1. V.M.S Mahal, MaharjaNagar, Palayamkottai
    28/03/2010
    18

    View comments

  2. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை நண்பன் ஒருவன் வந்து எழுப்பினான்.

    "மச்சான்.... எழுந்திரிடா... கருமம் புடிச்ச மாதிரி சாங்காலம் அஞ்சு மணிக்கும் தூங்கிக்கிட்டு இருக்க?"

    "ஹேய் டூட்", இது நான்.

    "மவனே.. டூட் கீடுன்னா, பூட்டால அடிப்பேன். அது என்னடா வாய்க்கு படிக்கட்டு வச்சிருக்க"

    "டேய்.. அது ஃப்ரெஞ்ச் பியர்டுடா.."

    "ஆங்... நல்லா வருது வாய்ல... இங்கன ஷேவிங் பண்ண கூட காசு இல்லாம டி.ஆர். மாதிரி கிங் காங் வேசத்துல சுத்துனவந்தானடா நீ"

    "டேய்.. அது பருத்திவீரன் கார்த்தி ஸ்டைல்டா... சரி... ரொம்ப நாளா உடம்பு சரியில்லைனு கேள்விபட்டேன்"

    “ஆமாம் மச்சி. ஒரு வாரமா ஜலதோஷம். லைட்டா காய்ச்சலும்.”

    “ஐ எம் ஸாரி டா”

    “ஏன்டா ஸாரியெல்லாம் கேக்குற? என்னத் தப்பு பண்ணின?”

    “டேய். யாருக்காவது உடம்பு சரியில்லைனு கேள்விபட்டா எங்கூருல ஸாரி சொல்வாங்கடா”

    “எதுடா உங்கூரு? பய பாவம்னு ஒரு விசா எடுத்துக் கொடுத்து உன்னையெல்லாம் அமெரிக்கா அனுப்புனான் பாரு, அவன சொல்லணும்”

    "இங்க ஸ்டார் பக்ஸ் இருக்குதா?"

    "நைட் ஆனா, ஸ்டார் வரும். பக்ஸ் என்னோட டெஸ்டிங் டீம் கிட்ட கேட்டு சொல்றேன்"

    "டேய் கண்ட்ரி ஃப்ரூட்... நான் கேட்டது காஃபி கடை ஸ்டார் பக்ஸ்.. அமெரிக்கால தெருவுக்கு ஒன்னு அது இருக்கும்"

    "இங்க தெருவுக்கு ஒரு போஸ்ட் கம்பி இருக்கும். அதுலையும் தெரு நாயெல்லாம் உச்சா போய் அசிங்கம் பண்ணி வச்சிருக்கும். உனக்கு ஸ்டார் பக்ஸ் கேக்குதா?"

    "சரி. அட்லீஸ்ட் கஃபெ காஃபி டேயாவது போலாம்"

    நாங்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்தோம்.

    “டேய் என்னடா உங்கூருல வெயில்லாம் அடிக்குது”

    “அடங்கொய்யால... இருவது வருஷமா இங்குனதானே சுத்திக்கிட்டு திரிஞ்ச. ஒரு ஒன்றரை வருசம் அமெரிக்கா போனவுடனே உனக்கு இவ்வளவு திமிரா? பெங்களூருக்கே இந்த ஸீன் போடுறியே... நாலு வருஷம் சென்னைல படிச்சது மறந்து போயிடிச்சா மவனே...”

    “சரி.. ஃப்ரீயா விடு... ஃப்ரீயா விடு... இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்”

    அவன் ஹெல்மட்டை மாட்டி ரெடியானான்.

    "டேய். என்னடா என்ன பைக்குல வர சொல்ற? உங்கிட்ட கார் இல்லையா? எங்க அமெரிக்கால கார் இல்லைனா ஒரு பய மதிக்க மாட்டான்."

    "டேய் மூடிட்டு வா... இல்லனா ஸ்பீட் ப்ரேக்கர்ல ப்ரேக் அடிக்காம உன் டிக்கிய ஒடச்சிடுவேன்”

    நானும் அவனது பைக்கில் ஏறிச் சென்றேன். அப்பொழுது ஒருவன் குறுக்கே புகுந்து சென்றதோடு மட்டுமல்லாமல் எங்களைத் திரும்பிப் பார்த்து வழக்கமான அந்த மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தையைக் கூறிச் சென்றான்.

    "வாட் த... என்னடா ரூல்ஸ மீறுனது மட்டுமில்லாம கெட்ட வார்த்த வேற பேசிட்டுப் போறான்? ஃபிங்கர் காட்டுடா மாப்ள.."

    "ஏன் டா.. அவன் பேசுனது கெட்ட வார்த்தைன்ன நீ பேசுனது மட்டும் நல்ல வார்த்தையா? இங்க்ளிபிஷ்ல பேசுனா என்னமோ கெட்ட வார்த்தையே இல்லாத மாதிரி ஸீன் போடுவீங்களே.."

    “என்னடா.. உங்கூரு ரோடு இவ்வளவு கேவலமா இருக்குது”

    “என்னடா ஒரு பய ட்ராஃபிக் ரூல்ஸ மதிக்க மாட்டேங்றான்”

    “டேய் திஸ் இஸ் டூ மச்.. என்னடா எல்லாரும் ஹார்ன, மசாஜ் பால் மாதிரி கண்டினியஸ்ஸா அடிச்சிட்டே இருக்கீங்க. எங்கூருலெல்லாம் மாமா வந்து டிக்கட் கொடுத்திடுவான் தெரியும்ல”

    இப்படி தொடர்ந்து நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவே இல்லை. எப்படியோ காஃபி டேயும் வந்து சேர்ந்தோம். அங்கே வந்து கொண்டிருந்த ஒரு ஃபிகரிடம் “குட் ஈவினிங்” சொன்னேன்.

    “எக்ஸ் கியூஸ் மீ, டூ யூ நோ மீ?”

    “நோப்...”

    “அப்புறம் எதுக்குடா குட் ஈவினிங் சொன்ன? இது மாதிரி இன்னொரு தடவ வம்பிழுத்த ஈவ் டீஸிங்னு போலிஸ்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன்”

    அவள் மிரட்டலில் பயந்து வேகமாக என் நண்பனருகில் ஓடினேன்.

    “என்னடா ஐஸ்வர்யா ராய்க்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இந்த அலப்பற விடுறா. ஒரு குட் ஈவினிங் சொன்னதுக்கே பத்ரகாளியாட்டம் ஆடிட்டு போறா... எங்க அமெரிக்கால, பிட்ஷா ஃபிகர், பர்கர் ஃபிகர் னு எல்லாரும் அவுங்களாவே குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வாங்கடா. அதுக்கு பதில் சொன்ன சந்தோஷத்துலையே இதுவரைக்கும் பொண்ணுங்கக்கிட்ட பேசப் பயப்படுற என்னோட நண்பன், ‘நான் கடலை போட்டுட்டேன்’னு துள்ளி குதிச்சிட்டு இருக்கான்”

    “டேய்.. இது இந்தியா. உன்னோட அமெரிக்கா சேட்டையெல்லாம் அங்க வச்சிக்கோ. இங்கெல்லாம் டங்குவார கழட்டிடுவாளுங்க.”

    காப்பிக் கடைக்குச் சென்று, அவனுக்குத் தெரிஞ்ச கப்பச்சினோவும், எனக்கு தெரிஞ்ச கஃபே லாத்தேவும் வாங்கி அருந்தினோம்.

    “சரி மச்சான்... காச கொடுத்திடு”, நான் என் நண்பனிடம் கூறினேன்.

    “டேய், என்ன விட்டுருந்தா அந்த முக்கு கடைல மூனு ருபாய்க்கு காப்பி வாங்கி ஓசில தினத்தந்தில சினிமா அட்வர்டைஸ்மண்டாவது பாத்திட்டு வந்திருப்பேன். இங்க கூட்டிட்டு வந்துட்டு என்னைய காசு கொடுக்கச் சொல்றியா?”

    “சரி. ஓவரா அழாதே. நானே கொடுக்குறேன்.”

    காசை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். எங்களுக்கு பின்னாலேயே ஒரு காதல் ஜோடியும் வந்தார்கள். அவர்களுக்காக நான் கதவை திறந்து பிடித்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்தவர்கள் ஒரு ஐந்து ருபாய் நாணயத்தை என் கையில் திணித்தார்கள். நான் வேகமாக என் நண்பன் அருகில் சென்றேன்.

    “மச்சான். அந்தப் பையனுக்கு திமிரப் பாத்தியா? பக்கத்துல ஃபிகர் வந்தவுடனே வெட்டி பந்தாடா.. நான் ஒரு கர்டஸிக்காக கதவ தெறந்து விட்டா, அவன் வாட்ச்மேனுன்னு நெனச்சு அஞ்சு ருபாய கொடுத்துட்டுப் போறான்டா”

    “ஆமாம். நீ கொஞ்சம் சல்யூட்டும் சேத்து அடிச்சிருந்தீன்னா, பத்து ருபாயா கொடுத்திருப்பான். இது மாதிரி கதவு தெறந்து விடுறதெல்லாம் இன்னும் நம்ம மக்கள் பழகிக்கலடா. நீ கொஞ்சம் உணர்ச்சிகள கட்டுபடுத்து. ஒன்றரை வருச அலப்பறயெல்லாம் இங்க வந்தவுடனே ஃப்ரீயா விட்டுடணும்”

    நாங்கள் திருப்பி வீட்டிற்கு கிளம்பினோம்.

    “டேய் பீட்டர் பாண்டி, பெருசா அமெரிக்கா, அமெரிக்கான்னு பீத்திக்கிட்டு திரியிறியே... அங்க ஏதாவது ஒரு ஃபிகர புடிச்சியா? எனக்கு தெரிஞ்ச ஒரு கொல்டிகாரு வாரவாரம் வெள்ளைக்காரி, கறுப்பின்னு டேட்டிங்கா போய்கிட்டு இருக்கான்”

    “அப்படியாடா மச்சி!!! நாமெல்லாம் என்னைக்குடா திருந்திருக்கோம்?”

    “ஏன்டா உன் லிஸ்டுல என்னையும் சேக்குற? நாங்கெல்லாம் அல்ரெடி ஸெட்டில்ட்”

    “டேய் எப்படிடா? என் கூடத்தானே சுத்திக்கிட்டு திரிஞ்ச. அப்புறம் எப்படிடா?”

    “என் கூட சுத்திக்கிட்டு இருந்த நீயெல்லாம் அமெரிக்கா போகும்போது எங்களுக்கு ஸெட் ஆகக் கூடாதா?”

    “ம்ம்ம்... நல்லா இருடா. நானும் அமெரிக்கா மாப்பிள்ளைங்ற டைட்டில வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ண பாக்க வேண்டியதுதான்”

    “எலேய். அதெல்லாம் அந்த காலம். இப்பெல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைனாலே பதறுறானுங்க மாமனார்கள். படம்லாம் பாக்குறதில்லையா ராசா. கடைசில பல்பு வாங்குறதுக்கு மட்டும்தான்டி அமெரிக்கா மாப்பிள்ளை”

    “அப்போ நமக்கு ஹிந்திக்கார பொண்ணுதானா?”

    “ஏன்டா டேய் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமாடா உனக்கு? நமக்கு ஹிந்தி ஏக் தோ தீன தவிர ஏதாவது தெரியுமா? அட்லீஸ்ட் ஆங்கிலத்துலயாவது அஞ்சு நிமிசம் கடல போடத்தான் தெரியுமா? எதுக்குடா இந்த விபரீத ஆசையெல்லாம்?”

    “அப்போ ஆப்புத்தானா?”, நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே யாரோ தட்டுவதுபோல் இருந்தது.

    “எழுந்திரில. சாங்காலம் ஆறு மணியாகுது இன்னும் தூங்கிக்கிட்டு”, எங்க அம்மா வந்து என்னை எழுப்பி விட்டார்கள்.

    வெறும் கனவுதான். அதானே பாத்தேன். நாந்தான் தாயகத்தை (கேப்டன் படம் இல்லீங்க. நம்ம பாரத மாதா) விட்டுக்கொடுக்காத தன்மானத் தமிழன் ஆச்சே. நாமெல்லாம் இப்படி அமெரிக்காவ தாங்கி புடிப்போமா??

    ‘எல்லாம் சரி. ஏம்ல பகல்கனவு காணுத’ன்னு கேக்குதியலா??

    அமெரிக்கால இன்னும் ராத்திரிதான் அப்பு. :))))

    -----------------------

    மூத்தப் பதிவராயிட்டதுனால, புதுசா பதிவு எதுவும் போட முடியல. அதான் இந்த மீள்பதிவு :))
    32

    View comments

  3. மேகங்கள் இருமும்
    தூரல்மழை பொழுதுகளில்,
    நனைந்தபடியே பின்னாலிருந்து
    எனைக் கட்டியணைப்பதைவிட,
    தேனீர் கடைகளின் ஓரங்களில்
    மழைக்கு ஒதுங்குபவர்தான் அவர்...

    மின்னல்கள் படம்பிடிக்க
    வீராப்பாய் எதிர்நோக்குவது போன்றதொரு
    சிறுபிள்ளைத் தனங்கள்
    அவருக்கு கொஞ்சமும் கிடையாது...

    சூரியன் முளைக்கும்
    அதிகாலை வேளையில்
    என் முத்தங்களைக் காட்டிலும்
    ப்ரூவும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ஸுமே
    அவருக்குப் போதுமானதாய் இருக்கின்றன...

    இப்பொழுதெல்லாம்
    தொலைக்காட்சி தொடர்கள்தான்
    என் பொழுதுபோக்கு...
    கவிதைகள் ஏற்பதற்கும், ரசிப்பதற்கும்
    அவரது நேரமின்மைதான் காரணம்...

    இன்னும் எத்தனையோ எதிர்பார்ப்புகள்
    ஏமாற்றப்பட்டிருந்தாலும்,
    வாழ்க்கை ரசிக்கும்படியாகத்தான்
    இருக்கின்றது,
    நெரிசல் விளக்குச் சந்திப்புகளில்
    எதிர்படும்
    தலைசொறியும் சில பைத்தியங்களைப்
    பார்க்கும்வரை...
    37

    View comments



  4. உனக்கான கவிதையை
    இயற்ற முற்படும்
    ஒவ்வொரு அமர்வுகளின் முடிவிலும்
    வெற்றுப்பக்கங்களே கவிதைகளாய்
    மிஞ்சுகிறது...


    நாட்குறிப்பும், எழுதுகோலும் இல்லாத
    ரயில்பயண தனிமை
    பொழுதுகளை போன்றது,
    நீயில்லா தருணங்கள்...


    'எனக்கு கவிதை எழுதவே வரலடா'
    செல்லமாய் சிணுங்குகிறாய்...
    அன்று என் இதழ்களில்
    நீ இழைத்தக் கவிதையை விடவா
    எழுதிவிடப் போகிறார்கள்
    கல்லறையிலும், கர்வத்திலும் கிடக்கும்
    பெருங்கவிஞர்கள்??


    களைந்து கிடக்கும்
    சொற்களையெல்லாம் தேடி
    களைத்து கிடக்கின்றன
    அகராதிகளும் அகரமுதலிகளும்...
    உன் உதட்டுச்சாயம் படிந்த
    கைதுடைக்கும் தாள்முன்னே...


    எழுத முரண்டு பிடிக்கும்போது,
    கையுதறி மை தெளித்து
    கிறுக்குவது போலாவது கிறுக்கேன்...
    'கவிதையே கவிதை வரையும்'
    ஆச்சர்யகுறி வாக்கியம் கேட்டு
    வெகுநாட்களாகிறது...


    முத்தமிட்டு கையசைத்து
    நீ தெருமுனையில் மறைந்துபோகையில்,
    உன்னை எதிர்முனையில்
    புன்னகையோடு தோன்றவைப்பது
    கவிதைகளுக்குமட்டும்
    எப்படி சாத்தியப்படுகிறது?


    Image Courtesy: iloveimages
    37

    View comments

  5. பெண்ணின் மனதை தொட்டு படத்துல "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ"னு ஒரு பாட்டு வரும். வெளிநாட்டு பயபுள்ளைங்க, அந்தப் பாட்டுல அப்படி என்னத்த பாத்தாங்களோ தெரியல, Crazy Indian songனு Youtubeல தேடுனா, மொதல்ல அந்தப் பாட்டுத்தான் வந்து நிக்கும். அத வேற மொழிபெயர்க்குறேன் பேர்வழின்னு அசிங்க அசிங்கமா லாங்க்வேஜ உபயோகிச்சு அதுவும் பயங்கர ஃபேமஸாயிடிச்சு. "காய்ந்த நிலாவோ"வுக்கு ரைமிங்கா Benny Lavaனு போட்டு, புரபுதேவாக்கு அவிங்க வச்ச பேரே Benny Lavaனு ஆயிடிச்சு. அப்புறம் பென்னி லாவா பாட்டெல்லாம் தேடிபுடிச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சிருக்கானுங்க. விக்கிபிடீயால கூட Benny Lava ரெஃபரென்ஸ் இருக்கு.

    அந்த வீடியோவ வச்சி மக்கள் உருவாக்குன பல விடியோக்கள் இங்கே...

    தமிழ்ல அந்தப் பாட்ட ஆடி பாடி வெள்ளக்காரங்க எடுத்த விடியோ...



    சப்பமூக்கனுங்க உருவாக்குன அதே பாட்டோட ரீமிக்ஸ்... சவுண்ட் மிக்ஸிங்லாம் கலக்கிருக்கானுங்க... பாட்டு வரிகள் மட்டும் ரொம்ப கேவலமா இருக்கும்...



    இதான் அல்டிமேட்.... கொஞ்ச நாளைக்கு முன்னால முடிஞ்ச அமெரிக்க தேர்தல்ல போட்டியிட்ட மெக்கெயின், சாரா பாலின் ஜோடிங்கள கிண்டல் பண்ணி அதே பாட்ட ரீமிஸ் பண்ணிருக்காங்க...

    15

    View comments

  6. கதிரவன் தொலைந்து வெகுநேரம் ஆகியிருந்தது.மலரின் இதழ்களைபோல் விரிந்திருந்த ஓர் குவளையின் நடுவே, கண்ணாடி குமிழினுள் எடிசன் மட்டுமே லேசாய் விழித்திருந்த தனிமை சூழ்ந்த அறை. ஒருபக்கச் சுவரின் கணிசமான சுற்றளவை கவர்ந்திருந்த ஜன்னல், மெலிதான காற்றோடு, நிலவின் சிறு ஒளியினையும் கடத்தி வந்திருந்தது. வெளிச்சமென்றோ, இருளென்றோ பிரித்தறிந்துவிடாத ஒளியளவே மிதமாக காணப்பட்ட மங்கலான பொழுதில் காற்றின் அலாவலில் மேசைமேல் சிறகடித்துக் கொண்டிருந்தது ஓர் நாட்குறிப்பு.

    செவிப் புலங்கடந்த ஒலிகள் மட்டுமே நிறைந்திருந்த அவ்வறையில், சிதறிய பக்கங்கள் எழுப்பிய மெல்லிய ஒலியில் சிந்தனை களைந்தவனாய், வேகமாய் அந்நாட்குறிப்பை எடுத்து கட்டிலில் அமர்ந்தபடி புரட்ட ஆரம்பித்தான். கோடிமுறை அதனை படித்திருந்தாலும், முதல் பக்கத்திலேயே, முதன்முறை படிப்பதுபோன்றதொரு பரவசம் அவன் விழிகளில் விரிந்து, மெல்ல கண்ணீர் துளிகளாய் உருமாற ஆரம்பித்தன.

    முதல் பக்கம்.

    புன்னகையையும், கண்ணீரையும் விதைக்கும் நிகழ்வுகளை நினைவுகளாய் சிறைப்படுத்தும் முயற்சியே டைரி குறிப்புகள். இவ்விரு உணர்வுகளும் ஒன்றர கலந்தவைகளுள் மேலானது காதல். காதல், சிலருக்கு சிறகுகளாகவும், சிலருக்கு சிலுவைகளாகவும் வாய்க்கப்படலாம். இரண்டின் முடிவிலும், என்றும் ஈரமாக எஞ்சியிருக்கும் அழகான நினைவுகள். சாபங்கள் தூவிய வரங்கள் நிறைந்த என் காதலைப் பற்றிய குறிப்பின் தொகுப்பே இந்த மயிலிறகு பக்கங்கள்.

    ஜூலை 18 ஏதோவொரு நாள்.

    உன்னை எப்பொழுது முதன்முதலாக சந்தித்தேனென்பது எனக்கு நினைவில் இல்லை. ஒவ்வொரு விடியலிலும் கண்ணெதிரே தொங்கும் நாட்காட்டியை பார்த்தவுடன் நினைவுபடுத்த முயன்றும் தோற்றுத்தான் போகிறேன். உன்னை காதலிக்கப் போகிறேனென்பதை முன்பே அறிந்திருந்தால் அந்நாள் என் வாழ்நாளின் இன்னுமொரு பிறந்தநாளாயிருந்திருக்கும். அதனாலேயே உன் பிறந்தநாளை உன்னைச் சந்தித்த நாளென்றும் கூடுதலாக கொண்டாடுகிறேன். அன்று யாரோ ஒருவனுடன் நம் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாய். ஏனைய பெண்களிடமிருந்து தனித்துவிளங்கும் சிறப்பம்சம் எதுவுமில்லாத மற்றுமொரு ஃபிகராகத்தான் இருந்தாய்.

    ”அங்க பாருடா ஜான் ஆப்ரஹாமும், பிபாசா பாஸுவும்” என்று உன்னையும் அவனையும், நண்பனொருவன் ஆரம்பிக்க, “டேய்.. பிச்சுப்போட்ட பப்ஸ் மாதிரி இருக்கா.. அவள போய் பிப்ஸ் கூட கம்பேர் பண்ற?” என்று கலாய்த்த என்னை முறைத்தபடியே சென்றாய்.

    அன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்தில் உன்னை மறுபடியும் நம் கல்லூரி உணவகத்தில் பார்த்தேன். நண்பர்களிடம் உன்னை மாலை அதே இடத்தில் சந்திக்க வைக்கிறேனென்ற பந்தயத்திற்காக உன்னிடம் வந்து பேசினேன்.

    "ஸாரிங்க... அன்னைக்கு பசங்க உசுப்பிவிட்டதாலத்தான் ஓட்டிட்டேன்... தப்பா நெனச்சிக்காதீங்க" என்று நண்பர்களை ஊறுகாயாக்கி உன்னிடம் கடலையின் முதல் அத்தியாத்தை ஆரம்பித்தேன்.

    "காலேஜ் வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் பழகிப் போச்சுங்க... ஃப்ரீயா விடுங்க.." என்று மன்னிப்பு வழங்கும் தேவதையாய் நீயும் பதில் பேச, அப்போதைய உரையாடலின் முடிவில் நாம் மாலை சந்திப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். அன்றைய இரவு பந்தையத்தில் தோற்றதனால், அந்த மாதச் செலவுக்காக கொடுக்கப்பட்டிருந்த என் பணமனைத்தும் உதயம் மெஸ்ஸில் மொத்தமாக கரைந்தது. ஏமாற்றிய உன்னை வசைபாடியபடியே விடுதிக்கு வந்து சேர்ந்தேன். அன்று எங்கள் விடுதி தொலைப்பேசி அதிசயமாய் வேலை செய்தததை மன்னிப்புகள் தாங்கி வந்த எனக்கான உன் அழைப்பின் மூலமே அனைவரும் அறிந்து கொண்டனர்.

    ஆகஸ்ட் 21.

    இன்றுதான் முதன்முதலாக 'உனக்கு வரப்போற பொண்டாட்டிய பத்தி சொல்றேன் பாரு' என்று என் கையைப் பற்றி ரேகைகள் பார்த்தாய். இது ஐந்தாவது முதன்முறை. முதன்முறை காஃபி, முதன்முறை சினிமா, முதன்முறை கடற்கரை, முதன்முறை 'டா' போட்டழைத்தது போக முதன்முறை உன்னுடைய ஸ்பரிஷம். உன்னை முதன்முறையாக நான் கலாய்த்த இடத்திலிருந்து வேறொருவன் நம்மை கலாய்க்கும் நிலைவரை வளர்ந்திருந்தது நம் நட்பு.

    அக்டோபர் 17.

    புது மாணவர்களுக்காக நடைபெறும் நம் கல்லூரியின் கலைவிழா. 'அக்னி'. உன்னுடன் பழகிய நாளிலிருந்து நண்பர்களை மறந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாற்றினால் உன்னை விட்டு பிரிந்து நண்பர்களுடன் மட்டுமே நான் களிப்பதாக நமக்குள் ஓர் ஒப்பந்தம். புதிய மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் தபால்காரனாக்கி தன் காதலிகளுக்கு கடிதமெழுதி அனுப்பிக் கொண்டிருந்தனர் முதிய மாணவர்கள். தொலைவில் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் அமர்ந்திருந்த உன்னை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன் நான்.

    "மாப்ள... உன் லவ்வ பார்சல் பண்ணி உன் ஆளுக்கு அனுப்பிட்டோம்ல", என்று என் நண்பன் கூறியபிறகுதான் பார்த்தேன், புதிய மாணவன் ஒருவன் உன்னிடம் என்னை கைகாட்டி கொடுத்தச் சீட்டை. அதை வாசித்தபிறகு என்னை முறைத்துவிட்டு வெளியேறிய உன்னை சமாதானபடுத்த அரங்கிலிருந்து வெளிவந்தபோது நீ அங்கு இல்லை. நீ என்னை புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கையில் மறுபடியும் உள்ளே சென்றுவிட்டேன். அடுத்து வந்த அழகிப் போட்டிக்காகத்தான் உன்னை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றேனென்று பிரிதொரு நாள் நீ கிண்டல் செய்தாய்.

    அழகிப் போட்டியும் இனிதே ஆரம்பமானது. வரிசையில் வளம் வந்த அழகு நங்கைகளுக்கு மத்தியில், மெல்லிய கறுப்பு வண்ண சேலையில் தேவதைகளின் தேவதையாக, அழகிகளின் அழகியாக நீயும் வந்தாய். நொடியில் ஏற்பட்ட பரவசம், கோபமாகவும் வெறுப்பாகவுமே மாறியது. காரணம் நீ அணிந்திருந்த கவர்ச்சியான கண்ணாடி சேலையும், கைகள் இல்லாத ஜாக்கெட்டும், இன்னும்... "மாப்ள... செம ****டா..." என்று என் முன்னாள் இருந்த ஒருவன் உன்னை பார்த்து சொன்னதும் எழுந்த பெருங்கோபத்தில் அவ்விடத்தை விட்டு வேகமாக விடுதியறைக்குச் சென்றேன். அன்று நீதான் 'மிஸ் அக்னி' என்பதை என் நண்பன் மூலம் அறிந்தேன்.

    அடுத்த நாள் உனக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. கல்லூரி மாணவத் தலைவன் தேர்தலினால் ஏற்கனவே எங்களுக்கு எதிரியாகிவிட்ட மாணவத் தலைவன், நான் இருக்கும்போதே உன்னிடம் வாழ்த்துக்கூறி, அடுத்த நாள் மதியம் விருந்தளிப்பதாக கூறி உன்னையும் பெசண்ட் நகரிலிருக்கும் பொன்னுசாமி் உணவகத்திற்கு அழைக்க, நீயும் சரியென்றாய்.

    "இது மாதிரி ஊதாரியா திரியறதா இருந்தா தயவு செஞ்சு என் கூட பேசாத...", ஏற்கனவே கோபத்தின் உச்சத்திலிருந்த நான், உன்னிடமிருந்து அதனை சற்றும் எதிர்பார்க்காதபடியால் என்னையும் மீறி பேசி தொலைத்தேன்.

    "அதே தான் நானும் சொல்றேன்... நீ இப்படி இரு.. அப்படி இருன்னு கண்டிஷன் போடுறதா இருந்தா நீயும் தயவு செஞ்சு என்கிட்ட பேசாத", நீயும் வரம்பு மீறியிருந்தாய்.

    அன்றிலிருந்து நாம் இருவரும் சந்திப்பதையே நிறுத்தியிருந்தோம்.

    ஜனவரி 3.

    உன்னைப் பார்த்து பேசி இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. ப்ராஜக்ட், தேர்வு, விடுமுறை என்று வரிசையாக இறைவன் அமைத்து வைத்த ஏற்பாடுகள் வர உன்னை முழுவதுமாக மறக்க முயன்றிருந்தேன். உன்னை மறந்தேனோ? இல்லையோ? தனிமை தோய்ந்த சில இரவுகள் தவிர ஏனைய நேரங்களில் உன்னை நினைப்பதை தவிர்த்திருந்தேன். உன்னை, அதே மாணவத் தலைவனோடு சில முறை பார்த்ததாக நண்பன் கூறினான்.

    "இவளுங்க எல்லாம் சரியான **** டா.. மொதல்ல ஒருத்தனோட சுத்துனா... அப்புறம் உன்னோட.. இப்ப துட்டு பார்ட்டி ஒருத்தன் கெடச்ச உடனே உன்ன கை கழுவிட்டு போயிட்டா பாரு.." என்று வாய்கூசாமல் பேசிய நண்பனுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு வாரகாலம் மௌனவிரதம் மேற்கொள்ளும் முனிவராயிருந்தேன். அதன்பிறகு நடந்த சில செண்டிமெண்டல் சமரசங்களினாலும், உணர்வுபூர்வமான உரையாடல்களினாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.

    ஜனவரி 12.

    அடையார் மலர் மருத்துவமனையில் மயக்கம் சற்று தெளிந்த நிலையில் நான். அருகில் என்னையே பார்த்தபடி நீ. நீ மட்டும். ஜூனியர் மாணவர்களுக்காக இறங்கிய அடுத்த ஆண்டுக்கான தேர்தல் களத்தில் பிரச்சனை. இரண்டு நாட்களுக்கு முன் கோட்டூர்புர சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த என்னை, சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து நீண்ட கைகள் பற்றியிழுத்து கீழே தள்ளியதால் இடது கை முறிந்திருந்தது. உன் அருகாமை கிடைக்குமென்றால் முன்பே அடிப்பட்டு படுத்திருக்கலாம் போல் தோன்றியது.

    "ஹேய்.. நீயா? எப்படி இருக்க?"

    "நல்லா இருக்கேன்... நீங்க?"

    "நமக்கென்ன... ராஜா மாதிரி நச்சுன்னு இருக்கேன்... என்ன... இந்த மூஞ்சில லேசா மார்க் விழுந்ததால சிவில் ஷ்வேதா இனி என்னையப் பாக்க மாட்டா. அத நெனச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு", இறுக்கமான சூழலை சமன்படுத்த எனக்கு தோன்றிய ஒரே ஆயுதம் நகைச்சுவை அல்லது மொக்கை. நீயோ தரையில் முழங்காலிட்டு என் தோள்பட்டை பகுதியில் முகம்புதைத்து, 'இனி நான் ஸ்லீவ்லெஸ் போட மாட்டேன்... நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்' என்று அழுது கொண்டிருந்தாய்.

    "ஹேய் லூசு... உன்னைய யாரு இப்ப அதையெல்லாம் கேட்டா? நீ எப்படி இருக்கனும்னு நெனக்கிறியோ, அப்படித்தானே இருக்கனும்... அன்னைக்கு நாந்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசித் தொலச்சிட்டேன்..", அடிப்பட்டிருந்த கையில்தான் நீ சாய்ந்திருந்தாய் எனினும் வலியைக் காட்டிகொள்ளாமல் உன்னை சமாதானபடுத்திக் கொண்டிருந்தேன். அன்று முதல் ஆரம்பமானது, என் வாழ்வின் இரண்டாவது அத்தியாயம்.

    மார்ச் 29.

    முன்னூற்று அறுவத்தைந்து முறை உலகம் உருண்டாலும், மறத்தல் சாத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டுவது என்றாவது ஒருநாளை மட்டுமே. அப்படியொரு நாள்தான் இன்று. சென்னையின் புறநகரைச் சேர்ந்த கசுவா கிராமத்திலிருக்கும் சேவாலயாவிற்கு நாம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். சென்னை நகர பேருந்துகளின் சதி சில சமயங்களில் நமக்கு நல்விதியாகவும் வரக்கூடும். அன்றும் சரியான நேரத்தில் பேருந்து வராததால் கல்லூரி விடுதிக்கு போய் சேர இரவு பத்தாகிவிட்டது. ஒன்பது மணிக்குள் பெண்கள் விடுதிக்கு திரும்பிவிட வேண்டுமென்பது நம் கல்லூரியின் சட்டமென்பதாலும், அதற்கு முன்பே இதுபோல் இரண்டுமுறை நீ மாட்டிக் கொண்டதாலும் இம்முறை கட்டாயமாக விடுதிக்கு செல்ல மாட்டேனென்று நீ அடம்பிடித்தாய்.

    விடுதியிலன்றி வெளியில் தங்கியிருந்த நண்பனொருவனை எனதறையில் தங்க வைத்துவிட்டு உன்னை அங்கு அழைத்துச் சென்றேன். அன்றுதான் அடையாரிலிருக்கும் அந்த கையேந்தி பவனுக்கு கூட்டிச் சென்றேன். முதலில் அங்கே நீ சாப்பிட மறுத்தாலும், கடைசியில் எனது தட்டிலிருந்த தோசையையும் காலி செய்தது உனக்கு ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். ஆண்கள் தங்கியிருந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வதற்குள், யாராவது பார்த்து விடுவார்களோவென்ற அச்சத்தில் நடுங்கி எனதுடல் முழுவதும் வியர்த்திருந்தது. நீயோ, "லைஃப்ல த்ரில் வேணும் மச்சி..." என்று அசால்ட்டாக வந்தாய்.

    அவ்வீட்டிலிருந்த அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒற்றை மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், தோளோடு தோளுரசி அமர்ந்திருந்தோம். உன் எல்கேஜி தோழி முதல், என் எட்டாம்வகுப்பு தோற்றக் காதல் வரைக்கும் அனைத்தையும் பகிர்ந்துவிட்டிருந்த நமக்குள் அப்பொழுது பேசுவதற்கு எதுவுமே மிச்சமில்லை. ஜன்னல்கள் இருந்திருந்தால் காற்றின் சத்தமாவது கேட்டிருக்கும். இருள், மெழுகுவர்த்தி, தனிமை, ஈர்ப்பு என்று அனைத்தும் ஏதுவாய் இருந்தும் நமக்குள் எதுவுமே நடைபெறவில்லை. ஏன்? அந்த எண்ணம் கூட வரவில்லை. அப்படியே என் வாழ்நாள் முடிந்துவிட வேண்டுமென்றுகூட தோன்றியது. இளம் இரவு மூப்படைந்து உயிர்விட்டதுவரை நம்மிருவருக்கிடையே வளம்வந்தது வெறும் மௌன உரையாடல்கள் மட்டுமே.

    அடுத்த நாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது எனதருகில் வந்தாய். மிக அருகில். உன்னுடன் இருக்கும் பொழுதுகளில் ஏற்பட்டிராத ஓர் உன்னத உணர்வு அப்பொழுது என்னுள் பரவ ஆரம்பித்தது. கைவிரல்களோடு விரல்கோர்த்து, உன் கால்விரல்களால் தரையூன்றி, பாதங்களை மேல்தூக்கி எம்பி, உன் இதழ்களை என் இதழ்களின் அருகில் கொண்டுவந்து நிறுத்தினாய். அப்பொழுது என் மீசைக்குள் ஊடுருவிய உன் சுவாசக்காற்றின் உஷ்ணம் இன்னமும் என் முகத்தில் மிச்சமிருக்கிறது. உன் முகம் பார்க்க முடியாமல் விழிமூடி காத்திருந்தேன் நான். சில நிமிடங்களில் எதுவுமே நடைபெறாமலிருக்க இமைதிறந்தபோது, புன்னகைத்தவாறே என் கன்னத்தில் முத்தமிட்டாய். நீண்ட நாட்களுக்கு பிறகு என் முதன்முறை பட்டியலில் மற்றுமோர் பதிவு. என் விரல்களை விடுவித்துவிட்டு, தலைகுனிந்து வெட்கப்பட்டவாறே அங்கிருந்து ஓடினாய்.

    ஏப்ரல் 19.

    உன்னோடு கடைசியாக செய்த ரயில்பயணம். உனக்கு விடுமுறை, எனக்கு வாழ்க்கை என்று ஆளுக்கொன்றை தந்துவிட்டுச் சென்றது கல்லூரி வாழ்க்கை. கல்லூரியின் கடைசி நாட்கள், நண்பர்கள், அறட்டை, விடுதி, விளையாட்டு, சண்டை, தேர்தல், பார்வையிடல், கலாய்ப்பு என எத்தனையையோ இழக்க போகிறேனென்பது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை, உன் ஒருத்தியின் பிரிவின் முன்பு. உன் ஊர் வரும்வரை என் தோள்மீது சாய்ந்தபடியே வந்தாய் நீ. நம்மை தம்பதியினரெனவோ, அல்லது காதலர்கள் எனவோ எதிர் இருக்கையில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

    மே 23.

    'You have a Good News and a Worst News' என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல்தான் நடந்தது அன்றும். நீண்ட தேடல்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் நீ என் அருகில் இல்லையே என்பதுதான் என் தலையாய எண்ணமாய் இருந்தது. நீயும் நானும் காதலிக்கிறோம் என்ற உணர்வு நம் இருவருள்ளே இருந்தும் நாம் அதனை வெளிப்படுத்தவோ, அதனோடு உடன்பட்டிருக்கவோ இல்லை. உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தும் பல ஒத்திகைகளை பல நேரங்களில் பல இடங்களில் செய்திருந்தேன்.

    நான் உன்னிடம் பேசுவதற்காக உன் அலைப்பேசிக்கு அழைத்தேன். வழமைபோல் யாரோ ஒரு பெண்ணொருத்தி நீ இல்லையென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தாள்.உன்னுடன் பேசி அன்றுடன் 23 நாட்கள் ஆகியிருந்தது. ஊருக்கு சென்றதிலிருந்து முக்கால்வாசி நேரங்கள் உன்னுடன் தொலைப்பேசியிலேயே இருந்ததனால், எனக்கு வேலை கிடைக்கும் வரையில் நாம் பேச வேண்டாமென்று அன்பு கட்டளை விதித்தாய். காதல் போதை சட்டங்களையும், கட்டளைகளையும் உடைத்தெறிந்துவிடும் என்பதனை உலகறியும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 'இதுதான் கடைசி தடவ' என்று உன்னை மறுபடியும், மறுபடியும் அழைத்ததனால், உன் செல்ப்பேசி இணைப்பையே துண்டித்திருந்தாய்.

    என்றோ ஒரு நாள் உன் உறவினர் ஒருவருடைய தொலைப்பேசி எண்ணை பின்னால் நினைவுபடுத்துவதற்காக குறிக்கச் சொன்னாய். அந்த துண்டுச்சீட்டு இன்னமும் என் பர்ஸில்தான் இருக்கின்றது என்பது அப்பொழுது நினைவில் வர, அவர்களை அழைத்தேன்.

    வரந்தரும் தேவதையொன்று நம் கண்முண்ணே தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால், அப்போதைய மணித்துளிகளை என் வாழ்நாளிலிருந்தே அழித்துவிடும்படி கேட்டிருப்பேன். அடுத்த ஒன்பது மணி நேரத்தில் நான் உனதறையில் இருந்தேன். நான் யாரென்பதுகூட உனக்கு முழுமையாக நினைவிலில்லாத மயக்கநிலையில் இருந்தாய். இதயங்களை விளையாட்டாய் திருடிக் கொண்டிருந்த உன் இதயத்தில் ஏதோ கோளாறென்றார்கள். 'இன்னும் கொஞ்ச நாள்தான்' என்று உன்னுயிருக்கு கெடு வைத்திருந்தார்கள்.

    "பாரும்மா.. யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா...", உன் தாய் என்னை உனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை கண்டுபிடித்து, மெலிதாய் புன்னகைத்து, என்னை உனதருகில் வரச் சொன்னாய்.

    "நான்... உன்ட்ட... ரொம்ப நாளா... சொல்லனும்னு நெனச்சேன்... சொல்லாமலேயே போயிடுவேன்னு பயந்துட்டு இருந்தேன்... நல்ல வேளை... நீ வந்துட்ட..." என்று இடைவெளி விட்டுவிட்டு பேசினாய். விழிகளில் நீர்ததும்ப, உன் விரல்களைப் பற்றி உன்னையே வெறித்துப் பார்த்தேன்.

    "ஐ லவ் யூ", என்று வேகமாக கூறிவிட்டு, அந்த நிலையிலும் வெட்கப்பட்டுக் கொண்டே முகம் திருப்பினாய். உன் பெற்றோர்களும், உறவினர்களும் நம்மிருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் சப்தமிட்டு அழுதேன்.

    அறை கதவினருகே யாரோ வருவதுபோல் இருந்ததும் அவசரமாக நாட்குறிப்பை தலையணைக்கடியில் வைத்துவிட்டு வருபவர்களை வரவேற்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனைவிதான் உள்ளே வந்தாள்.

    "ஏங்க!! நாளைக்கு மறக்காம இந்த கேஸ் பில்ல...", ஏதோ உடையை மடித்தபடியே பேசிக் கொண்டிருந்த அவள் கைகளை பிடித்து கட்டிலுக்குள் இழுத்தான்.

    "ஏங்க இப்படி அவச..", அவள் பேசி முடிப்பதற்குள் அவள் இதழ்களில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான். அவன் செய்த அவசர சேட்டைகளில், தலையணைக்கடியிலிருந்த நாட்குறிப்பு தவறி கீழே விழுந்து தாள்கள் புரண்டன.
    ஜூன் 1.

    நீ மரணத்தோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள். அரை மாதமோ, ஆறு வருடமோ என்று உத்தரவாதமில்லாத உனதுயிரை எனக்கு திருப்பி கொடுத்த நாள். அவசரமாய் கடைக்குச் சென்று ஒரு நாட்குறிப்பு வாங்கி உன்னோடு இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையை பதிவு செய்கிறேன். நாளை உன் விழிகளில் விடியுமோ? இல்லையோ?. அதுப்பற்றி கவலையில்லை. இனி உனக்காகவே, உனக்காக மட்டுமே வாழ்வதாக தீர்மானித்து விட்டேன்.

    தாள்கள் மொத்தமாய் புரண்டு மூடிய நாட்குறிப்பின் முன்அட்டை காட்டிக் கொண்டிருந்தது, 2003.
    26

    View comments

  7. "நானும் வர்றேங்க..."

    "இல்லம்மா... இப்பத்தான் வந்து எறங்கிருக்கோம். பாப்பா வேற ரொம்ப டயர்டா இருக்கா. நீ ரெஃப்ரெஸ் பண்ணிட்டு ரெடியா இரு. நான் ஈவினிங் வந்து கூட்டிட்டுப் போறேன்"

    என் மனைவியை சமாதானபடுத்திவிட்டு, வேகமாக ஆட்டோவில் கிளம்பினேன். என் ஆரம்பக்கட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் என் கண்முன்னே வந்தவண்ணமே இருந்தன. காரணம்... எல்லா நிகழ்வுகளிலும் பிரித்தெறிந்துவிடாதபடி இருந்த என் அம்மா. எதிர்பார்ப்பு இல்லாமலேயே அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் தாயாக மட்டுமே இருக்க முடியும் என்பதனை பலமுறை உணர்த்தியவள். சாதாரண தாய்-மகன்களை போலலல்லாமல், எங்கள் இருவருக்குள்ளும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தன. தலைமுறை இடைவெளியைக் காரணங்காட்டி ஒவ்வொரு முறையும் சமாதானபடுத்தியதுண்டு. நான் இளைஞனாக இருந்தபோதும் இரவு உணடு ஊட்டிவிடும் அவளது ஒற்றை சோற்று உருளையில் தாய்மை உணர்வைத் தவிர அனைத்துமே மறைந்துபோகும்.

    "ஒரு நிமிசம் ஆட்டோவ கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க..."... "சாச்சா... சாச்சா...", சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த சித்தப்பாவை அழைத்தேன்.

    "அட செய்யதா? அஸ்ஸலாமு அலைக்கும்... எப்ப வந்தெறங்குனப்பா? சயிலா, கொழந்த எல்லாரும் சொவ்மா இருக்காவளா?"

    "வஅலைக்கும் சலாம்... எல்லாரும் நல்லா இருக்காங்க... எங்க ஆஸ்பத்திரிக்குத்தானே? வாங்க ஆட்டோலையே போலாம்"

    அவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள நாங்கள் கிளம்பினோம். பேசுவதற்கு எவ்வளவோ இருந்தும் நீண்ட நேரமாக எங்கள் இருவருக்குள்ளும் சிறிய உரையாடல் கூட நடைபெறவில்லை.

    "சம்பளம் என்ன... ஒரு... ஒரு லட்சம் வருமா?", இந்நேரத்தில் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத நான், அவரை 'எதற்கு?' என்பதுபோல் பார்த்தேன்.

    "இல்ல... பெத்தவள அப்படியே விட்டுட்டு, வெளிநாட்டுல போய் கெடக்குறியே... அதான் கேட்டேன்...", யாரோ ஆளுயர ஈட்டியால் குத்துவதுபோல் இருந்தது.

    "முன்னால டெல்லில வேல போட்டப்ப, ஒரு மாசத்துல அம்மாவ தேடுதுன்னு ஓடி வந்த.. இப்ப என்னாச்சு? பொண்டாட்டின்னு இன்னொருத்தி கெடச்ச உடனே அம்மாவெல்லாம் மறந்து போச்சா?", அவர் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு வார்த்தைகளும், ஓர் குற்றவுணர்வை என் உடல் முழுவதும் பரப்பி என்னை தலைகுனிய செய்தது. ஆட்டோக்காரன் கண்ணாடியில் என்னைப் பார்ப்பதுபோன்ற ப்ரம்மை ஏற்பட்டது. எதுவும் பதில் பேசாமலேயே இருந்தேன். அதன் பிறகு மீண்டும் மௌனம். மருத்துவமனையும் வந்திருந்தது.

    என் தாயை சேர்த்திருந்த அறையை நோக்கி ஓடிக்கொண்டே நடந்தேன். அறைக்கு வெளியே, ஊரை சேர்ந்த பலர் வந்திருந்தனர். அனைவரும் என்னை குற்றவாளியாய் பார்ப்பதுபோல் இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல், அறைக்குள் செல்ல எத்தனித்தேன்.

    "ஹலோ!! இப்ப உள்ள போகக் கூடாது. விஸிட்டர் டைம் சாய்ங்காலம்தான்", மருத்துவமனை ஊழியர் ஒருத்தி என்னைத் தடுத்து நிறுத்தினாள்.

    "மேடம்... மேடம்... இவரு அந்தம்மாவோட புள்ளதாங்க.. இப்பத்தான் வந்திருக்காரு... ஒரே ஒரு தடவ மட்டும் அவர பாக்க விட்டுறுங்க", பின்னாலேயே வந்த சித்தப்பாதான் அவளிடம் பேசி என்னை உள்ளே செல்ல அனுமதிக்க வைத்தார்.

    "போயிட்டு உடனே வந்திருங்க.... உங்கள டாக்டர் வேற பாக்கனும்னு சொன்னாரு... அம்மாவ பாத்துட்டு கீழ முத்தையா டாக்டர் ரூம்ல போய் அவர பாருங்க.."

    இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. இதற்கு முன் கல்லூரியில் படிக்கும்போது உறவினர் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தபோது இதைப்போல் ப்ரத்யோக அறைக்குள் சென்றது நினைவுக்கு வந்தது. தொலைவில் எங்கோ நடைபெறும் துயர நிகழ்வுகள், செய்திகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சிதைந்து போகும். அருகாமையில் நடைபெறும்போதுதான் அதன் வலி உக்கிரமமாக இருக்கின்றது. மூன்றாவது கட்டிலில் என் தாயை அந்தக் கோலத்தில் பார்த்தவுடன் செத்துவிடலாம் போல் தோன்றியது. பீறிட்டு வந்த அழுகையை எந்தவொரு தடங்கலுமின்றி சிறுகுழந்தையென ஓவென்று கதறி அழுது வெளிப்படுத்தினேன். சிறிது நேரத்தில் என் சுயநினைவை இழந்திருந்தேன்.

    *---------*


    "அம்மாவ பாத்தீங்கள்ல? ரொம்ப மோசமா இருக்காங்க...."

    "சார்... எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்... எதாவது செஞ்சு எங்க அம்மாவ காப்பாத்துங்க சார்..", மரணத்தின் விளிம்பிலிருக்கும் என் தாயை எப்படியாவது காப்பாற்றி விடலாமென்ற நம்பிக்கையில் மருத்துவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன்.

    "சார்... நான் சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க... மனச தெடப் படுத்திக்கோங்க... நாங்க அதையும் இதையும் சொறுவி இன்னும் நாலு நாளைக்கு அப்படியே வச்சிருக்க முடியும். ஆனா அஞ்சாவது நாள்? நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுங்க... கடைசி நேரத்துலயாவது அவுங்க நிம்மதியா வீட்ல இருக்கட்டும்..."

    "..."

    "சாரி.. அழாதீங்க சார்... எல்லாருமே பொறக்கும்போதே சாவையும் சேத்துதான் கொண்டு வர்றோம். நீங்க சீக்கிரம் வீட்டுக்கு கெளம்ப வேண்டிய ஏற்பாடுகள பாருங்க..."

    எதிரிக்குக் கூட இந்த நிலைமை வந்துவிடக் கூடாது. என் மொத்த துயரத்தையும் தீர்த்துக் கொள்ள அவசரமாக தேவைப்பட்டது ஓர் தோள். என் அனைத்து இன்னல்களையும் சுமந்துக் கொண்டிருந்த என் தாயின் தோளே சாய்ந்து கிடக்கும் இப்பொழுதில் என் மனதில் உடனே தோன்றியது இன்னொரு தாயான என் மனைவி.

    *---------*


    இறுதி மூச்சினை விட்டபடியே நடுவீட்டில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் என் தாய். அழுது தீர்த்துவிட்ட களைப்பில் வீங்கியிருந்த முகத்துடன் என் மனைவி கட்டிலின் அருகே அமர்ந்திருந்தாள். என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடியாத வயதில், தன் தாய் அழுததைக் கண்டு தானும் அழுது களைத்து என் மனைவியின் மடியில் படுத்துக் கிடந்தாள் என் மகள். கடைசி காலங்களில் எனது அருகாமையை என் தாயிடமிருந்து பறித்துவிட்ட குற்றவுணர்வும், அவளின் அன்போடு அவளையும் இழக்க போகும் துயரமும், அவள் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் என் இருப்பின் உறுதியை சாய்த்தபடியே இருந்தன.

    "ஏய்.. அந்த தஸ்மணி கீழ விழுது பாரு... அத எடுத்து கைல வைய்யி..."

    "லாயிலா சொல்லச் சொல்லு..."

    "டேய் செய்யது... ரெண்டு ரகாயத்து நஃபில் தொழுது துவா கேளு"

    "அந்த குரான தலமாட்டு பக்கத்துல வைங்க..."

    "யாஸின ஓது..."

    அனைத்தும் சற்று மந்தமாகவேதான் என் காதில் விழுந்தன. அப்பொழுதுதான் வந்திறங்கினாள் சப்தமிட்டு அழுதவாறே என் தாயின் நெருங்கிய தோழி.

    "அய்யோ... இப்படி கெடக்குறாளே..." என்ற அழுதவாறே என்னை முறைத்துப் பார்த்தாள். "இப்ப உனக்கு சந்தோஷமாடா? இந்த அனாத புள்ளைக்காக அம்மாவ தூக்கி எறிஞ்சிட்டு போனையே... இப்ப சாவ கெடக்குறா... இப்ப உனக்கு சந்தோஷந்தானே?"

    "தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க... உங்களாலத்தான் நானும் எங்க அம்மாவ விட்டு இவ்வளவு நாளா பிரிஞ்சு இருந்தேன். உங்கள மாதிரி ஆட்கள் பேச்சக் கேட்டுத்தான் எங்க அம்மா என்னைய இன்னொரு கல்யாணம் பண்ண சொன்னாங்க... உங்கள மாதிரி ஆட்கள் சொல்ல கேட்டுத்தான், எங்க அம்மாவும் நான் என் மகள தத்தெடுத்துட்டு வந்தபோது இதே வார்த்தைய சொன்னாங்க. இந்த வார்த்தைய என் பொண்ணு கேக்கக் கூடாதுன்னுதான் எங்க அம்மாவ கூட விட்டுட்டு நானும் வெளிநாட்டுல போய் இத்தன நாளா கெடந்தேன். ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்.... தயவு செஞ்சு இது மாதிரி பேசாம இருங்க.... இல்லன்னா வெளில போயிடுங்க.."

    என்னையும் மீறிய கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியாமலேயே பேசிவிட்டேன்.

    "அம்மா... அனாதன்ன என்னம்மா?", அறியாமையில் கேட்ட என் மகளை கட்டித் தழுவியபடியே அழத் துவங்கினாள் என் மனைவி. அதுவரையிலும் எந்தவொரு சலனமுமின்றி இருந்த என் தாயின் விழிகளின் ஓரத்திலிருந்து பிரிந்தது ஒரு துளி கண்ணீர், உயிரும் சேர்ந்தபடியே.
    20

    View comments

  8. காதல் தோட்டத்துப் பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களை உதிர்த்து சேலைகளில் பூசித் திரியும் சிங்காரிகளே... வீதியோரமெங்கிலும் வீழ்ந்து கிடக்கும் இதயங்களை கவனியாது நடைபயிலும் தாவணி தேவதைகளே... நச்சுப் பார்வையில் அமுத மாயையைப் பரப்பிச் செல்லும் சுடிதார் சுந்தரிகளே... இலக்கணமே பாராமல் ஹார்மோன்களை கொன்று குவிக்கும் ஜீன்ஸணிந்த சின்னக் குயில்களே...

    நீங்கள், உங்கள் சாருக்கான்களுடனும், சூர்யாக்களுடனும் குளிரூட்டப்பட்ட உயர்ரக உணவகத்தில் மகிழ்ச்சியான தருணமொன்றை பரிமாறிக் கொண்டிருக்கலாம். கலாச்சாரக் காவலர்கள் வேட்டையாட வருவோமென்று வியாக்கியானமிட்ட பூங்காக்களிலோ, கடற்கரையிலோ உங்களின் மீதியானவர்களோடு கைகோர்த்து நடைபயின்று கொண்டிருக்கலாம். திரையறங்கொன்றில், மாதவன்-சாலினியின் வேதியியல் பொருத்தங்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது, அரசியல்வாதி ஒருவனுக்கு வெளிர்-சிகப்பு நிற உள்ளாடைகளை பரிசளிக்க, விரைவஞ்சல் நிலைய வாசல்களில் வரிசையில் காத்திருக்கலாம்.

    காதல் சின்னம் வரையப்பட்ட எங்கள் வீட்டு நாட்காட்டிகளில் கூட பதினான்காம் தேதி காணாமல் போகும் மாயம் உங்களுக்கு தெரியுமா? சூனியம் நிறைந்த பதிமூன்று விழிங்கிருக்கக் கூடுமென்று நையாண்டி செய்கிறான் காதல் முளைத்த திமிரில் நயவஞ்சகனொருவன். உங்களில் யாரோ ஒருத்தியை ஏற்று நிற்கும் கவிதைகள் தாங்க வேண்டிய, தொண்ணூறுகளில் வாங்கிய நாளேடுகள் இன்னும் எங்களைப் போலவே வெறுமையில் இருக்கும் அபாயத்தை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆணுக்குப் பெண் நூற்றுக்கு தொண்ணூற்று எட்டென்றிருந்தும், விடுபட்ட இரண்டிலேயே எங்களின் விதிகள் நிர்ணயிக்கப் பட்டிருப்பது யார் செய்த சதியோ?

    கல்லூரியில் சேரும் முன்பே காதலில் தேறும் துரித சமுதாயத்தில், கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டதனால், ‘காதலிகள் தேவை’ என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளோம். இந்த ஆண்டே ஜூன் பதினெட்டோ, அக்டோபர் முப்பத்தொன்றோ, காதலர் தினமென்று புதிய பரிமாணம் எடுக்கக் கூடும். இல்லையேல், அடுத்த ஆண்டு பிப்ரவரி பதினான்கு எங்கள் வாழ்க்கையிலும் வரக்கூடும். அதுவும் இல்லையேல், அதுக்கடுத்த ஆண்டு... அது வரையில் ஸ்பென்ஸர் ப்ளாஸாவிலும், மெரினாவிலும், கல்லூரி வாயில்களிலும் தரிசனங்கள் மட்டுமே கண்டு எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வோம். அது வரை, உங்கள் அலப்பறைகளை அள்ளித் தெளித்து வளமோடு வாழுங்கள். இப்படிக்கு... உதிக்குமென்ற நம்பிக்கையில், மேற்கு நோக்கிக் காத்திருக்கும்...

    *---------------------------------------*

    செத்து மடியும் உங்கள் மணித்துளிகளில், மைக்ரோ நொடிகளைக் கூட அணுஅணுவாய் ரசித்ததுண்டா? அவள் விண்முத்தம் அனுப்பிவைத்து கையசைத்துச் சென்ற திசைநோக்கி விழிகளை அப்படியே விட்டுவிட்டு குருடனாய் அலைந்ததுண்டா? இருள்ந்த வெளியையும், அறையெங்கிலுமாய் தோய்ந்திருக்கும் தனிமையையும் சிலாகிப்பதுண்டா? பிறிதொருநாள் அசைப்போட, மிகச்சாதாரண நிகழ்வுகளை கூட சிறைப்படுத்தும் பழக்கம்தான் உங்களுக்குண்டா? முதல் சந்திப்பு, முதல் தொடல், முதல் முத்தமென்று முழுமுதற்களை நினைவுகளில் சேகரிப்பதுண்டா? நடுவீதியில் நகைத்தபடியே தனிமையில் நடைபயின்ற கிறுக்குத்தனங்கள் உங்கள் அன்றாடங்களில் முன்னணியில் இருப்பதுண்டா? நீங்கள் அறிந்திராத பல உணர்வுகளை உங்களிடமிருந்து மீட்டெடுக்கும் ஓர் உன்னதத்தை நீங்கள் உணர்ந்ததுண்டா?

    இத்தனை கேள்விகளுக்கும் உங்கள் பதில் இல்லையென்றால், வாழ்வில் மிக அற்புதமான ஒன்றை நீங்கள் இழந்திருக்கிறீர்கள். காதல்... சுற்றத்தின் நிகழ்வுகளை மறக்கடிக்கச் செய்யும் காதல், பாதங்களில் பட்டு நசுங்கிய சாலையோர மலரினை கவனிக்கச் செய்யும். நிராகரித்து அலட்சியப்படுத்தப்பட்ட குப்பைகளை கூட அழகென்று கொண்டாடச் செய்யும். பயணச்சீட்டுத் துரும்பில்கூட காதலி பெயரெழுதி கவிதையென்று கண்ணதாசனின் அடைமொழியை தனதாக்கிக் கொள்ளச் செய்யும். தினசரிச் செய்திகளை கூட மெலிதான குரலிலேயே வாசிக்க வைக்கும். இப்படி பல பைத்தியக்காரத்தனங்களின் கோர்வைதான் காதல். தடை செய்யப்படாத ஒரே போதை. பிரித்தெரிந்துவிடாதபடி காற்றோடு எங்கும் பரவிக் கிடக்கிறது காதல்.

    *---------------------------------------*

    “மச்சான்... அனுபவப்பட்டவன் சொல்றத கேளுடா? சத்தியமா காதலிச்சிடாத மச்சான்...”

    “சரிடா மாப்ள...”

    “வலிடா... காதல்னா, காயாமான சாதல்டா...”

    “ஃப்ரீயா விடுடா மாப்ள... இவ இல்லன்னா இன்னொருத்திடா...”

    “ஒரு தடவ பட்டது போதாதாடா? ***** இன்னொருத்தியாம், இன்னொருத்தி... நான் ஒழுங்காதானடா இருந்தேன். காலேஜ், அறட்டை, ஃப்ரெண்ட்ஸ், ஸைட்டுனு சந்தோஷமா இருந்தேனடா... ஏன்டா நான் காதலிச்சேன்... எனக்கு மட்டும் ஏன்டா இப்படியெல்லாம் நடக்குது?”

    “சரிடா... அதுக்கு இப்படி தண்ணி அடிச்சிட்டு இருந்தா எல்லாம் சரியாயிடுமாடா?”

    “அது யாருடா?? சின்னி சாரா... சின்னி சார்.. சின்னி சார்... நீங்க காதலிச்சிருக்கீங்களா சார்? மொதல்ல நல்லா இருக்குற மாதிரிதான் சார் இருக்கும். என்னமோ உலகத்துல நாமதான் ஒசரத்துல இருக்குற மாதிரி இருக்கும்... கூச்சமே இல்லாம கன்னா பின்னான்னு பொய்யா கவித எழுதச் சொல்லும்... கருமம்புடிச்ச இந்த காதல்... அப்புறம்தான் சார் தெரியும்... ஏன்டா மச்சான்? சின்னி சார் இப்படி ஓடுறாரு? நான் என்ன அவ்வளவு எளக்காரமா போயிட்டேனடா? என்னையப் பாத்து ஏன்டா அந்தாளு ஓடுறான்... டேய் சின்னி ****... போடா போ... நாளைக்கு நீயும் காதலிப்படா.... அப்ப தெரியும்டா என்னோட வலி என்னன்னு..”

    “டேய் வாடா... வீட்டுக்குப் போலாம்... சத்தம் போடாதடா...”

    “உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு மாப்ள... நீங்கெல்லாம் காதலிக்காம எப்படிடா இருக்கீங்க?ன்னு உங்கள எல்லாம் நக்கல் பண்ணிட்டு திரிஞ்சேனடா... அப்பவே ஏன்டா நீ சொல்லல... இந்த கருமத்த விட்டுத் தொலடான்னு... நீயெல்லாம் ஒரு நண்பனாடா? எங்க அப்பன் செத்ததுக்கு கூட நான் ஒரு நாள்தான்டா அழுதேன்... இவளுக்காக... இந்தப் பாழா போன காதலுக்காக நான் காலம் பூரா அழுவேன் போலிருக்குதடா... பயமா இருக்குடா மச்சான்... பயமா இருக்கு... செத்துடலாம் போல இருக்குடா...”

    “அதெல்லாம் ஒன்னுமில்லடா... நாங்கெல்லாம் இருக்கோம்டா உனக்கு... அழாதடா மாப்ள... ப்ளீஸ்டா”

    “நான் எதுக்குடா அழப் போறேன்... இங்க பாரு சிரிக்கிறேன் பாரு.. சிரிக்கிறேன்... “ ... “மாப்ள... அங்க தெரியுது பாரு மச்சான் அந்த ப்ரிட்ஜ்.. அங்கதான்டா போன வாரம் வரைக்கும் அவ கூட கையப் புடிச்சுட்டே நடந்து போனேன்... ஏன்டா மாப்ள? ஏன்? போனவ போனாளடா... கூடவே இந்த.... அவளோட ஞாபகத்தையும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதானடா? கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்குற வெஷம்டா அது.. வெஷம்... மகா ஜனங்களே... படத்துல காட்டுறத எல்லாம் நம்பி சத்தியமா காதலிச்சிடாதீங்க... எல்லாம் காசு சம்பாதிக்கறுதுக்காக ஏமாத்துறானுங்க கேணப் பசங்க... தலைவர் சொன்ன மாதிரி ‘மாயா.. மாயா... எல்லாம் சாயா’தான்... ஏன்டா மாப்ள? தலைவரு கருத்துச் சொல்லும்போது ஏன்டா சாயா குடிக்கலாம்னு சொல்றாரு? ஒரு வேள சாயா சிங்’க சொல்றாரோ?”

    *---------------------------------------*

    இந்த மூனுல நீங்க எந்த நிலைல இருந்தாலும், உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்... இதெல்லாம் முடிஞ்சு கல்யாணமும் ஆனவங்களுக்காக ஒரு பார்ட் எழுதுனேன்... எழுதி முடிச்சதுக்கப்புறம் எனக்கே வெக்கம் வெக்கமா போச்சு... அதான், சபை நாகரிகம் கருதி அத கத்தரிச்சாச்சு :)) அதனால சகல விதமான காதலர்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா, இன்றுபோல் என்றும் காதலுடன் வாழ வாழ்த்துக்கள்... குறிப்பா, எங்களோட ஒன்னுக்கு ஒன்னா பழகிட்டு திடீர்னு எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போற என்னுடைய நண்பனுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

    ‘மாப்ள... இம்புட்டு நாளா பண்ண அலம்பல்லாம் இனி வேகாது மச்சி... அதனால, எல்லாத்தையும் மறந்துட்டு நல்ல புள்ளையா தங்காச்சிக்கு அடங்குன கணவனா இருக்கப் பாரு... வாழ்த்துக்கள் மாப்பி...”
    43

    View comments

  9. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜங்ஷன், மார்க்கெட், டவுண், பாளை பஸ் ஸ்டாண்ட், ஹை கிரவுண்ட் என்று நெல்லை நகர சுற்றுவட்டார ஊர்களனைத்தும் ஆங்கிலமொழியிலேயே அறியப்பட்டு வந்தன. அரசியல் ஆதிக்கமோ, மொழியார்வமோ, திடிரென ஓர் நாள் நெல்லை சந்திப்பு, தினசரி சந்தை, நெல்லை நகரம், பேருந்து நிலையம், மேட்டுத்திடலென்று பெயர் மாற்றப்பெற்று விட்டன. அவ்வதிரடி மாற்றத்தினால், பேருந்து பலகைகளில் புதிய ஊர்களின் பெயர்களை மட்டுமே கண்டு குழம்பி போயிருந்த மக்களுக்கு, தமிழ் பெயர்களைப் பழகிக் கொள்ள சில ஆண்டுகள் பிடித்தன. ஆங்கிலத்தை ஆங்கிலமென்றுச் சொன்னால் வித்தியாசமாகப் பார்க்கும் நம் தமிழ் சமுதாயத்தில் இப்படியொரு மாற்றம் அத்தியாவசியமான ஒன்று என்றே நினைக்கிறேன்.

    தினசரி வழக்கிலிருந்து ஒழிந்த சொற்கள் தமிழ் அகராதியில் ஏராளம். வாழ்வியல் ஆதாரத்திற்கு ஆங்கிலம் போன்ற பிற மொழிகளின் அவசியம், ஊடகங்களின் பிம்பத்தால் ஏற்படும் தவறான புரிதல்கள், உலகமயம், நாட்டுமயம் போன்ற மயமாதல்களினால் ஏற்படும் மாறுதல்கள் வழக்கொழிப்பு விவகாரத்தில் பெரும்பங்கு வகித்தாலும், புழக்கத்திலுள்ள் சில வேற்றுமொழி வார்த்தைகளுக்கு பொறுத்தமான தமிழ் சொல்லை தக்க சமயங்களில் அடையாளம் காணமுடியாத அறியாமையில் நாமும் உள்ளோம் என்பதை மறுக்கவியலாது. அதேபோல், இதுவரை பழகிவந்த உரைநடை மொழியை விட்டுக் கொடுக்காததும் ஓர் காரணம். உதாரணத்திற்கு, இடைகால ஊடுருவல் மொழியான வடமொழியிலிருந்து வந்த கஷ்டம், சந்தோஷம் போன்ற வழமையாய் உபயோகிக்கும் சொற்களுக்கு இணையான கடினம், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகளை அறிந்திருந்தும் உபயோகிக்க முடியாதவாறு பழகிக் கொண்டிருக்கிறோம்.

    மேலும் மொழிக்கு எளிமையும் ஈர்ப்பும் மிக அவசியமான ஒன்று. சமீபத்தில் படித்த ஒரு பதிவில், ரயிலை புகைவண்டி என்றழைப்பதைவிட ’ரயில்’ என்று எளிமைபடுத்துவதாலையே அதிக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றிருந்தது. கவிதைச் சொற்களை உபயோகிப்பதில் நாம் காட்டும் ஆர்வம் சாதரண சொற்களில் இருப்பதில்லை. காரணம் அதனிடம் இருக்கும் ஓர் ஈர்ப்பு. ’பேருந்தில் நீயெனக்கு ஜ(ச)ன்னலோரம்’ என்ற பாடலுக்குப் பிறகே பேருந்து என்னும் தமிழ் சொல் அழகாகத் தெரிகிறது. அதே போல் புதிய வார்த்தைகளும் எளிமையாகவும் அழகாகவும் இருத்தல் தமிழின் நெடுந்தூர பயணத்திற்கு மிக முக்கியமான ஒன்று.

    இப்ப... பதிவுக்கு வருவோம்...

    வழக்கொழிந்த சொற்கள் பத்தி திவ்யப்ரியா ஒரு பதிவு போட சொல்லிருந்தாங்க. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.

    வழக்கொழிந்த சொற்கள் என்று சொன்ன உடனேயே, சின்ன வயசுல படிச்ச ’அங்காடி’ என்னும் சொல் வழக்கொழிந்து ‘கடை’ என்ற வார்த்தை மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று படித்தது ஞாபகத்தில் வருகிறது. தமிழிலிருந்து உருவானதாக நம்பப்படுகின்ற கன்னடத்தில் அங்கடி என்பது இன்னமும் கடையைத்தான் குறிக்கின்றது.

    எங்க ஊர் பக்கம் உபயோகப் படுத்துற சில வார்த்தைகள் (பல சொற்கள் இன்னும் வழக்கத்துலத்தான் இருக்குது) மட்டும் இங்கே..

    பைய்ய போ - மெதுவாக போ
    வெரசலா போ - விரைவாக போ
    டக்கு மோட்டார் - புல்லட்/பைக்/உந்துவண்டி :))

    அதே மாதிரி ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்படுத்திப் பேசுவாங்க.

    பிஸ்கட் - பிஸ்கோத்து
    ஃபார்ம் - பாரம் - ’படிவம்’னு தமிழ் வார்த்தை இருந்தாலும், பாரம்தான் கிராமபுறங்கள்ல வழக்கத்துல இருக்குற ஒரு சொல்.

    அப்புறம், எங்க ஊர் பக்கம் பேசுற சில வார்த்தைகள் வேற ஊர்ல வேற மாதிரி அர்த்தங்கள்ல வருது.

    மச்சி - மாடியைக் குறிப்பது. சென்னைப் போன்ற நகரங்களில் நண்பர்களை உரிமையோட அழைக்க உபயோகப்படுத்துற வார்த்தை. சில இடங்கள்ல ‘ஒசக்க - உயரத்தில்’னும் சொல்வாங்க.

    இதாவது பரவாயில்ல். சில வார்த்தைகள் கொஞ்சம் வெவகாரமா போயிடும். எங்க ஊர் பக்கம்லாம் ‘மொண்டு’னு ஒரு வார்த்தைய கேள்விப்பட்டதே இல்ல. அதுக்கு பதிலா ‘கோரி’னுதான் உபயோகப் படுத்துவோம். ’தண்ணிய கோரு’. திடீர்னு ஒரு நாள் தமிழ் வாத்தியார் ஒரு செய்யுள்ல ‘மொண்டாள்’னு சொன்ன உடனே ‘என்னடா வாத்தியார் அசிங்கமா பேசுறாரு’னு சிரிச்சித் தொலச்சிட்டோம். அதே மாதிரி எங்க ஊர்ல, ‘சொத்தப் பல்’ அப்டீங்குறத வேற மாதிரிதான் சொல்வோம். சென்னைல வந்து ஊர் ஞாபகத்துல அதப் பேசி, கும்பலா வந்து கும்மி அடிச்சிட்டானுங்க. ’எத்து’, ‘ஏசு’, இதெல்லாம் எங்க ஊர்ல வழக்குல இருக்கு. ஆனா இங்கத்தான் இல்ல :((

    இப்ப, ஒரு வருசத்துல ஒன்னா கல்லூரி முடிச்ச பசங்கள எப்படி சொல்வோம்? ’நம்ம செட்டுடா அவன்’ அப்டீனுதானே? ’அவன் கைல சொன்னேன், காலுல சொன்னேன்’னு வேலூர் வழக்குல பேசுட்டு திரிஞ்ச ஒருத்தங்க ‘அவன் நம்ம ஈடா?’னு கேட்டாங்க பாருங்க. அரண்டே போயிட்டேன். இவ்வளவு நாள் இது நமக்கு தோனாம போயிடிச்சேன்னு.

    கதையெழுதும்போது பிறமொழி வார்த்தைகளை அவ்வளவாக உபயோகிக்கக் கூடாதென்று நினைத்தாலும், தமிழிலேயே முழுவதுமாக எழுதுவது கதைக்கு இயல்பாக இருப்பது போன்று தோன்றுவதில்லை. குறிப்பாக வசனங்களில். அதனாலேயே கதைசொல்லியாக வரும் கதாபாத்திரத்தை கவிதையில் ஆர்வமுடையவனாகவே எப்போதும் சித்தரிக்கிறேன். சிறு வயதில், ‘மம்மி’ என்றழைக்கும் யாரையோ பார்த்து பொறாமை பட்டதுண்டு. இயல்பாகவே அமைந்துவிட்ட ஆங்கிலத்தின் மோகம் :) ஐ.நா.வின் ஆய்வுப் புள்ளிகளின்படி அழிந்து வரும் மொழிகளுள் தமிழும் ஒன்றென்று எங்கோ படித்ததாக நினைவு. அதனால் இயன்ற வரையில் இயல் தமிழில் பேசலாம் என்றுச் சொல்லி, இத்தொடர் பதிவினை எழுத, பின்னவீனத்துவத்தின் புதிய பிரதிநிதி, கவிதாயினி, இருண்ட வார்த்தைகளின் ஒளியூட்டி, அன்பு தங்கை ஸ்ரீமதி அவர்களை இழுத்துவிட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!
    11

    View comments

  10. இன்றைய நெரிசல் பொழுதின்
    அவசர தேவை...

    தலைகோதும் நதிக்கரை
    தென்றலையோ,
    அந்தமாகிய அந்திமழையொன்றின்
    தேனீர் வேளையைச்
    சுமந்து நிற்கும் மேல்மாட முற்றத்தையோ
    சற்றெனத் தந்திடும்
    ஜீம்பூம்பா தேவதை...


    இந்தக் கவிதைல சொல்லிருக்குற மாதிரி உங்களுக்கு எப்பவாவது தோனிருக்கா? மென்பொருளாளன்னு அழகா தமிழ்ல சொல்லத் தெரியாத என்ன மாதிரி சாஃப்ட்வேர்காரனுக்கு இது மாதிரி அடிக்கடி தோனும். அதுவும் ப்ராஜக்ட் டெட்லைன் சமயத்துல. எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு எங்கையாவது ஓடி போயிடலாமான்னு தோனும். உயிரை திருடும் உறவுன்னு ஒரு பாட்டுல வருமே? அதுமாதிரிதான் இந்த மென்பொருளும். கற்றது தமிழ் எடுத்தவனுக்கும், சிம்புதேவனுக்கும் இதெல்லாம் எங்க தெரிய போகுது? எவனோ அமெரிக்கால பிட்சா சாப்டுறதுக்கு நான் இங்க ஞாயித்துக் கிழம அதுவுமா வேலை செய்ய வேண்டி இருக்குது.

    சாஃப்ட்வேர், வேன் ஹுஸைன், அமெரிக்கான்னு ஜிமிக்கி வார்த்தைகள்ல திமிரோட திரிஞ்சுக்கிட்டு இருந்தாலும், எனக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பி.ஏ பட்டம் வாங்கி , இன்னும் ரெண்டாயிரத்துக்கும், மூவாயிரத்துக்கும் அள்ளாடிக்கிட்டு இருக்குற மாமா பையன பாக்கும்போது மட்டும் மனசுல ஒரு குற்றவுணர்ச்சி வர்றத தடுக்கவே முடியல. பெரியப்பா பொண்ணு கல்யாணத்துக்கு உதவி பண்ணனும்ங்குறத விட பங்குச் சந்த நெலம சரியாயில்லையேங்குற கவலதான் அதிகமா இருந்தது. இப்படி சுயநலவாதியா, வெறும் பொருட்வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருந்த சமயத்துலதான் அவ என் வாழ்க்கைல வந்தா.

    ஜேம்ஸ் காஸ்லிங்க ஆதர்சன நாயகனா மனசுல நெனச்சிக்கிட்டு, ஜாவாவ பத்தி மட்டுமே வாய் கிழிய பேசுட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த என்ன கவித எழுத வச்சவ. எல்லாருக்கும் ஒரு கனவுண்டு. எனக்கும் வேலைக்கு சேந்த புதுசுல ஒரு கனவிருந்துச்சு. கலாம் லெவலுக்கு கற்பனை பண்ணிடாதீங்க. சேருற ப்ராஜக்ட்ல குறைஞ்சது நாலு ஃபிகராவது நச்சுன்னு இருக்கனும்ங்றதுதான் அந்த கனவு. நமக்குத்தான், 'கனவு காணும் வாழ்கையாவும்' பாட்டு தேசிய கீதமாச்சே. அஞ்சு வருசமா, விளைச்சலே இல்லாம வரண்டிருந்த எங்க பூமியில ஒரு பேய் மழையா எட்டு மாசத்துக்கு முன்னாடி வந்து விழுந்தா.

    மௌனிகா. 'மோனிகா'னு சாதரணமா தப்பா கூப்டுற மக்கள்கிட்ட உடனே, 'என் பேர் மோனிகா இல்ல. மௌனிகா. மௌனம். Silence' என்று லெக்சர் கொடுக்க ஆரம்பிக்குற ஒரு தமிழ் பொண்ணு. குருட்டுக் கண்ணாயிரம் மாதிரிதான் அவளும். வாயாடி மௌனிகா. வாயாடில ரெண்டு வகை உண்டு. அவுங்க இல்லாத நேரத்துல, 'அப்பாடா!', அப்டீனு சொல்ல வைக்குறவங்க ஒரு ரகம். 'ச்சே! என்ன வாழ்கைடா இது?'ன்னு வசனம் பேச வைக்குற வகை ரெண்டாவது. இவ கண்டிப்பா ரெண்டாவது வகைதான். மேனேஜர்னு ஒரு பொறுப்பான பதவியக் கொடுத்து, என்னோட வாலிப வயசுக்கு ஒரு முட்டுக்கட்டை போட்டாலும், உள்ளுக்குள்ள இருக்குற அந்த கலைரசிகசிகாமணி, அவள ஒரு ஃபிகராத்தான் கண்ணோட்டம் விட்டுட்டு இருந்தான், பயங்கரமா மண்ட காஞ்சிக்கிட்டு இருந்த அன்றைய ஒரு மரணக்கோடு வேளை வரைக்கும்.

    “என்ன ஜியா? பயங்கற பிஸியா இருக்கீங்க போல?”, இந்த பொண்ணுங்களுக்கு 'அபியும் நானும்' படத்து மனோபாலா மாதிரி மொக்கயா கேள்வி கேக்குறது ரொம்ப புடிக்கும் போல.

    “ஆமா... என்ன பண்றது? இந்த QA பசங்க கடைசி நேரத்துல வந்து பக் லாக் பண்ணிட்டு, ஃபிக்ஸ் பண்ணலைன்னா ஸைன் ஆஃப் பண்ண மாட்டோம்னு மெரட்டுறானுங்க. போன மாச இன்ஸ்டால்ல வேற ரெண்டு ப்ரொடக்சன் பக். சீனியர் மேனேஜ்மெண்ட் வேற தல மேல ஏறி நிக்கிறானுங்க. அதான்...”, கணினிப் பொட்டிக்குள்ள தலைய விட்டுக்கிட்டேதான் பதில் சொன்னேன்.

    “சரி... வாங்க! காஃபி போலாம்"

    “என்ன விளையாடுறியா? நானே இன்னைக்குத்தான் கடைசி நாள் கோட் செக்-இன் பண்ணன்னு கடில இருக்கேன். நல்ல நேரத்துல காஃபிக்கு கூப்டுற"

    “நான் என்ன ஆட்டோ புடிச்சு, கோரமங்களா போயா காஃபி குடிக்கலாம்னு சொன்னேன்? இங்க வெளில இருக்குது காஃபி மெஷின். மேக்ஸிமம் அஞ்சு நிமிசம் ஆகுமா? அதுவும், நீங்க இப்படி டென்ஷன்லையே வேலை செஞ்சா, எதாவது மிஸ் ஆறதுக்குக் கூட சான்ஸஸ் இருக்குது. காஃபி குடிக்கப் போனா, ஒரு ப்ரேக் கிடைக்கும். மனசும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். அதுக்கப்புறம் வேலையும் ஒழுங்க நடக்கும்", கண்ணை சிமிட்டிக்கிட்டே சொன்னா.

    இப்படித்தான் என்னைய கொஞ்சம் கொஞ்சமா சாஃப்ட்வேர் மாயையல இருந்து வெளிய கொண்டுவந்து, ரசிக்கிற மாதிரி இன்னொரு வாழ்கையும் இருக்குதுன்னு புரிய வச்சா. எனக்கு காஃபி பிடிச்சதுன்னா, அவளுக்கு டீ, எனக்கு ரகுமான்னா, அவளுக்கு ராஜா. இப்படி எதுவுமே எங்களுக்குள்ள ஒத்து வரல. அதனாலத்தான் என்னவோ, எங்களுக்குள்ள நட்பு மட்டும் நல்லா ஒத்து வந்தது. என்னுடைய ப்ராஜக்ட் டீம்ல, அவளும் நானும் மட்டும்தான் தமிழ்ங்ற இன்னொரு விசயமும் எங்களுடைய இந்த நட்புக்கு ஒரு காரணமா இருக்கலாம். ஒரு பொண்ணும் பையனும் கொஞ்சம் சிரிச்சு பேசுனா, முடிச்சுப் போடுற சுவர்கிறுக்கிப் பசங்க தமிழ்நாட்டுல மட்டுமில்ல. மொழி, மாநிலம் கடந்த ஒரு கெட்ட (நல்ல??) பழக்கமது. ப்ராஜக்ட் பார்டில 'ப்ரோபோஸ் பண்ற விளையாட்டு'ல இருந்து, சாப்பாட்டு நேரத்து அரட்டைக்கு அறைக்குறதுக்கு மேட்டர் வரைக்கும் எங்கள குறிவச்சித் தாக்க ஆரம்பிச்சது ஒரு கூட்டம்.

    ஒரு பொண்ண வச்சி ஓட்டப் படுறதும் ஒரு விதமா சுகமாதான் இருந்தது. அதுவும் அந்தப் பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துட்டா, என்னமோ நிலாவுல கால வச்ச மாதிரி ஒரு பெரும நம்ம மனசுல படரத்தான் செய்யுது. ஆனா, அதுவே எல்லை தாண்டும்போது... 'மேனேஜரா இருக்குற என்ன வச்சி அவ எல்லாத்தையும் சாதிச்சிடுறா'னு அவளப் பத்தி தப்பா பேச ஆரம்பிச்சாங்க. காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு லோநெக்ல சுடிதார் போட்டுப் போய் வேலை வாங்குன சங்கவியையும், வாத்திக்கிட்ட எப்பவுமே கடலையப் போட்டுக்கிட்டு இருந்த தீப்தி, டேட்டா ஸ்டரக்சர்ல எஸ் க்ரேட் வாங்குனதுக்காக அவளையும், 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்டா'னு கெனா வானா போட்டு நண்பன்கிட்ட திட்டுனது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பிரச்சனைகளுக்காகவே அவளோட அப்ரைஸல கூட இன்னொருத்தன பண்ண வச்சேன். அவன் நல்லா கொடுத்ததுக்கும் நாந்தான் காரணம்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

    ஆனா, இது எதையுமே அவ சட்டையே பண்ணாம, முன்ன இருந்த மாதிரியே என்னோட பழகிட்டு இருந்தா. அவளோடு அந்த குணம், அவளை என் மனசுல மகுடம் சூட்டி, கம்பீரமா காலுக்கு மேல காலப் போட்டு அரியணைல உட்கார வச்சது. காஃபி டே, பொன்னுசாமி, டோட்டல் மால், பிறந்த நாள், ஏர்டெல்னு எல்லாரும் எல்லாமும், நாங்க சேர்ந்து சுத்துற நிமிடங்கள சேகரிக்க ஆரம்பிச்சதுங்க.

    இந்த ரெண்டு நாளா, பாத்ரூம் கண்ணாடில இருந்து, கம்ப்யூட்டர் திரைக்கண்ணாடி வரைக்கும் அவளோட முகம் மட்டுமே வந்து அவளோட நெனப்ப கிளறிக்கிட்டே இருக்குது. ஒரு விசயத்த தெரிஞ்சு, அதோட பாதிப்ப உணர்ந்ததுக்கப்புறம், அத மறைக்குறது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன். தூக்கம் சுத்தமா வர்றதே இல்ல. வேலைல முன்ன மாதிரி ஈடுபட முடியல. பாட்டு, படம், நண்பன் செல்வாவோட ஃபோன்ல அரட்டைன்னு மனச வேற பக்கமா திரும்ப முயற்சி பண்ணாலும், கடைசில திரும்ப அவ பக்கம்தான் வந்து நிக்குது. மனசுல பட்டத இன்னைக்கு எப்படியாவது சொல்லிடனும்னுதான் அவள கோரமங்களா வர சொல்ல காலைல ஃபோன் பண்ணேன்.

    'ஜியா ஸே ஜியா', ரகுமானோட சமீபத்திய தனி ஆல்ப பாட்டத்தான் காலர் டியூனா வச்சிருக்கா. என் பேர் இருக்குற ஒரே காரணத்துக்காகத்தான் அந்தப் பாட்டையே வச்சிருக்குறதா சொல்வா. 'உனக்காகத்தான் இத பண்ணேன். அத பண்றேன்'னு அடிக்கடி சொல்றதுல அவளுக்கு ஒரு அலாதி இன்பம்.

    "ஹலோ மௌனிகா... எங்க இருக்க?”

    “என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?”

    “இல்லையே... ஏன்?”, அவ அப்படி கேட்டவுடனே, அதுக்குள்ள அவளுக்குத் தெரிஞ்சிடிச்சோன்னு கொஞ்சம் பதட்டமா போச்சு.

    “இல்ல.. வாயாடின்னு சொல்லாம புதுசா பேரெல்லாம் சொல்லி கூப்டுறீங்களே... அதான் கேட்டேன்...”

    “சரி வாயாடி.... இப்ப ஓகேவா?? சரி... எங்க இருக்கன்னு சொல்லு"

    “இன்னும் கல்யாண மண்டபத்துலதான் இருக்கேன். நைட் ஆகும் போல. ஷீலா, அவ மாப்ள வீட்டுக்கு போற வரைக்கும் அவ கூடவே இருக்க சொல்லிருக்கா..”, சலிச்சிக்கிட்டே சொன்னா.

    “இல்ல... ஈவினிங் காஃபி டே ல மீட் பண்ணலாமா?”

    “இன்னைக்கா? நாளைக்கு ஆஃபிஸ்ல வச்சிப் பேசலாமா? இல்லனா நைட் கால் பண்றேனே...ஓகே?"

    “ம்ம்ம்... இல்ல... இன்னைக்கு உன்னோட கண்டிப்பா பேசியாகனும். அதுவும் நேர்லத்தான் பேசனும். ப்ளீஸ்மா... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வர பாரேன்.. ப்ளீஸ்...”

    அதுக்கப்புறம் அவளும் வர்றதாத்தான் சொன்னா. மணி ஏழாகியும் வந்து சேரல. திரும்ப ஃபோன் பண்ணேன்.

    “ஹலோ! எங்க இருக்க?”

    “இன்னும் ரெண்டு செகண்ட்ல அங்க இருப்பேன்", திரும்பிப் பார்த்தால் அவள் வந்துக் கொண்டிருந்தாள்.

    “அப்புறம் எதுக்கு ஃபோன எடுத்த? சடச்சி...”, என்று திட்டிவிட்டு வைத்தேன்.

    வந்ததிலிருந்து காலைல நடந்து முடிஞ்ச அவ தோழி கல்யாணத்தப் பத்தியே பேசிட்டு இருந்தா. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாமலேயே நானும் ரொம்ப நேரமா மௌனமாவே இருந்தேன்.

    “சரி... ஏதோ தல போற விசயத்தப் பத்தி பேசனும்னு சோன்னீங்களே... அதப் பத்தி வாயயே தெறக்க மாட்டேங்றீங்க?”, அவளே ஆரம்பித்தாள்.

    “ஒன்னுமில்ல... நான் சொன்னதுக்கப்புறம் என்னைய தப்பா நெனக்க மாட்டியே?”

    இதுவரை எதைப் பத்தியும் கவலைப்படாதமாதிரி இருந்தவ இப்பதான் என்னைய சீரியஸா பாக்க ஆரம்பிச்சா. அந்தப் பார்வைய என்னால சத்தியமா எதிர்கொள்ளவே முடியல.

    “நெனக்க மாட்டேன்... சொல்லுங்க...”

    “எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல... எப்படி ஆரம்பிக்கிறதுன்னும் தெரியல...”

    “சும்மா ஓவர் ஸீன் போடாதீங்க... சும்மா சொல்லுங்க...”

    “உன்னைய வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க. உனக்கு ஏற்கனவே தெரியும். ரிஸஸன். நெறைய ப்ராஜக்ட்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதனால நம்ம கம்பெனில இருந்து நூறு பேர தூக்கப் போறாங்க. அதுல நீயும் ஒன்னு... என்கிட்ட வெள்ளிக் கிழமையே சொல்லிட்டாங்க. இன்னைக்கு உன்னோட ஃப்ரெண்ட் கல்யாணம்னுதான் உன்கிட்ட இதுவரைக்கும் சொல்லல. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல... ஸாரி...”, வேகவேகமா சொல்லி முடிச்சேன்.

    அதற்குள் அவ கண்ணுல கண்ணீர் திரண்டு நிக்க ஆரம்பிச்சிடிச்சு. என்னைய நேர்ல பாக்க முடியாம கீழ குனிஞ்சு சத்தமில்லாம அழ ஆரம்பிச்சிட்டா.

    “ஹேய்... அழாத... ப்ளீஸ்... நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்... எக்ஸ்பீரியன்ஸ் அடிப்படைலதான் தூக்குறோம், உங்க பெர்சனல் இண்ட்ரஸ்ட்காக கம்பெனி ஒர்க் ஆகாதுன்னு ஹச்.ஆர் சொல்லிட்டாரு... இன்னைக்கு நீ... நாளைக்கு நான்... இதுதான் சாஃப்ட்வேர் வாழ்க்கை. வேலை செய்ற நம்மள மாதிரி ஆட்கள் சம்பளம் அதிகமா கெடச்சா, இதுவரை வேலை கொடுத்த கம்பெனிய அப்படியே விட்டுட்டு போறதில்லையா.... அதுமாதிரிதான், அவுங்களுக்குத் தேவை இல்லன்னா... சரி... நீ அழாத... நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவுங்க கம்பெனிஸ்ல எதாவது வேக்கன்ஸி இருந்தா சொல்ல சொல்லிருக்கேன்... சீக்கிரம் வேலை கெடச்சிடும்... ப்ளீஸ்... ஃப்ரீயா விடு"

    எப்போதுமே கலகலப்பா இருக்குற அவள முதல்முறையா அமைதியா பாக்குறேன். அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போற அவளோட வருங்கால கணவன் சூரஜ்கிட்ட எப்படி இத சொல்லுவானு நெனச்சா கொஞ்சம் கவலையாத்தான் இருக்குது.
    39

    View comments

ஒரு வெளம்பரம்...
ஒரு வெளம்பரம்...
My Photo
உன்னை(ங்களை)ப் போல் ஒருவன்...
Loading