lt;br /&gt;இலக்கில்லாமல் எங்கள் இதயம்கிழிக்க‌&lt;br /&gt;வந்துக் கொண்டிருக்கும்...&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-6486365730428456141?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/6486365730428456141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=6486365730428456141' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/6486365730428456141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/6486365730428456141'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/blog-post_31.html' title='தீக்குச்சி இரவுகள்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-3941876287987698875</id><published>2008-10-26T22:00:00.004-04:00</published><updated>2009-03-28T13:39:33.001-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருள் தடங்கள்'/><title type='text'>இருள் தடங்கள்... - 4</title><content type='html'>&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/1.html"&gt;தடம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/2.html"&gt;தடம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/3.html"&gt;தடம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுயமிழந்தக் கதிர்களின் சிதறல்கள் மட்டுமே திழைத்திருந்த ஓர் ஞாயிறு மாலை. ’இந்திய தொலைகாட்சிகளில் முதன்முறையாக’ திரைப்படத்தில் மூழ்கிவிட்டுருந்தனர் வீட்டிலனைவரும். சூழலோடு கலந்திருக்கும் மனதை எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏதோவொன்று வேறொரு நிகழ்விலி தேசத்திற்கு கடத்திச் செல்லும் மாயம் ஏனோ அன்றாடம் அரங்கேறும். அன்றும் அதே போல்தான். மௌனங்களனைத்தும் வார்த்தை வேடமிட்டு அலைந்து திரியும் உலகது. சோகத்தின் சாயலில் சுகத்தைப் பரப்பும் அவ்வுணர்வில் இலயிக்கவே மனம் விரும்பினாலும், அதன் இரட்டை, தப்புதலுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துக் கொண்டிருக்கும். சுழிவிடும் அப்புதைகுழி ஈர்ப்பிலிருந்து கை நீட்டி என்னை மீட்டெடுத்தது.... மின்மினியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? மறத்தலை உளவு பார்க்க நினைவுகளை கொஞ்சம் உலவ விட்டுச் செல்வது நெருக்கத்தையும் மீறிய உறவுகளின் வழக்கம். மின்மினியின் நினைவுகள் மேகமாய் எனைச் சூழ, சுயநல மாலையும் தான் சிறப்படைய என்னை பகடையாக்க, அவளை நேரிலேயே சந்திக்க முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் தவிர வேறெந்த சிறப்பு அடையாளங்களில்லாத பாளை சாந்திநகரில்தான் அவள் வசிக்கிறாள். நாங்கள் தங்கியிருந்த என் சித்தப்பாவின் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமிட்டர்கள் தூரத்தில் இருக்கிறது அவளது வீடு. எதிர்பார்ப்பற்ற ஆச்சர்ய சந்திப்பாய் இருக்கட்டுமென்று முன்பே தெரிவிக்காமல் ஆட்டோவில் அவள் வீடு தேடிச் சென்றேன். இரு வீதிகள் முத்தமிடும் இருபத்தெட்டாவது குறுக்குச் சந்து முனையில் அவளைப் போலவே அழகான வீடு. வீட்டு மதில் சுவர் தாண்டி வளர்ந்திருந்த ஓர் செடி விளிம்பில் வாடிய நிலையில் ரோஜா ஒன்று என்னை வரவேற்றுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;என்றோ பூக்கும் அத்தியும் கூட &lt;br /&gt;உன் எழில்கண்டு &lt;br /&gt;இதழ்கள் உதிர்த்து மரித்துப் போகினவாம்... &lt;br /&gt;என்ன செய்யும்? &lt;br /&gt;உன் வீட்டு முற்றத்து ஒற்றை ரோஜா...&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மடிந்த மலரொன்றின் கல்லறையில்தான் பிறந்தது என் முதல் கவிதையும் அவள் பெயர் தாங்கியவாறே. மின்மினியின் அம்மாவிடம் சம்பரதாய விசாரிப்புகளை முடித்துவிட்டு அவளைப் பார்க்க மாடிக்குச் சென்றேன். மொட்டை மாடியில் என்ன செய்கிறாள்? இளங்காலை வெயிலுக்கே குடைக்குள் ஒளிந்துக் கொள்ளும் மெல்லின வம்சத்துப் பெண்களுக்கு மத்தியில் வெயிலை நேசிக்கும் ஒருத்தியா? ஆச்சர்யமும் ஆவலுமுமாய் சென்ற என் விழிகளுக்கு ஏமாற்றக் காட்சிகள்தான் காத்திருந்தன. தடுப்புச் சுவரின்றி பரந்திருந்த சாந்துத் தரையெங்கிலும் அவளைச் சுமந்து நின்ற தடையம் கூட கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவள் பிம்பம் தாங்கியிராத எங்கெங்கிலுமான நிஜங்களைச் சபித்துவிட்டு படிகளில் இறங்க துவங்கிய போதுதான் விசும்பல் சத்தமொன்று கேட்டது. அவள் வீட்டுக் கொல்லையிலிருந்து ஓங்கி வளர்ந்திருந்த கொய்யா மரத்தின் கிளையொன்று, தென்றலுக்கு இசைந்தவாறே மொட்டை மாடியின் ஓரோரத்தில் நிழல் சிந்தியபடியிருந்தது. காற்றின் விசைக்கேற்ப நிழலின் எல்லைகள் மாறினும், அவற்றின் மொத்த அளாவலையும் தனதாக்கிக் கொண்டிருந்தது குடிநீர் தேக்கத்துக்கான தொட்டியொன்று. அதிலிருந்துதான் துளிர்த்துக் கொண்டிருந்தன அந்த விசும்பலின் ஒவ்வொரு அதிர்வுகளும். &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரேற்றும் மோட்டாரை வீடுக் கட்டிய பல நாட்கள் கழித்துதான் பொருத்தியிருப்பார்கள் போலும்.  நீர் குழாய்களுக்கு எட்டாத தூரத்தில் இருந்ததாலெனவோ புதிதாக இன்னொரு தண்ணீர் தொட்டியைக் கட்டிவிட்டு இத்தொட்டியை அனாதையாக்கியிருந்தனர். அதனுள் அமர்ந்துக் கொண்டுதான் அழுதுக் கொண்டிருந்தாள் அவள். விழிநீர் திவலைகளின் சொந்தக்காரியாய் அவளைக் கண்ட வினாடியில், அறிந்திறாத உணர்வுகளெல்லாம் என்னுள் உருவாகி இதயத்தைப் பிசைந்துச் சென்றன. அவளருகில் அமர்ந்து கூந்தலைகோதி, என் மடிமீது அவள் தலைசாய்த்து, கன்னங்களில் பிசுபிசுத்திருந்த ஈரங்களை வருடியெடுத்து... ஹ்ம்ம்ம்... அறிமுகப்படுத்துவதற்காக கை நீட்டினால்கூட அனல்வீசும் பார்வையை தூவும் நெல்லைப் பெண்களின் விழிகள். மேல்கூறியதெல்லாம் நடைபெற வேண்டுமென்றால் கற்பனையில் மட்டுமே சாத்தியப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹேய்... என்ன அழுதுட்டு இருக்க? என்ன ஆச்சு??”&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அங்கவள் எதிர்பார்க்காதபடியால் கேள்விக்குறியாய் வளைந்த விழிகள் சற்றென மாறி, அவளை அக்கோலத்தில் நான் பார்த்துவிட்ட அவமானத்தில் மீண்டும் கரிசல்நீரை உமிழ்ந்துவிட்டு, அழுகையின் அலைகளை அதிகரித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யய்யோ... என்ன இது?? சின்னப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டு”, தொட்டியின் படிக்கட்டுகளில் மெதுவாய் இறங்கி சற்று இடைவெளிவிட்டு அவளருகில் அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”சரி....அழாத... என்ன ஆச்சுன்னு சொல்லு?”, அவளைத் தேற்ற தன்னிச்சையாய் நீண்ட கைகளை தடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“காலைல இருந்து ஒருத்தன் ஃபோன் பண்ணி இரிட்டேட் பண்ணிட்டே இருக்கான்............. என்னைய எங்கேயோ பாத்தானாம்............... பாத்த உடனே புடிச்சுப் போச்சாம்............... என்னையப் பாக்கனும், அப்படி இப்படின்னு சொல்றான்..........” அழுகையோடு இடைவெளி விட்டுவிட்டுக் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடிப்பாவி... இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன இப்படிச் சொல்றீங்க? அம்மாக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? என்னைய கொன்னே போட்டுறுவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க பாரு...”, இம்முறை அவள் தாடையை என் விரல்களால்ப் பற்றி அவள் முகத்தை மேலே நிமிர்த்தி, “இங்க பாரு.... கண்ண தொட.... உன்னைய நான் எவ்வளவு தைரியசாலிப் பொண்ணுன்னு நெனச்சேன். இப்படி அழுவுனியா இருப்பன்னு நான் எதிர்பாக்கவே இல்ல... இதுக்கே இப்படி அழுதா எப்படி? இன்னும் எவ்வளவு சந்திக்க வேண்டி இருக்குது... பொண்ணுங்க”, அவள் விழிகளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளருகில் வைத்திருந்த கைத் தொலைபேசி அலறியது.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யய்யோ!! அவந்தான்.... அவந்தான் கால் பண்றான்...”, என்று பயத்தோடு படபடத்தவாறே தொலைபேசியை என் கையில் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இரு நான் பேசறேன். சரி... கைல என்ன வச்சிருக்க?”, நான் எதற்காக அப்படி கேட்கிறேனென்று புரியாததை தன் விழிகளில் காட்டியவாறு இரு கைகளையும் விரித்துக் காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”கொஞ்சம் காதப் பொத்திக்கோ....”&lt;br /&gt;&lt;br /&gt;அவனது அழைப்பை எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ!! நாந்தான் பேசுறேன்...”, எதிர்முனையில் ஓர் கனத்த ஆண்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்.... ******* உன் மனசுல என்ன பெரிய ********* நெனப்போ....ங்கொய்யால..... ********** இப்பவே எக்ஸ்சேஞ்சுக்கு ஃபோனப் போட்டு உன் அட்ரஸ கண்டுபுடிச்சு வர்றேன்.... அப்போ காட்டு உன் ****** வீரத்தயெல்லாம்....”, நான் பேசிக் கொண்டிருக்கும்போதே எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. வாய் பிளந்து என்னை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மின்மினி.&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க பாருங்க அம்மணி.... இதெல்லாம் சப்ப மேட்டரு.... இதுக்கெல்லாம் இப்படி ஒடஞ்சு போயிட்டீன்னா? பொண்ணுங்கன்னா எல்லாருக்குமே எளக்காரந்தான்... எதாவது நோண்டிட்டே இருப்பானுங்க... அதெல்லாம் அப்படியே தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கனும்.... இல்லனா தலைக்கு மேல ஏறிடுவானுங்க.... என்ன புரிஞ்சுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் தலையாட்டினாள். மறுபடியும் கைத் தொலைபேசி அலறியது. வேகமாக அதனையெடுத்து ‘ஹலோ’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ!! அஞ்சலி இருக்காளா?”, இம்முறை ஒரு பெண்ணின் குரல் கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பேசும்பகுதியைப் பொத்திக் கொண்டு, “உனக்குத்தான் ஃபோன்.... அழுறத நிறித்திட்டு சாதாரணமா பேசு... “ என்று அவளிடம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ...”&lt;br /&gt;&lt;br /&gt;“....”&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லு....”&lt;br /&gt;&lt;br /&gt;“.....”&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேரமாக பதிலேதும் பேசாமல் அவள் கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;“இனி ஜென்மத்துக்கும் என்கிட்ட பேசாத.... “, என்று வேகமாக தொலைபேசியை துண்டித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஆச்சு?”, அழுகையும் பயமும் மாறி கோபத்தின் அவதாரத்தை முகத்திலேற்றி இருந்தாள் அப்பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;“என் ஸ்கூல்மேட் வசந்தின்னு ஒருத்தி இருக்கா.... இன்னைக்கு ஃபோன் பண்ணது அவளோட கஸினாம்.... எங்க ஸ்கூல் ஃபேர்வெல் ஃபோட்டோவ பாத்துட்டு அதுல என்னைப் பத்திக் கேட்டானாம்... இந்த கிறுக்கச்சித்தான் அவன்ட்ட என்னோட அப்படி பேசச் சொல்லி பெட் கட்டிருக்கா... இப்ப ஸாரி கேட்டு ஃபோன் பண்றா....”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொன்னதைக் கேட்டு மெலிதாக சிரித்த என்னை முறைத்துப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாத்தியா?? க்ளாஸ்மேட்ங்ற உரிமையோட சும்மா உன்கிட்ட விளையாடிருக்காங்க. அதப் போய் நீ சீரியஸா எடுத்துக்கிட்டு பச்சப் புள்ள மாதிரி அழுதுட்டு உக்காந்திருக்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்.... எது எதுல விளையாடனும்னு வெவஸ்தையே இல்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதான்... ஸாரி கேட்டுட்டாள்ல... அப்புறம் என்ன? ஃப்ரீயா விடு... அவளையும் அவனையும் மன்னிச்சு விட்டுறு... இன்னும் ஏன் இஞ்சித் தின்ன ஏதோ மாதிரி உம்முன்னு இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கதான் கொரங்கு.... இஞ்சி, சுக்கு எல்லாம் தின்ன குரங்கு”, என்று கன்னங்களைத் துடைத்துக் கொண்டே அவள் விளையாட்டாகக் கூறினாலும், இன்னமும் தேம்பல் வந்துக் கொண்டுதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனாலும் அவனுக்கு தைரியம் ஜாஸ்திதான்... ஃபோட்டோல உன் மூஞ்சியப் பாத்தும், நீ அழகா இருக்க.. உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லிருக்காம் பாரு.... ரியலி.. ஹி இஸ் க்ரேட்...  அடுத்த தடவ அவன் கால் பண்ணா, நீ அடிக்கடி சொல்வியே.... கண் டாக்டர பாக்க சொல்ற டையலாக். அத அவன்கிட்டையும் எடுத்து விடு”&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் விழிகள் ஆயிரம் மொழிப் பேசுமென்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எவனோ ஒருவன் சொன்னது உண்மைதான்.  செல்லக் கோபப் பரிமாணத்தையேற்றி இமைகளோடு கருவிழிகளையும் அகல விரித்து, விரல்களை மடக்கி என் கையில் மெதுவாக குத்தினாள். ’ஸ்ஸ்’ என்று வலியின் சுகத்தை நான் வெளிப்படுத்திய நொடிப் பொழுதில், தவறு செய்துவிட்டதை அறிவிக்கும் உதடு கடிக்கும் உடல்மொழிக் கவிதையையியற்றினாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்ம்... உங்களப் போய் எவ்வளவு நல்லவன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க.... ஃபோன்ல அவனத் திட்டுன வார்த்தையயெல்லாம் ரிக்கார்ட் பண்ணி எல்லாத்துக்கும் போட்டுக் காட்டியிருக்கனும்... அப்பத் தெரிஞ்சிருக்கும்.... நீங்க எம்ஜியார் வேசம் போட்ட நம்பியார்னு....”, அவள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டாளென்று உறுதிச் செய்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து தொலைபேசி என்னுடைய உயிர் தோழன்... இல்லையில்லை... தோழியானது. சிறப்புமிக்க அனைத்தையுமே பெண்மைபடுத்துவதுதானே தமிழர் மரபு. அங்கிருந்த இரண்டு வாரங்களில் காலை வணக்கத்த்திலிருந்து இரவு இனிய கனவுகள் வரை கம்பிவழிக் கடத்தலில் பிரகடனப்படுத்திக் கொண்டே இருந்தேன். சித்தப்பா வீடென்பதால், அடிக்கடி தொலைபேசியில் பேசினாலும், குறுகிய உரையாடல்களிலேயே முறிந்துவிடும். கைப்பேசி இல்லாததை நினைத்துக் கவலைப்பட்டதும் அப்போதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வாரத்தில் ஓர்நாள் உறவினர்கள் அனைவரும் பாபனாசம், மணிமுத்தாறென்று சுற்றுலாச் செல்வதாக திட்டமிட்டிருந்தோம். அவளும் வருவதாக இருந்தது. இறுதி நேரத்தில் ஏதோ கல்லூரி வேலையால் அவளால் வர முடியாமல் போனது. வீழ்ச்சியானபோதிலும், உள்ளயெழுச்சியைத் தந்துக் கொண்டிருந்த அழகான அருவி. வெயில் காலத்தை கேள்விகுறியாக்கிய ரம்மியமான தென்றல் பொழுது. தரைப்பட்டுத் தெறிக்கும் சாரலில் நனைந்த ஈரப்பாறைகள். ஒழுங்குப்படுத்தப்படாமலேயே வண்ணமயமாய் காட்சியளிக்கும் பச்சைக் காடுகள். அடர்ந்தக் காட்டுப் பகுதியின் நடுவே நெலிந்து வளைந்து நுழையும் ஒற்றையடிப்பாதை. அனைத்தும் அவளில்லாதத் தனிமையை பன்மைப்படுத்திக் கொண்டேயிருந்தன. அன்றும்கூட அவளுடனான உறவை எதிர்ப்பால் ஈர்ப்பின் ஓர் அங்கமென்றுதான் எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னைக்குத் திரும்பும் நாளும் வந்தது. அன்று காலை அவளுக்குத் தொலைபேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ!! சொல்லுங்க மச்சான்... என்ன விசேஷம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்... டி.வின்னு நெனச்சு கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்திருக்கியாம். அத்த சொன்னாங்க... அதுலலாம் சன் டிவி வராதும்மா...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ... எங்களுக்கும் கம்ப்யூட்டர்னா என்னன்னு தெரியும்... சரி.. எதுக்கு ஃபோன் பண்ணீங்க? சீக்கிரம் சொல்லுங்க... நான் ரொம்ப பிஸி...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓவர் காட்சி ஒடம்புக்கு ஆகாது மேடம்... சரி... என்ன பண்ணிட்டு இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“காட்சியா? ஓ... ஓகே ஓகே... நானா? ப்ளாக் படிச்சிட்டு இருக்கேன். வெயிலில் மழைன்னு ஒரு ப்ளாக். கேள்வி பட்டுருக்கீங்களா? அதுல இருள் தடங்கள்னு ஒரு கத... அதத்தான் படிச்சிட்டு இருக்கேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;“வெயிலில் மழையா? என்ன பேர் அது? காக்காக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறானா அத எழுதுறவன்?”&lt;br /&gt;&lt;br /&gt;”இதுக்குத்தான் கொஞ்சமாவது ரசனை இருக்கனும்... வெயில் மாதிரி மனநிலை இருந்தாலும், அந்த ப்ளாக்க படிச்சா மழை மாதிரி குளிர ஆரம்பிச்சிடும்.... அதான் அர்த்தம்....”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்? ப்ளாக்ல ஏ.ஸி வச்சிருக்கானோ? டைட்டில் வைக்குறானுங்களாம் டைட்டில். அத படிக்கிறதுக்கு உன்ன மாதிரி நாலு பேரு வேற. நீயெல்லாம் வாசிக்கும்போதே தெரியுது... அந்த ப்ளாக் எவ்வளவு மொக்கையா இருக்கும்னு...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.... எதுக்கு ஃபோன் பண்ணீங்க.. அதச் சொல்லுங்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னைக்கு ஈவினிங் சென்னைக் கெளம்புறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ!! அப்போ நாளைல இருந்து தின்னவேலிக்கு விடிவுகாலமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ இருக்குற வரைக்கும் அது நடக்காது...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி மச்சான்... ஹேவ் அ நைஸ் ஜர்னி... எஞ்சாய் பண்ணுங்க.... எங்களயெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோங்க.... அங்க போனவுடனே குட்டப் பாவாட, டைட் ஜீன்ஸுன்னு போட்டுட்டு திரியுற பொண்ணுங்களயெல்லாம் பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டே எங்கள எல்லாம் மறந்துடாதீங்க...”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னைய வழியனுப்ப நீ வரலையா? அப்படியே பழைய படத்துல வர்ற மாதிரி கண்ணீர் விட்டுட்டு டாட்டா காட்டிட்டே ரயில் பின்னாலேயே நாய் மாதிரி ஓடி வருவ... நானும் அப்படியே ரயில் கதவு வழியா எட்டிப் பாத்துட்டே போலாம்னு நெனச்சேனே...”&lt;br /&gt;&lt;br /&gt;“ச்சே... ச்சே... பேட் இமேஜினேஷன். அப்படியே நான் வந்தாலும், விசிலடிச்சு கைத்தட்டிக் கொண்டாடிட்டு இருந்திருப்பேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்போ... உண்மையிலேயே நீ வரலையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாரி மச்சான்... என் ஃப்ரெண்ட் கலாவோட எங்கேஜ்மெண்ட் இன்னைக்கு... ஸோ... என்னால வர முடியாது.”&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவள் வரவில்லை. அவளில்லாமல் காட்சிப் பிழையாகிப் போன வெறுமையான ரயில் நிலைய நடைமேடையை விட்டு சிறிது சிறிதாக விலகத் துவங்கியது ரயில். எங்கள் ரயிலை துரத்திப் பிடிக்க வேகமாக பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன அவள் நினைவுகளைத் தாங்கிய இரு தடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-- தடங்கள் தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-3941876287987698875?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/3941876287987698875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=3941876287987698875' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3941876287987698875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3941876287987698875'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/4.html' title='இருள் தடங்கள்... - 4'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-9222528060459981671</id><published>2008-10-14T23:00:00.001-04:00</published><updated>2009-03-28T13:39:33.001-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருள் தடங்கள்'/><title type='text'>இருள் தடங்கள்... - 3</title><content type='html'>&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/1.html"&gt;தடம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/2.html"&gt;தடம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்’, ஹாரிஸின் இசையைத் தட்டி எழுப்பியவாறு சிணுங்கியது என் அலைப்பேசி. விழித்துப் பார்த்தேன். அதே சென்னை ரயில் நிலையம். வானம் ஒளி சிந்தத் துவங்கியிருந்தது. பாடலின் ஒவ்வொரு வரியும் அவளின் நினைவுகளை மீட்ட, மீண்டும் அவளது நினைவுகளில் தொலைந்து போகவே விரும்பியது மனம். விருப்பமில்லாமல் அலைப்பேசியில் துடித்துக் கொண்டிருந்த எண்ணைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பானையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;”சொல்லுடா பான்ஸ்... என்ன இந்த நேரத்துல?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ தூங்கிட்டு இல்லையாடா? ச்சே.. நீ தூங்கிட்டு இருக்குறதா நெனச்சி ஒரு ஃபோன் கால வேஸ்ட் பண்ணிட்டேன்டா மாப்பி...”&lt;br /&gt;&lt;br /&gt;“ங்கொய்யால... தூங்கும்போது மட்டும் எழுப்பிருந்தீன்னா உனக்கு சங்குதான்டீ... சரி.. மேட்டர சொல்லு.. எதுக்கு இந்த நேரத்துல கால்??”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்னுமில்ல மச்சி... இன்னைக்கு உனக்கு என்ன ப்ரோக்ராம்? எங்கயாவது மீட் பண்ணலாமான்னு கேக்கத்தான் ஃபோன் பண்ணேன்...சரி... இப்ப நீ எங்க இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன் மச்சி... ரிலேட்டிவ் ஒருத்தங்கள ரிஸீவ் பண்ண வந்தேன்... அப்புறம், இன்னைக்கு ஒரு மேரேஜ் இருக்கு மச்சி... நெக்ஸ்ட் வீக்கெண்ட் மீட் பண்ணலாமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ!! ஓகே ஓகே... கேரி ஆன்... அப்போ, அப்புறமா ஃபோன் பண்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நட்பு வட்டங்களிலும் அதிகமான கிண்டல்களுக்கும் எள்ளல்களுக்கும் ஆளாகும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இருக்கும். அப்படி எங்கள் பள்ளிக் கால நட்பு வட்டத்தின் வடிவேலுதான் ’பானை’ என்ற அர்ஜுன். பானைக்கான உண்மையான பெயர்க்காரணம் இதுவரையில் எங்களுக்கும் தெரியாது. பள்ளிக்குப் பிறகு அவனுடனான தொடர்பு, காலவோட்டத்தினால் சிறிது சிறிதாகத் துண்டிக்கப்பட்டு, சில மாதங்களிலேயே முழுவதுமாக அறுந்து போனது. சென்ற முறை நெல்லைச் செல்ல இதே எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுதான் அவனை மீண்டும் சந்தித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பான மாப்ள... எப்படிடா இருக்க?? பாத்து எத்தன வருசம் ஆச்சு??", என் முதுகில் லேசாக தட்டிய அவனை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா இருக்கேன் மச்சான். பரவாயில்லடா மச்சி... 'உன்னைய எங்கேயோ பாத்த மாதிரி இருக்குது'னு நெத்திய சுழிச்சிக்கிட்டே சினிமா டையலாக் அடிப்பேன்னு நெனச்சேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட... உன்னையெல்லாம் மறக்க முடியுமா மச்சான்? அகில உலகத்துலையே வடிவேலுக்கு அப்புறம் பென்சிலால மீச வச்ச ஒரே ஆளு நீதானே மச்சி... அதெல்லாம் மறக்க முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"போங்கடா... போங்க... போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கடா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.... உங்க தல ப்ரசாந்த்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு திரிஞ்சியே... என்னடா ஆச்சு அதெல்லாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி... அவர்தான் ரெண்டாயிரத்து பதினாறுல தமிழ்நாட்டு ஸீ.எம். அப்ப தெரியும்டா உங்களுக்கெல்லாம்... சரி.. கம்பார்ட்மெண்டுல எதாவது ஃபிகர் இருக்குதானுதானே பாத்துட்டு இருக்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி மச்சான் கண்டுபுடிச்ச?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா... இத கண்டுபுடிக்க பல்ராம் நாயுடுவையா கூட்டிட்டு வரனும்? மொச புடிக்கிற நாய மொகர கட்டையப் பாத்தா தெரியாதா? ஏன்டா ஸைட் அடிச்சு கெட்டுக் குட்டிச் சுவரா போறீங்க?? உங்க கூடெல்லாம் சேரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அடங்குடா அயோக்கிய ராஸ்கல்... அண்டர் ஏஜ்லையே அறிவியல் வாத்தியார் ஆரோக்கியசாமி பொண்ணு சரோஜாவுக்கு லட்டர் கொடுத்து மாட்டி, பனியனோட ஸ்கூல் வாசல்ல ஒக்காந்திருந்த நாயெல்லாம் பேசுது... ஆமாம் மச்சி... நம்ம க்ளாஸ் ஹேமா மாலினிக்கு ரூட் விட்டியே.. என்னடா ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;“அட நீ வேற மாம்ஸ்... அது ஒரு சப்ப ஃபிகர்டா...”&lt;br /&gt;&lt;br /&gt;“சப்ப ஃபிகரா? ஏன்? பருப்பு வேகலையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஃப்ரீயா விடு மச்சி... ஜான் ஆப்ரஹாமா இருந்தா, ஆயிரம் பிபாசா பாசுக்கள் லைஃப்ல க்ராஸ் பண்ணத்தான் செய்வாங்க.. அதுக்கெல்லாம் நாம கலவரப்பட முடியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி மாப்ஸ்... இப்ப எங்க.. என்ன பண்ணிட்டு இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த செம்பரம்பாக்கத்துல ஒரு இஞ்சினியர் காலேஜ் இருக்குல்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்.. அங்கதான் உங்க ஓனிக்ஸ் கம்பெனி குப்பைய அள்ளுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“லே தம்பி... அடுத்த நாராயணசாமியப் பத்தி தப்பா பேசிட்டு இருக்க... நாங்களும் இப்ப கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆயிட்டோம் தெரியும்ல... ”&lt;br /&gt;&lt;br /&gt;“டே வெண்ண மாக்கான்... அது நாராயணசாமி இல்ல... நாராயண மூர்த்தி”&lt;br /&gt;&lt;br /&gt;‘காலையில் தினமும் கண்விழித்தாலே கண் தேடும் தேவதை அம்மா’, மறுபடியும் என் அலைப்பேசி அலறியது. இம்முறை அம்மாவிடமிருந்து அழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லும்மா...”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்... புஷ்பா ஃபோன் பண்ணா... அவ தாம்பரத்துலையே எறங்கிட்டாளாம். அவ ஃப்ரெண்டு வீட்டுக்குப் போயிட்டு சாயுங்காலமா வர்றாளாம். நீ கெளம்பி வா”&lt;br /&gt;&lt;br /&gt;அழகான கவிதையொன்றை வாசித்து சிலாகிக்கும் தருணத்தில், கவிதை புத்தகத்தைக் கைப்பற்றி சிரிக்கும் நண்பனிடம் தோன்றும் அந்த ஒரு நொடி எல்லையற்றக் கோபத்தை போன்றதொரு சினத்தைத் திணித்துச் சென்றது அம்மாவிடமிருந்து வந்த அவளைப் பற்றியத் தகவல். அவள் மீதல்ல. அவளை தாம்பரத்திலேயே இறங்கச் செய்த அவள் தோழியின் மீது. திட்டமிட்டப்படியே செய்து முடித்துவிட்ட ஆணவத்தில் திரியும் விதியின் மீது. சற்று நேரத்திற்கு முன்பு அழகான மாயையைத் தூவி தன்னிலை சிதைந்த பொழுதின் மீது. இப்படி அனைத்தின் மீதும். எதிர்பார்ப்புகளின் உச்சத்தில் திழைத்திருந்த நான் ஏமாற்றங்களின் விளிம்பில் நின்ற இப்பொழுதில் கேலியாய் நகைக்கின்றன‌ காத்திருந்த நொடிகளனைத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;நடைமேடைக‌ள் கடந்து, சென்னையின் துரித வாழ்க்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ரயிலில் ஏறினேன். தாம்பரம் நோக்கி நகரத் துவங்கியது ரயில். தாம்பரத்திற்கேச் சென்று அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று அடிமனதிலிருந்து எழுந்த‌ எண்ணத்தை மெதுவாய் அமுக்கி, வீடு இருக்கும் சூளைமேட்டுக்குச் செல்லவே தீர்மானித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;மலரும் நினைவுகளைத் திசைத் திருப்புவது, இடைப்படும் நிகழ்வுகளின் அசாத்திய திறமை. அப்படி விளம்பர இடைவேளையாய் நுழைந்துவிட்டதுதான் பானையைப் பற்றியச் சிந்தனைகளும். நிற்கும் பயணிகளின் தாங்கலுக்கான இரும்புக் கம்பியினை பிடித்தவாறே, அறிவியல் விதியினை கண்முன்னே நிகழ்த்திப் பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நிஜங்களில் துளிர்க்கத் துவங்கின‌ அவளது நினைவுகள் மறுபடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹை கிரவுண்ட் என்று நெல்லை மக்களால் அறியப்படும் பாளை மேட்டுத்திடலிலுள்ள வி.எம்.எஸ் திருமண மண்டபத்தில்தான் ஹஸியின் திருமணம் நடைப்பெற்றது. நெல்லை மருத்துவமனையும், அதன் அருகிலேயே இளசுகளின் இதயத் துடிப்புகளை ஸ்டெதஸ்கோப்பாய் தோளில் போட்டுக் கொண்டு நடக்கும் மருத்துவக் கல்லூரிச் சிட்டுகளும், கடப்பவர் விழிக‌ளில் ஓர் விரிவை ஏற்படுத்தும் அரசனின் வீடும் பாளை மேட்டுத் திடலின் சிறப்பம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக மண்டப மாடியில் அமைந்துவிட்டபடியால் அஞ்சலியை திருமணம் முடியும்வரை காண முடியவில்லை. பெண்வீட்டுக்காரன் என்பதால் உணவுப் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். பாவாடை தாவணி தோரணையல்லாமல், அளவான ஒப்பனையோடு மிகச் சாதாரணமாய் பச்சை நிற சுடிதாரில் வந்திருந்தாள். அவளிடம் எதுவுமே பேசாமல், அவளுக்கான கேரட் அல்வாவை அவளது இலையில் வைத்துவிட்டு மெல்ல நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ... என்ன வெறும் கரண்டிய மட்டும் காட்டுறீங்க? எங்களுக்கெல்லாம் அல்வா கொடுக்க மாட்டீங்களா?" என்று சிறிய புன்னகையை ஏந்தியவாறே கிண்டல் தொனியில் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அட்டு ஃபிகர்களுக்கெல்லாம் அல்வா கொடுக்கக் கூடாதுன்னு எங்க தலைவர் சத்யராஜ் அன்னைக்கே சொல்லிருக்காரு' என்று சொல்ல நினைத்து,&lt;br /&gt;&lt;br /&gt;"வாயாடிகளுக்கெல்லாம் அல்வா கொடுக்குறதில்ல. அதுவுமில்லாம திருநெல்வேலிக்கே அல்வாவான்னு சம்பந்தமே இல்லாம ஸீனப் போடுவீங்க... அதான்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க என்னடே பொம்ப‌ள புள்ளைங்களோட சலம்பிட்டு நிக்க. அங்க பிரியாணியே வச்சாச்சு. இன்னும் ஸ்வீட்ட காணோம்னு சத்தம் போட்டுட்டு இருக்காவ. போய் அங்க போய் சப்ளை பண்ணுப்பா" என்று வயித்தெறிச்சல் பிடித்த பெருசொன்று, தன் நாட்டாமை வேலையை செவ்வனச் செய்ய, அவள் சப்தமிட்டு சிரித்து விட்டாள். அவள் சிரித்தது மட்டுமல்லாது, பக்கத்திலிருந்த டொப்பி மூக்கிகளும் சிரிப்பான்களை சிதறவிட, அதுமுதல் பெண்களிருக்கும் இடத்திற்கே செல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மணப்பெண் தோழியாதலால் என் அக்கா, ஹஸியோடு சுற்றித் திரிய, என் அம்மாவும் பெண்களின் வழமையான அரசி முதல் அடுத்தத் தெரு மீனா வரையிலான ஆராய்ச்சி உரையாடலில் பட்டுச் சேலைக் கும்பலோடு தஞ்சமடைய, தனிமையின் துணையுடன் களைந்து கிடந்த நாற்காலிகளின் மத்தியில் அமர்ந்து என் கைப்பேசியில் எதையதையோ பார்த்துக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய் மச்சான்...”, சிதறிக் கிடந்த நாற்காலிகளில் ஒன்றை எடுத்து ஒன்றுக்கு குறைந்த அடி தூரத்தில் போட்டு, என் எதிரிலமர்ந்தாள் அஞ்சலி.&lt;br /&gt;&lt;br /&gt;“வாங்க மேடம். மூனு ரவுண்டு மூக்கு பிடிக்க சாப்பாடா?? உன்னால கடைசி பந்தில பிரியாணி தட்டுப்பாடாமே?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன இவ்வளவு கொறைவா சொல்லிட்டீங்க? நாங்கெல்லாம் அஞ்சு ரவுண்டுக்கு கம்மியா சாப்ட்டதே இல்ல... சரி... டைனிங் ஹாலுல தலைவருக்கு செமையா மூக்குல அடி விழுந்ததே... அதான் எப்படி இருக்குதுன்னு பாக்கலாம்னு வந்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;”அவன் மட்டும் என் கைல...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே&lt;br /&gt;&lt;br /&gt;“என்னலா கூப்ட்டீயாமே?”, என்று அஞ்சலியைப் பார்த்துக் கேட்டவாறு சமையல் செய்யும் அலிமா மாமி அங்கு வந்து நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் மாமி.... மச்சான் ஏதோ உங்கக் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதான் கூப்ட்டேன்...” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ”என்ன மச்சான்? நேத்து எங்கிட்டச் சொன்னீங்களே?? அத நீங்களே உங்க வாயால சொல்லிட்டீங்கன்னா, இதே மண்டபத்த இப்பவே புக் பண்ணிடலாம்..” என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமாம் மாமி... இந்தப் பொண்ணு என்னையத்தான் கட்டிப்பேன்னு ஒத்த காலுல நிக்கிறா. நீங்களே சொல்லுங்க... கிளி வேசத்துல திரியற காக்காவயெல்லாம் கட்டிக்க முடியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதற்காக அவர்களிடம் சொல்கிறேனென்று புரியாமல் குழம்பிப் போய் நின்னார்கள் மாமியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்னுமில்ல மாமி... சென்னைல எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களுக்கு கல்யாணம் இருக்குது. நீங்க சமைக்க வருவீங்களா? இல்லையானு விசாரிக்கத்தான் கூப்ட சொன்னேன்”, என்று மாமியை சமாளித்து அனுப்பி வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;”அடப்பாவி!! இப்படி கேப்ல கெடா வெட்டுறீங்க... சரி மச்சான்... நான் வீட்டுக்கு கெளம்புறேன். உங்கள வீட்ல ட்ராப் பண்ணனுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;‘கரும்புத் தின்னக் கூலியா?’ என்பதால் உடனே ஒத்துக் கொண்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம் அஞ்சலி.. என்ன பண்ணிட்டு இருக்க? உன் கூடத்தான் நடந்துட்டு இருக்கேன்னு மொக்க காமெடிலாம் தயவு செஞ்சு அடிச்சிடாத...”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சதக் காலேஜ்ல பி.ஏ. ஹிஸ்ட்ரி படிச்சிட்டு இருக்கேன்...”, சிரித்துக் கொண்டே கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ!! நீ எல்.கே.ஜியே ரெண்டு வருசமா படிச்ச படிப்பாளில்ல... நான் கூட கை முட்டி வரைக்கும் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு, பெரிய கண்ணாடி ஒன்னப் போட்டுக்கிட்டு, சிம்ரன் மாதிரி கலெக்டர் ஆகி, காதல் பாட்டு ஒன்னப் பாடி விஜய்யோட ஜோடி சேரத்தான் ஹிஸ்ட்ரி எடுத்தியோன்னு ஒரு நிமிசத்துல தப்புக் கணக்குப் போட்டுட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கள மாதிரி ப்ரைவேட் காலேஜ்ல சேந்து அப்பா காச கரியாக்குறதவிட நாங்கெல்லாம் எவ்வளவோ மேல்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய்... ஐ எம் ஸ்டடியிங் இன் ஒன் ஆஃப் த டாப் டென் காலேஜ் யூ நோ...”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு அழகானப் பொண்ணு கூட வந்தா உடனே இந்த பீட்டர ஆரம்பிச்சிடுவீங்களே?”&lt;br /&gt;&lt;br /&gt;“அழகானப் பொண்ணா? எங்க? எங்க?”, என்று என் கைகளை விழிகளுக்குமேல் நெற்றியில் வைத்து அங்குமிங்கும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்க ஊர்ல அரவிந்த்னு ஒரு ஐ ஆஸ்பிட்டல் இருக்கு. ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அங்க ஒரு தடவ கண்ண செக் பண்ணிக்கோங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் எத்தன நாளைக்கு இதே காமெடிய அடிச்சிட்டு இருப்பீங்க? கொஞ்சம் புதுசா கண்டுபுடிங்க... ஆனாலும், உங்க அப்பாவ சும்மா சொல்லக் கூடாது. அவருக்கு அப்பவே சென்ஸ் ஆஃப் ஹியூமர் ஜாஸ்தி”&lt;br /&gt;&lt;br /&gt;“எங்க அப்பா’ல்ல... அதான்” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்... கருவண்டு மாதிரி இருக்குற உனக்கெல்லாம் மின்மினி புஷ்பாஞ்சலின்னு பேரு வச்சிருக்காரு பாரு... நல்ல நகைச்சுவை உணர்வு உங்க அப்பாக்கு...”&lt;br /&gt;&lt;br /&gt;”ஹேய்...”, என்று என் வலது கையில் லேசாக அறைந்தாள். அடியென்றாலும் அவளின் முதல் ஸ்பரிசம். என் நினைவுப் பெட்டகத்தினுள் அத்துமீறி நுழைந்து விட்டிருந்தது. அதற்குள் அவளது ஸ்கூட்டியின் அருகே வந்திருந்தோம். அவள் வண்டியின் பின்னுருக்கையில் நான் அமர, அவளது வண்டி எங்களிருவரையும் சுமந்துக் கொண்டு வேகமாக கிளம்பியது. பேரழகின் செறிவுநிலையொத்த ஓர் தேவதையுடன் பறக்கும் குதிரைகள் பூட்டிய ரதமொன்றில் வானவீதியிலே உலா போவதுபோல் ஒப்பிட்டுக் கொண்டேன், அவளுடனான என் அப்போதைய நிகழ்வியலை. அவள் இடைத‌னை என் இரு கைகளால் வளைத்துப் பற்றி, அவளது பின் தோளில் என் முகம் சாய்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒப்பமையில்லாமல் வண்டியின் பின்புற கம்பியைப் பிடித்துக் கொண்டு பயணித்தேன். காற்றின் சதியால் அவள் மெய்யிலிருந்து பிரிந்த மெலிதான துப்பட்டா நுனி, அவளோடு மறுபடியும் சேர எத்தனித்த அனைத்து முயற்சிகளிலும் என் முகம் உரசி, என்னை வேற்று கிரகத்திற்கு கடத்திச் சென்றுக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சுட்டியாக மட்டுமே கண்டிருந்த மின்மினியை முதன்முறை கண்ணீரோடு கண்ட பொழுதில் உடைந்துபோனது என் இதயம் மட்டுமல்ல, என் மொத்தமும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;-- தடங்கள் தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/2.html"&gt;-தடம் - 4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-9222528060459981671?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/9222528060459981671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=9222528060459981671' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/9222528060459981671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/9222528060459981671'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/3.html' title='இருள் தடங்கள்... - 3'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-3491726726796929177</id><published>2008-10-13T19:20:00.005-04:00</published><updated>2008-10-13T21:14:29.986-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலித் தொடர்'/><title type='text'>சினிமா தொடர் விளையாட்டு</title><content type='html'>சினிமாவைப் பத்துன தொடர் விளையாட்டாம். என்னையையும் இந்த ஆட்டைல இழுத்துவிட்ட தம்பியண்ணனுக்கு நன்றி. நேரா கேள்வி பதிலுக்கே போயிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர்ல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஸ்ரீவைகுண்டத்துல ஜவஹர்னு ஒரு தியேட்டர் இருக்கு. எங்க ஊர்ல இருந்து ரெண்டு வில்லு வண்டில ஒட்டா மாட பூட்டி படத்துக்குப் போனது ஞாபகமிருக்கு. பாட்டிச் சொல்லை தட்டாதே படத்துக்கு போனது மாதிரிதான் மங்கலா நினைவிருக்கு. ஆனா, நாலாப்பு படிக்கும்போது, முழுவாண்டு லீவ்ல பெங்களூரு போயிருந்தப்ப, மெஜெஸ்டிக் பக்கத்துல இருக்குற சந்தோஷ் தியேட்டர்ல ‘Terminator 2' பாத்தது நல்லா ஞாபகமிருக்குது. (ரிலீஸ் தேதியப் பாத்து நாலாப்பு படிக்கும்போதுன்னு கண்டுபுடிச்சேன் :)) அர்ணால்ட் துப்பாக்கிய சொழட்டி சொழட்டி சுடுறத பிரமிச்சுப் பாத்தோம். நாங்கெல்லாம் அப்பவே ஒலக சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டோம்ல ;))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்றதுக்கே கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்குது :((. ஐய்யய்யோ!! நீங்க அந்த மாதிரி படம்னு நெனச்சிடாதீங்க. நான் கடைசியா அரங்குல பாத்த படம் குசேலன். இங்க பக்கத்து ஊர்ல Galaxyனு ஒரு தியேட்டர் இருக்கு. அங்க எப்பயாவதுதான் தமிழ் படம் வெளிவரும். போன தடவ தசாவதாரம் படத்துக்கு ஒரு ஆஃபர் போட்டிருந்தாங்க. அதுக்காக தொலைப்பேசுனப்ப, அந்த தியேட்டர்ல வேலைப் பாக்குற ஒரு சிங்கப்பூர் தமிழ் அக்கா ஒருத்தங்க ஃப்ரெண்ட் ஆனாங்க. எங்க ஏரியால என்னன்ன நல்ல ஹோட்டல்ல இருந்து வீடு வரைக்கும் இருக்குதுன்னு வெளாவரியா வெளக்குனாங்க. ஒரு நாள் வீட்டுக்கு சாப்ட கூட கூப்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. :)) குசேலன் படம் பொட்டி வந்தாதான் வியாழக் கிழம படம். இல்லன்னா வெள்ளிக் கெழமத்தான்னு சொல்லிட்டாங்க. பொட்டி வந்திடிச்சா வந்திடிச்சான்னு அவுங்களுக்கு மெயிலும் ஃபோனும் போட்டு செம கடுப்படிச்சிட்டேன். ’டேய் இந்தப் படத்துக்கெல்லாம் இதெல்லாம் நெம்ப ஓவரு’னு என்னைய திட்டிருப்பாங்க. பொட்டி வந்து வியாழக் கிழம படம் போட்டும் நான் சனிக் கெழமத்தான் அந்தப் படத்தப் பாத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சொன்ன மாதிரி இங்க தமிழ் படங்கள் அவ்வளவாக ரிலீஸ் ஆகாததுனாலும், இந்தியா வர்ற வரைக்கும் காத்திருந்து படம் பார்க்க பொறுமையில்லாததுனாலும் இணையத்துலேயே நிறைய படத்த பாத்துடுவேன். அப்படி கடைசியாகப் பாத்த படம் தாம் தூம். இசை, ஒளிப்பதிவு, ரஷ்யா, சண்டைக் காட்சிகள் தவிர படம் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. அதுவும் அந்த கதாநாயகிக்கு சுட்டித்தன கேரக்டர் சுத்தமா நல்லாவே இல்ல. (எவன்டே அது? ’கதாநாயகியே நல்லா இல்ல... இதுல அவ பண்ற சுட்டித்தனத்தப் பத்தி பேசிக்கிட்டு’ன்னு கேப்ல கெடா வெட்டுறது??)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசுல கேப்டன் ப்ரபாகரன். அப்பெல்லாம் நாங்க எல்லாருமே ’தளபதி தலவலி’னு ரஜினி ரசிகர்கள நக்கல் பண்ணிட்டு அலைஞ்ச கேப்டன் ரசிகர்கள்தான். மாநகரக் காவல் படத்துல ஒரு பார்க்கிங் ஏரியால ஆனந்தராஜ கேப்டன் தேடிட்டு இருப்பார். அப்போ ஸ்டைலா ரெண்டு ஸ்டெப் எடுத்து வைப்பார். அந்தப் படத்தோட பின்னணி இசைய வாயால போட்டுக்கிட்டே அத அப்படியே நாங்களும் செஞ்சுக் காட்டி கூட இருக்குற பசங்கக்கிட்ட ஸீன் போட்டுட்டு திரிவோம். அவ்வளவு தீவிர விஜயகாந்த் ரசிகர்கள். ராணிப்பேட்டைக்கு ஒரு கல்யாணத்துக்காக போயிருந்தப்ப எங்க அப்பா, அம்மாவோட போய் பாத்தேன். நினைவு தெரிஞ்சதுக்கு அப்புறம் காதலுக்கு மரியாதை. அந்த படத்துல இருந்து விஜய் ரசிகனாகி, அதுக்கப்புறம் ட்ரெஸ் எடுக்கக் கூட விஜய்யோட ஃபோட்டோஸ பெங்களூர்ல இருந்த எங்க அப்பாக்கு அனுப்பி வச்சதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பிதாமகன். படம் முடிஞ்சு பல மணி நேரமாகியும் சூர்யா செத்துப் போனத நம்பவோ, ஏத்துக்கவோ முடியவே இல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சம்பவம்னா உடனே ஞாபகத்துக்கு வர்றது சண்டியர் சம்பவம்தான். அப்போ வந்த ஒரு வீடியோ இதோ... கமல் கெத்து காட்டியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/T1z6uT4Gvpc&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/T1z6uT4Gvpc&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் படங்கள்ல மிகவும் பாதிச்சதுன்னா இருவர். மணி ரத்னத்தோட தீவிர ரசிகன்ங்றதுனால அவரோட படம் எதா இருந்தாலும் அத அடிச்சிக்கவே ஆள் கிடையாதுன்னு திரியற மக்கள்ல நானும் ஒருத்தன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வ சகோதரர்கள். கமல் குள்ளமா நடிச்ச டெக்னாலஜி அட்டகாசம். அப்புறம் மணிரத்னத்தோட எல்லா படங்களும். காட்சியமைப்புகள், கேமரா கோணங்கள், லைட்டிங்னு இப்ப வரைக்கும் பயங்கர பிரமிப்பா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம், ஆவில கூட சினிமா சம்பந்தப் பட்டத மட்டும்தான் வாசிச்சிருக்கேன். இப்ப தினமும் Indiaglitz வாசிப்பேன். இன்னைக்குத்தான் முரளிக்கண்ணனோட பதிவ படிச்சேன். எவ்வளவு மேட்டர எழுதியிருக்காரு மனுசன். கலக்கிட்டு இருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;7.தமிழ்ச்சினிமா இசை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரகுமானின் தீவிர விசிறி நான். ரிதம்ல ‘அன்பே... இது நிஜம்தானா’னு ஆரம்பிக்கிறப் பாட்ட இப்ப கேட்டாலும் அப்படியே கண்ண மூடி லயிக்க ஆரம்பிச்சிடுவேன். காரணம்... கல்லூரி சேந்த புதுசுல செம ஹிட்ல இருந்தப் பாட்டு, அதுவும் இந்தப் பாட்ட சீனியர் ஃபிகர் ஒன்னு பாடும் பாருங்க. அவுங்க காலேஜ விட்டு போற வரைக்கும் இந்தப் பாட்ட மட்டுமே பாடி ஒப்பேத்துனாங்க. ஆனா அவுங்க எப்ப பாடுனாலும், செம சவுண்ட் விட்டு எஞ்சாய் பண்ணுவோம். அதே மாதிரி கன்னத்தில் முத்தமிட்டால் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’. ராஜாவின் மெல்லிசைகள், ஹாரிஸின் மெலடிக்கள், How to name it வயலின் இசை என்று அனைத்தையும் கலந்துக்கட்டி ரசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பார்ப்பதுண்டு. அதிகம் தாக்கிய படங்களின் பட்டியல் ஏராளம். சிலது மட்டும் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;Taare Jameem par, Schindler's list, Hotel Rwanda, Forrest Gump, The green Mile, Malena(italy), Pursuit of Happiness, City of God(portuguese), Motorcycle dairies(spanish), My sassy girl(korean), God Father series. இப்போதைக்கு இந்த பீட்டர் போதும் :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?&lt;br /&gt;பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பா இல்லைனுதான் சொல்லத் தோனுது. தமிழக கலாச்சாரத்தோட ஒட்டிய அல்லது தமிழ் சூழலுக்கேத்த மாதிரியான படங்கள் மட்டும்தான் ஓடுது. கொஞ்சம் நமக்குத் தெரியாத கலாச்சாரத்த பதிவு பண்ணாலே நாமெல்லாம் பாக்க மாட்டோம். முன்ன ஒரு தடவ எங்க பள்ளிக்கூடத்துல இருந்து சுற்றுலா போனப்ப, பஸ்ல சிவாஜி படம் ஒன்னு போட்டாங்க. சிவந்த மண்னுன்னு நெனக்கிறேன். அதுல ப்ரெஞ்சு புரட்சியப் பத்தி எடுத்திருப்பாங்க. ரொம்ப அருமையா இருக்கும். உலக சினிமாக்களில் ஆங்கிலப் படங்கள் தவிர்த்து மற்றைய மொழிப் படங்கள் இந்த கலாச்சார வித்தியாசங்களாலேயே மிகவும் சுவாரஷ்யமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மளால என்ன பண்ண முடியும்? அப்படியே கற்பனைல சில பல படங்கள இயக்கி அங்கேயே வெளியிட்டுப் பாத்துக்க முடியும். அப்புறம் எழுத எதுவுமே இல்லன்னா, ஒரு மொக்கப் படத்தப் பாத்துட்டு விமர்சனம்ங்ற பேருல எதையாவது எழுதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமீர், சசி குமார், வெங்கட் பிரபு, செல்வராகவன், வெற்றி மாறன்னு செமப் பட்டாளமே இப்ப இருக்குது. இன்னும் நெறைய பேர் வருவாங்க. அதனால நல்லாத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதெல்லாம் உக்காந்து யோசிப்பீங்களோ?? படம் வரலைன்னா கூட பரவாயில்ல... மத்த மொழி படங்களப் பாத்து ஒப்பேத்திடலாம். ஆனா தமிழ் பாடல்கள் கண்டிப்பா வந்துக்கிட்டே இருக்கனும்... அர்த்தம் தெரியலைனா சில நேரங்கள்ல பாட்டெல்லாம் ரசிக்க முடியிறதில்ல  :)) தமிழ் நாட்டு மக்களுக்கு... சிலருக்கு பைத்தியம் புடிக்கும். சிலருக்கு நிம்மதியா இருக்கும். தொலைக்காட்சி சேனல்களுக்கு செம கொண்டாட்டமாயிருந்தாலும், உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக இல்லன்னா அவுங்களுக்கும் கஷ்டம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருசத்துக்கு தமிழ்மணம், ப்ளாக், சேட், மெயில், டிவிட்டர்னு எல்லாத்தை மூடிட்டாங்கன்னா எப்படி இருக்கும்?? நெனச்சுப் பாக்கவே பயமா இருக்குதுல்ல??&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்&lt;br /&gt;&lt;br /&gt;1. மின்னிதழ்களில் பிரசுரமாகும் கவிதைகளாய் படைத்துக் கொண்டிருக்கும் அனுஜன்யா&lt;br /&gt;2. திரைத்துரை பிரபலம் ஒருவரிடம் வேலைப் பார்க்கும் உமா அக்கா.&lt;br /&gt;3. சோகக் கவிதைகளின் சொந்தக்காரன் ’கவிதைகள் எனப்படும்’ சரா&lt;br /&gt;4. சரக்கில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ’ஒற்றை அன்றில்’ ஸ்ரீ&lt;br /&gt;5. கமலின் மற்றுமொரு தீவிர ரசிகரான ’வெட்டிவம்பு’ விஜய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-3491726726796929177?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/3491726726796929177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=3491726726796929177' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3491726726796929177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3491726726796929177'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/blog-post_13.html' title='சினிமா தொடர் விளையாட்டு'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-8729663641856465583</id><published>2008-10-06T21:04:00.009-04:00</published><updated>2009-03-28T13:39:33.002-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருள் தடங்கள்'/><title type='text'>இருள் தடங்கள்... - 2</title><content type='html'>&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/1.html"&gt;தடம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கை ஒப்பனைகளற்ற இயற்கை அழகேந்திய தாரகைகளின் மத்தியில் அளவுகோல் கடந்த அழகான பெண்களைத் தேடி மேய்ந்து கொண்டிருந்த என் விழிகளின் மொத்தக் காட்சிகளையும் திருடி சற்றென ஒளி பரப்பி நடந்து கொண்டிருந்தாள் வெள்ளை சுடிதாரில் தேவதை வேடம் பூண்ட ஒருத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா... உன் மருமவள பாக்காம அங்க என்னம்மா பண்ணிட்டு இருக்க?”, எனக்கு பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த என் அம்மாவிடம் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாருடா புஷ்பாவா?”&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்பா. அழகான அத்தை பெண்களோ, மாமன் மகள்களோ இல்லாமல் பிறப்பது அநேக தமிழக பையன்களின் நிர்ணயிக்கப்பட்ட சாபம். அப்படியே இருந்தாலும், பிரிவையும் நினைவுப் பெட்டகத்தில் பத்திரபடுத்தும் ஈரமான முத்தம்பதித்து வழியனுப்புதலையும், வாரயிறுதிக்காக காத்திருக்க வைக்கும் உத்தியையும் கைவசம் வைத்திருக்கும் முத்தழகுகள் மிகவும் சொற்பம். அவ்விதிக்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், என் அம்மா வழி தொலைதூர உறவில் உதித்த முறைப்பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள்தான் புஷ்பா. அவள் குண்டாக இருந்ததும், அவளுடன் சண்டையிட்டதும் மட்டும்தான் என் நினைவுகளில் எஞ்சியிருக்கும் அவளது நிழல்கள். குடும்பச் சண்டை காரணங்காட்டி இதுவரையில் தொலைப்பேசியில் கூட நலம் விசாரித்ததில்லை. அவள் எப்படி இருப்பாளென்ற கற்பனை அதற்குள் என் நெற்றியின் முன்னே சுற்ற ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“கிளியப் பத்தி பேசும்போது ஏம்மா கொரங்கப் பத்தி கேக்குற?”, என் அம்மாவிற்கு அவளைப் பற்றி தவறாக பேசினால் கோபம் வருமென்று தெரிந்தே பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடிங்க... அப்புறம் யாரப் பத்திச் சொல்ற?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதோ அந்த போஸ்ட் பாக்ஸ் பக்கத்துல வெள்ள சுடிதார்ல....”&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்து முறைத்தவாறே நடந்து வந்து கொண்டிருந்த அம்மாவிடம் மறுபடியும்&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த பொண்ணு புடிக்கலையா? அப்போ அந்த க்ரீன் சுடிதார் ஓகேவான்னு பாரு...”&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு இதே வேலையா போச்சு. முதல்ல உன் அப்பாட்ட சொல்லி ஒரு பொண்ண பாக்கனும். அப்பத்தான் எனக்கு நிம்மதி”&lt;br /&gt;&lt;br /&gt;“எப்போ போலாம்... பொண்ணு பாக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;தோள் பட்டைக்கு கீழுள்ள கைப்பகுதியில் பலத்த அடி ஒன்று விழுந்தது. வலிக்காமல் அடிப்பது அம்மாக்களால் மட்டுமே முடிந்த கலை.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி. அப்பாக்கு வந்து எறங்கிட்டோம் ஒரு ஃபோன போடு”&lt;br /&gt;&lt;br /&gt;அலைப்பேசியில் விரைவெண்ணை அழுத்தி அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அவசரமாக அந்த வெள்ளை தேவதையைத் தேடினேன். அதற்குள் தேவதை சிறகு முளைத்து பறந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் என்ன தூக்கம்? காலைல வாக்கிங் போகலையா? அந்த பால்காரன்ட்ட இன்னும் ஒரு வாரத்துக்கு அர லிட்டர் மட்டும் போதும்னு சொல்லச் சொன்னனே. சொன்னீங்களா?”, அப்பாக்கள் மீதான அம்மாக்களின் வழமையான ஆளுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இங்க வந்தும் உன் ஹிட்லர் வேலைய ஆரம்பிச்சிட்டியா?”, அம்மாவை செல்லமாய் கோபித்து விட்டு ஆட்டோ பிடிக்கச் செல்ல எத்தனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்... சாந்தி ஸ்வீட்ஸ்ல போய் ரெண்டு ஒரு கிலோ ரெண்டு அர கிலோ ஸ்வீட் வாங்கிட்டு வா”, வெளியூரிலிருந்து வந்தாலும் உள்ளூர் இனிப்புகளையே வாங்கி வழங்குவது இந்த நெல்லைக்காரர்களுக்கே உரித்தான வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாளை சிறைச்சாலையைத் தாண்டிய என்.ஜி.ஓ.பீ காலணியில்தான் ஹஸியின் வீடு இருக்கின்றது. வங்கியில் மேலாளராக பணிபுரிந்தாலும் இரண்டடுக்கு வீடாக பெரிதாகவே கட்டியிருந்தார் ஹஸியின் தந்தை. பாரம்பர்ய நலம் விசாரிப்புகளை முடித்துவிட்டு ஹஸியின் அறைக்குச் சென்றேன். என் உடன்பிறப்பு புதுப்பெண் ஹஸியின் கையில் மருதானி வைத்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”வாங்க சார். என் கல்யாணத்துக்கு கூட இவ்வளவு லேட்டாத்தான் வருவீங்களோ?”, கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்திடம் பேசிக் கொண்டிருந்தாள் ஹஸி.&lt;br /&gt;&lt;br /&gt;“அங்க போனேன், இங்க போனேன்னு கத விடுவான் பாரு. இவனுக்கு மட்டும் எப்படித்தான் இல்லாத எல்லாமே கரெக்ட்டா இந்த நேரத்துல வருமோ? எதாவது பொண்ணப் பாத்து இளிச்சிட்டே எங்கயாவது போயிட்டு வந்திருக்கும்”, அழுவுனி என்று நான் செல்லமாக அழைக்கு யாழினி அக்காவும் அவளது மருதானி வைக்கும் கருத்தோடு, என்னை வம்பிழுக்கும் கருமத்திலும் கண்ணாகவே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு எதுவுமே பதிலளிக்காமல் அமைதியாக கண்ணாடி அலமாரியிலிருந்த அந்த வெள்ளை தேவதை பொம்மையை பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா அமைதியா இருக்க?”, இம்முறை இருவருமே அவர்களது வேலைகளை தற்காலிமாக விட்டுவிட்டு என் பக்கம் திரும்பியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்... ஒன்னுமில்ல... வர்ற வழில அப்துல்ல பாத்தேன்”, அப்துல்தான் ஹஸியின் அன்பு கரங்களில் கைதாக போகும் பாவமான பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படி இருக்காரு என் ஆளு?”, எல்லா பெண்களுக்கும் இதே கேள்வியை எல்லாரிடமும் கேட்கவில்லையென்றால் தூக்கம் வராது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அவர நேர்ல பாத்திருக்கியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“பாத்ததில்லை. ஆனா ஃபோன்ல மணிக்கணக்கா பேசிப்போம்”, அவளையும் மீறிய ஒரு வெட்கம் அவளது முகத்தில் எட்டிப் பார்த்து மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“தப்பு பண்ணிட்ட ஹஸி... நீ அவர நேர்ல பாத்திருக்கனும்”, மிகவும் சோகமான தொனியிலேயே பேசிய என்னை கூர்மையாய் திரும்பிப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்? என்னாச்சு?”, என் அக்காத்தான் அக்கறையுடன் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்னுமில்ல... அவருக்கு லைட்டா...”, கைகளால் தலைக்கு அருகே வட்டமிட்டு, பைத்தியம் என்பதுபோல் பிரக்ஞை செய்தேன். இம்முறை இருவருமே கூர்மையாக கவனித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“பின்ன.... உன்ன போய் கல்யாணம் பண்ணிக்க போறாரே...”, நான் மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தேன். அவர்களிருவரும் என்னை ஒருமுறை முறைத்துவிட்டு மறுபடியும் மருதானி சித்திரத்தில் மூழ்கி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி ஹஸி... என்னைய கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி என்ன விட சுமாரான சாஃப்ட்வேர் இஞ்சினியர கல்யாணம் பண்ணிக்கப் போறியே... உனக்கே அநியாயமா இல்ல?  இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல... வெளில ஆட்டோல அருவாளோட அடியாட்களெல்லாம் ரெடியா இருக்காங்க. இங்கேயே ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம். எங்க அக்கா கூட சாட்சி கைநாட்டு போட ரெடியா இருக்கா.. கரெக்ட்டுத்தானேக்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;”உன்ன விட சுமாராவா? கொஞ்சம் ஒன் மொகரக்கட்டையையும் பாத்துக்கோ”, என்று அவள் பார்த்துக் கொண்டிருந்த அலங்கார நிலைக் கண்ணாடியை லேசாக என் பக்கம் திருப்பினாள். அதில் தெரிந்த அறைக் கதவு மெதுவாக திறந்து அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹஸிக்கா, உங்கள...”, மகிழ்ச்சியான முகபாவனைகள் பொருந்தியிருந்த அம்முகம் சற்றென ஆச்சர்ய தொனிக்கு மாறுபட்டு, முற்றிலும் புதுமையான மற்றொரு பாவனையையேற்றிவிட்டு, “நான் அப்புறமா வர்றேன்”, என்று மூடிய கதவின் இடுக்கில் ஓடி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மடிந்துகிடந்த பாதரசச்சுவர், அவள் நிழல்குடித்து உயிர்பெற்று நின்றது வெறும் பதினேழு நொடிகள்தான். என் பதினேழாயிரம் அணுக்களையும் அசைத்துப் பார்த்து என் இருத்தலின் சாத்தியத்தை கேள்விகுறியாக்கிக் கடந்துச் சென்றதும் அதே பதினேழு நொடிகள்தான். காரணம் ஏதுமின்றி தனக்குத்தானே சுற்றிக் கொள்ளும் கடிகார முள் எடுத்து வைத்த அப்பதினேழு அடிகளில் என் மனதில் பதிந்தவைகள்: அவள் மெய்தொட்டத் திமிரில் திரியும் வெளிர் ஆரஞ்சு நிற தாவணி, வண்ணம் தொலைத்துவிட்டு வானம் தேடியலைய, குறும்புப் புன்னகையில் நீல பாவாடை, திருடிய வண்ணத்தை பங்கு போட்டுக் கொண்ட, ஆள்காட்டி விரலளவே கைகள் வளர்ந்திருந்த ரவிக்கை, வெட்கத்தோடு அவளது தாவணிக்குள் பதுங்குக் கொண்டிருந்த ஒற்றைச் சங்கிலி, அச்சத்தோடு அவள் காது மடலை தொட்டுக் கொண்டிருந்த தொங்குக் காதணி, அவளது உதட்டு நிறத்தில் தோற்றுப் போன வெறுப்பில் மெலிதான உதட்டுச் சாயம், மையிடாமலேயே கருத்திருந்த விழியோரங்கள், வட்டமுமில்லாது, நீண்டதுமல்லாத வடிவான முகம், காற்றோடு குழைந்து கொண்டிருந்த கருங்கூந்தல், அவள் கூந்தலின் வாசத்தோடு, அதன் மணத்தையும் பரப்பிக் கொண்டிருந்த, அவள் பின் தலையோரத்தில் எட்டிப் பார்த்த மல்லிகைப் பூக்கோர்வை, இன்னும்... எனக்காகவே பிறந்தவள் என்பதால், வர்ணனைகள் இதோடு நிறுத்தப்படுகின்றன. வெள்ளை சுடிதார் மோகினியை அவசர அவசரமாய் வெளியேற்றிவிட்டு, அரியனையேறி மகுடம் சூட்டி தாவணி தேவதையென பதவிபிரமாணம் செய்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”யாரு ஹஸி அது?”, பல கணங்கள் கழித்து தெளிவடைந்தபின் ஹஸியிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா தம்பியாப்புள்ள இன்னும் வாய தொறக்கலையேன்னு பாத்தேன். அவதான் அஞ்சலி... நம்ம புண்ணியகோடி பொண்ணு”&lt;br /&gt;&lt;br /&gt;“புண்ணியகோடி பொண்ணா? அப்புறம் எப்படி அழகா இருக்கா??”, நான் அப்படி என்ன கேட்டேனென்று அவர்கள் இருவரும் என்னைப் பார்த்து முறைத்தார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹஸிக்கா...ஹஸிக்கா... எனக்கு கொஞ்சம் இண்ட்ரோ கொடுங்கக்கா.. ப்ளீஸ்க்கா...”, மெதுவாக ஒரு கோரிக்கையை வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹே நவீன்... எப்படி இருக்க? இப்பத்தான் அம்மாவ கீழ பாத்தேன். நீ இங்க இருக்கன்னு சொன்னாங்க. உடனே ஓடி வந்துட்டேன். என் கல்யாணத்துக்கெல்லாம் வராம போயிட்டீல்ல”, என்று வந்த வேகத்தில் பொறிந்துத் தள்ளினாள் கவிதா. கவியத்தை என்று நான் செல்லமாக அழைக்கும் கவிதா அத்தைக்கு இரண்டாண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடந்திருந்தது. நெல்லை உறவினர்களையே மறந்திருந்த பொழுது அவ்வபோது தொடர்புடன் இருந்தவள். காதல், பதிவு திருமணமென்று அவசரமாக நடைப்பெற்றதாலும், என் கல்லூரி தேர்வினாலும் அவளுடைய திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. தான் இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதுவா இப்ப முக்கியம் கவியத்த... இந்த அஞ்சலி இருக்கா இல்ல... அவ என்னைய மறந்திருப்பான்னு இந்த அழுவுனி சொல்லுது... நான் சான்ஸே இல்லைனு சொல்லிட்டு இருந்தேன். நீங்க சொல்லுங்கத்த, எது உண்மைன்னு?”, கிடைத்த வாய்ப்பில் என் அக்காவை ஊறுகாயாக்கி காயை நகர்த்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“புழுவுனி பண்டாரம் பொய் சொல்லுது அத்த” என்று என் அக்கா பேசி முடிக்கும் முன்னரே,&lt;br /&gt;&lt;br /&gt;”அடடா!! உன்னப் பாக்கத்தானே அவளும் இங்க வந்தா. நீதான் பெரிய இவனாட்டம் ஓவர் சீன் போட்டு கவனிக்காத மாதிரியே இருந்தன்னு சொன்னா” என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;‘உன்னப் பாக்கத்தானே அவளும் வந்தா’ என்று கவியத்தை கூறிய வார்த்தைகள் என்னுளிருந்த கம்பிளிப்புழுக்களனைத்தையும் குறை பிரசவத்தில் பட்டாம்பூச்சிகளாக்கி வயிற்றில் வட்டமிட வைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;“இரு... நான் அவள கூப்டுட்டு வாறேன்” என்று வேகமாக அறையை விட்டு வெளியேறி அதைவிட வேகமாக தாவணி தேவதையுடன் நடந்து வந்தாள் கவியத்தை. இதயத்தைத் தொட்டுப் பார்த்தேன். வேகமாகத்தான் துடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“நேத்தே கேட்டுட்டு இருந்தியே... நவீன்.. இவந்தான்” என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள் அத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;’நேற்றே தேடினாளா?’, பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சித்தி... ஹேண்ட்ஸம்மா ஒருத்தர காட்டுறேன்னு சொன்னீங்களே... எங்க?”, முதல் அறிமுகத்திலேயே அவளது குறும்புத்தனம் எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க பாருங்கடி... இவன் ஹேண்ட்ஸம்மா இல்லையாக்கும்? இவனுக்கென்ன கொறச்சல்? அஜித் குமார் மாதிரி எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான்...”, &lt;br /&gt;&lt;br /&gt;‘போதும் அத்த... இவுங்களே நம்மள ரொம்ப அசிங்கப்படுத்திடுவாங்க போலிருக்கே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இது ஷாலினிக்கு தெரியுமா? ஹே நவீன் மச்சான்... ஸாரி.. சும்மா விளையாண்டேன்.. டோண்ட் டேக் இட் சீரியஸ்”, சிறு வயதில அவள் என்னை மச்சான் என்றழைத்தது நினைவில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இட்ஸ் ஓகே!! ஏன் அதுக்காக ரொம்ப நேரமா முட்டிக்கால் போட்டே நிக்குற? கொஞ்சம் எழுந்திருச்சு நிக்குறது...”&lt;br /&gt;&lt;br /&gt;“வாங்க அமிதா பச்சன் சார்... ஆம்பளைங்க குட்ட ஆக்கங்கெட்ட மட்ட... பொம்பளைங்க குட்டை பிடி கொடுத்தாலும் கெடக்காதுன்னு எங்க ஊருல சொல்வாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;”ஹலோ!! நாங்கெல்லாம் ஆவரேஜ் ஹைட்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹே அஞ்சலி... என்ன இது?? மச்சான்னு கொஞ்சங்கூட மரியாத இல்லாம... நாள பின்ன அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம்...” என்று கவியத்தை சொன்ன நொடியில் அவளது முகத்தில் ஓர் வெட்கரேகை தோன்றி என் மொத்த ஜாதகத்தையும் பெயர்ச்சியில் கிடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னாது கல்யாணமா? அதுவும் இந்தப் பொண்ணையா? அதுக்கு பேசாம ஹஸிக்கா கல்யாணத்துக்கு சமையல் பண்ண வந்திருக்குற நம்ம அலிமா மாமிய நான் ரெண்டாந்தாரமா கட்டிப்பேன்”, இம்முறை அவளை சீண்ட நானே முந்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்!! இவரு பெரிய சித்தார்த். இவர கட்டிக்க மலேசியா வரைக்கும் பொண்ணுங்க கிவ் கட்டி நிக்கறாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“நீதானடா படத்துல வர்ற மாதிரி, ஊர்ல பொண்ணு ஒன்னு உனக்காகவே காத்துக்கிட்டு இருக்கனும்.. அப்படி இப்படின்னு பிட்ட போட்ட... அப்புறம் என்ன?”, என்று என் அக்காவும் அவள் பங்குக்கு சரியான நேரத்தில் கொடி பிடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சொன்னது அமைதியான பொண்ண”&lt;br /&gt;&lt;br /&gt;‘அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்’, ஹாரிஸின் இசையைத் தட்டி எழுப்பியவாறு சிணுங்கியது என் அலைப்பேசி. விழித்துப் பார்த்தேன். அதே சென்னை ரயில் நிலையம். வானம் ஒளி சிந்தத் துவங்கியிருந்தது. பாடலின் ஒவ்வொரு வரியும் அவளின் நினைவுகளை மீட்ட, மீண்டும் அவளது நினைவுகளில் தொலைந்து போகவே விரும்பியது மனம். விருப்பமில்லாமல் அலைப்பேசியில் துடித்துக் கொண்டிருந்த எண்ணைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-- தடங்கள் தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/3.html"&gt;-தடம் - 3&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-8729663641856465583?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/8729663641856465583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=8729663641856465583' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8729663641856465583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8729663641856465583'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/2.html' title='இருள் தடங்கள்... - 2'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-8562260578097963063</id><published>2008-10-05T22:10:00.006-04:00</published><updated>2009-03-28T13:39:33.002-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருள் தடங்கள்'/><title type='text'>இருள் தடங்கள்... - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOlxK3hSKWI/AAAAAAAAC9U/l7Hdzw5GhxQ/s1600-h/rail+tunnel1irul.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOlxK3hSKWI/AAAAAAAAC9U/l7Hdzw5GhxQ/s400/rail+tunnel1irul.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5253854871820577122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடைபயிலும் மழலையின் அழகான பருவத்தையொத்த இளங்காலை பொழுது. கறுப்பு வெள்ளை கண்ணீர் அஞ்சலி, ஸ்டாலின், ரயில்வே ஊழியர்கள் தேர்தல், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், காதலில் விழுந்தேன் என்று காகித உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் எழும்பூர் ரயில் நிலையம். மரித்துக் கொண்டிருந்த இருளில் வெள்ளைப் பரப்பி உயிர்த்தெழுந்துக் கொண்டிருந்தது நடைபாதை கடையின் கடுங்காப்பி ஆவி. தன் பயணத்தின் நடுவே எதிர்பட்டவர்களின் கன்னங்களில் அறைந்து புத்துணர்வு கொடுத்து முன்னேறிக் கொண்டேயிருந்தது குளிர்ந்த காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழகான தருணத்தில் காதலியோடு கைக்கோர்த்து பாதயாத்திரைச் சென்றால்?? காதல்... சுற்றத்தின் நிகழ்வுகளை மறக்கடிக்கச் செய்யும் காதல், பாதங்களில் பட்டு நசுங்கிய சாலையோர மலரினை கவனிக்கச் செய்யும். நிராகரித்து அலட்சியப்படுத்தப்பட்ட குப்பைகளை கூட அழகென்று கொண்டாடச் செய்யும். பயணச்சீட்டுத் துரும்பில்கூட காதலி பெயரெழுதி கவிதையென்று கண்ணதாசனின் அடைமொழியை தனதாக்கிக் கொள்ளச் செய்யும். தினசரிச் செய்திகளை கூட மெலிதான குரலிலேயே வாசிக்க வைக்கும். இப்படி பல பைத்தியக்காரத்தனங்களின் கோர்வைதான் காதல். தடை செய்யப்படாத ஒரே போதை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தெரிந்துவிடாதபடி காற்றோடு எங்கும் பரவிக் கிடக்கிறது காதல். தினத்தந்தியின் விளம்பர சுவரொட்டியைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் அந்த நடைமேடை கடைக்காரரிடம் காதல் இருக்கலாம். பயணிகளின் இருக்கையில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனிடம் காதல் இருக்கும். யாருமில்லாமலேயே புன்னகை, அடுத்த நொடியே காதல் வெளிப்பட்டுவிட்ட அச்சம், காதலின் காப்புரிமையுணர்வான வெட்கம், கண் மூடி வானம் பார்த்தல், எதையதையோ யோசித்தல் என்று மாறுபடும் பாவனைகளே காட்டிக் கொடுக்கும் அவனது காதலை.  அதோ அந்த மதில்சுவர் தாண்டி மிதிவண்டியில் சென்று கொண்டிருக்கும்.... &lt;br /&gt;&lt;br /&gt;நிற்க!! நாம் மறுபடியும் அந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்திருக்கும் இளைஞனுக்கே வருவோம். ஏனென்றால், அவந்தான் இந்தக் கதையின் நாயகன். அவனை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கின்றதா? நாந்தாங்க அவன். எடுத்த உடனேயே என்னைப் பற்றி நானே சொல்ல ஆரம்பித்தால், தற்பெருமை பிடித்தவனென்ற அவச்சொல் வருமென்பதால் இப்படி ஒரு அறிமுகம். :) &lt;br /&gt;&lt;br /&gt;சூரியனையே இது வரையில் பார்த்திராத நான் காலையிலேயே யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? மேஜர் சுந்தராஜன் நடையில் சொல்ல வேண்டுமென்றால், “Yes. You guessed it Right" "நீங்க யூகிச்சது நூத்துக்கு நூறு உண்மை”. சமீபத்தில் என் உலகில் தேவதையுயர்வு பெற்ற ஒரு மண்ணுலக மங்கைக்காகத்தான். மின்மினி. வெளிச்சமே அறிந்திறாத என் வானில், ஓர் மின்னல் கீற்றால் பலநூறு விண்விளக்குளை ஏற்றிச் சென்றவள். அவளுடன் காதல் வசப்பட்ட நாள் முதல் மடிந்து போனது என் விடியல் மட்டுமல்ல, என் இருத்தலின் நினைவுகளும்தான். இருளை அதிகமாய் நேசிக்க பழக்கியவள்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்துவிட்டப் பெருமழையொன்றின் அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இலைமுனை துளியை போல் அழகானது காதலை உணரும் தருணம். சிறப்பு நிகழ்வுகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் என் நாட்குறிப்பின் அன்றைய பக்கத்தில் பதிந்த எழுத்துக்கள் இன்னமும் என் நினைவின் விளிம்பில் நின்று சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உங்களுக்காக இன்னோரு முறை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;உணர்வை திருடும்&lt;br /&gt;ஈர்ப்பின் பட்டியலில்&lt;br /&gt;உச்சத்தில் இருக்கும்...&lt;br /&gt;மழை பொழுதும்,&lt;br /&gt;ரயில் பயணமும்...&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விரண்டுமே கைக்கோர்த்து வந்தும்&lt;br /&gt;ரசிக்கப் படாமலேயே கழிந்த இரவு...&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான தாயும்&lt;br /&gt;சண்டையிட்டே பழகிய&lt;br /&gt;சகோதரியும் அருகிலிருந்தும்...&lt;br /&gt;உறைந்துவிட்ட உறவொன்றைப்&lt;br /&gt;பிய்த்தெறிந்துவிட்டதுபோல் பெருவலியொன்று&lt;br /&gt;உடல் முழுவதும் பரவியிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு இத்தனைக் கொடுமையானதென்று&lt;br /&gt;இன்றுதான் உணர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விழிகளை உறுத்தாமல்&lt;br /&gt;மூடிய என் இமைகளுக்குள் எப்படியோ&lt;br /&gt;நுழைந்து விடும் அலிபாபி...&lt;br /&gt;&lt;br /&gt;வழங்குதலை மட்டுமே அறிந்திருந்த&lt;br /&gt;என்னை யாசகனாக்கும் வல்லமையை&lt;br /&gt;யாரவளுக்குத் தந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையென்று எதையதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். என் உணர்வுகளைப் போலவே வேகமாக ஓடிய ரயிலால், ஜன்னல் கம்பிகளில் மட்டுமே மிச்சமிருக்கிறது மழை. சேர்த்து வைத்த சில்லறைத் துளிகளை கொட்டி முடித்தக் களைப்பில் களைந்து நிற்கின்றன மேகங்கள். என்னைப் போலவே தனித்து விடப்பட்டிருந்த நிலவு, ஒடிந்து விழுந்த அவளது கண்ணாடி வளையலை நினைவு படுத்தியது. பொய்யென்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டிருந்த அது மெய்யென்று உறுதி செய்து கொண்டேன். ”எனக்கும் பிறந்துவிட்டது காதல்” என்று உலகிலுள்ள அனைத்து செவித்திரைகளும் கிழிபடுமளவிற்கு அசரீரி எழுப்ப வேண்டுமெனத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;“அணு அணுவாய்ச் சாவதென &lt;br /&gt;முடிவெடுத்த பின்&lt;br /&gt;காதல் சரியான தீர்வுதான்”&lt;font color="red"&gt;*&lt;/font&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை இப்படி புலம்ப விட்டவள் யார்? ஹஸியின் திருமணத்திற்காக நெல்லை சென்றபோதுதான் அவசரமாக நடந்து முடிந்தது அந்த விபத்துச் சடங்கு. ஹஸி... ஹஸீனா, என் அக்காவின் நெருங்கிய தோழி. எல்.கே.ஜி பயின்றபோது என் அக்காவுடன் சண்டையிட்டு பிரிந்துச் சென்றவள். என் அப்பாவின் பணி மாற்றத்தினால் பல ஊர்கள் சுற்றிவிட்டு சென்னை வந்து சேர்ந்தபோது மறுபடியும் கல்லூரியில் சந்தித்தார்கள். அன்றிலிருந்து இருவரும் இணைபிரியா தோழிகள். விடுதியில் வசித்து படித்தாலும், எங்கள் வீட்டில்தான் ஹஸி எப்பொழுதுமே இருப்பாள். என் உடன்பிறவா சகோதரி. அவளிடம் வம்பு செய்வதே என் முழுநேர பொழுதுபோக்கு. அவளது திருமணத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்பே என் அக்கா நெல்லை சென்றுவிட நானும் அம்மாவும் மட்டும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அங்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை ரயில் நிலையம். பல வருடங்களுக்கு முன்னால் பார்த்தது போலவே இருந்தது. வாலிப வயதென்பதால் முதலில் தேடியது நெல்லை பெண்களைத்தான். தாவணிப் பெண்களும், ஜீன்ஸ் நங்கைகளும் இல்லாத சுடிதார் சுந்தரிகளின் ஊர். செயற்கை ஒப்பனைகளற்ற இயற்கை அழகேந்திய தாரகைகளின் மத்தியில் அளவுகோல் கடந்த அழகான பெண்களை தேடி மேய்ந்துக் கொண்டிருந்த என் விழிகளின் மொத்தக் காட்சிகளையும் திருடி கொண்டு சற்றென ஒளி பரப்பி நடந்து கொண்டிருந்தாள் வெள்ளை சுடிதாரில் தேவதை வேடம் பூண்ட ஒருத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;-- தடங்கள் தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="red"&gt;*&lt;/font&gt; நன்றி: அறிவுமதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/2008/10/2.html"&gt;-தடம் - 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-8562260578097963063?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/8562260578097963063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=8562260578097963063' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8562260578097963063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/8562260578097963063'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/1.html' title='இருள் தடங்கள்... - 1'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOlxK3hSKWI/AAAAAAAAC9U/l7Hdzw5GhxQ/s72-c/rail+tunnel1irul.JPG' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-2546978834244100579</id><published>2008-10-01T10:01:00.002-04:00</published><updated>2008-10-01T10:23:06.421-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொண்டாட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>முதற்பிறையும் சில சுழற்வளையங்களும்...</title><content type='html'>அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOOHrTQtlmI/AAAAAAAAC7Q/3yxBqRSpzoM/s1600-h/eidMubarak.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOOHrTQtlmI/AAAAAAAAC7Q/3yxBqRSpzoM/s400/eidMubarak.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5252190768418625122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறிவியல் கணிப்புப்படி இன்றுதான் நோன்பு பெருநாள் என்று சென்ற வெள்ளியன்றே எங்கள் பள்ளியில் அறிவித்து விட்டார்கள். பெருநாள் தொழுகையோடு இன்றைய தினம் இனிதாகவே ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முறை நோன்பு வைத்தபோது, பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அழுது அடம்பிடித்து திறந்த நோன்பு, யாருமறியாமல் பாட்டி வாங்கி வைத்திருந்த இனிப்பை தின்றுவிட்டு தொடர்ந்த நோன்பு, நோன்புக் கஞ்சி, சர்பத், ரோஸ் மில்க், வடை, பஜ்ஜி, சமோசா, பழவகைகள், கடல்பாசி, கவுசை (நூடுல்ஸ் வகை) என்று நோன்புத் திறக்கும் நேரங்களை நினைவுப் படுத்தும் தின்பண்டங்கள், இரவு நேரங்களில் கள்ளன்களாக மாறி மரம், மாடி என்று ஏறி விளையாடிய கள்ளன் போலிஸ் விளையாட்டு, இருபத்தியேழாவது இரவன்று சிறப்புத் தொழுகையுடன் இலவச இணைப்பாக வரும் பூந்தி என்று அன்றைய நினைவுகளை அசைப் போடும் பொழுதுகளிலெல்லாம் ஒருவித புன்சிரிப்பு இதழோரத்தில் வடிந்து மனதை வருடிச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முறையாக நோன்பைக் கடினமாக உணர்ந்தது வீட்டை விட்டு பிரிந்து வந்திருந்த கல்லூரி முதலாமாண்டுதான். காலையில் நான்கு மணிக்கே எழுந்து, முந்தைய இரவில் பக்கத்து அறை நண்பனிடம் இரவல் வாங்கிய மிதிவண்டியில் ஒரு மூலையில் இருக்கும் எங்கள் விடுதியிலிருந்து இன்னொரு மூலையில் இருக்கும் சீனியர் ஒருவரின் அறைக்குச் சாப்பிடச் செல்லும் பொழுதுதான். மழைக்காலமென்பதால் குளிரோடு சில நேரங்களில் மழையும் வந்துத் தொல்லைக் கொடுக்கும். இருள் பயமும், நாய் பயமும் கூட அவ்வபோது தொற்றிக் கொள்ளும். கடுங்குளிரில் காஷ்மீர் எல்லையில் காவல்புரியும் போர்வீரனைப் போல் மனதில் உணர்ந்து தைரியத்தை வரவழைத்துச் செல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாமாண்டிலிருந்து உணவை வாங்கி வந்து வினியோகிக்கும் பொறுப்பு. கல்லூரியில் எப்பொழுதுமே பெண்களைக் கேலி செய்யும் கூட்டத்திலிருந்துப் பழக்கப்பட்ட நான், பெண்கள் விடுதி வாசலுக்குச் சென்று, நேரம் தாண்டி வருவதால் வாட்ச்மேனிடம் ஏச்சி வாங்கி, அங்குள்ள முஸ்லிம் பெண்களிடம் உணவைக் கொடுக்கும்போது, எங்கள் கூட்டத்திலிருந்த எவனாவது ஒருவனின் கண்ணில் பட்டு, அன்றைய தினம் அவர்களின் ஓட்டலுக்குள் அகப்பட்டுத் திரிந்தக் கடினமான காலமது. மூன்றாமாண்டில் ஜூனியர்கள் சிலர் மாட்ட அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தன்னார்வ ஓய்வு பெற்று விட்டேன். :))&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்த வரையில் எங்கு இருந்தாலும், பெருநாளுக்கு சொந்த ஊருக்குச் சென்று விடுவோம். பெருநாளுக்கு முந்தைய இரவு கூட்டாஞ்சோறு போன்று நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காசுப் போட்டு எதையாவது செய்வதும், இரவு முழுவதும் ஊர் சுற்றுவதும் வழக்கம். அதற்கு கட்சி சுற்றுவது என்று பெயருமுண்டு. நான்காம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் கட்சி சுற்றவே வீட்டில் அனுமதி கிடைத்தது. அன்று இரவு முழுவதும் ஊரிலிருக்கும் மூன்று பெரிய தெருவைச் சுற்றி வருவதும், தம் அடிப்பதும், சரவெடி கொளுத்துவதும், ஊர் பெரியவர்கள் சிலரின் பட்டப்பெயர்களை உரக்கக் கத்திவிட்டு ஓடி மறைவதுமென்று மிகவும் குதூகலமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு ஒரு பெரிய சடங்கொன்றும் நடைபெறும். வயதிற்கும், திறமைக்கும் ஏற்றவாறு திரளும் சிறுவர்களை மூன்றாகப் பிரிப்பார்கள். முதல் தரச் சிறுவர்கள் மிகவும் தைரியசாலியாகவும், மரம் ஏறுவதிலிருந்து வேகமாக ஓடுவது வரை திறமைசாலியாகவும் இருப்பார்கள். இரண்டாம் தரம் அவர்களை விட ஒருப்படி கீழ். மூன்றாவது தரமானவர்கள் சும்மா உப்புக்குச் சப்பு. இதிலிருந்து நான் எந்த தரமென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்கள் ஊரில் வீட்டிற்கு பின்புறத்தில் முள்வேலியமைத்து பனமர மட்டையிலான கதவொன்றை வைத்திருப்பார்கள். அதனை தட்டி என்றழைப்பார்கள். பெருநாளைக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாகவே பின்புறங்களை நோட்டமிட்டு தட்டிகளைத் தட்ட திட்டமிடுவார்கள். நடுநிசியைத் தாண்டிய பெருநாள் இரவு, முதல் இரண்டுத் தர சிறுவர்களிடையே சில குழுக்கள் அமைத்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திசைக்குச் செல்வார்கள். அந்த முதல் தர சிறுவர்கள் கத்திகளோடு தட்டிகளைத் தட்ட களத்தில் இறங்க, இரண்டாம் தர சிறுவர்கள் யாராவது வருகிறார்களா என்று கண்காணிப்பில் இறங்குவார்கள். மூன்றாவது ரகமானவர்கள ஊர் பெரியவர்களை திசைத் திறுப்பும் பொருட்டு, தெருவோடு சத்தமெழுப்பிச் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு திரட்டும் தட்டிகளை ஆற்றுக்குச் செல்லும் ஓரிடத்தில் சேகரிப்பார்கள். காலை இரண்டு மூன்று மணியளவில் அனைவரும் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு, அந்தத் தட்டிகளை எடுத்து வந்து ஆற்றுமேட்டின் நடுக்கரையில் வீடுபோலமைத்து, மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்துவார்கள். கொளுந்து விட்டெரியும் தீயைச் சுற்றி நின்று ஈரமான லுங்கிகளை உலர்த்திவிட்டு அப்படியே அங்கேயே உறங்கிப் போவோம். முதல் தரக் குழுவை அடையுமுன்பே, பாளையில் படிப்பு, பெரிய பையன் ஆனதுபோல் இறுமாப்பென்று, கட்சி சுற்றுவதில் ஈடுபாடற்றுப் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பெருநாளைக்கு ஊரில் உறவினர்கள் அனைவரும் வந்திருந்து கொண்டாடியிருப்பார்கள். அடுத்த முறை அம்மாவுக்கு தொலைப்பேசும்போது வழமைப்போல் அம்மாவும் 'எல்லாரும் வந்திருந்தாங்க. நீயும் நிஜாமும்தான் இல்ல. எப்போ வர்ற இந்தியாக்கு?' என்று வருத்தமாகக் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக அந்நிய உலகில் பெருநாள் கொண்டாடிய பொழுது, அப்பொழுது ஆரம்பித்த ஆங்கில பதிவொன்றில் எழுதிய கவிதை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;அன்று மட்டுமே கண்ணாமூச்சி ஆடும்&lt;br /&gt;நிலவைத் தேடி&lt;br /&gt;வானம் பார்க்கும்&lt;br /&gt;நிலத்தலைவன் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கண்டுபிடித்த களிப்பில்&lt;br /&gt;குழாய் ரேடியோவில்&lt;br /&gt;கூச்சலிட்டு அறிக்கைவிடும்&lt;br /&gt;ஊர்த்தலைவன் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டாஞ்சோறு காரணங்காட்டி&lt;br /&gt;கதிரவன் காணும் வரை&lt;br /&gt;தெருவெல்லாம் சுற்றித்திரிய&lt;br /&gt;அன்னையிடம் அனுமதி வாங்கும்&lt;br /&gt;சிறுவர்கள் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்தில் இருமுறை மட்டும்&lt;br /&gt;ஊர்சுற்றும்&lt;br /&gt;இளம்பெண்களின் இலவச ஊர்வலம்&lt;br /&gt;இம்முறை கிட்டவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தோடு கையில் பிடித்து&lt;br /&gt;விண்ணில் விட்டெறியும்&lt;br /&gt;அணுகுண்டு பட்டாசு இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பயமிழந்து கம்பி மத்தாப்பை&lt;br /&gt;கையில் வைத்து ஆடும்&lt;br /&gt;சிறுமிகள் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;சில வீடுகளில் மட்டும்&lt;br /&gt;சிணுங்கும்&lt;br /&gt;சீரியல் விளக்குகள் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கட்ட பீடிகளும்&lt;br /&gt;பஞ்சு சிகரெட்டுகளும்&lt;br /&gt;மோப்பங்கொள்ளும் மோகம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை கசாப்புக் கடையில்&lt;br /&gt;பதிவுச் செய்யும்&lt;br /&gt;கூட்டம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;தாமிரபரணியில் கால்கூட&lt;br /&gt;நனைய முடியாத ஆழத்தில்&lt;br /&gt;தலை நனைக்கும்&lt;br /&gt;குதூகலம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாடை அணியும்போது&lt;br /&gt;புத்துயிர் பெற்றதுபோல்&lt;br /&gt;புது உலக பேரின்பம்&lt;br /&gt;இங்கில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;விரிசல்கள் பலயிருந்தும்&lt;br /&gt;புதுவீட்டில் ஒன்றுகூடும்&lt;br /&gt;உறவினர்கள் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பணம்பல சம்பாதித்தும்&lt;br /&gt;பாட்டியின் பெருநாள் காசு&lt;br /&gt;வாங்கும் மகிழ்ச்சி&lt;br /&gt;இன்றில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமென்றதுமே&lt;br /&gt;நினைவில் வரும்&lt;br /&gt;பிரியாணி இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;வெகு தொலைவில் ஓர் நோன்புப் பெருநாள்...&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வாசித்த அன்றே நண்பன் ஒருவன், "சம்பாதிக்கனும்னு இங்க வந்திடுறது... அப்புறம் அது இல்ல... இது இல்லன்னு சீன் போட வேண்டியது" என்று கூறினான். அதனால், எனக்கு இன்று இங்கு கொண்டாடிய பெருநாளில் எந்தவித வருத்தமும் இல்லையென்று பொய்யாகக் கூறி விடைப் பெற்றுக் கொள்கிறேன். :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-2546978834244100579?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/2546978834244100579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=2546978834244100579' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2546978834244100579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2546978834244100579'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/10/blog-post.html' title='முதற்பிறையும் சில சுழற்வளையங்களும்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SOOHrTQtlmI/AAAAAAAAC7Q/3yxBqRSpzoM/s72-c/eidMubarak.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-1113130362410459696</id><published>2008-08-27T23:52:00.003-04:00</published><updated>2009-03-28T13:39:33.003-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கிழிபடக் காத்திருக்கும் மௌனங்கள்...</title><content type='html'>வெறித்த வானில், இருள் குடித்துக் கருத்த மேகங்கள் சூழ்ந்து, சினந்தணிக்கும் பெருமழையொன்றின் ஆதியை அடையாளமிட்டுக் கொண்டிருந்தன. பொய்த்துப் போகுமென்ற இறுமாப்பில், துவங்கி விட்டிருந்தது என் பயணம். மெல்லிய வருடலில் மேனி சிலிர்த்தக் காற்று, வாகன விசையின் வளர்வால் தன்மை சிதைந்து, சகிக்கும் நிலைதாண்டிய குளிரூட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்திசையில் பயணப்பட்டிருந்த பறவை தன் குஞ்சுகளுக்கான இரையை தொண்டையில் நிரப்பியவாறு பறந்திருக்கக் கூடும். சாலையோரங்களில் முளைத்திருக்கும் கமபங்களின் உச்சியில், ஒளியடைத்தக் கூடுகள் ஒன்றொன்றாய் உயிர் பெற எத்தனித்துக் கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;வருமுன்பே மண் கிளறி, மணம் பரப்பும் வித்தையை எப்படியோ கற்றுக் கொண்டிருக்கிறது மழை. பூமி மேல் மையல் கொண்டு, பொறியமைத்து சடசடவென தரையிறங்கின வெள்ளை துகள்கள். சாபல்யமடைந்த மகிழ்ச்சியில், அனுமதியின்றி என் எல்லைத்தாண்டி ஊடுருவிக் கொண்டிருந்தது, ஆவியாய் அலைந்தொழிந்த நீர். செறுக்கேறிய அனுக்களனைத்தும் உந்த, கைகளுக்குள் வசப்பட்ட வாகனக் கடிவாளத்தை முறுக்கி, செங்குத்து மழையை கீறிச் சென்றேன். மழைகண்ட மயக்கத்தில், சீறிப் பாயும் துளிகளை கம்பி மத்தாப்பென கைகளுக்குள் அடக்க முனைந்தச் சிறுவனொருவன், கணப்பொழுதில் வீதியின் குறுக்கே குதித்தாட, கால்களின் அழுத்தத்தில் வாகன சக்கரங்கள் கிறீச்சென்று தார்சாலையில் சிராய்த்து முழுவதுமாய் வலுவிழந்து சுழன்று நின்றன. விறைத்து நின்ற ஆணவம் செத்தொழிந்த அத்தருணத்தில், ஏங்கித் தவித்தது ஓர் மழை குடைக்காய். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLYhSNuvdpI/AAAAAAAAC1I/mAI3VLYSEmU/s1600-h/umbrella.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLYhSNuvdpI/AAAAAAAAC1I/mAI3VLYSEmU/s320/umbrella.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239411813299222162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வீதியோரமாய் வண்டியை கிடத்திவிட்டு, இதுவரையில் அந்நியமாய் இருந்த, மழை கொப்பளித்த மனிதர்கள் பிதுங்கி வழியும் பழைய பேருந்து நிறுத்தமொன்றில் தஞ்சமடைந்தேன். மழைநீரில் நசநசத்த சதைகளின் உரசலில் எரிச்சலுற்று, எச்சில் தெறித்து, மொழியின் தீண்டாமை வார்த்தைகள்கொண்டு மொத்த காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக் கொண்டேன். மனிதன் என்ற ரத்தமும் சதையுமான கூடுகளின் ஆக்கிரமிப்புகளால், அனாதையாக்கப் பட்டிருந்தது, நிறுத்த விளிம்பில் தேங்கி வடியும் வீழ்ச்சியில் நனைந்துக் கொண்டிருக்கும் கறுப்பு நிற தெரு நாயொன்று. சிதறிக் கிடந்த மௌனங்களனைத்தையும் நிரப்பியவாறு பேரிரைச்சலை உண்டாக்கிய மழையின் வன்மம் ஏறிக்கொண்டே சென்றது. நிறுத்தத்தின் ஓரத்தில் திறந்திருந்த கால்வாயில் விரைந்தோடிய கழிவுநீரை கண்ட பொழுதில், பெரு வலியொன்று என் தலைக்குள் இறங்கியது. கழுத்தின் இரு பக்கமும் பிளந்து செதில்கள் முளைக்க ஆரம்பித்திருந்தன. விரல்களின் இடைவெளியில், மெல்லிய தோள் போன்றதொன்றும், சிறிது சிறிதாக வளரத் துவங்கியது. யாருமற்றப் பாலைவன மணற்பரப்பில், துளைகளிட்டுப் பாய்ந்தோடிய கழிவுநீரில், றெக்கைகளுடைய இரு ஆண் தேவதைகள் என் கரங்களைப் பற்றி இழுத்துத் தூக்கியெறிய முன்னேறிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"மழை விடாது போலிருக்குதே"&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்திலும் இலயித்திருந்த தனிமையை இலாவகமாகப் பறித்தன காற்றில் கலந்து வந்த வார்த்தைகள். மேல்சட்டையேதுமின்றி, பழுப்பேறிய மங்கலான லுங்கியில், என் பதிலுக்காய் எதிர்பார்த்தபடி அருகில் நின்று கொண்டிருந்த, நரையும், தோள் சுருக்கமுமாயிருந்த பெரியவர். சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து உறுதிச் செய்தபின், வெறும் புன்னகையொன்றை மட்டும் அவருக்கு பதிலாகத் தந்தேன். அப்பொழுதுதான் அவதானித்தேன், அடுத்த முனையில் அடர் மஞ்சள் நிற சுடிதாரில் குடையையும், லேசாக நனைந்து விட்டக் கூந்தலையும் உலர்த்திக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை. நல்ல வேளை!! வடுவேற்றிய சில நிகழ்வுகளால் சோர்வற்றிருந்தது என் வஞ்சகம். இல்லையேல், என் விழி துவாரங்களிலிருந்து குரூரமான பார்வையொன்று கண்ணாடி துளைத்து நீண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சபலமடைந்த மழை துளியொன்று அவள் காது மடலிலேயோ, அல்லது வலது புற கழுத்துப் பகுதியிலேயோ விழுந்திருக்க வேண்டும். அண்ணாந்து பார்த்துவிட்டு சில சதுர அடிகள் உட்புறமாய் இடம்பெயந்து விட்டிருந்தாள். நெரிசல் அதிகமாகிவிட்டிருந்த அவகாசத்தில், அவளது இருப்பிடம் நகர்ந்து  என் மிக அருகில் வந்திருந்தது. உயிர் விழுங்கிய கிடங்கொன்றின் ஆழத்தில் புதைந்திருக்கும் வார்த்தைகளை தேடியெடுத்து அவளுக்கான கவிதையை புனைய முனைந்துத் தோற்கடிக்கப்பட்டதன் அவமானத்தை என் சுயமன்றி யாரும் அறிந்திருக்க இயலாது. சற்றே பருமனான அவளுக்குத் திருமணம் கூட ஆகியிருக்கலாம். வெற்றிடமாய் நிலைத்திருந்த மௌனங்கள் உடைபடக் காத்திருந்த பொழுதுகளும் ஏமாற்றத்தின் விளிம்பில் உறைந்து கிடந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;சலித்துவிட்ட மழை வீரியம் குறைந்தத் தூறலாய் மாறிவிட, ஒவ்வொருவராய் களைந்துச் சென்றனர், அவள் உட்பட. அவசரமாய் உமிழ்ந்து முடித்த மழை எதையுமே சாதித்திடவில்லை, முழுவதுமாய் பிய்த்தெறிந்து விட்டதாய் நம்பப்பட்ட அவளுடனான முந்தைய மழைகால நினைவுகளைக் கிளறியதை தவிர...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-1113130362410459696?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/1113130362410459696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=1113130362410459696' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/1113130362410459696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/1113130362410459696'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_27.html' title='கிழிபடக் காத்திருக்கும் மௌனங்கள்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLYhSNuvdpI/AAAAAAAAC1I/mAI3VLYSEmU/s72-c/umbrella.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-5857889330649046421</id><published>2008-08-26T21:22:00.002-04:00</published><updated>2008-08-27T00:43:52.373-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலித் தொடர்'/><title type='text'>மாட்டிகினியா??</title><content type='html'>பாட்டி வட சுட்ட காலத்துல இருந்தே, இந்த மாட்டிவிடுதல்... அல்லது தொடர்விளையாட்டு தொடர்ந்துகிட்டேதான் இருக்குதுங்க. தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் ட்ரீட் கொடுக்குற காலேஜ் பசங்க மாதிரி, பக்கத்து தெரு பன்னீர் செல்வம் டிக்கட்டு வாங்குனதுக்கு கூட ஒரு ஃப்ளாஸ்பேக்க ஓட்டி, ஒரு தொடர ஆரம்பிச்சு விட்டுறுவாங்க. ஆரம்பிக்கிறது மட்டுமில்லாம, அதுல அஜ்சு பேர மாட்டி விடனும்னு ரெண்டு மூனு ரூல்ஸ வேற போட்டுறுவாங்க. நல்ல வேள, மெயில் ஃபார்வேர்ட்ல வர்ற மாதிரி, நீங்க மட்டும் நாலு பேர மாட்டி விடலேனா, ரத்த வாந்தி எடுத்து செத்து போவீங்கன்னு மயில்சாமி மெரட்டல விடுறதில்ல. ஆனா பாருங்க, அப்படி ஆரம்பிக்கிற தொடர் விளையாட்டு சில நேரங்கள்ல லட்டர் கொடுத்ததுக்காக மாட்டி விட்ட அஞ்சாப்பு அனிதா மண்டைல அவளுக்கே தெரியாம கும்முன்னு ஒரு குட்டு விட்ட வீர பிரதாப நினைவுகள எல்லாம் கெளறி விட்டு சுவாரஷ்யமாக்கிடும். அப்படி ஆட்டோகிராஃப ஓடவிட்டது திண்ணை பத்துன சங்கிலி தொடர்தான். (அடப்பாவி.. அத ஆரம்பிச்ச தல &lt;a href="http://blog.balabharathi.net/"&gt;பாலபாரதி&lt;/a&gt;யோட பேரனே இப்ப பதிவெழுத ஆரம்பிச்சிட்டானே.. இப்பத்தான் அத எழுதுறியா?னெல்லாம் கேக்கப்படாது)&lt;br /&gt;&lt;br /&gt;சில பல மாதங்களுக்கு முன்ன நாவலாசிரியை &lt;a href="http://imsaiarasi.blogspot.com/"&gt;இம்சையரசி &lt;/a&gt;திண்ணைய பத்தி எழுதுறதுக்கு என்னைய அழைச்சிருந்தாங்க. (இவிங்க கொழந்தையா இருக்கும்போது ரெண்டு நாவல ரீலீஸ் பண்ணிட்டு நாவலாசிரியைனு ஒரு பெயர வாங்கி வச்சிக்கிட்டாங்க. இப்ப கல்யாணம் ஆகி ஆண்ட்டி ஆனதுக்கப்புறமும் இன்னமும் ஒரு நாவல் கூட எழுதாம மொக்க பதிவ போட்டுக்கிட்டு இருக்குற அவுங்களுக்கு தமிழ் பதிவுலக வாசகர்கள் சார்புல கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்). முதல்ல திண்ணைய பத்தி யோசிக்கும்போது, பாளையங்கோட்டைல இருந்தப்ப, எங்க வீட்டு திண்ணைல புக்க எடுத்து வச்சி, எதிர்த்த வீட்டு சிட்டுக்கு நூல் விட்ட மேட்டரெல்லாம் அப்படியே பெரிய கண்ணாடி போட்டுக்கிட்டு, 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே'னு சேரனா மாத்திடிச்சு. அப்புறமா, திண்ணை தலைப்புல ஒரு கதைதான் எழுதலாம்னு நெனச்சிட்டு இருந்தேன். அந்த கதைய கற்பனை செஞ்சு, உருவங்கொடுக்கும்போது, ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் கொங்கராயகுறிச்சியாயிடிச்சு. அதனால பதிவாவே போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'முல்லைக்கும் தேருக்கும் உண்டான தொடர்பு, எனக்கும் திண்ணைக்கும் உண்டான தொடர்பு'ன்னு தசாவாதார நம்பி லெவெலுக்கு பிரம்மாண்டமா ஆரம்பிக்கலாம்னு நெனச்சாலும், இப்ப சோழனா இருக்குறது வெறும் நினைவுகள் மட்டும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊருல கிட்டத்தட்ட எல்லா வீட்டுளையும் திண்ணை இருக்கும். திண்ணைன உடனேயே முதல்ல தோன்றது 'கல்லா? மண்ணா?'ங்குற ஒரு விளையாட்டுத்தான். தாமிரபரணி கரையோரம்ங்றதுனால, தெருவெல்லாம் ஆத்து மணல்தான். ஒருத்தன் ஆடி வருவான். அவன் மண்ணுல நிக்கனும். மத்தவங்கெல்லாம் கல்லாகிய திண்ணைல நிப்பாங்க. ஒரு வீட்டு திண்ணைல இருந்து இன்னொரு வீட்டு திண்ணைக்கு மாறி ஆடி வர்றவன அலைகழிக்கனும். அப்படி மாறும்போது அவன் தொட்டுட்டான்னா, அவுங்க அடுத்தது ஆடி வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட எல்லா வீட்டு முன்னாலையும் ஒரு வேப்ப மரமோ, அல்லது ஒரு பூச மரமோ இருக்கும். (இந்த இலைய சுருட்டி ஊதில்லாம் செய்வாங்களே.... அந்த மரம்.. எங்க ஊர்ல பூச மரம்னுதான் சொல்வாங்க) அப்பெல்லாம், இரவு உணவ வீட்ல எல்லாரும் சேந்து ஒன்னா முடிச்சிட்டு, திண்ணைல காத்து வாங்கிட்டே எதையாவது பத்தி பேசிட்டு இருப்போம். இரவு சாப்டுட்டு நேரா போய் தூங்க கூடாதுன்னு எங்க அப்பா, வீட்டு திண்ணையிலேயே லாந்திட்டே இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLSpmdZa1GI/AAAAAAAAC04/5yLl-IgknjM/s1600-h/untitled.bmp.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLSpmdZa1GI/AAAAAAAAC04/5yLl-IgknjM/s400/untitled.bmp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5238998744730096738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்க ஊருல இருக்கும்போதும், இப்ப எப்போ ஊருக்கு போனாலும், எங்க வீட்டு திண்ணைய விட, அதே ஊர்ல பக்கத்து தெருல இருக்குற எங்க தாத்தாவோட வீட்டு திண்ணைதான் கள கட்டும். அஞ்சு தலைமுறைய கடந்த அந்த வீடு 1926ல கட்டப்பட்டது. முன்ன தாமிரபரணி ஆத்துல இருந்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து நெறைய வீடு அழிஞ்சு போனதால, தெரு தரை மட்டத்துல இருந்து உயர்த்தி கட்டிருப்பாங்க. பர்மால வியாபாரம் பாத்துக்கிட்டு இருந்த எங்க தாத்தாக்கு அப்பா, அங்க இருந்தே பர்மா தேக்குகள இறக்குமதி பண்ணி கும்முன்னு கட்டுன கட்ட குத்துன வீடு அது. அப்படியே ஒரு மதில எழுப்பி, அதுக்குள்ள ஒரு விளையாட்டு திடல், (அங்கத்தான் நாங்க கிரிக்கெட் விளையாடுவோம்:)), அதுக்கப்புறம் பெரிய திண்ணைன்னு வீட்டு கட்டமைப்பு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பாட்டி இருந்த வரைக்கும், அதே திண்ணைலத்தான் எப்பவுமே உக்காந்திருப்பாங்க. யாராவது வந்து அதே திண்ணைல உக்காந்து அவுங்களோட பேசிட்டே இருப்பாங்க. நோன்பு சமயத்துலலாம் நெறய தானம் வாங்குறவங்க வர்றதுனால, நாலனா, எட்டனா னு சில்லறையும், ஒரு ருபாய் முதல் அஞ்சு ருபாய் வரைக்கும் சலவை தாளா வங்கில இருந்து வாங்கி வச்சி தானம் பண்ணிட்டு இருப்பாங்க. பெருநா வந்தா செம கொண்டாட்டம். எல்லா ஊர்ல இருந்தும் சொந்தகாரங்க வந்திருவாங்க. அப்பா கூட பொறந்தவங்க எட்டு பேருங்றதால ரொம்ப பெரிய குடும்பம். மொத்தமா பிரியாணியோ, அல்லது நெய் சோறோ செஞ்சி ஊர் பந்தியா எங்க குடும்ப மக்களே உக்காந்து தாளால (தாம்பூலத் தட்டு) சாப்டுவோம். வீட்டு முன்ன இருக்குற மரத்துல கயிறு கட்டி ஊஞ்சல் போட்டு, திண்ணைல இருந்துதான் அதுக்கு போர்டிங்கெல்லாம். அந்த ஊஞ்சல்கள்ல தலைகீழா ஆடி, போருல எக்கச்சக்கமா விழுப்புன் வாங்குன பழுவேட்டரையர் காய எண்ணிக்கைய மிஞ்சுற அளவுக்கு ரத்தம் பாத்திருக்கோம். கம்பி மத்தாப்பு, சரவெடி, இன்ன பிற விழாகால ஐட்டங்களெல்லாம் அதே திண்ணைலதான் நடந்தேறும். விஜய காந்த், டி.ஆர் அவதாரமெடுத்து, 'உன் பேரு முத்து... வாங்கிக்கடா குத்து'ன்னு டையலாக் விட்டுக்கிட்டே சண்டை போட்டதும் அந்த திண்ணைய ஒட்டிய மதில் சுவருக்குள்ளதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேலி, கிண்டல், விசாரிப்பு, விளையாட்டு, அழுகை, சிரிப்பு, கோபம், சண்டை னு எக்கச்சக்கமா இன்னமும் சுமந்துட்டு இருக்குற திண்ணை, இப்போ யாருமே இல்லாம வெறிச்சோடி, யாருக்காகவோ காத்துக்கிட்டு இருக்குது :((&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;டேய் ஜி... உணர்ச்சிவசத்த அடக்கு... செண்டிமெண்ட்ட கட்டுபடுத்து... அப்பத்தான் உனக்கு நல்லது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் விளையாட்டுக்கு ரெண்டு பேர மாட்டி விடனுமாம்ல...&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாக் எழுதுறேன் பேர்வழின்னு மூச்சுக்கு முன்னூறு தடவ பின்னூட்டம், பின்னவீனத்துவம்னு பேசிட்டு திரியறதா என்னைய இது நாள் வரைக்கும் கலாய்ச்சிட்டு இருந்த எங்க செட்ல சமீபத்துல சிக்குன இன்னொருத்தன், தமிழ் பதிவுலகத்துக்கு புதுசா காலடி எடுத்து வச்சிருக்குற அன்பு நண்பன் &lt;a href="http://vettivaarthaikal.blogspot.com/"&gt;ShadowLord &lt;/a&gt;என்ற சக்தி கணேஷை இந்த தொடர் விளையாட்டில் மாட்டி விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்னொருத்தன்... நாங்க வேலைக்கு சேந்த புதுசுல கடல போட்டுக்கிட்டு திரிஞ்ச நம்ம தமிழ்நாட்டு பசங்கள வாய பொளந்து பாத்துக்கிட்டு இருந்தோம். அதுல முன்னணில முந்திக்கிட்டு நின்னு, இப்ப காதல் தொடர வேற எழுதிக்கிட்டு இருக்குற &lt;a href="http://blogmurug.blogspot.com/"&gt;Murugs &lt;/a&gt;என்ற முருகானந்தத்தையும் இந்த விளையாட்டுல மாட்டி விட்டுக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது A to Z தொடர்... &lt;a href="http://tamil-naanal.blogspot.com/"&gt;நாணல்&lt;/a&gt; அவர்களும், &lt;a href="http://maharajarasigan.blogspot.com/"&gt;மஹாராஜா &lt;/a&gt;அவர்களும் இந்த விளையாட்டுக்கு என்னைய கூப்டிருந்தாங்க. அவுங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;www.aa.com - ஹி.. ஹி.. சும்மா நம்பர்க்கு :))&lt;br /&gt;www.blogger.com&lt;br /&gt;www.bankofamerica.com&lt;br /&gt;www.cruncyroll.com - கொரிய திரைப்படம் பார்க்க :))&lt;br /&gt;www.google.com - All google sites&lt;br /&gt;www.imdb.com&lt;br /&gt;www.indiaglitz.com&lt;br /&gt;www.londontamilvideo.com&lt;br /&gt;www.ovguide.com - online video guide&lt;br /&gt;tubetamil, techsatish&lt;br /&gt;ta.wiktionary.com, ta.wikipedia.com etc&lt;br /&gt;youtube, yahoo&lt;br /&gt;&lt;br /&gt;;குறைந்தபட்சம் ஒரு தடவையாவது நீ கட்டுடைச்சுக் காட்டுடா'னு பதிவுலக நண்பர் ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருந்தாரு. அதனால, இந்த தொடர் விளையாட்டோட விதிய கட்டுடைச்சு யாரையும் மாட்டி விடாம விட்டுடுறேன். :))&lt;br /&gt;&lt;br /&gt;------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் &lt;a href="http://vettivambu.blogspot.com/"&gt;விஜய்&lt;/a&gt;, என்னைய அவரோட நண்பரா ஏத்துக்கிட்டு, 'எல்லையற்ற பதிவுலக நட்பு' என்ற விருதை வழங்கிருக்கார். அவருக்கும் ஒரு நன்றிய சொல்லிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLSsgjTRzvI/AAAAAAAAC1A/aGCymRCfLR8/s1600-h/Award.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLSsgjTRzvI/AAAAAAAAC1A/aGCymRCfLR8/s320/Award.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5239001941770620658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பதிவெழுத துவங்கிய இந்த இரண்டு ஆண்டுகளில், இறைவனின் அருளால் பதிவையும் தாண்டிய குடும்பத்தினராகவும், நெறுங்கிய நண்பனாகவும், சகோதரனாகவும் பார்த்து, எனது நட்பு வட்டத்தின் விட்டத்தை எண்ணிலடங்காதவண்ணம் செய்த அனைத்து தோழர் தோழிகளுக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: தலைப்ப பாத்த உடனேயே, ஏதோ நற்செய்தி என்ற போர்வையில் வரும் வாரண்ட்டுக்கான அழைப்பிதழ்னு நெனச்சவங்களுக்கு... இப்பெல்லாம் &lt;a href="http://thamira-pulampalkal.blogspot.com/"&gt;தாமிரா&lt;/a&gt;வோட ஒரு பதிவையும் மிஸ் பண்ணாம படிச்சிட்டு இருக்கோம்ல :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-5857889330649046421?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/5857889330649046421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=5857889330649046421' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5857889330649046421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/5857889330649046421'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_26.html' title='மாட்டிகினியா??'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SLSpmdZa1GI/AAAAAAAAC04/5yLl-IgknjM/s72-c/untitled.bmp.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-4655450703846526266</id><published>2008-08-24T18:24:00.006-04:00</published><updated>2009-03-28T13:39:33.003-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>அவள் பெயர் அனன்யா!!!</title><content type='html'>அந்தி சாயும் முன்பே, ஒளி தொலைக்கும் அமெரிக்க பனிகால மாலை.  விமான விபத்தில் தப்பி பிழைப்பதைப் பற்றிய பாதுகாப்பு அறிவிப்பு ஒத்திகைகளை, செயற்கை புன்னகையோடு செய்து காட்டி கொண்டிருந்த விமான பணிப்பெண்ணை அனைவருமே அலட்சியபடுத்தி ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். திரும்பி பார்க்கையில் என் பிந்தைய இருக்கையில் மட்டும் சிறுமியொருத்தி மிகவும் ஆர்வமுடன் அதனை பார்க்க தலையை தூக்கி எத்தனித்துக் கொண்டிருந்தாள். எதிர்பார்ப்புகளை தோற்கடித்த சினத்தில், பெருநகர பேருந்தின் இருக்கையை விட மிக குறுகிய பரப்பளவில் என்னை இருத்திய விமான இருக்கையை மனதிற்குள் சாடினேன். வேறுபாடு களையும் உறுதிமொழியை எப்பொழுதோ விதைத்திருந்தாலும், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த கறுப்பு நிற இனத்தைச் சேர்ந்தவனை பார்த்தவுடனேயே என்னுள் பற்றி கொண்ட பயத்தை ஏனோ போக்க முடியவில்லை. சிதறிய கவனங்களை அவ்வபோது மீட்டு வந்தன, மின்னல் போல் விட்டு விட்டு எரிந்த ஓர் கம்பத்தின் உச்சியிலிருந்த சிகப்பு நிற மின்விளக்கும், கண்ணாடி மறைவிற்கு அப்பால் அடர்ந்த வெளிச்சத்தில் மட்டுமே பெய்து கொண்டிருந்த வெள்ளைச் சாரலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையமைத்து கொடுத்த எழிலோடு செயற்கை பொலிவும் சேர்ந்த, மேகத் திரளுக்கு நடுவே தெரியும் கடற்கரையோர நகர்புறத்தை திரையிட்டு காட்டி கொண்டிருந்தது இருக்கையோர கண்ணாடி. ஒரு நொடி நிலவுக்குச் சென்று சுழலும் பூமியினை நாற்காலிமேலமர்ந்து தேனீர் பருகியவாறே பார்வையிடும் ஆவலை மனதில் விதைத்துச் சென்றது விமானத்தின் ஏறுபயணம். நியூயார்க் நகர வானளாவிய கட்டடங்கள் சிறிது சிறிதாக திருவிழா கால தொடர் விளக்குகளாய் மாறி மறைய துவங்கிய வேளையில் விரிய தொடங்கின அவளது நினைவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பெயர் அனன்யா.  காலையில் எழுந்தவுடன் இரவு உடையிலேயே பால் வாங்க செல்லும் வழியில், குளித்து முடிந்த கூந்தல் களைந்து முன்னில் விழ, மும்முறமாக கோலமிடும் பெண்ணை போலவோ, அல்லது பேருந்து நிறுத்தத்தில் நொடிக்கொருமுறை கைகடிகாரத்தை பார்த்து பயந்தவண்ணமே, புத்தகங்களோடு நிற்கும் பெண்ணை போலவோ இருக்கும் மிக சாதாரண தமிழ் பெண்தான் அனன்யா. முதன்முறை அமெரிக்க மண்ணில் கால் பதித்த அன்று இறுகிய ஜீன்ஸும், மெல்லிய மஞ்சள் நிற டி-சர்ட், குளிரை சமாளிக்க கறுப்பு மேலாடையுமென என்னை வரவேற்க காத்திருந்தாள் விமான நிலைய வாயிலிலேயே. மணப்பெண் தோழியாக கூடவே வந்திருந்தது இதமான பனி மழையொன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;"Hi Dinesh... Ananya... How was the journey?", ஆறு மாதமாய் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், இன்னமும் அமெரிக்க கலப்பில்லாத இந்திய ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்தி கைகுலுக்கினாள். பணி நிமித்தமாக அமெரிக்கா வருவதை பற்றியும், தங்குவதற்கான ஏற்பாடுகளை பற்றியும் அதே அணியில் இருக்கும் அனன்யாவிற்கு இரண்டொருமுறை தொலைபேசியில் பேசியதுண்டு. குரலை வைத்து கற்பனை செய்த உருவத்தில், எப்படி ஒப்பிட்டுப் பார்த்தும் அவள் அடங்கவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பரிச்சயமில்லாத அந்நிய உலகில் எனக்கிருந்த ஒரே நட்பு அனன்யா மட்டும்தான். அலுவலகம் முதல் கடைவீதி வரைக்கும் காரில் அழைத்து போவதிலிருந்து, புதிதாக இணைந்த வேலையில் உதவி செய்வது வரை அவள்தான் எனக்கு வழிகாட்டியாக இருந்தாள். பெண் தோழிகள் விடயத்தில் மட்டும் எப்போதுமே தோற்றுப் போகும் என் அலைவரிசைக்கு ஒத்த நல்ல தோழியாக அனன்யா அமைந்தது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. காதலோ, காமமோ அல்லாத நட்பென்றாலும், எதிர்பால் உறவு வசீகரமானது என்பதனை உணர வைத்தது அவளோடு வாழ பயின்ற நாட்கள். வார இறுதிக்காக காத்திருந்த ஆரம்ப கால எதிர்பார்ப்புகள் தானாகவே தகர்ந்து, விடுமுறை நாட்களை வெறுக்குமளவிற்கு பழகிக் கொண்டது மனம். அவளில்லாத விடுமுறை தினங்கள் மட்டுமே என் நாட்குறிப்பில் வெற்று பக்கங்களாயின. அதற்கும் சிலமுறை விமோச்சனம் கிடைக்கும், சுற்றுலா என்ற பெயரில். &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வீக்-எண்ட் என்ன பண்றீங்க தினேஷ்? ஃபிஃப்டீன் மைல்ஸ்ல ஒரு லேக் இருக்காம். அதுக்கு போலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா?? இந்த வீக்-எண்ட் ட்ரிப் ஒன்னு போடலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் தினேஷ்... இந்த வீக்-எண்ட் மட்டும் ப்ளான் எதுவும் போடல... அப்புறம் இருக்குடா உனக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;உரிமையும் நெறுக்கமும் அதிகரித்து விட்ட காலப்போக்கில், மின்னஞ்சல் கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது எங்கள் நட்பின் பரிணாம வளர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;அவளது கார் விபத்துக்குள்ளான காரணத்தால் வாகன காப்பீடு அதிகரித்ததாலும், நான் புதிதாக கார் வாங்கிய காரணத்தாலும், தற்காலிக குடிப்பெயர்ச்சித்தானே என்ற அலட்சியப் போக்காலும், அவளது காரை விற்றுவிட்டு என்னுடைய வாகனத்திலேயே அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தாள். அது நடந்த சில தினங்களிலேயே, அவளோடு தங்கியிருந்த தெலுங்கு தேச பெண் அவளோடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிநடப்புச் செய்தாள். திட்டமிட்டபடி நடந்ததுபோல ஓர் வஞ்சகப் புன்னகை ஏனோ என் உதட்டில் வந்து போனதுக்கான காரணத்தை இன்னமும் என்னால் கண்டுகொள்ள இயலவில்லை. மன உளைச்சலில் திழைத்திருந்த அனன்யாவை போலியாய் சமாதானபடுத்தியது என் கைகள், அவள் தலை கோதியவாறே. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல், இரவு தூக்கத்தைத் தவிர ஏனைய கணங்கள் அவள் வீட்டிலேயே கழிந்தன. பேசுவதற்கு எதுவுமே இல்லையென்றாலும், எதையாவது பற்றி உரையாடுவதும், கைகளை முறுக்கி விளையாட்டாய் சண்டையிடுவதும், சிறு தவறுகளுக்கெல்லாம் செல்லமாய் கடிந்து கொள்வதும், இணையத்தின் உதவியால் புது புது உணவுகளை சமைத்து பரிசோதனை செய்வதும், தாய் தந்தையை பிரிந்து அயல்நாட்டில் வாழும் மக்களுக்கு அவ்வபோது தொற்றிக் கொள்ளும் மன விரக்தியைப் போக்க கரம்பற்றி, தோள்சாய்த்து, அரவணைப்பதுமென்று என் வாழ்நாளின் பொற்காலமாய் திகழ்ந்தன அவளுடனான பொழுதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கும் போலவே புலர்ந்திருந்த ஓர் நாளில்தான் அனன்யாவை தனியாக அழைத்து, அவள் எதிர்பார்த்தபடியே இன்னும் இரண்டு மாதத்தில் அவள் இந்தியா செல்ல வேண்டுமென்று கூறினார்கள். ஓராண்டுக்கு மேலாக வீட்டை விட்டு பிரிந்திருந்த அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்த செய்தியாதலால் அன்றிரவு எனக்கு மட்டும் ஓர் இந்திய உணவகத்தில் அவளது செலவில் பெரிய விருந்து. அவளோடு நானும் கொண்டாடினேன், என்னுடைய இதயம் மட்டும் ஓரத்தில் அழுது கொண்டிருந்ததை அறிந்தும் அறியாமல். &lt;br /&gt;&lt;br /&gt;உணவை முடித்துவிட்டு அவள் வீட்டிற்கு சென்று வழமைபோல் எதையதையோ பேசிக் கொண்டிருந்தோம். பெரிய சொகுசு இருக்கையில் என் தோள் உரசியபடி அமர்ந்திருந்த அனன்யா, திடிரென, என் தாடையைப் பற்றி இழுத்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். அதனை சற்றும் எதிர்பார்த்திராத நான், எதிர்வினை கொடுக்கவும் தெரியாமல், மௌனமாய் அவ்விடத்தைவிட்டு வேகமாய் சென்றுவிட்டேன். அன்றுமுதல் அலுவலக பயணத்தைத் தவிர மற்றைய நேரங்களில் அவளை முழுமையாக தவிர்த்திருந்தேன். அவளும் என்னிடம் எதுவுமே பேசவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவளது வீட்டில் அவளை விட்டுவிட்டு கிளம்புவதற்காக காரை நிறுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டுக்கு வா... காஃபி போடுறேன்", அவள் முன்புற கண்ணாடியைப் பார்த்தவாறே கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... எனக்கு வேலை இருக்குது... நாளைக்கு எயிட் தேர்ட்டிக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப நீ வரலேனா, அப்புறம் எப்பவுமே என்கிட்ட நீ பேச வேண்டாம்", அவளது வார்த்தைகள் தழுதழுத்திருந்தன. அவள் விழியோரத்தில் கண்ணீர் திரண்டு நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெருமூச்சு விட்டவாறே நான் பேச ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு அனன்யா... இந்த லவ்லாம் உங்க வீட்லையும் ஒத்துக்க மாட்டாங்க... எங்க வீட்லையும் ஒத்துக்க மாட்டாங்க... ஒரே ரிலிஜியன்னா கூட பரவாயில்ல... ப்ளஸ்... உன் மேல... "&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன நான் லவ் பண்றேன்னு சொன்னனா?", மிகவும் கோபத்தோடு என்னை முறைத்தபடி அவள் கூறியதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அன்னைக்கு நடந்ததுக்கு ஸாரி... எனக்கு அன்னைக்கு திடீர்னு அப்படி தோனிச்சு. அதான் அப்படி பண்ணிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன். ப்ராமிஸ்... ப்ளீஸ் டா... இப்படி என்னோட பேசாம மட்டும் இருக்காதடா", அவளது அழுகை என்னுள் ஏதோ செய்தது. அவளுடன் வீடுநோக்கி நடக்கத் துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் தயார் செய்வதற்காக அவள் சமையலறைக்குள் சென்றாள். அவள் மீதான பார்வை சற்றே மாறுபடுவதை தடுப்பதற்கான எந்த முயற்சியும் நான் செய்யவில்லை. இது நாள் வரை அவளது வடிவத்தையும், கவர்ச்சியையும் மறைத்திருந்த நட்பு முழுவதுமாக களைந்து நிர்வாணமாகி நின்றது. தனிமையுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் என் அந்தரங்க கற்பனையை நிரப்பிக் கொண்டிருந்தாள் அவள். சமையலறையில் இருந்த அவளுக்கும், வரவேற்பறையில் இருந்த எனக்கும் இடையே வெறும் மௌனம் மட்டுமே நீண்ட நேரமாய் நிலவியது. சமையலறைக்குள் நுழைந்து, பின்புறமாக அவளை அணைத்து, கூந்தலை ஒதிக்கி, அவளது கழுத்துப் பகுதியில் ஓர் முத்தம் பதித்தேன். கண்களை மூடியவாறே பின்னால் திரும்பியவள் விட்ட மூச்சுக் காற்றின் வெப்பம் உடல் முழுவதும் ஒருவித உணர்வாய் பரவ, வேகமாய் இயங்க துவங்கியது இதயம். ஆங்காங்கே திட்டு திட்டாய் அப்பியிருந்த, காலையில் தடவிய உதட்டுச்சாயத்தையும் பொருட்படுத்தாமல், அவளது இதழ்களில் அழுத்தமாய் மற்றொரு முத்தம். தமிழ் திரைப்படங்களில் வருவதுபோல், அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கியதா என்பதனை நோட்டம் விட தோன்றவில்லை. சிறிது நேரத்திற்குள் வரைமுறை தாண்டிய எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய தவறொன்றை உணர்ந்தே செய்த குற்ற உணர்ச்சி சில நாட்கள் படர்ந்திருந்தாலும், மீண்டும் அடிக்கடி தொடர்ந்த எங்கள் உறவுமுறையில் வழமையாகிப் போனது குற்றமென்று நினைத்த அது. முன்பிருந்த அன்யோன்யம் மட்டும் இப்போது எங்களுக்குள் இல்லை. நட்பையும், காதலையும் விட காமமே எங்களுக்குண்டான உறவுமுறை என்று நாங்கள் சொல்லிக் கொள்ளாமலேயே தீர்மானித்துக் கொண்டோம். அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறியபோது கூட அன்றைய கூடல் வரை மட்டுமே நிலைத்திருந்தது அதற்கான வலி. அவள் ஊருக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே அவளை விட்டு பிரிய வேண்டுமென்பதற்காக வேறு நிறுவனத்தில் வேலை தேடி, வேலையும் கிடைத்தது. நான் வேலை தேடுவதையும், அவள் இந்தியா செல்வதனால் பொருட்கள் வாங்குவதையும் காரணங்காட்டி எங்களுக்குள்ளே ஓர் விரிசலை ஏற்படுத்திக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கிருந்து புதிய அலுவலகம் இருக்கும் சார்லட் கிளம்பும்போது வழியனுப்ப அவளும் விமான நிலையம் வந்திருந்தாள். பயண பெட்டிகளை கொடுத்து விட்டு, நுழைவு சீட்டையும் வாங்கியப்பின், பாதுகாவல் பரிசோதனைக்காக செல்லும் வரை எதுவுமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே!! நான் கெளம்புறேன்.", நானே மௌனம் களைந்து எழுந்து நின்றேன். அவள் விழியோரத்தில் கசிந்திருந்தது கண்ணீரோடு காதலும். &lt;br /&gt;&lt;br /&gt;'இதுதான் என்னோட கடைசி முத்தம்' என்று என்னை இறுக தழுவி அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னமும் என் உதட்டில் தங்கிக் கொண்டு என் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ திடிரென உருவெடுத்த பெரும் வலியொன்று என் உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது. அருகிலிருப்பவன் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக அவசரமாய் துடைத்துக் கொள்கிறேன், ஊற்றெடுத்தக் கண்ணீரை. அவள் முகம் மட்டுமே என் சிந்தனையில் பரவிக் கிடக்கின்றது. 'அவள் இல்லாமல் வாழ முடியாது' என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கிறது. ஊர் போய் சேர்ந்தவுடன் அவளை தொடர்பு கொண்டு என்னுடைய முடிவை சொல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டதும், இதமான ஓர் உணர்வு சட்டென்று படர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தரையிறங்கிய விமானத்திலிருந்து, பயண களைப்பில் சோம்பியிருந்த முகங்களுக்கு மத்தியில் நான் மட்டுமே புத்துணர்வோடு  தரையிறங்குவது போல் இருந்தது. நன்றி சொன்ன விமான பணிப்பெண்ணிற்கு ஓர் பரவச புன்னகையை உதிர்த்து வேகமாக என்னவளைத் தேடிச் சென்றேன். பயணப்பெட்டிகளை எடுக்கக் காத்திருந்த என் முதுகில் யாரோ தட்டுவது போல் இருந்தது. வரையறுக்கப்பட்ட தமிழக பெண்களின் அழகு அளவுகோலின் இரண்டாம் நிலையில் மதிக்கத்தக்க, குளிராடை போர்த்திய அம்சமான பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தினேஷ்?", அவள் ஆள்காட்டி விரலை என்னை நோக்கி நீட்டியவாறே கேட்டாள். அவள் நின்றிருந்த திசைக்குப் பின்னால் தெரிந்த கண்ணாடிச் சுவரைத் தாண்டி பனிமழை பெய்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"Yes... you?"&lt;br /&gt;&lt;br /&gt;"I'm Ananya", புன்னகைத்துக் கொண்டே கைகளை நீட்டினாள். அவளை வியப்புடன் பார்த்த என்னைப் பார்த்து கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யு.எஸ்க்கு ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க. ஊரு புடிச்சிருக்கா?"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-4655450703846526266?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/4655450703846526266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=4655450703846526266' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4655450703846526266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4655450703846526266'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_24.html' title='அவள் பெயர் அனன்யா!!!'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-323887879513660016</id><published>2008-08-14T22:35:00.008-04:00</published><updated>2008-08-15T12:33:32.663-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அந்நியலோகம்...</title><content type='html'>முற்றுப்பெற்ற&lt;br /&gt;பெருமழையொன்று&lt;br /&gt;மேல்சுவர் முனையில் திரண்டு&lt;br /&gt;சொட்டும் தருணமது...&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் கோப்பையின் விளிம்பில்&lt;br /&gt;பரவும் ஆவியினை ஊதி களைத்தபடியே&lt;br /&gt;ஜன்னல் கம்பிகளூடே&lt;br /&gt;ஓர் விழிப்பயணம்...&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தெரு மழைத்தேக்கத்தில்&lt;br /&gt;ஒருகுடையின்கீழ் நாமிருவரும்&lt;br /&gt;காகிதக்கப்பல் விட்டதும்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொருநாளில்&lt;br /&gt;மழையோடு மல்லுக்கட்டிய‌&lt;br /&gt;என் ஈரத் தலைமுடியை&lt;br /&gt;செல்லக் கோபத்தோடு &lt;br /&gt;உன் சேலை நுனியால் உலர்த்தியதும்...&lt;br /&gt;&lt;br /&gt;உன் மடிமேல் தலைசாய்த்து&lt;br /&gt;விட்டம்பார்க்கும் சுகத்தில்&lt;br /&gt;உன் கோபம் தணிந்ததுமென&lt;br /&gt;&lt;br /&gt;புத்துணர்வைக் கொடுத்துவிட்ட&lt;br /&gt;சோம்பலில்&lt;br /&gt;மங்கலாய் படர்ந்திருந்த&lt;br /&gt;வெற்றுலகு, சற்றென‌&lt;br /&gt;கிளறியது&lt;br /&gt;உன் நினைவுகளை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கற்றுக் கிடக்கும் படுக்கையில்&lt;br /&gt;எப்படியோ தொலைந்துபோகும்&lt;br /&gt;அலைப்பேசியை&lt;br /&gt;அவசரமாய் தேடியெடுத்து&lt;br /&gt;விரைவெண்ணை அழுத்தினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்முனையில் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;மூண்டுவிட்ட மொத்த&lt;br /&gt;உணர்வுகளையும் ஒருங்கிணைத்துக்&lt;br /&gt;கூறினேன்&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா... எப்படிம்மா இருக்க?'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-323887879513660016?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/323887879513660016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=323887879513660016' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/323887879513660016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/323887879513660016'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_14.html' title='அந்நியலோகம்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-3008125633328915618</id><published>2008-08-11T21:20:00.001-04:00</published><updated>2009-03-28T13:39:33.004-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தேவதை கவிதைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SKC447_1g9I/AAAAAAAACUg/tCkq6CJ0Wl8/s1600-h/thevathai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SKC447_1g9I/AAAAAAAACUg/tCkq6CJ0Wl8/s320/thevathai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5233386055322141650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேவதை = தேன் + வதை&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் கண்விழிக்க‌&lt;br /&gt;கடற்கரையோரம் நீ சென்ற‌&lt;br /&gt;காலையில்&lt;br /&gt;மாநாடு கூடிவிட்டதாம்&lt;br /&gt;தேவதைகளின் ஊர்வலமென்று...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் றெக்கைகளையெல்லாம்&lt;br /&gt;பிய்த்துக் கொள்கிறார்கள்&lt;br /&gt;வான தேவதைகள்...&lt;br /&gt;சிறகுகளற்ற உன் &lt;br /&gt;சிறப்பை அடைய வேண்டி...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரக் காவலர்களே&lt;br /&gt;கண்மூடிக் கொள்ளுங்கள்...&lt;br /&gt;தேவதைலோகத்திலெல்லாம்&lt;br /&gt;அறிவித்து விட்டார்கள்...&lt;br /&gt;அவள் உடுத்தும் ஜீன்ஸ்‍‍ டி-சர்ட்தான்&lt;br /&gt;இனி தேவதைகளின் சீருடையாம்...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுக்காகிதத்தோடு எல்லா கவிஞனும்&lt;br /&gt;உன் ஒருத்தியை மட்டும்&lt;br /&gt;சுற்றியலைவதால்&lt;br /&gt;உன்னைக் கோள்கடத்தச் சொல்லி&lt;br /&gt;தேவதைகள் சங்கத்தின் கோரிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நீ விட்டுச் சென்ற‌&lt;br /&gt;காலடித் தடங்களில்&lt;br /&gt;தேவதையின் இருத்தலை&lt;br /&gt;ஆராய்ந்து கொண்டிருக்கின்றன‌&lt;br /&gt;தொல்பொருள் காப்பகங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை உலகின்&lt;br /&gt;அழகிப் போட்டிகளிலெல்லாம்&lt;br /&gt;அளவுகோலும்&lt;br /&gt;ஆதர்சன நாயகியும்&lt;br /&gt;நீயென்பது உனக்கு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை தாவணியில் வெளியே வராதே&lt;br /&gt;என்றால் கேட்டால்தானே!!!&lt;br /&gt;பார்...&lt;br /&gt;அழகென்று கர்வங்கொண்ட‌&lt;br /&gt;ஆயிரம் தேவதைகளின் தற்கொலைதான்&lt;br /&gt;இன்றைய தலைப்புச் செய்தி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-3008125633328915618?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/3008125633328915618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=3008125633328915618' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3008125633328915618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/3008125633328915618'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post_11.html' title='தேவதை கவிதைகள்'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/SKC447_1g9I/AAAAAAAACUg/tCkq6CJ0Wl8/s72-c/thevathai.jpg' height='72' width='72'/><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-4071889557250187576</id><published>2008-08-02T13:03:00.002-04:00</published><updated>2008-08-03T20:26:59.829-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சமீபத்தில் பார்த்த படங்கள்...</title><content type='html'>சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பர புகைப்படங்களைப் பார்க்கும்போதே, இப்படத்தில் ஏதோ ஒரு காந்தத் தன்மை இருப்பது புலப்படும். எண்பதுகளில் அளவுக்கதிகமான தலைமுடி, பெரிய கிருதா, பெல் பாட்டம், இறுகிய, நீண்ட காலருடைய சட்டை என என் தந்தையின் பழைய புகைப்படங்களை நினைவுப் படுத்திச் சென்றன. தன்னுடைய முதல் படத்தை இயக்கி, நடித்தது மட்டுமல்லாமல் அதனை தயாரித்த சசிகுமாரின் தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். Quentin Tarantinoவின் திரைப்பட காட்சியமைப்புகளைப் போல, மெதுவாக காட்சிகளை நகர்த்தி, மொத்தப் படத்தையும் மிகவும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள் இயக்குனர் சசிகுமாரும், ஒளிப்பதிவாளர் கதிரும். &lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியின் முகபாவனை அழகு. சிறுவயதில், அதைப் போல் பேசாமலேயே, கண்களாலேயே காதலித்த நண்பனின் காதலை ஞாபகப் படுத்தியது அழகர்-துளசி கதாபாத்திரத்தின் 'கண்கள் இரண்டால்' காதல் காட்சிகள். பாலா, அமீரின் வழிதடங்களிலேயே கடைசிக் காட்சியில் ஒரு சோகத்தை வைத்திருந்தாலும், ஒரு நல்ல கதையை இயல்பாக படைத்திருக்கிறார் இயக்குனர். பாவாடை தாவணி, லுங்கி, தென் தமிழக நகர வாழ்க்கை என மிகவும் ரசிக்கும்படியான கலவையைக் கொண்ட இப்படத்தின் வெற்றியை, ஏனோ நெருங்கிய ஒருவருடைய வெற்றியெனக் கொண்டாடுகிறது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளை வாசிக்கும்போதெல்லாம், அதில் வரும் வசனங்களை, அதன் பின்னணிக் காட்சிகள், கதாபாத்திரங்களுக்கேற்ப உச்சரித்து,  மனதிற்குள் காட்சிப்படுத்தி, உரைநடைப் படுத்தும் வழக்கம் அனேகமாக அனைவருக்கும் இருக்குமென்று நினைக்கிறேன். அப்படி மனதிற்குள் கொண்டாடிய &lt;br /&gt;பொன்னியின் செல்வன் நாவல் ஏற்படுத்திச் சென்ற ஓர் எதிர்பார்ப்பை மொத்தமாக உடைத்தெரிந்தது சோழர் ஆட்சிகால கதைப் பற்றிய திரைகாவியமான 'உளியின் ஓசை' திரைப்படம். திரைப்படம் எடுப்பது மட்டுமல்ல, கதாபாத்திரங்களுக்கேற்ப நடிகர்களை தேர்ந்தெடுப்பதும் ஓர் கலையே. ஒருசேர ஆஜானுபாகவும், அமைதியாகவும் மனதில் சித்தரித்து வைத்திருந்த, தமிழகத்தை பொற்காலமாக உலகமறிய செய்த ராஜ ராஜ சோழனின் கதாபாத்திரத்தில் சரத் பாபுவை பார்த்த உடனேயே கடுப்பாகிவிட்டது. நடைமுறைத் தமிழ் உச்சரிப்பு, பழைய காலமென்ற உடனேயே, ஆண்களுக்கும் கண்மை, உதட்டுச்சாயமென்று ஒப்பனையென ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட அயர்ச்சியில், மீதியை பார்க்கவில்லை. இளையராஜாவின் இசை மட்டும் இப்படத்தில் இன்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை தாராயோ. வெளிப்புற படப்பிடுப்பு, கடினமான வேலை, ஏளனப் பேச்சுக்கள் போன்ற காரணங்களால் ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருந்த திரைப்பட இயக்கத் துறையில் பெண்களும் இப்பொழுது வருகிறார்கள் என்ற நற்செய்தி ஒன்றைத் தவிர இப்படத்தைப் பற்றி கூறுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பார்த்திபன் இனி கதாநாயகனாக நடிப்பதை நிறுத்தி விடலாம். அல்லது, கதாநாயகனுக்கேற்ப ஒப்பனையாவது செய்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சன் தொலைக்காட்சியின் 'டாப் 10'இல் இரண்டாவது இடம் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம் ஆயுதம் செய்வோம். காந்தியின் அகிம்சை கொள்கையை வைத்து எடுக்கப்பட்ட குப்பை மசாலா படம். பத்தாம் வகுப்பு வரலாறு பாடங்களை படித்த நாள் முதல் என் மனதில் ஒரு கேள்வி இருந்து வருகிறது. உலக சரித்திரத்தைப் பார்க்கும்போது, இரண்டாம் உலகப் போரின் முடிவும், காலணிய கொள்கைகளை வேரறுக்க ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் துவக்கமும்தான் இந்திய சுதந்திரத்திற்கு பெரும் காரணமாக தோன்றுகிறது. அப்படியிருக்க, காந்தியின் அகிம்சை போராட்டம் மட்டுமே இந்திய சுதந்திரத்தை வாங்கித் தந்தது என்று கொண்டாடுவது ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;சீமானின் வாழ்த்துகள் படத்தையும் சமீபத்தில்தான் பார்த்தேன். பாராட்டத்தக்கவாறு, வேறு மொழி கலப்படமின்றி முழுக்க முழுக்க தமிழிலேயே வசனங்கள் அமைத்திருந்தாலும், 'காதலுக்கு மரியாதை' காலந்தொட்ட அதே பழைய கதையை சுவாரஷ்யமின்றி கொடுத்திருப்பது இப்படத்தின் பலவீனம். &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று எண்ணி சென்ற வாரத்தில்தான் பார்த்தேன் 'கற்றது தமிழ்'. இழப்பு, தோல்வி, விரக்தியென கொடுமைகளும் சோகங்களும் மட்டுமே துரத்தும் ஒருவனை, சமூக ஏற்றத்தாழ்வுகளும் இம்சிக்க, மனநிலை பாதிக்கப்பட்டு தொடர்கொலை செய்யத் துணியும் இளைஞனின் கதை. குத்துப்பாட்டு, சண்டைக் காட்சிகளென எந்தவொரு வணிக ரீதியான காட்சியமைப்புகளும் இல்லாத, சோகத்தை மட்டுமே பறைசாற்றும் ஓர் இயல்பான திரைப்படம். சாபச் சாத்தான்களின் உமிழ்நீரில் மட்டுமே நனைந்து வரும் அவனுக்கு, மயிலிறகாய் வருடும் தேவதை அஞ்சலி, 'நெஜமாத்தான் சொல்றியா?' என்ற ஒற்றை வசனத்தில் மனதை கொள்ளைக் கொள்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படித்தவன் என்பதற்காக, சமூகத்தில் அனைவரும் அவனை நிந்திப்பதாக வரும் அபத்தங்களைத் தவிர அருமையான ஒரு படைப்பு. மென்பொருள் துறையால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பற்றி கூறும் இயக்குனர் அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கலாம். படத்தைப் பார்த்த பிறகு, இன்னொரு படம் பார்க்க நேரமிருந்தும், இப்படத்தின் பாதிப்பை சிலாகிக்க வேண்டுமென்பதற்காகவே, அடுத்த படத்தைப் பார்க்காமல் கண்களை மூடி காட்சிகளை மறுபடியும் மனத்திரையில் ஓட்டி ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் குசேலனைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று பார்க்கிறீர்களா? படத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட முதல் எண்ணம். இப்படத்தை எடுத்ததற்காக பி.வாசுவிற்கு 'முப்பது நாட்களில் திரைக்கதை எழுதுவதை கற்றுக் கொள்வது எப்படி?' என்று ஒரு புத்தகத்தை பரிசளிக்க வேண்டும் என்பதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-4071889557250187576?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/4071889557250187576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=4071889557250187576' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4071889557250187576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/4071889557250187576'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/08/blog-post.html' title='சமீபத்தில் பார்த்த படங்கள்...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-2031462532833433513</id><published>2008-07-31T22:43:00.000-04:00</published><updated>2008-07-31T22:46:20.412-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>பேருந்தில் நீயெனக்கு...</title><content type='html'>நமக்கு தெரியவே தெரியாத அழகான பொண்ணு ஒன்னு நம்ம பக்கத்துல உக்காந்துக்கிட்டு, இண்ட்ரோவாகி, இன்னும் நல்லா பழக்கமாகி, அப்பப்ப தோளுல சாஞ்சிக்கிட்டு, ஒரு பை‍பாஸ் ரோட்டு பரோட்டா கடைல ஒன்னா சாப்ட்டு, ஊருக்கு போய் இறங்கும்போது மொபல் நம்பரையும், ஈமெயில் ஐடியையும் கொடுத்து டாட்டா காட்டி வீட்டுக்கு கெளம்புற மாதிரி கற்பனையெல்லாம் எப்ப தனியா பயணம் பண்ணாலும் வந்து தொலைக்கும். கண்ண மூடிட்டே இப்படி கனவு கண்டுக்கிட்டு இருக்கும்போது, ஏந்தான் இந்த ட்ரைவருக்கு மூக்குல வேக்குமோ தெரியாது, உடனே ஒரு சடர்ன் ப்ரேக்க போட்டு நம்ம கனவுக்கும் வேட்டு ஒன்னு வச்சிருவாரு. 'தடங்கலுக்கு வருந்துகிறோம்'னு தூர்தர்ஷன்ல கலர் கலரா கோடுப் போட்ட மாதிரி, டோட்டல் கற்பனையும் டேமேஜ் பண்ற மாதிரி உக்காந்துக்கிட்டு இருக்குற பக்கத்து ஸீட்டு பெருச பாத்த உடனேயே கடுப்பாகி, அப்புறம் கதை, கவிதைனு ஏதாவது யோசிக்க ஆரம்பிச்சிடுவேன். சில நேரம் சிந்தனைல படம் கூட டைரக்டு பண்ணிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாளையங்கோட்டைல பள்ளிகூடம் சேந்ததுல இருந்து தினமும் இருவத்தெட்டு கிலோமீட்டர் பஸ் பயணம். இந்த தனியார் பஸ்காரனுங்களுக்கெல்லாம் மனசுல செருப்புமேக்கர்னு நெனப்பு. குண்டும், குழியுமா இருக்குற அந்த தூத்துக்குடி ரோட்டுல எஃப் ஒன் ரேஸ் நடத்திட்டு இருப்பானுங்க. அப்படியே நம்ம வண்டி மத்த வண்டிய ஸைடு வாங்கும்போது குஜால்ஸா சவுண்டு விட்டுக்கிட்டு நாங்களும் என்கரேஜ் பண்ணிட்டு திரிவோம். ஒரு தடவ பக்கத்து ஊர்ல ஏறுன ஒரு ஆள் என் பக்கத்துல உக்காந்தத பாத்த ரெண்டு மூனு பசங்க என்னைய ஒரு மாதிரி பாத்து சிரிச்சானுங்க. என்னடா மேட்டர்னு நெனச்சிட்டு இருக்கும்போதே அந்தாளு மெதுவா பேச ஆரம்பிச்சாரு. அப்படியே என் பைல இருந்து சமூக அறிவியல் புக்க எடுத்து திடீர்னு ஒரு பக்கத்த பொரட்டி, ஒரு பேராவ வாசிக்கச் சொல்லி அதுக்கு அர்த்தம் கேக்க ஆரம்பிச்சிட்டாரு. 'அடப்பாவிகளா!!! பரிட்சைக்கு எந்த கேள்வி வரும்னு வாத்தியார் சொல்றத நோட் பண்ணிட்டு, கைட எடுத்து, அந்த கேள்விய மட்டும் கையால நெஞ்சுல குத்தி குத்தி மனப்பாடம்தான் பண்ண‌ தெரியும் நமக்கெல்லாம். இதெல்லாம் நமக்கு வராதேடா'னு நெனச்சிட்டு இருக்கும்போதே, தலைவரு ஆரம்பிச்சாரு அட்வைஸ. ஒரு மணி நேரம் காதுல ரத்த வர்ற வரைக்கும். அடுத்த நாளுல இருந்து அவர பாத்த உடனேயே, 'தூங்கு கைப்புள்ள'னு கண்ண மூடி தூங்குற மாதிரி ஆக்ட் விட ஆரம்பிச்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாவது போகும்போது, நம்ம கசின்ஸ் ரெண்டு பேர் ஆறாவதுல ஜாயிண்ட் அடிக்க, கும்முனு செட் சேத்து சுத்த ஆரம்பிச்சோம். வீட்ல பஸ்ஸுக்கு தர்ற மொத்தக் காசையும் லவட்டிட்டு, லாரி புடிச்சு வீட்டுக்குப் போயிடுவோம். அப்படி ஒரு நாள் என்னோட கசின் கிட்ட ஒரு பைசாவும் இல்ல. எங்களுக்கு மட்டும் பஸ் காசு இருந்தது. லாரி எதுவுமே கெடைக்காம, ரொம்ப இருட்ட வேற ஆரம்பிச்சிடிச்சு. நம்ம காச தம்பிக்கிட்ட கொடுத்து, 'அண்ணன பத்தி கவலப் படாத... நீ போயிட்டு வாடா ராசா... நான் எப்படியாவது வந்துடுறேன்... வீட்ல அம்மா, அப்பாவயெல்லாம் நல்லா பாத்துக்கோ...'னு டையலாக் விடுற ஹீரோவா நாம? அப்படியே அவன தண்ணி தெளிச்சுவிட்டு நாங்க பஸ் ஏறிட்டோம். பாதி தூரம் போயிட்டு இருக்கும்போது, ஒரு காரு எங்க பஸ்ஸ க்ராஸ் பண்ணி போச்சு. உள்ளப் பாத்தா, நம்மாளு... அப்படியே எம்.ஜி,ஆர் கணக்கா கைய ஆட்டிட்டே போனான். ஊருக்கு போய் சேந்த உடனே, காருல ஏஸி இருந்துச்சு, குஸன் ஷீட்டுன்னு அலப்பறைய அள்ளித் தெளிச்சு வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிட்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ்ல சேந்த புதுசுல, ஒரு செமஸ்டர் லீவ்ல ஊருக்கு ரயில்ல போய்க்கிட்டு இருந்தோம். கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் எப்போதுமே சீக்கிரம் ஃபுல் ஆயிடும். காரணம்... அந்த ஊரு சென்ஸஸ்ல பசங்கள விட பட்டைய கெளப்பும் பொண்ணுங்க. கேரளா ஓரம்ங்றதால எக்ஸ்ட்ராவா அழகு வேற இருக்கும். அதுக்காக தமிழ் நாட்டு பொண்ணுங்க எல்லாம் அழகில்லையானு கேள்விலாம் கேட்டுடாதீங்க. நியூட்டனோட நான்காவது விதிப்படி, நாம போற கம்பார்ட்மெண்ட்ல எப்போதுமே பொண்ணுங்க இருக்க மாட்டாங்க. அப்படியே தப்பி தவறி இருந்தா கூட, 'தம்பி.. ஃபேமிலியோட வந்திருக்கோம். கொஞ்சம் எடம் மாறி உக்காருறீங்களா?'னு வெரட்டி அடிச்சிடுவாங்க. இந்த தடவையாவது நம்ம கம்பார்ட்மெண்ட்ல ஃபிகர் இருக்கனும்னு லிஸ்ட பாத்தா, வழக்கமா இருக்குற அம்பது அறுவதுகளுக்கு மத்தில ரெண்டு பேரு இருவது பக்கத்துல. ஊருக்கு போறதுக்குள்ள ஒரு டூயட்டுக்கு லோகேஷன் பாத்திடனும்னு முடிவெல்லாம் பண்ணிட்டு உள்ள புகுந்தோம். படுக்க மெத்தைல இருந்து ஜாங்கிரி டப்பா வரைக்கும், ஒரு குட்டி குடித்தனமே பண்ற மாதிரி ஐட்டங்கள அடிக்கி வச்சிருந்தது ஒரு சேட்டு குடும்பம். சேட்டு, அவர் மனைவி தவிர அம்சமான ஒரு பொண்ணு. சேட்டு வீட்டுல மட்டும் பொண்ணுங்கள பெப்பாங்களா, இல்ல செய்வாங்களானு தெரியல. அப்புறம் இன்னொரு சுமார் ரக ஆர்.ஈ.ஸி பொண்ணு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பெல்லாம் காலேஜ் பேர சொல்லி பந்தா பண்ணி கரெக்ட் பண்ணிடலாம்னு ஒரு ராங்க் அஸம்ப்ஷன்லையே சுத்திட்டு திரிஞ்சோம். கூட வந்திருந்தவன், நம்ம காலேஜ் பேரெல்லாம் சொன்னா, சொம்புப் பசங்கன்னு நெனச்சி பொண்ணுங்க சீண்டவே மாட்டாளுங்கன்னு என் அறிவக்கண்ண திறந்துட்டு, அவன் 'ஐ எம் ஃப்ரம் அண்ணா யுனிவர்சிட்டி'னு அந்த ஆர்.ஈ.ஸி பொண்ண பிக்கப் பண்ண ஆரம்பிச்சிட்டான். 'துரோகி!!!' அப்டீனு மனசுக்குள்ள தங்கப் பதக்கம் சிவாஜி மாதிரி அவன திட்டிட்டு, அந்த சேட்டுப் பொண்ணுகிட்ட கான்ஸெண்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சேன். அப்பத்தான் ஒரு பெரிய விசயமே வெளங்க ஆரம்பிச்சிச்சு. அவளுக்கு தமிழ் தெரியாது.. எனக்கு தமிழ தவிற வேறெதுவும் தெரியாதுங்ற உலகறிஞ்ச ரகசியந்தான். லேங்க்வேஜ்லதான் நமக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ஆப்பு அல்ரெடி இருக்கே... அப்புறம் என்னத்த ஆரம்பிக்கன்னு நானும் 'என் கற்பனைலையே அவள பிக்கப் பண்ணிக்கிறேன்டா'னு கண்ண மூட ஆரம்பிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;'ஹாய்'னு அவளே ஹேங்கான சிஸ்டத்த ரீபூட் பண்ணா. கற்பனதான்னு கன்ஃபர்ம் பண்ணலாம்னு பாத்தா, நெஜம்மாத்தான் சொல்றா. 'ஹலோ... ஐ எம் ஜி.. ஐ எம் ஃப்ரம்....' னு மனப்பாடம் பண்ண டையலாக்க அடிச்சி விடுறதுக்குள்ள வேர்த்து, நடுங்கி, நாக்கெல்லாம் வறண்டு ஒரு கலவரமே நடந்து முடிஞ்ச மாதிரி இருந்தது. அப்புறம் அவளும் ஆங்கிலத்துல என்னத்தையோ அடிச்சு விட, ஒரு எழவும் புரியாம 'வாட் ஆர் யூ ஸ்டடியிங்?'னு எல்.கே.ஜி ல சொல்லிக் கொடுத்த அதே டையலாக்க விட, 'அதத்தானடா இவ்வளவு நேரம் அவ சொல்லிக்கிட்டு இருந்தா வெண்ண..'னு கூட வந்தவன் அவன் போதைக்கு நம்மள ஊறுகாய் ஆக்க, 'போங்கடா... நீங்களும்... உங்க கடலையும்'னு மேலே ஏறி படுத்துக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரிதான் போன தடவ இந்தியா போகும்போது, ஃப்ளைட்ல பக்கத்து ஸீட்ல, டி-சர்ட், ஜீன்ஸுன்னு மாடர்ன் மங்காத்தாவா ஒரு ஹிந்தி ஃபிகரு. குள்ளமா இருந்ததால அவளோட பெட்டிய கேபின்ல வைக்க முடியாம நின்னுக்கிட்டு இருந்தா. அப்படியே ஹெல்ப் பண்ற மாதிரி போய், 'நாந்தான் மீச வச்ச சாருக் கான்'னு பொடிய போடலாம்னு எழுந்தா, அதுக்குள்ள வில்லன் அம்ஜத் கானா ஒருத்தன் வந்து அந்த பெட்டிய வாங்கி கேபின்ல வச்சி, என்னோட சமூக சேவைக்கு டோட்டல் ஃபுல் ஸ்டாப்ப வச்சித் தொலச்சிட்டான். அப்புறம் அந்த ஃபிகர் கிட்ட கடலைய ஸ்டார்ட் பண்ணலாம்னு நெனக்கும்போதே, பழைய ஆப்பெல்லாம் கண் முன்னால வந்து 'அமெரிக்கா போயிட்டு வந்தாலும் இன்னும் அரகுற இங்குலீஷூதான்டா நீயீ'னு நக்கலு பண்ண, நக்கல எல்லாம் விக்கலாக்கி, 'எடுடா வண்டிய'னு ட்ரை ஸைக்கிள்ல அப்படியே கடலைய காதலாக்கி, இந்த தடவையாவது டூயட்ட கன்ஃபர்ம் பண்ணிடலாம்னு 'ஹாய்'னு திரும்புனா, புள்ள தூங்கிட்டு இருக்கு. அப்புறம் அவ தூங்குன நேரத்துல நான் முழிச்சிட்டு இருக்க, நான் தூங்குன நேரம் அவ முழிச்சிட்டு இருக்க, இந்தியாவே வந்திடிச்சு. :-(&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சீப்பா கெடைக்குமேன்னு, பெங்களூரு மெஜஸ்டிக்ல ஒரு கடைல கேபின் ஸூட்கேஸ் வாங்குனா, பயபுள்ள கேபின் ஸைஸ்தான்னு ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ கொடுத்துட்டான். அடுத்தவன் தலைக்கு மேல நம்ம லக்கேஜ வச்சா தூக்கி கடாசுற நம்ம ஊரு ஞாபகத்துலேயே, அமெரிக்கா லோக்கல் ஃப்ளைட்ல, ஏற்கனவே ஒரு லக்கேஜ் இருந்த என் தலைக்கு மேல இருந்த கேபின்ல எப்படி அந்த பெரிய கேபின் பேக்க வைக்கிறதுன்னு ஆங்கில் பாத்து கால்குலேட் பண்ணிட்டு இருந்தேன். பின்னால இருந்து ஒரு வெள்ளக்கார ஃபிகரு ஒன்னு வேக வேகமா என் ஸீட் பக்கத்துல வந்தா. ஐய்யய்யோ... இங்க்லிஷ் படத்துல வர்ற மாதிரி பொசுக்குன்னு எதுனா கொடுத்துட போறாளோ?னு நானும் பயந்து போய் நிக்க, என்னோட கேபின் பேக்க புடுங்கி பக்கத்து கேபின்ல வச்சிட்டு கெளம்பி போயிட்டா. 'ஆஹா...'னு வேகமா சுத்தி முத்தி பாத்துட்டு, 'நல்லவேள யாரும் பாக்கல'னு ப்ளைட்ல வச்சிருக்குற அட்வர்டைஸ்மெண்ட் புக்க எடுத்து எதுவுமே நடக்காதது மாதிரி படிக்க ஆரம்பிச்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா பயணத்துலையும் ஏதாவதொரு அனுபவம் கிடைக்கும். அதுல சுவாரஷ்யமானது, நான் சென்னைல படிச்சிட்டு இருக்கும்போது, நெல்லைக்கு போய்க்கிட்டு இருந்த ஒரு அரசு பேருந்துலதான். பக்கத்து ஸீட்ல பாக்கவே பயங்கரமா, பூதாகரமான, வாட்ட சாட்டமான ஒரு ஆளு.  அதுக்கும் மேல ராத்திரி சாப்பாட்டுக்கு வண்டி நிக்கும்போது, குவார்ட்டர எடுத்து பஸ்ல வச்சி அடிச்சிட்டு இருந்தாரு. ஏன் இப்படி பொது எடத்துல தண்ணி அடிக்கறாரு?னு செம கடுப்பா வந்துச்சு. எங்களுக்கு முந்துன ஸீட்ல ஒரு இருவது பிற்பாதி மதிக்கத்தக்க இளைஞனும், அவனோட நிறை மாத கர்ப்பிணி மனைவியும் இருந்தாங்க. அதிகாலைல, அந்த பொண்ணுக்கு திடீர்னு வயித்தவலி வந்திடிச்சு. வண்டி வேற ஒரு காட்டுப் பகுதில போய்க்கிட்டு இருந்தது. மருத்துவமனைக்கு போகனும்னாலும் ரொம்ப தூரம் போக வேண்டி இருந்தது. உடனே, பஸ்ஸ நிறுத்தி, ஆம்பளைங்கள எல்லாம் பின்னால போகச் சொல்லி, ட்ரைவர் எடத்துக்கு அந்த பொண்ணக் கூட்டிட்டுப் போய், சுத்தி துணியக் கட்டி பொம்பளைங்க சில பேர் சேந்து அங்கேயே பிரசவம் பாத்துட்டாங்க. அப்புறம் வண்டிய வேகமா ஓட்டிட்டுப் போய் கோவில்பட்டி மருத்துவமனைல அந்தப் பொண்ண சேத்தாச்சு. அப்புறம்தான் தெரிஞ்சது, அவ புருசன் கைல சல்லி பைசா கெடயாதுன்னு. என் பக்கத்துல உக்காந்திருந்தவருதான், அந்த பொண்ண மருத்துவமனைல சேக்குறதுல இருந்து, மக்கள்கிட்ட காசு வசூல் பண்ணி அவன் கிட்ட கொடுக்குற வரைக்கும் எல்லா வேலையும் தன்னார்வமா செஞ்சாரு. பிறந்த அந்த பையனுக்குக் கூட திருவள்ளுவர்னு பஸ் பேர வைக்க சொன்னாங்க. அது மட்டும் வாழ்க்கைல மறக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல், சினிமா மாதிரி, பதிவுலகத்துலையும் கண்டதுக்கெல்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்கன்னு நண்பன்கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ அவன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;a href="http://veyililmazai.blogspot.com/2007/01/25.html"&gt;இருபத்தஞ்சாவது&lt;/a&gt; போஸ்ட் ஒரு மாசத்துல போட்டேன்... &lt;a href="http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post.html"&gt;அம்பது&lt;/a&gt; போட அஞ்சு மாசம் ஆச்சு. &lt;a href="http://veyililmazai.blogspot.com/2007/11/blog-post_18.html"&gt;எழுவத்தஞ்சுக்கு&lt;/a&gt; கிட்டத்தட்ட ஒரு வருசம். நூறு போடுறதுக்கு ஒன்னே முக்கா வருசம் ஆயிடிச்சுடா'னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பயபுள்ள சொன்னான், 'டேய்... ஏ.ஆர். ரகுமான் வந்த புதுசுல எக்கச்சக்க படம் அடிச்சான். இப்ப வருசத்துக்கு ரெண்டு மூனு தானே பண்றான். பெரிய ஆளா ஆயிட்டா இப்படிதான்டா'னு &lt;br /&gt;&lt;br /&gt;'அட.. இது நல்லா இருக்கே!! சரக்கில்லைங்றத இப்படி கூட சொல்லலாமா??'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-2031462532833433513?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/2031462532833433513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8686747386563540762&amp;postID=2031462532833433513' title='64 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2031462532833433513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8686747386563540762/posts/default/2031462532833433513'/><link rel='alternate' type='text/html' href='http://veyililmazai.blogspot.com/2008/07/blog-post_31.html' title='பேருந்தில் நீயெனக்கு...'/><author><name>ஜியா</name><uri>http://www.blogger.com/profile/06049627918631577637</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://4.bp.blogspot.com/_PeoyuYlnvEQ/Sf4a-bpGEII/AAAAAAAAEIs/hzcdEfrO-ao/S220/zia.jpg'/></author><thr:total>64</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8686747386563540762.post-2030154249194008287</id><published>2008-07-20T22:57:00.001-04:00</published><updated>2009-03-28T13:39:33.004-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>அவள், அவன் மற்றும் அவர்</title><content type='html'>குதிரை குளம்படி சத்தம் ஓய்ந்த சில நொடிகளிலேயே, வானுலக தேவதையுருகொண்ட ஒருத்தி, ஒற்றைக் குதிரை பூட்டிய அம்மூடு ரதத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அடர்ந்த வனாந்திரமாதலால் நச்சுப் பாம்புகள் வசிக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவளுக்குக் காவலாய் குதிரையோட்டியும் அவளோடு செல்ல எத்தனித்தான். ராஜ குலத்துக்கே உரித்தான ஆளுமைத் தொணியில் தன் கைகளை மேலேயுயர்த்தி அவனை நிற்குமாறு கட்டளை பிறப்பித்து முன்னேறிக் கொண்டிருந்தாள். வானம் மறைத்த அடர்ந்த மரங்களுக்கிடையே ஊடுருவி,  மேகத்தினுள் ஒளிந்திருக்கும் சூரியனின் திசைக்கண்டு நேரத்தை கணிக்க முயன்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி சரியாக மாலை 4:27. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெருங்கிய தோழியாய் இருந்து, இப்போது முழுவதுமாய் தொடர்பற்றிருக்கும் யாரோ ஒருத்தியளித்த பிறந்தநாள் பரிசான தன் கைகடிகாரத்தைப் பார்த்து நேரத்தை உறுதி செய்து கொண்டான். உட்புறக் காட்சிகளை வடிகட்டியும் வெளியுலகைக் கடத்தியும் வரும் கறுப்புக் கண்ணாடிகளால் உருவாகியிருந்த அவ்வறை, பதப்படுத்தும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைந்துகிடக்கும் மூன்று நாள் மூப்படைந்த சவத்தின் சாயலை பறைசாற்றியது. காற்றின் வெப்பத்தை உறிந்து செயற்கையாய் குளிரூட்டிக் கொண்டிருந்த அவ்விடத்தில், ஆங்காங்கே தொட்டியில் முளைத்திருக்கும் செயற்கைச் செடிகளுக்கு நடுவே இருந்த ஓர் சொகுசு இருக்கையில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான் அவன். பளிங்குத் தரையில் பட்டுத் தெரிக்கும் உயர்பட்டி காலணியோசை அறையெங்கிலும் கேட்க திரும்பிப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக நேரம் தங்களைக் காக்க வைத்த இந்த பேதை பெண்ணை மன்னியுங்கள்", அதுவரை யாரும் கண்டுவிடக்கூடாதென்பதற்காக தலையில் அணிந்திருந்த துணியைக் கழற்றியவாறே கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன மாதிரி அழகான பொண்ண பாக்கனும்னா பசங்க எல்லாரும் வெயிட் பண்ணித்தானே ஆகனும்?", சில்மிஷ புன்னகையில் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது. அருகிலிருந்த காட்டுமரத்தில் படர்ந்திருந்த ஓர் கொடியை பற்றியவாறே, இடது புறமாக தலையை திருப்பி, மண்பார்த்து தனக்குள் புன்னகை புரிந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"தனியாக வந்திருக்கும் என்னை பரிகாசம் செய்வது நியாயமா அன்பே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட வெட்கமெல்லாம் படுற? எப்போதுல இருந்து??"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வந்த காரணத்தைக் கூறி விடுகிறேன். நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால், இரவு ஜாமமும் வந்து விடக் கூடும். பிறகு குதிரையோட்டி என்னைத் தேடி இங்கேயே வந்து விடுவான்", என்று நகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்.. சொல்லு..."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்திபுற இளவரசன் என்னை மணப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளானாம். பல வம்சங்களாய் நிலைத்திருக்கும் அரச குலத்தின் தோன்றலென்பதால் என் தந்தைக்கும் இதில் முழு உடன்பாடு. என் விருப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்", இதற்கு முன்பிருந்த உற்சாகம் முற்றிலுமாய் குறைந்து, தளர்ந்த குரலில் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தோஷமான விசயம்தானே?? பெரிய எடத்துப் பையன். அப்புறமென்ன?? ஆமாம்னு சொல்லிடு", எந்தவித சலனமுமில்லாமல் பதிலுரைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடத்தை அடைந்தபோது விரிந்த அவளது விழிகள், சுருங்கி, அதன் விளிம்பில் கண்ணீர் பூத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு திருமணமென்று ஒன்று நடந்தால் அது தங்களோடு மட்டும்தான். என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி வேறொருவனை என் மனதிலும் எண்ணிப் பார்க்க மாட்டேன்" என்று அழத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப எதுக்கு அழற? நான் ஏற்கனவே சொன்னதுதான். உனக்கும் எனக்கும் செட் ஆகாது. அதுக்கும் மேல... உன் மேல எனக்கு காதல் இல்ல. சும்மா ஒரு காம்ப்ரமைஸூகாக உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறமா நம் வாழ்க்கை கேள்விக்குறியாயிடும்" வேகமாக சொல்லி முடித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் அழுது கொண்டே ஓடத் துவங்கினாள். அவள் பாதங்கள் முத்தம் பதித்த தரையெங்கிலும் அவளின் சோகத்தின் சாயல் படிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனதோடு மௌனமாய் ஒரு நொடி அழுகையில் மன்னிப்பைக் கோரிவிட்டு எழுந்து மாடிப் படிகளில் நடக்க ஆரம்பித்தான். எதிரே தென்பட்ட தன் அறிவியல் ஆசிரியரைக் கண்டதும் முகமலர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் தவிர தன்னியல், காதலியல், காமமியல், குடும்பவியல் என்று அனைத்தையும் பற்றி பேசுவதால் அனைவரின் அபிமானத்தையும் பெற்றவர். அவரிடம் எதைப் பற்றியாவது பேசினால், இதயத்தில் சூழ்ந்துள்ள குற்றவுணர்வு சற்று தணியும் என்றெண்ணி அவரிடம் பேசலுற்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார். இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் நியுஸ் இருக்குதா?", அவர் வந்த திசையிலேயே அவரோடு நடக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம். எப்படி இருக்க? இன்னைக்கு எந்த சிறப்புத் தகவலும் இல்லையேப்பா..", என்று கூறியவர், திடிரென ஏதோ நினைவில் வர&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்... சமீபத்துல கண்டுபுடிக்கப்பட்ட ஒரு கொள்கையச் பத்தி சொல்லவா?", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க சார்.."&lt;br /&gt;&lt;br /&gt;"காலத்த வச்சி அதிகமா கொள்கைகள், தியரிஸ் வந்திருக்குது இதுவரைக்கும். காலத்தை நான்காவது பரிமாணமா.. அதாவது ஃபோர்த் டைமன்ஸனா கணிக்குற ஒரு கொள்கை கூட இருக்குது. அதே மாதிரி சமீபத்துல ஒரு கால ஆய்வாளர் ஒருத்தர் ஒரு கொள்கையப் பத்தி சொல்லிருக்குறார். அந்த கொள்கைப்படி, நாம நினைக்குற மாதிரி நேற்று இன்று நாளைன்னு காலம் நகர்வதில்லைனு சொல்றார்."&lt;br /&gt;&lt;br /&gt;"அது எப்படி சார்? எனக்கு ஒன்னுமே புரியலையே..."&lt;br /&gt;&lt;br /&gt;"கிருஸ்த்தவர்கள், முஸ்லிம்களுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை ஒன்னு உண்டு. நாம, மனிதர்கள் இந்த உலகத்துல இருக்குற மாதிரி, ஜின் அல்லது ஜென் என்று சொல்லக் கூடியவைகளும் இந்த உலகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. மனிதர்கள் முழுவதுமாக ஆக்கிரமிச்சிட்டு இருக்குற இந்த உலகத்துல அவுங்களும் எப்படி வாழ முடியும்? நாம நின்னுட்டு இருக்குற இந்த எடத்துல கூட அவுங்க இருக்கலாம். ஒரே எடத்த ரெண்டு பேருமே பங்குப் போட்டிருக்கனும். அப்படி பங்கு போடுற இந்த உலகம்... மனிதனால் வளர்ச்சியடைந்த இந்த உலகம் அவுங்களுடைய வளர்ச்சி விகிதம் பொருத்து வேற மாதிரி இருக்கலாம். என்ன புரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமோ கதயடிக்கிற மாதிரி இருக்குது... அவ்வளவுதான் நம்ம அறிவு", என்று சிரித்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது வெறும் கொள்கைதான். உறுதி செய்யப்பட்ட விதி இல்ல. இன்னும் சொல்றேன் கேளு" என்று தன்னுடைய விளக்கத்தைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதே மாதிரி நம்முடைய நேற்றும், நாளையும் இதே நேரத்துல இதே எடத்துல அவற்றுக்கேத்த வளர்ச்சியடைந்த சூழலுல நிகழ்ந்துக் கொண்டிருக்குது. நீ உங்க ஊருல இப்ப பொறந்துட்டு இருக்கலாம். நான் எங்கேயோ செத்துட்டு இருக்கலாம். அது மட்டுமல்ல. நம்மளுடைய நேற்றையப் பற்றிய நிகழ்வுகள் எல்லாம் ஒரு பதிவு செய்யப்பட்ட உறுதி செய்யப்படாத நினைவுகள்னு சொல்றார். அதாவது.. நேத்து நான் என் மகளப் பாக்க சேலத்துக்குப் போனேன். நான் நேத்து போனேன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, அந்த கொள்கைப்படி நான் போனதுங்குற நினைவு பதிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு ப்ரம்மை. இப்படி எல்லாருடைய எல்லா நிகழ்வும் இந்த உலகைப் பங்குப் போட்டு ஒரே நேரத்துல நடந்துக்கிட்டு இருக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமோ ஹாரி பாட்டர் படம் பாக்குற மாதிரி இருக்குது சார். அது சரி.. அப்படி எல்லாமே ஒரே நேரத்துல நடக்குதுன்னா அப்புறம் எல்லாமே இந்நேரத்துக்கு முடிஞ்சிருக்கனுமே சார். ஒரு செகண்டுல இந்த உலகமே அழிஞ்சிருக்கனுமே"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கதான் இந்த கொள்கையோட முக்கிய விசயமே இருக்குது. காலம் நகராதுன்னு சொன்னேன்ல. ஆனா மனிதர்களாகிய நாம நகர்ந்துட்டு இருக்கோம்" என்று புன்னகை புரிந்து மேலும் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரே நேரத்துல நடக்கும் நம்முடைய எல்லா நிகழ்வுகளுக்குள்ளும் நாம பயணம் செய்றோம். நமக்கான எல்லா நிகழ்வையும் நாமதான் பண்றோம். அப்படி பயணிக்கிற போது, காலம் நகர்வது மாதிரி நமக்கெல்லாம் தெரியுது. முள்ளு மேல நடந்துட்டு 'முள்ளுக் குத்திடிச்சு'ன்னு முள்ளு மேல பழி போடுற அதே மனித இயல்புதான். நாம நகர்ந்துட்டு, காலம் நகருதுன்னு சொல்றோம்." என்று மறுபடியும் ஓர் புன்னகை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரத்தில் அவர்களிருவரும் அவன் முன்னர் இருந்த அதே இருக்கைக்கு அருகில் வந்திருந்தனர். அவரிடம் விடைப்பெற்றுவிட்டு அதே இருக்கையில் வந்தமர்ந்தான் அவன். மனதில் தோன்றிய கவலை தோய்ந்த குற்றவுணர்ச்சி மறைந்து அவனது சிந்தனையாவும் ஆசிரியர் விளக்கிய காலக் கொள்கையிலேயே நிலைத்திருந்தன. 'இந்நேரத்தில் என்னன்ன நடந்துக் கொண்டிருக்கிறதோ?' என்று எண்ணியபடியே, நான்காவது மாடியில் அமைந்திருந்த அவ்வறையில் கண்ணாடி ஜன்னல்கள் வழியே வெளியே வெறித்துப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவில் தெரிந்த குடியிருப்பிற்காக கற்கள் நடப்பட்டிருந்த ஓர் பரந்து விரிந்த குளத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேறொரு பதிவுக்காக கற்பனை செய்யப்பட்ட கரு, கதையா உருவாக்கிப் போட்டாச்சு. அந்த வேறொரு பதிவையும் இந்நேரத்துக்கு நான் பதிவு செஞ்சிட்டு இருக்கலாம். யாருக்குத் தெரியும்?? ;)))&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கொள்கையெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே. அதுல எதுனா சந்தேகம்னு கேட்டுடாதிய மக்கா!!!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் புனை கதை இலக்கணத்துல வருமான்னு தெரியல. இருந்தாலும்... காசா? பணமா? போட்டிக்குக் கொடுத்திட வேண்டியதுதான் :)) என்ன சொல்றீங்க??&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8686747386563540762-2030154249194008287?l=veyililmazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://veyililmazai.blogspot.com/feeds/2030154249194008287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='htt
