காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த ஜி-யின் பாசறையிலிருந்து முத்தான கவிதைகளை உங்களுக்கு வழங்குபவர்கள்.....
வேற யாரு நான்தான்.
நமக்குத்தான் காதலர் தினம் இல்லைனாலும், முகம் தெரிந்த, தெரியாத எண்ணற்ற நண்பர்களுக்காக இந்தக் கவித்தேன் (யாருப்பா அது.. "இத நாங்க சொல்லணும்"னு சவுண்ட் உடுறது... திருநெல்வேலி அல்வாக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல.. தெரியும்ல... :))))
இந்திய நேரப்படி காதலர் தினம் முடிந்திருந்தாலும், அமெரிக்க நேரப்படி இன்னும் முடிவடையவில்லை என்பதாலும், காதலர்கள் கொண்டாடத்தான் 365 நாட்களையும் இறைவன் படைத்தான் என்ற கருத்துடன்பாட்டாலும் இக்கவிதையை இங்கே நான் படைக்கிறேன்...நான் கசக்கி எறிந்த
உனக்கான கவிதையை
சிறந்த கவிதையென
விருதுகள் கொடுக்கின்றனர்....
எப்படித் தெரியும்
அவர்களுக்கு???
உனக்கான சிறந்தக் கவிதையை
படைக்க முடியவில்லையே என்ற என்னுடைய
ஆதங்கத்தை...
முகம்பார்க்கும் கண்ணாடி கூட
உன் முகத்தைதான்
காட்டுகிறது...
கேட்டால்...
'உன் விழியில்தான் கோளாறு'
என்ற நையாண்டி வேறு...
தனிமையின் தனிமையையும்
விரட்டியடிக்கிறது
உன் நினைவுகளின்
கொசுறு மாத்திரமே...
முழுவதும்
வந்தால்???
'நீரில் எழுதிய வரிகள்'என்ற பழமொழிக்கு
பொருள்மாற்றம் அளித்தது...
உன்னோடு நான்
வரைந்த
மழைத்துளிக் கவிதைகள்...
'பூக்களைப் பறிக்காதீர்'
உன் அன்பு கட்டளையையும்
அத்துமீறினேன்...உன் கூந்தலைச் சேராமல்
மலர மாட்டேனென்று
அடம்புடிக்கும்
பூக்களுக்காக...
நான்தான் தலைசிறந்த
மொழிப்பெயர்ப்பாளனாம்...
உன் மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும்திறன் கொண்டதால்...
அவர்களுக்கு
காதல் மொழி
தெரியாது போலும்...
சாதல் இல்லாத
காதல் செய்ய
வாழ்த்துக்கள்...
என்னது இது??? கவிதைன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டு சும்மா போனா எப்படி? பக்காத்தால கெடக்குற கல்ல எடுத்து நச்சுன்னு நடுமண்டைல போட்டுத் தாக்கிட்டுப் போங்கப்பூ... இது கூட தெரியாம எப்படித்தான் ப்ளாக் படிக்கிறீங்களோ??
Wednesday, February 14, 2007
40. கவிதைனு சொன்னா நம்பணும்...
Subscribe to:
Post Comments (Atom)

93 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...
As usual .. Gud Ones..
Nayagan.
ithu varaikkum nee ezhuthinathaiyae naanga nambinom... ithai kavidhainnu sonna mattum naanga nambamalaiya poga porom...
ithu kavidhaithan.. kavidhaiyaethan..
நல்லாதானே எழுதியிருக்கிங்க...இருந்தாலும் கல் எறிஞ்சிட்டு போகலாம் என்று வந்தேன் ;)
ஆங்… இப்படியெல்லாம் காதலொழுக கவிதையெழுதிட்டு அப்புறம் நாங்கலாம் தனியாளுங்க காதல் நாள் வாழ்த்து சொல்ல மாட்டோம் அன்பர் நாள் வாழ்த்துதான் சொல்லுவோம்னு அழிச்சாட்டியம் வேற…. ம்கும் நல்லா இருங்கப்பா நல்லா இருங்க…
அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… கவிதையெல்லாம் நல்லா இருக்கு…
ஆனா இதுவும் நீங்க “கசக்கி” எறிஞ்ச கவிதைங்கதான? ;-)
//பக்காத்தால கெடக்குற கல்ல எடுத்து நச்சுன்னு நடுமண்டைல போட்டுத் தாக்கிட்டுப் போங்கப்பூ... //
Unmaiyiliyae appadi thaan adikkanum pola irukku enakku.. Naangalaan oppicela blog padikkaravangannu therinjum eppadi ivlo dhilla neenga ithana heartine padam podalaam.. Paarunga.. naan padikkum bodhu pakkathula irundha ponnu paathutu.. ippadi listu pottu heartine photova vechirukkeengalaennu enna kaalaikkudhu paar.. adhu kaalaichadhoda nikkama team-ayae vera thonaikku izhukkudhu :-(
//முகம்பார்க்கும் கண்ணாடி கூட
உன் முகத்தைதான்
காட்டுகிறது...
கேட்டால்...
'உன் விழியில்தான் கோளாறு'
என்ற நையாண்டி வேறு...//
ROTFL :-)
My fav :-)
Kavidhaina sentiya irukkumnbaanga.. andha rule-aiyum brk panniteengala.. asathunga :-)
Ella kavidhaiyumae super.. ungal kadhal kadhaigal + kavidhaigal thodara vaazhthukkal :-)
அழகான இதயங்கள்
கண்களுக்கு குளுமை
அற்புதமான கவிதைகள்
மனதுக்கு இனிமை
[unga rangela instant kavidhai edho try pannen.. :D]
ஜி,
கலக்கலா இருக்கு இந்த கவிதை...
//தனிமையின் தனிமையையும் //
kalakiteenga ji!
kavithai superrr. yaar kitaa kudutheenga..? :p
hhhhmmm intha neram paathu namakku paatu ezhutha varala!
//பக்காத்தால கெடக்குற கல்ல எடுத்து நச்சுன்னு நடுமண்டைல போட்டுத் தாக்கிட்டுப் போங்கப்பூ... இது கூட தெரியாம எப்படித்தான் ப்ளாக் படிக்கிறீங்களோ??//
ரொம்பத்தான் தமாசு உங்களுக்கு.. இருங்க போய் கல்லு பொறுக்கிட்டு வரேன். :-P
//நான்தான் தலைசிறந்த
மொழிப்பெயர்ப்பாளனாம்...
உன் மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும்
திறன் கொண்டதால்...//
சூப்பர் ஜி..
ஆமா.. இந்த அளவுக்கு பின்னி பெடலெடுக்கிறீங்க.. என்ன விஷேசம் ஜி.
கடந்து
போனதிலே
அவள்
வாசம் பார்த்ததிலே
சுவாசத்தில்
மலர்ந்ததிதுவோ!
பக்கத்துல இருக்க
படங்களும் அருமை ஜி..
அய்யோ.. நான் மெதுவா தான் கல்லெறிஞ்சேன்.. வலி அதிகமோ :-)
ஹையோ!!! இப்படியெல்லாம் அடிச்சு கெளப்பிட்டு கடைசில ஒத்த வரிய போட்டுக்கு வேண்டியது... ஹ்ம்ம்ம்...
எத்தனை பேர் கெளம்பியிருக்கிங்க இப்படி???
கவிதை எல்லாமே சூப்பர்ப்பா :)
அப்புறம் அப்பு இதை நான் இங்க இருந்து copy பண்ணலை. ஒரு ஃப்ரெண்ட் forward பண்ணினதுல இருந்து சுட்டேன். உங்க comment பாத்ததுக்கு அப்புறம்தான் இங்க வந்து பாத்தேன். so என் மேல எந்த பழியும் போடப்படாது :))))
//அருட்பெருங்கோ கல் என்னன்னா...
ஆங்… இப்படியெல்லாம் காதலொழுக கவிதையெழுதிட்டு அப்புறம் நாங்கலாம் தனியாளுங்க காதல் நாள் வாழ்த்து சொல்ல மாட்டோம் அன்பர் நாள் வாழ்த்துதான் சொல்லுவோம்னு அழிச்சாட்டியம் வேற…. ம்கும் நல்லா இருங்கப்பா நல்லா இருங்க…//
அருள், அப்படியே வழிமொழிகிறேன்
ஜி, என்னது? காதலர் தினம் அதுவுமா இப்படி காதல் தேன் சொட்ட சொட்ட காதல் கவிதைகளை வழங்கியிருக்கீங்களே... ஏதாவது விசேஷம் உண்டோ? ;-)
அடடே நமக்கு இப்படிலாம் எழுத வர மாட்டிகிதே!
நானும் கவிதை எழுதணும்னா என்னா பண்ணனும்??
ஆஃபிஸ்ல எக்கச்சக்க தேவையில்லாத ஆணி சேந்திடிச்சு... அதுனால நான் அப்புறமா வந்து உங்க கல்லுக்கு எதிர் கல் விடுறேன். உங்கள் வசதிக்காக கல் செக்யூரிட்டிய கொஞ்சம் நேரத்துக்கு மூடி வச்சிருக்கேன் :)))
kallu nember 19
ji, veyil romba adichaa thaan ippidi ellam thonumnu nenachen.. neenga epdi boston kulurlayum ippidi ellam ?
கல்லு நெம்பர் இருவது:
கவிதைஸ் டாப்பு டக்கர் ஜி :)
இதப்பாத்தா திருநெல்வேலில ஒரு கொசுவத்தி கதை இருக்கும் போலிருக்கே...
(பாட்ஷா ஸ்டைல்ல..)
இந்த கவிதய பாத்த வைரமுத்து வாலி எல்லாம் "இது ஏதோ சாதாரனமானவன் எழுதினது மாதிரி தெரியல. நாடி,நரம்பு,ரத்தம்,புத்தி எல்லாத்துலயும் காதல் ஊரிப்போன ஒருத்தனால தான் இப்பிடி எழுத முடியும்"னு சொல்றாங்க...
சொல்லுங்க. நீங்க திருநெல்வேலில என்ன பண்ணிட்டு இருந்தீங்க.
சொல்லுங்க !
சொல்லுங்க !!
சொல்லுங்க !!!
:-)
//
hhhhmmm intha neram paathu namakku paatu ezhutha varala!
//
@அம்பி
ஏன் ஏன் ஏன்னு கேக்குறேன். உங்களுக்கு எதுக்கு இனிமே? அப்பிடியே பாட்டு எழுத வந்தாலும் என்ன மாதிரி பசங்களுக்கு குடுத்து உதவுங்க :)
kalakal kavidhaigal Ji :)
//சாதல் இல்லாத
காதல் செய்ய
வாழ்த்துக்கள்..//....idhu ultimate :)
//
நானும் கவிதை எழுதணும்னா என்னா பண்ணனும்??//
ரெண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துட்டு யோசி...
//ரெண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துட்டு யோசி...//
பாருங்கய்யா அநியாயத்த இந்த சின்ன விஷயம் கூட தெரியாம காதலிச்சாதான் கவிதை வரும்னு இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருந்தேன்.
அதான பாத்தேன். ஜீ கவிதைல பிச்சி உதறும்போதே நினைச்சேன்.
இவரே இப்படின்னா
வைரமுத்து..
பா.விஜய்
முத்துக்குமார்
இவங்க எல்லாம்...
அய்யோ கண்ண கட்டுது.
கல்ல பொறுக்கிட்டு வரேன்பா.
அழகான கவிதைகள் ஜி!!
வாழ்த்துக்கள்!! :-)
//Anonymous said...
As usual .. Gud Ones..
Nayagan.//
Thanks machi... un aalukku try panni paaru :)))
//Selva said...
ithu varaikkum nee ezhuthinathaiyae naanga nambinom... ithai kavidhainnu sonna mattum naanga nambamalaiya poga porom... //
athu machi... naama ezuthurathu kavithai illainaa.. appuram intha ulakathula kavithainnu onnu kidayave kidayaathu...
//ithu kavidhaithan.. kavidhaiyaethan.. //
urakkas solli maarthattiya nanbaa... unakku aayiram nanRihal
//தூயா said...
நல்லாதானே எழுதியிருக்கிங்க...இருந்தாலும் கல் எறிஞ்சிட்டு போகலாம் என்று வந்தேன் ;)//
தூயா.. பேருக்கு ஏத்தமாதிரியே உண்மையத்தான் சொல்றீங்கன்னு நம்புறேன். கால வாரிடாதீங்க...
// அருட்பெருங்கோ said...
ஆங்… இப்படியெல்லாம் காதலொழுக கவிதையெழுதிட்டு அப்புறம் நாங்கலாம் தனியாளுங்க காதல் நாள் வாழ்த்து சொல்ல மாட்டோம் அன்பர் நாள் வாழ்த்துதான் சொல்லுவோம்னு அழிச்சாட்டியம் வேற…. ம்கும் நல்லா இருங்கப்பா நல்லா இருங்க…//
அதான் டிஸ்கி கரெக்ட்டா சொன்னோம்ல... எல்லாம் நம்மளோட நண்பர்களுக்காக முரசு...
//அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… கவிதையெல்லாம் நல்லா இருக்கு…
ஆனா இதுவும் நீங்க “கசக்கி” எறிஞ்ச கவிதைங்கதான? ;-) //
எல்லாம் உங்க கவிதைய பாத்த எஃபெக்டுதான் ;)))
// G3 said...
Unmaiyiliyae appadi thaan adikkanum pola irukku enakku.. Naangalaan oppicela blog padikkaravangannu therinjum eppadi ivlo dhilla neenga ithana heartine padam podalaam.. Paarunga.. naan padikkum bodhu pakkathula irundha ponnu paathutu.. ippadi listu pottu heartine photova vechirukkeengalaennu enna kaalaikkudhu paar.. adhu kaalaichadhoda nikkama team-ayae vera thonaikku izhukkudhu :-( //
அவிங்களுக்கு யாரும் அனுப்பலங்குற பொறாமை.. நீங்க இத டவுண்லோட் பண்ணி உங்காளுக்குப் போய் கொடுங்க... காபி ரைட்ஸ் பிரச்சனையெல்லாம் இல்ல.. இத நீங்கதான் எழுதுனீங்கன்னு சொன்னாகூட பரவாயில்ல :))
[அப்பாடா.. ஒரு அட்வைர்டைஸ்மெண்ட் முடிஞ்சிடிச்சு]
//ROTFL :-)
My fav :-)
Kavidhaina sentiya irukkumnbaanga.. andha rule-aiyum brk panniteengala.. asathunga :-) //
காமெடியாத்தான் எழுதணும்னு நெனச்சேன். அப்புறம் எதுக்கு உங்கள மாதிரி காதலர்கள சும்மா வம்புக்கு இழுக்கணும்னுதான் விட்டுட்டேன் :)))
// G3 said...
Ella kavidhaiyumae super.. ungal kadhal kadhaigal + kavidhaigal thodara vaazhthukkal :-) //
அவ்வ்வ்வ்வ்.... இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்குது....
// G3 said...
அழகான இதயங்கள்
கண்களுக்கு குளுமை
அற்புதமான கவிதைகள்
மனதுக்கு இனிமை
[unga rangela instant kavidhai edho try pannen.. :D] //
ஆஹா.. கவிதாயினி காயத்ரி...
இன்ஸ்டண்ட் காஃபி பிரமாதம்....
//வெட்டிப்பயல் said...
ஜி,
கலக்கலா இருக்கு இந்த கவிதை... //
நன்றி வெட்டி...
நான் கவுஜன்.. கவுஜன்... காதல் இளவரசனே சொல்லிட்டாரு.. :)))
// Appaavi said...
//தனிமையின் தனிமையையும் //
kalakiteenga ji! //
வாங்க அப்பாவி.. ரொம்ப அப்பாவியா இருக்கீங்க படத்துல.. :))
// ambi said...
kavithai superrr. yaar kitaa kudutheenga..? :p//
உங்க ப்ளாக்.. அப்புறம் பிரியா ப்ளாக்கெல்லாம் பாத்ததுக்கப்புறம்தான் இந்த கவிதை பிரம்மனே பிறந்தான்...
//hhhhmmm intha neram paathu namakku paatu ezhutha varala!//
கவலப்படாதீங்க... சும்மா மானே தேனே ன்னு போட்டு தங்கமணிக்கிட்ட கொடுத்திடுங்க...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ரொம்பத்தான் தமாசு உங்களுக்கு.. இருங்க போய் கல்லு பொறுக்கிட்டு வரேன். :-P //
யாரும் நம்மல த்தூ ன்னு துப்புறதுக்குள்ள நாம முந்திக்கணும்ல.. அதான் ;)))))
// மு.கார்த்திகேயன் said...
சூப்பர் ஜி..
ஆமா.. இந்த அளவுக்கு பின்னி பெடலெடுக்கிறீங்க.. என்ன விஷேசம் ஜி.//
காதலாகி கசிந்துக் கொண்டிருக்கும் சில நண்பர்களை நினைத்துப் பார்த்தபோது ஏற்பட்ட இயற்கை மாற்றம்... கண்டுகிடாதீங்க...
//கடந்து
போனதிலே
அவள்
வாசம் பார்த்ததிலே
சுவாசத்தில்
மலர்ந்ததிதுவோ!//
உங்கள கவிஞன் நான் சர்டிஃபிகேட் இனியும் கொடுக்கத் தேவையில்லை...
//பக்கத்துல இருக்க
படங்களும் அருமை ஜி..//
ஃபார்வேர்ட்ல வந்தது...
//அய்யோ.. நான் மெதுவா தான் கல்லெறிஞ்சேன்.. வலி அதிகமோ :-) //
நாங்க கைப்புள்ள பரம்பரைல.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம். ;)))
// இம்சை அரசி said...
ஹையோ!!! இப்படியெல்லாம் அடிச்சு கெளப்பிட்டு கடைசில ஒத்த வரிய போட்டுக்கு வேண்டியது... ஹ்ம்ம்ம்...
எத்தனை பேர் கெளம்பியிருக்கிங்க இப்படி???//
இதெல்லாம் நல்லதுக்கில்ல இம்சை... நம்பணும்... நான் நல்லவன்னு சொன்னாலும் நம்பணும்.
//கவிதை எல்லாமே சூப்பர்ப்பா :) //
இருந்தாலும் உங்க படக் கவிதை மாதிரி வருமா????
//இம்சை அரசி said...
அப்புறம் அப்பு இதை நான் இங்க இருந்து copy பண்ணலை. ஒரு ஃப்ரெண்ட் forward பண்ணினதுல இருந்து சுட்டேன். உங்க comment பாத்ததுக்கு அப்புறம்தான் இங்க வந்து பாத்தேன். so என் மேல எந்த பழியும் போடப்படாது :)))) //
இருந்தாலும் பொத போட்டது நான்தான். இப்பதான் அமெரிக்கா கோர்ட்ல மனு தாக்கல் பண்ணிருக்கேன். காப்பி ரைட்ஸ் அத்துமீறலுக்காக நோட்டீஸ் உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்குது....
// பிரேம்குமார் said...
அருள், அப்படியே வழிமொழிகிறேன்//
ஆஹா... கூட்டம் சேத்துட்டாங்கையா...
//ஜி, என்னது? காதலர் தினம் அதுவுமா இப்படி காதல் தேன் சொட்ட சொட்ட காதல் கவிதைகளை வழங்கியிருக்கீங்களே... ஏதாவது விசேஷம் உண்டோ? ;-) //
அடுத்த பிப்ரவரிக்குள்ளயாவது விசேஷம் வரணும்னுதான் இந்த அவதாரமெல்லாம். :))))
// தம்பி said...
அடடே நமக்கு இப்படிலாம் எழுத வர மாட்டிகிதே!
நானும் கவிதை எழுதணும்னா என்னா பண்ணனும்?? //
மொதல்ல ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு நல்லவர புகழ்ந்து நாலு வார்த்தை சொல்லணும். அதுவே மருவி கவிதையாயிடும். உதாரணத்துக்கு என்னைய புகழலாம் :))
//Arunkumar said...
ji, veyil romba adichaa thaan ippidi ellam thonumnu nenachen.. neenga epdi boston kulurlayum ippidi ellam ? //
என்னப் பண்றது.. சுத்திவுள்ளவங்க பண்ற காதல் ரவுசுல வெயில் அதிகமாகி இப்படி ஆகிப் போச்சு...
//கவிதைஸ் டாப்பு டக்கர் ஜி :)//
நன்றிங்கோ....
//இதப்பாத்தா திருநெல்வேலில ஒரு கொசுவத்தி கதை இருக்கும் போலிருக்கே... //
திருநெல்வேலியப் பத்தி பேசாதீங்க.. சென்னைக்கு வந்ததுக்கப்புறம்தான் கண்ணே கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தது. அதுக்கு முன்னாடி, மழையிலும் வெயில்தான் :((
//(பாட்ஷா ஸ்டைல்ல..)
இந்த கவிதய பாத்த வைரமுத்து வாலி எல்லாம் "இது ஏதோ சாதாரனமானவன் எழுதினது மாதிரி தெரியல. நாடி,நரம்பு,ரத்தம்,புத்தி எல்லாத்துலயும் காதல் ஊரிப்போன ஒருத்தனால தான் இப்பிடி எழுத முடியும்"னு சொல்றாங்க...
சொல்லுங்க. நீங்க திருநெல்வேலில என்ன பண்ணிட்டு இருந்தீங்க.
சொல்லுங்க !
சொல்லுங்க !!
சொல்லுங்க !!!
:-) //
ஆஹா... அருண்.. பேசாம நீங்க ஆரக்கில ரிஸைன் பண்ணிட்டு டைரக்டர் ஆயிடுங்க.. ;)))
//Arunkumar said...
ஏன் ஏன் ஏன்னு கேக்குறேன். உங்களுக்கு எதுக்கு இனிமே? அப்பிடியே பாட்டு எழுத வந்தாலும் என்ன மாதிரி பசங்களுக்கு குடுத்து உதவுங்க :) //
கவுஜயத்தான் செட்டான காதலிக்கும் கொடுக்கலாமே.. ஏன் இப்படி அப்பிய ஒரண்ட இழுக்குறீங்க...
//Bharani said...
kalakal kavidhaigal Ji :)
....idhu ultimate :) //
நன்றி பரணி... அப்போ.. அதுக்கு முன்னாடி எழுதுனதெல்லாம் வெத்தா? :(((((
// வெட்டிப்பயல் said...
ரெண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துட்டு யோசி... //
ஏம்பா வெட்டி.. இப்படி நல்லா இருக்குற தம்பியாபிள்ளைய கெடுக்குறீரும்...
// தம்பி said...
பாருங்கய்யா அநியாயத்த இந்த சின்ன விஷயம் கூட தெரியாம காதலிச்சாதான் கவிதை வரும்னு இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருந்தேன்.//
இதென்ன வம்பாப் போச்சு... கவுஜ எழுதுறதுக்கு இதெல்லாம் தேவயில்லப்பா... எவனயாவது பழி வாங்கணும்னு ஒரு சின்ன எண்ணம் மட்டும் இருந்தா போதும். :)))))
//அதான பாத்தேன். ஜீ கவிதைல பிச்சி உதறும்போதே நினைச்சேன்.
இவரே இப்படின்னா //
அய்யயோ.. டாஸ்மாக்க எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாத ஒரு பச்சப்புள்ளையப் பாத்து இப்படி கேட்டுப் புட்டீங்களே.. இது அடுக்குமா?
//வைரமுத்து..
பா.விஜய்
முத்துக்குமார்
இவங்க எல்லாம்...
அய்யோ கண்ண கட்டுது. //
அவிங்கலாம் நம்மளோட ரெகுலர் கஸ்டமர்தான். கொஞ்சம் நேரத்துல அவிங்களே வந்து பின்னூட்டம் போடுவாங்க பாருங்க...
//மணி ப்ரகாஷ் said...
கல்ல பொறுக்கிட்டு வரேன்பா. //
வாங்க.. பொறுமையா வாங்க...
// CVR said...
அழகான கவிதைகள் ஜி!!
வாழ்த்துக்கள்!! :-) //
நன்றி CVR... புதுசா வந்திருக்கீங்க... அதுனால உங்களுக்கு ஒரு ஸ்பெஸல் டீ பார்ஸல் வந்துக்கிட்டே இருக்குது...
ji, director aayidalaam.. edho producer venumaame.. seri neenga solliteengalle, namma kadhal ilavarasan vettiya herova vachu iliyana illena vera edunaachum latest tollywood heroinea potu padam panniduvom. aama aama, lyrics neenga thaan :)
by the by naan Indiala irukkumbodu thaan andha company.inga vera company :)
arai sadam naana?
//
கவுஜயத்தான் செட்டான காதலிக்கும் கொடுக்கலாமே.. ஏன் இப்படி அப்பிய ஒரண்ட இழுக்குறீங்க...
//
aamanla, ippidi vera onnu irukka..
sorry ambi. namma Ji thaane, copyrights ellam kedayaadhu.. indha kavithaise use pannikunga :)
ROFL! ending nenachu srikiren!
//யாருப்பா அது.. "இத நாங்க சொல்லணும்"னு சவுண்ட் உடுறது... திருநெல்வேலி அல்வாக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல.. தெரியும்ல... :))))
//
கோயம்புத்தூர் எதுக்கு famous தெரியும்ல!
அடடா! உருகறீங்க!
//பூக்களைப் பறிக்காதீர்'
உன் அன்பு கட்டளையையும்
அத்துமீறினேன்...
[Photo]உன் கூந்தலைச் சேராமல்
மலர மாட்டேனென்று
அடம்புடிக்கும்
பூக்களுக்காக...
/
இதுல ஒரு இரெண்டு பாரா அந்த பொண்ணு கிட்ட கொடுத்து இருந்தீங்க.... இப்போ பதிவு எல்லாம் போட்டு நேரம் வீணாக்குவீங்க???
கவிதை அருமை ஜி! வாழ்த்துக்கள்!
இது extra கல்!
காதலர்கள் தினம் என்று சொல்லி என்னை இப்படி கண்ணீர் விட வைத்து விட்டீர்களே.அன்பர்கள் தினம் என்று சொல்லனும்.என்னை மாதிரி singles க்கு எல்லாம் இப்படிதான் சொல்லனும் என்ன?காதல் கவிஜ ச்சீ கவிதை எல்லாம் நன்றாக இருக்கின்றது,இப்படி பட்ட மிக பெரும் கவிஞர் உங்கள் முன்னால் நான் எழுதுவது எல்லாம் எந்த மூலை?
//Dreamzz said...
ROFL! ending nenachu srikiren! //
ஏன் இப்படி???
//கோயம்புத்தூர் எதுக்கு famous தெரியும்ல! //
கோயம்புத்தூர் காரங்க ரொம்ப மரியாதையான பசங்க... அதுலதான் ஃபேமஸ்....
//இதுல ஒரு இரெண்டு பாரா அந்த பொண்ணு கிட்ட கொடுத்து இருந்தீங்க.... இப்போ பதிவு எல்லாம் போட்டு நேரம் வீணாக்குவீங்க??? //
அப்பெல்லாம் கவித வரலியே... இப்பத்தான் வருது... ஏதோ சொல்வாங்களே.. கல்ல கண்டா...
//கவிதை அருமை ஜி! வாழ்த்துக்கள்! //
நன்றி ட்ரீம்ஸ்... எக்ஸ்ட்ரா கல்லுக்கும் சேத்து... ;)))
// துர்கா said...
காதலர்கள் தினம் என்று சொல்லி என்னை இப்படி கண்ணீர் விட வைத்து விட்டீர்களே.அன்பர்கள் தினம் என்று சொல்லனும்.என்னை மாதிரி singles க்கு எல்லாம் இப்படிதான் சொல்லனும் என்ன?காதல் கவிஜ ச்சீ கவிதை எல்லாம் நன்றாக இருக்கின்றது,இப்படி பட்ட மிக பெரும் கவிஞர் உங்கள் முன்னால் நான் எழுதுவது எல்லாம் எந்த மூலை? //
துர்கா... நம்ம மாதிரி ஆட்களுக்குத்தான் இதுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் போட்டோம்ல.. இது பாவம் காதலர்களுக்காக...
மிக பெரும் கவிஞரா?
ஏன் இவ்வளவு உள்குத்து... நேராவே சொல்லிருக்கலாம்ல.. கவிதை வேஸ்டுன்னு...
//சாதல் இல்லாத
காதல் செய்ய
வாழ்த்துக்கள்...//
ஆஹா அருமைங்க. இன்னும்...இன்னும் ...இன்னும் நிறைய எழுதுங்க ஜி.
கவிதை நல்லா இருக்கு. ஆனா இந்த காதல் கவிதை எல்லாம் நமக்கு வராது. அதனால
காதலால் வாய்த்த கவிகள் பலவுண்டு
காதலால் மாய்ந்த கவிகளும் இங்குண்டு
காதலால் என்ற கருத்துண்டிங் கென்தனக்
காதலால் சென்றேன் கழன்று.
காதலால் வாய்த்த கவிதைகள் பலவுண்டு
காதலால் (கொல்லுதல்) இறந்த கவிஞர்களும் இங்குண்டு.
காதல் ஆல் (விடம்) என்ற கருத்து உண்டு எனக்கு
ஆதலால் கழன்று செல்கிறேன்.
//நீங்க இத டவுண்லோட் பண்ணி உங்காளுக்குப் போய் கொடுங்க... //
//அப்புறம் எதுக்கு உங்கள மாதிரி காதலர்கள //
Enakkae theriyaadha matteru ungalukku eppadi therinjudhu? Seri soldradha dhaan sonneenga.. appadiyae paiyana pathina detailum solliteenganna nalla irukkum... Naanum andha paavapatta jeevan yaarunnu therinjippen illa :P
//ஆஹா.. கவிதாயினி காயத்ரி...//
ROTFL :-) Best joke of the year!!! Nallavae kaamidi pandreengappa enna vechu :P
ஆகா கல்லெறியலாம்னு வந்தா எல்லாரும் எறிஞ்சு எறிஞ்சு இங்கன ஒரு மலையே இருக்கு:)
இவ்ளோ அருமையா எழுதிட்டு எப்டி தான் எழுதறீங்களோ அப்டின்னு என்னைய கேட்கறீங்க:)
//சாதல் இல்லாத
காதல் செய்ய
வாழ்த்துக்கள்...
//
super punch :) nice
yepdi na ipdi yellam..All ur kavidhais are superb...
நான்தான் தலைசிறந்த
மொழிப்பெயர்ப்பாளனாம்...
உன் மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும்
திறன் கொண்டதால்...
romba rasichadhu...
En kitta tution kaetadhukkae ivalavu arpudhamana kavidhaigala;)....Okay okay ..thituradhu kaetkudhu....Yaaruppa anga naan varaen...
\\சாதல் இல்லாத
காதல் செய்ய
வாழ்த்துக்கள்...\\
ம்ம்ம்...அருமையான, உண்மையான்ன வரிகள்..
வாழ்த்துக்கள்...
// ILA(a)இளா said...
ஆஹா அருமைங்க. இன்னும்...இன்னும் ...இன்னும் நிறைய எழுதுங்க ஜி. //
வாங்க "டேய் காதலா" படைத்த விவசாயக் கவிஞரே.... இந்த மாதிரி பின்னூட்டம் போடுற உங்கள மாதிரி ஆட்கள் இருக்குற வரைக்கும் எழுதித் தள்ளிற மாட்டோம்... :)))))
காதலர் தினத்துக்கு போட்டு தாக்கிட்டீங்க....நமக்கு இல்லனாலும் நாலு பேருக்கு உதவும்னு...நாயகன் ரேஞ்சுக்கு இருக்கீங்க :-)
//பக்காத்தால கெடக்குற கல்ல எடுத்து நச்சுன்னு நடுமண்டைல போட்டுத் தாக்கிட்டுப் போங்கப்பூ...//
ஹி ஹி இது எல்லாம் நீங்க சொல்லித்தான் நாங்க பண்ணனுமா :-)
//FloraiPuyal said...
கவிதை நல்லா இருக்கு. ஆனா இந்த காதல் கவிதை எல்லாம் நமக்கு வராது. அதனால
காதலால் வாய்த்த கவிகள் பலவுண்டு
காதலால் மாய்ந்த கவிகளும் இங்குண்டு
காதலால் என்ற கருத்துண்டிங் கென்தனக்
காதலால் சென்றேன் கழன்று.
காதலால் வாய்த்த கவிதைகள் பலவுண்டு
காதலால் (கொல்லுதல்) இறந்த கவிஞர்களும் இங்குண்டு.
காதல் ஆல் (விடம்) என்ற கருத்து உண்டு எனக்கு
ஆதலால் கழன்று செல்கிறேன். //
வாங்க ஃப்லோரை புயல் (என்னங்க பேர் இது)... கவிதைய வெண்பாவால் வடிச்சிட்டு, காதல் கவிதை வராதுன்னு புருடா விடுறீங்க...
// G3 said...
Enakkae theriyaadha matteru ungalukku eppadi therinjudhu? Seri soldradha dhaan sonneenga.. appadiyae paiyana pathina detailum solliteenganna nalla irukkum... Naanum andha paavapatta jeevan yaarunnu therinjippen illa :P //
இப்படியெல்லாம் ஜகா வாங்கினா நாங்க நம்பிடுவோமா????
// G3 said...
ROTFL :-) Best joke of the year!!! Nallavae kaamidi pandreengappa enna vechu :P //
நான் அடிச்ச காமெடி உங்களுக்கு புரிஞ்சிப் போச்சா.... ;)))))
//Arunkumar said...
ji, director aayidalaam.. edho producer venumaame.. seri neenga solliteengalle, namma kadhal ilavarasan vettiya herova vachu iliyana illena vera edunaachum latest tollywood heroinea potu padam panniduvom. aama aama, lyrics neenga thaan :)//
இலியானான்னா நான் தான் ஹீரோ ;)))
// வேதா said...
ஆகா கல்லெறியலாம்னு வந்தா எல்லாரும் எறிஞ்சு எறிஞ்சு இங்கன ஒரு மலையே இருக்கு:)
இவ்ளோ அருமையா எழுதிட்டு எப்டி தான் எழுதறீங்களோ அப்டின்னு என்னைய கேட்கறீங்க:) //
உங்கள மாதிரி ஆட்களோட கவிதையப் பாத்துட்டு ஒரு தாக்கத்துல எழுதிட்டேன். :)))
ஆனாலும் கவிஞர்லாம் கர்வம் இருக்கணும். இப்படி தன்னடக்கம் இருக்கக்கூடாது. உங்களத்தான் சொல்றேன்.. ;))))
//Adiya said...
super punch :) nice //
நன்றி அடியா... ஆமாம்.. சூப்பர் பஞ்ச்னு நீங்க எறிஞ்ச கல்ல சொன்னீங்களா.. இல்ல???
//ராஜி said...
yepdi na ipdi yellam..All ur kavidhais are superb...//
இன்னைக்கு என்ன கவிதாயினிகளெல்லாம் பாராட்டுறாங்க???
//En kitta tution kaetadhukkae ivalavu arpudhamana kavidhaigala;)//
கரெக்டா குருதட்ஷனை அனுப்பி வைக்கிறீங்க... இல்லனா டகுலு பிகுலாயிடும்...
//....Okay okay ..thituradhu kaetkudhu....Yaaruppa anga naan varaen... //
தெரிஞ்சுப் போச்சா... சரி அடுத்த தடவ மாட்டுவல்ல.. அப்ப பாத்துக்கிறேன்...
//கோபிநாத் said...
ம்ம்ம்...அருமையான, உண்மையான்ன வரிகள்..
வாழ்த்துக்கள்... //
என்ன கோபிண்ணே....
உண்மையான வரிகள் அப்படி இப்படின்னு உருகுற மாதிரி இருக்குது... இன்னா மேட்டர்???
// Syam said...
காதலர் தினத்துக்கு போட்டு தாக்கிட்டீங்க....நமக்கு இல்லனாலும் நாலு பேருக்கு உதவும்னு...நாயகன் ரேஞ்சுக்கு இருக்கீங்க :-) //
நாமதான் சாஜகான் பரம்பரை ஆச்சே...
//ஹி ஹி இது எல்லாம் நீங்க சொல்லித்தான் நாங்க பண்ணனுமா :-) //
பண்ணாம போனாதான் சும்மா விட்டுறுவோமா????
kavidhai super maams ! heart hearta pottu thakiteenga :)
love pannapogum/panitrukkum ila nenjangalukelle! Ji Blogsitelendhu bit adichuttu kilambunga ! LOL
படார் படார் படார்
கல் இல்ல வாத்யாரே.. நா எறிஞ்சது பூ
//ஏன் இவ்வளவு உள்குத்து... நேராவே சொல்லிருக்கலாம்ல.. கவிதை வேஸ்டுன்னு... //
கவிதை வேஸ்டுனா நான் மறுமொழியே இட்டு இருக்க மாட்டேன் ஜி.உள்குத்து எல்லாம் தெரியாத அப்பாவி பெண்ணை இப்படி சொல்லிவிட்டீர்களே ஜி!
\\என்ன கோபிண்ணே....
உண்மையான வரிகள் அப்படி இப்படின்னு உருகுற மாதிரி இருக்குது... இன்னா மேட்டர்???\\
ஜி கண்ணா
உருகி உருகி கவிதை எல்லாம் எழுதியிட்டு மேட்டரை ஏன்கிட்ட கேட்கிறியா
ஏன்கிட்ட ஒன்னும் இல்லை
உன்கிட்ட .......உண்மைய சொல்லு
// Kittu said...
kavidhai super maams ! heart hearta pottu thakiteenga :)
love pannapogum/panitrukkum ila nenjangalukelle! Ji Blogsitelendhu bit adichuttu kilambunga ! LOL //
Thanks kittu maama & Maami....
hearts ellaam forwardla vanththathuthaan... ellaarum bit adikkaththaane pottirukkoam :)))
//அபி அப்பா said...
படார் படார் படார்
கல் இல்ல வாத்யாரே.. நா எறிஞ்சது பூ//
பூ வா இப்படி சவுண்டு உடும்....
// துர்கா said...
கவிதை வேஸ்டுனா நான் மறுமொழியே இட்டு இருக்க மாட்டேன் ஜி.//
Hearta டச் பண்ணிட்டீங்க துர்கா...
//உள்குத்து எல்லாம் தெரியாத அப்பாவி பெண்ணை இப்படி சொல்லிவிட்டீர்களே ஜி! //
உள்குத்து தெரியாது ஓகே.. அது என்ன அப்பாவி பெண் :))))
//கோபிநாத் said...
ஜி கண்ணா
உருகி உருகி கவிதை எல்லாம் எழுதியிட்டு மேட்டரை ஏன்கிட்ட கேட்கிறியா
ஏன்கிட்ட ஒன்னும் இல்லை
உன்கிட்ட .......உண்மைய சொல்லு//
யுவர் ஆனர். வெண்டுமென்றே எதிர்கட்சி வக்கீல் இந்த கேசை திசைத் திருப்பப் பார்க்கின்றார். கொஞ்சம் அவருக்கும் என்னுடைய கவிதைய நூறு தடவப் படிக்கச் சொல்லுங்க....
//வாங்க அப்பாவி.. ரொம்ப அப்பாவியா இருக்கீங்க படத்துல.. :))//
நெசமாலுமே நான் ரொம்ப ரொம்ப அப்பாவிதாங்க. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமுனு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க :-))
துர்கா said...
அப்பாவி பெண்ணை இப்படி சொல்லிவிட்டீர்களே ஜி!
அலோ!! அலோ! துர்க்காவா ------ "அப்பாவி" வார்த்தைக்கு நாங்க காப்பிரைட் வாங்கி இருக்கோமாக்கும் :-)
\\பூக்களைப் பறிக்காதீர்'
உன் அன்பு கட்டளையையும்
அத்துமீறினேன்...
[Photo]உன் கூந்தலைச் சேராமல்
மலர மாட்டேனென்று
அடம்புடிக்கும்
பூக்களுக்காக...\\
அட அட .......அசத்தலோ அசத்தல் ஜி:))
\\என்னது இது??? கவிதைன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டு சும்மா போனா எப்படி? பக்காத்தால கெடக்குற கல்ல எடுத்து நச்சுன்னு நடுமண்டைல போட்டுத் தாக்கிட்டுப் போங்கப்பூ... இது கூட தெரியாம எப்படித்தான் ப்ளாக் படிக்கிறீங்களோ??\\
நல்லா கவிதை எழுதிட்டு ....அதென்ன திருஷ்டி கழிப்பு மாதிரி இப்படி ஒரு பில்ட் அப்???
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஜி!
\தனிமையின் தனிமையையும்
விரட்டியடிக்கிறது
உன் நினைவுகளின்
கொசுறு மாத்திரமே...
முழுவதும்
வந்தால்???\
வந்தால்....
கொடுமையின் கொடுமையையும்
என்னான்னு தெரிஞ்சிடும்:)))
எக்ஸ்கூஸ்மீ........பழைய போஸ்டுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டா.....பதில் போட மாட்டீர்களா ஐயா??
அப்படியே கிவ்கட்டி வாங்க...